தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டம்
(கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவேரி)
கங்கையையும் பொன்னியையும் இணைத்திடலாம் என்றபகற்
கனவு கண்டோம்;
"மங்கலமாம் இப்பணியை நிறைவேற்ற எந்தவொரு
வழியும் இல்லை;
வெங்கொடுமை; மிகுந்தபொருட் செலவாகும்; மாநிலங்கள்
விரும்ப வில்லை;"
பங்கமுற இவ்வாறு கூறியதால் கைவிட்டோம்;
பரிதா பம்தான்.
எப்பொழுதும் பசுமைதவழ் நெற்பயிர்கள் அசைந்தாடி
இனிய தென்றல்
வெப்பமதை விலக்கிநல்ல குளிர்ச்சிதரும் நன்செய்நிலம்
மிக்க நாட்டில்
தப்பியது பருவமழை; வறட்சிமிக உருவாகித்
தண்ணீர்ப் பஞ்சம்
துய்ப்பவரைத் துன்புறுத்தி வாட்டமுறச் செய்கிறது;
சோகம் தானே!
தமிழகத்தின் களஞ்சியமாய்த் தஞ்சைநிலப் பகுதியெலாம்
தழைத்த காலம்;
அமிழ்தமன்ன பொற்காலம்; அக்காலம் இனிவருமோ?
ஆறே, பொன்னி!
இமிழ்திரைவங் கக்கடலில் கலந்திடும்நற் கழிமுகத்துக்
கேற்றம் சேர்த்தாய்;
துமிதமது காணாமல் கழனியெலாம் பாலையெனத்
தோன்றும் அம்மா!
(துமிதம்--மழைத்துளி; கழனி--வயல்)
பருவமழை பொய்த்துநமை வாட்டுவது போதாதோ?
பங்கு கேட்கும்
கருநாடர் அணைகளிலே நீர்தேக்கிப் பயனடைவர்;
கபட மாக
அருமைமிகு காவிரியை அடைத்துவைத்து வஞ்சித்தல்
அறமோ? சொல்வீர்;
பெருமைமிகு மையத்துப் பேரரசே! தலையிட்டுப்
பிணக்கைத் தீர்ப்பீர்!
இந்நிலையில் நதிகோதா வரியினையும் பொன்னியையும்
இணைப்போம் என்னும்
பொன்னிகர்த்த முன்மொழிவைப் பலர்சொல்லி மகிழ்கின்றார்;
புகல்வோம் நன்றி;
மின்னிகர்த்த வேகத்தில் திட்டத்தை நிறைவேற்ற
வேண்டிக் கொள்வோம்;
என்னவொரு தடைவரினும் எதிர்கொண்டு முறியடிப்போம்;
ஏற்றுக் கொள்வோம்.
நிதிநிலையைக் காரணமாய்ச் சொல்லாதீர்; சூழல்கெடும்
நினைப்பும் வேண்டா;
சதிபுரிந்து தடைசெய்ய எண்ணிடுவோர் தயைகூர்ந்து
தள்ளி நிற்பீர்;
மதிமிகுந்த தென்னகத்து முதல்வரெலாம் ஒருங்கிணைந்து
வழியைத் தேடிக்
கதியெனவே நம்புகின்ற இத்திட்டம் நிறைவேறக்
கைகள் தாரீர்!
மையத்துப் பேரரசை ஆட்சிசெய்வோர் அக்கறையாய்
மனது வைத்தால்
உய்யும்வகை நதிகோதா வரியினையும் பொன்னியையும்
ஒருங்கே சேர்த்து
நையவைக்கும் தணீர்ப்பஞ்சம் நீக்கிடலாம்;வறட்சியினை
நாட்டை விட்டே
ஐயமற விரட்டிடலாம்; வளமனைத்தும் மீட்டிடலாம்;
அனைத்தும் உண்மை.
(தணீர்ப் பஞ்சம்--தண்ணீர்ப் பஞ்சம்--இடைக்குறை)
தென்னகத்து மக்களெலாம் இப்பெரிய காரியத்தில்
சேர்ந்து நின்று
தன்னலத்தைத் துறந்து,பொது நலமெண்ணி நன்முறையில்
தம்மால் ஆன
சின்னவொரு பணியெனினும் சிறப்பாகச் செய்திடுவோம்;
தீர்க்க மாகப்
பன்னரிய சாதனையாய் நிறைவேற்றி முடித்திடுவோம்;
பாங்காய் வெல்வோம்.
சீர்மிகுமித் திட்டத்தை மையத்தில் ஆள்வோர்கள்
செம்மை யாக
நேர்மைமிக நிறைவேற்றிச் செயல்படுத்தி விட்டாலே
நீங்கும் துன்பம்;
நீர்மிகுந்து வளம்மிகுந்து தென்னகத்து மாநிலங்கள்
நெருடல் இன்றிப்
பார்புகழப் பிணக்கின்றி ஒற்றுமையாய் வாழ்ந்திடுமே,
பாசத் தோடு.
ஆண்டவனே! மாபெருமிச் செயலுக்கு நின்கருணை,
அளவில் ஆசி
வேண்டிடுவோம், தட்டாமல் நல்கிடுவாய்; பருவமழை
விரைந்து பெய்து
மீண்டுமிந்தத் தென்பகுதி செழிப்படைய வழிசெய்வாய்;
வேண்டும் நீரை
யாண்டுந்தென் னகமக்கள் பெற, வரந்தா; பங்கீட்டை
எளிதாய் ஆக்கே!
(ஆக்கு + ஏ = ஆக்கே; 'ஏ' அசையாகும்)
(கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவேரி)
கங்கையையும் பொன்னியையும் இணைத்திடலாம் என்றபகற்
கனவு கண்டோம்;
"மங்கலமாம் இப்பணியை நிறைவேற்ற எந்தவொரு
வழியும் இல்லை;
வெங்கொடுமை; மிகுந்தபொருட் செலவாகும்; மாநிலங்கள்
விரும்ப வில்லை;"
பங்கமுற இவ்வாறு கூறியதால் கைவிட்டோம்;
பரிதா பம்தான்.
எப்பொழுதும் பசுமைதவழ் நெற்பயிர்கள் அசைந்தாடி
இனிய தென்றல்
வெப்பமதை விலக்கிநல்ல குளிர்ச்சிதரும் நன்செய்நிலம்
மிக்க நாட்டில்
தப்பியது பருவமழை; வறட்சிமிக உருவாகித்
தண்ணீர்ப் பஞ்சம்
துய்ப்பவரைத் துன்புறுத்தி வாட்டமுறச் செய்கிறது;
சோகம் தானே!
தமிழகத்தின் களஞ்சியமாய்த் தஞ்சைநிலப் பகுதியெலாம்
தழைத்த காலம்;
அமிழ்தமன்ன பொற்காலம்; அக்காலம் இனிவருமோ?
ஆறே, பொன்னி!
இமிழ்திரைவங் கக்கடலில் கலந்திடும்நற் கழிமுகத்துக்
கேற்றம் சேர்த்தாய்;
துமிதமது காணாமல் கழனியெலாம் பாலையெனத்
தோன்றும் அம்மா!
(துமிதம்--மழைத்துளி; கழனி--வயல்)
பருவமழை பொய்த்துநமை வாட்டுவது போதாதோ?
பங்கு கேட்கும்
கருநாடர் அணைகளிலே நீர்தேக்கிப் பயனடைவர்;
கபட மாக
அருமைமிகு காவிரியை அடைத்துவைத்து வஞ்சித்தல்
அறமோ? சொல்வீர்;
பெருமைமிகு மையத்துப் பேரரசே! தலையிட்டுப்
பிணக்கைத் தீர்ப்பீர்!
இந்நிலையில் நதிகோதா வரியினையும் பொன்னியையும்
இணைப்போம் என்னும்
பொன்னிகர்த்த முன்மொழிவைப் பலர்சொல்லி மகிழ்கின்றார்;
புகல்வோம் நன்றி;
மின்னிகர்த்த வேகத்தில் திட்டத்தை நிறைவேற்ற
வேண்டிக் கொள்வோம்;
என்னவொரு தடைவரினும் எதிர்கொண்டு முறியடிப்போம்;
ஏற்றுக் கொள்வோம்.
நிதிநிலையைக் காரணமாய்ச் சொல்லாதீர்; சூழல்கெடும்
நினைப்பும் வேண்டா;
சதிபுரிந்து தடைசெய்ய எண்ணிடுவோர் தயைகூர்ந்து
தள்ளி நிற்பீர்;
மதிமிகுந்த தென்னகத்து முதல்வரெலாம் ஒருங்கிணைந்து
வழியைத் தேடிக்
கதியெனவே நம்புகின்ற இத்திட்டம் நிறைவேறக்
கைகள் தாரீர்!
மையத்துப் பேரரசை ஆட்சிசெய்வோர் அக்கறையாய்
மனது வைத்தால்
உய்யும்வகை நதிகோதா வரியினையும் பொன்னியையும்
ஒருங்கே சேர்த்து
நையவைக்கும் தணீர்ப்பஞ்சம் நீக்கிடலாம்;வறட்சியினை
நாட்டை விட்டே
ஐயமற விரட்டிடலாம்; வளமனைத்தும் மீட்டிடலாம்;
அனைத்தும் உண்மை.
(தணீர்ப் பஞ்சம்--தண்ணீர்ப் பஞ்சம்--இடைக்குறை)
தென்னகத்து மக்களெலாம் இப்பெரிய காரியத்தில்
சேர்ந்து நின்று
தன்னலத்தைத் துறந்து,பொது நலமெண்ணி நன்முறையில்
தம்மால் ஆன
சின்னவொரு பணியெனினும் சிறப்பாகச் செய்திடுவோம்;
தீர்க்க மாகப்
பன்னரிய சாதனையாய் நிறைவேற்றி முடித்திடுவோம்;
பாங்காய் வெல்வோம்.
சீர்மிகுமித் திட்டத்தை மையத்தில் ஆள்வோர்கள்
செம்மை யாக
நேர்மைமிக நிறைவேற்றிச் செயல்படுத்தி விட்டாலே
நீங்கும் துன்பம்;
நீர்மிகுந்து வளம்மிகுந்து தென்னகத்து மாநிலங்கள்
நெருடல் இன்றிப்
பார்புகழப் பிணக்கின்றி ஒற்றுமையாய் வாழ்ந்திடுமே,
பாசத் தோடு.
ஆண்டவனே! மாபெருமிச் செயலுக்கு நின்கருணை,
அளவில் ஆசி
வேண்டிடுவோம், தட்டாமல் நல்கிடுவாய்; பருவமழை
விரைந்து பெய்து
மீண்டுமிந்தத் தென்பகுதி செழிப்படைய வழிசெய்வாய்;
வேண்டும் நீரை
யாண்டுந்தென் னகமக்கள் பெற, வரந்தா; பங்கீட்டை
எளிதாய் ஆக்கே!
(ஆக்கு + ஏ = ஆக்கே; 'ஏ' அசையாகும்)
.
ReplyDelete