குறுந்தொகை காட்டும் காட்சிகள்.
சங்க நூல்களில் எட்டுத் தொகை நூல்கள் மிகுந்த இலக்கியச்
சுவை கொண்டவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநா
னூறு முதலியவை எட்டுத்தொகை நூல்களாகும். இவை பல்
வேறு புலவர்களால் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாடப்பட்டுப்
பிற்பாடு சில வரைமுறைப்படி தொகுக்கப்பட்டவை. இவற்றுள்
முதன்முதலில் தொகுக்கப்பட்டது குறுந்தொகை என அறிஞர்கள்
கருதுகின்றனர். ஏனென்றால் நச்சினார்க்கினியர், இளம்பூரணர்,
சேனாவரையர் போன்ற உரையாசிரியர்களால் அதிகமாக மேற்
கோள் காட்டப்படுபவை குறுந்தொகைப் பாடல்கள்தாம். நாலடிக்குக்
குறையாமல் எட்டடிக்கு மிகாமல் உள்ள அகப்பொருள் குறித்த
நானூறு பாடல்களைக் கொண்டவை. நானூறு பாடல்களும்
அகவற்பா என்னும் யாப்பால் இயற்றப்பட்டவை. குறுந்தொகையிற்
பயின்று வந்த சில பாடல்களையும் அவை உருவாக்கும் காட்சிகளையும்
பார்ப்போம்.
திணை: குறிஞ்சி; பாடல் எண்:54; புலவர்:மீனெறி தூண்டிலார்.
"யானே ஈண்டை யேனே; என்நலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலின் இவக்கும்
கானக நாடனொ(டு) ஆண்டொழிந்(து) அன்றே".
தலைவி தோழியிடம் கூறியது:
யான் இவ்விடத்தில் உள்ளேன். என்னோடு ஒன்றி
முன்பு இருந்த எனது பெண்மைநலன் என்னைவிட்டு
நீங்கிவிட்டது. எப்படி நீங்கியதென்றால், தினைப்புனம்
காவல்காப்பவர்கள் விடும் கவண்கல்லின் ஒலிக்குப்
பயந்து, தான் உண்பதற்காக வளைத்த மூங்கிலைக்
காட்டு யானை கைவிட்டதைப் போலவும், மீனைக் கவர்ந்த
தூண்டிலை நீரிலிருந்து இழுத்தவுடன் மேலே எழும்பி
வருவதைப்போலவும் என் நெஞ்சம் கானக நாடனொடு
நாங்கள் பழகிக் களித்த அந்த இடத்திலேயே நீங்கிவிட்டது.
பாடல் எண்:40; திணை:முல்லை; புலவர்: செம்புலப் பெயல்
நீரார்.(புலவர்களின் இயற்பெயர் தெரியாத பொழுது அன்னார்
பயன் படுத்திய சிறந்த சொற்றொடரால் அன்னாரைக் குறிப்பது
இலக்கிய வழக்கம். முதலாவது பாடலில் மீனெறி தூண்டில்
என்ற தொடரால் மீனெறி தூண்டிலார் என்றும், இந்தப் பாடலில்
செம்புலப் பெயல் நீர் என்னும் தொடரால் இப்புலவர் செம்புலப்
பெயல் நீரார் என்றும் குறிப்பிடப் படுகின்றனர்.)
"யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி யறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே."
தலைவன் தலைவியிடம் கூறியது:
என்தாயும் உன்தாயும் ஒருவருக்கொருவர் எவ்வகையில் உறவினர்?
என் தந்தையும் நின்தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது இணைந்திருக்கும் யானும் நீயும் ஒருவரையொருவர்
எவ்வாறு முன்பு அறிந்துகொண்டோம்? நமக்குள் முன்பு எந்த
உறவு முறையும் இல்லை; பழக்கமும் இல்லை. செம்மண் நிலத்தில்
பெய்த மழைநீர் அம்மண்ணோடு இரண்டறக் கலந்து அதன் நிறத்
தை அடைதல்போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே கலந்து
ஒன்றுபட்டன.
பாடல் எண:196; புலவர்:மிளைக் கந்தன்; திணை: மருதம்
"வேம்பின் பைங்காயென் தோழி தரினே;
தேம்பூங் கட்டி யென்றனிர் இனியே;
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்;
ஐய வற்றால் அன்பின் பாலே."
தலைவனிடம் தோழி கூறியது:
முன்பு என் தோழி(நும் தலைவி) வேப்பங் காயைத் தந்தாலும்
இனிய பொலிவுடைய வெல்லக் கட்டி என்று பாராட்டினீர்.
இப்போழுது, பாரியின் பறம்பு மலையிலுள்ள, தை மாதத்தில்
குளிர்ச்சியுடன் நிலவும் தெளிந்த நீரைக் கொடுத்தாலும்
வெப்பமாக உள்ளதென்றும், உவர்ப்பாக இருக்கிறது என்றும்
கூறுகிறீர். என் தோழியிடத்து நீர் கொண்டிருந்த அன்பு முன்பை
விடவும் குறைந்து விட்டதே இதற்குக் காரணமாகும். அன்றும்
இவள்தான் கொடுத்தாள்; இன்றும் இவள்தான் கொடுத்தாள்.
அன்று அவளிடம் அன்பாய் இருந்ததால் இனித்தது. இன்று
அவ்வன்பு குறைந்துவிட்டதால் வெப்பமாகவும், உவர்ப்பாகவும்
உணர்கிறீர். அனைத்துக்கும் உம் அன்பின் ஏற்றத்தாழ்வே
காரணம்.
பாடல் எண்:269; புலவர்:கல்லாடனார்; திணை:நெய்தல்
"சேயாறு சென்று தனைபரி யசாவா(து)
உசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுறா வெறிந்த புண்தணிந்(து) எந்தையும்
நீல்நிறப் பெருங்கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவிளை கழனிச் சென்றனள் அதனால்
பனியிரும் பரப்பின் சேர்ப்பற்(கு)
இனிவரின் எளியள் என்னும் தூதே".
தலைவன் வேலிக்கு அப்பாலிருக்கத் தலைவி தோழிக்குச்
சொல்லியது:
தோழி, என் தந்தையும் வலிமையுடைய சுறாமீன் வீசியதனால்
உண்டான புண் ஆறி நீலநிறப் பெருங்கடலில் மீண்டும் வேட்டை
யாடச் சென்றுவிட்டனன். என் தாயும் உப்பை விற்று வெண்ணெல்
லை வாங்கிவரும் பொருட்டு உப்பளத்துக்குச் சென்றனள். எனவே,
தலைவன் என்னோடு அளவளாவுதற்கேற்ற தருணம் இதுவே.
இப்போது இங்கே வந்தால் என்னைக் கண்டு பேச வாய்ப்புள்ளது.
இத்தகவலை வெகு தூரம் நடந்து சென்று இக்கடற்கரையின்
தலைவனிடம் சேதி சொல்லத் தூதுவனைப்பெற்றால் மிகவும்
நல்லது. இதுவே என் விருப்பம்.
பாடல் எண்:15; புலவர்: ஔவையார்; திணை: பாலை
"பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ(து) ஆலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே; தோழி ஆய்கழல்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே".
செவிலி நற்றாய்க்குக் கூறியது:
உடன்போக்குச் சென்ற தலைவனும் தலைவியும் திருமணம்
புரிந்து கொண்டனர். கொடுப்போர் இல்லாமலும் கரணம்
(திருமணம்) நிகழ்வது சமூகத்தால் அனுமதிக்கப்படடது என்ற
காரணத்தால் தோழி செவிலியிடம் தெரிவித்து அறத்தொடு
நின்றாள். செவிலி நற்றாயிடம் தெரிவித்து அறத்தொடு நின்றாள்.
அழகிய வீரக் கழலையும் வெள்ளிய வேலையும் கொண்ட தலைவ
னொடு பல வளைகளைப் பூண்ட முன்கைகளையுடைய நின்மகள்
செய்த நட்பு, ஆலமரத்தடியில் உள்ள பொதுவிடத்தில் தங்குதலை
வழக்கமாகக் கொண்ட நாலூர்க் கோசர்களின் மொழி உண்மை
யாவதைப் போல, முரசு முழங்கவும் சங்கு ஒலிக்கவும் நிகழ்ந்த
திருமணத்தில் முடிந்து உண்மையாயிற்று. ஆணுக்கும் பெண்ணுக்
கும் இடையில் நிலவிய களவு ஒழுக்கத்தை வெளிப்படுத்தினால்
அது அறத்தொடு நிற்றல் எனப்படும். .அதன்பிறகு வரைவு(திருமணம்)
நடந்தேறும். இனி, கற்பு ஒழுக்கம் தொடங்கிவிடும். சமூகத்தின் நன்
மைக்காக இத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் வகுக்கப்
பட்டு முறையாகப் பின்பற்றப்பட்டன.
குறுந்தொகையிலுள்ள நானூறு பாடல்களுமே இலக்கியச்சுவை
மிக்கவை. இங்கே சிலவற்றைப் பார்த்தோம். ஏனையவற்றையும்
படித்து இன்புறுதல் நன்று.
சங்க நூல்களில் எட்டுத் தொகை நூல்கள் மிகுந்த இலக்கியச்
சுவை கொண்டவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநா
னூறு முதலியவை எட்டுத்தொகை நூல்களாகும். இவை பல்
வேறு புலவர்களால் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாடப்பட்டுப்
பிற்பாடு சில வரைமுறைப்படி தொகுக்கப்பட்டவை. இவற்றுள்
முதன்முதலில் தொகுக்கப்பட்டது குறுந்தொகை என அறிஞர்கள்
கருதுகின்றனர். ஏனென்றால் நச்சினார்க்கினியர், இளம்பூரணர்,
சேனாவரையர் போன்ற உரையாசிரியர்களால் அதிகமாக மேற்
கோள் காட்டப்படுபவை குறுந்தொகைப் பாடல்கள்தாம். நாலடிக்குக்
குறையாமல் எட்டடிக்கு மிகாமல் உள்ள அகப்பொருள் குறித்த
நானூறு பாடல்களைக் கொண்டவை. நானூறு பாடல்களும்
அகவற்பா என்னும் யாப்பால் இயற்றப்பட்டவை. குறுந்தொகையிற்
பயின்று வந்த சில பாடல்களையும் அவை உருவாக்கும் காட்சிகளையும்
பார்ப்போம்.
திணை: குறிஞ்சி; பாடல் எண்:54; புலவர்:மீனெறி தூண்டிலார்.
"யானே ஈண்டை யேனே; என்நலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலின் இவக்கும்
கானக நாடனொ(டு) ஆண்டொழிந்(து) அன்றே".
தலைவி தோழியிடம் கூறியது:
யான் இவ்விடத்தில் உள்ளேன். என்னோடு ஒன்றி
முன்பு இருந்த எனது பெண்மைநலன் என்னைவிட்டு
நீங்கிவிட்டது. எப்படி நீங்கியதென்றால், தினைப்புனம்
காவல்காப்பவர்கள் விடும் கவண்கல்லின் ஒலிக்குப்
பயந்து, தான் உண்பதற்காக வளைத்த மூங்கிலைக்
காட்டு யானை கைவிட்டதைப் போலவும், மீனைக் கவர்ந்த
தூண்டிலை நீரிலிருந்து இழுத்தவுடன் மேலே எழும்பி
வருவதைப்போலவும் என் நெஞ்சம் கானக நாடனொடு
நாங்கள் பழகிக் களித்த அந்த இடத்திலேயே நீங்கிவிட்டது.
பாடல் எண்:40; திணை:முல்லை; புலவர்: செம்புலப் பெயல்
நீரார்.(புலவர்களின் இயற்பெயர் தெரியாத பொழுது அன்னார்
பயன் படுத்திய சிறந்த சொற்றொடரால் அன்னாரைக் குறிப்பது
இலக்கிய வழக்கம். முதலாவது பாடலில் மீனெறி தூண்டில்
என்ற தொடரால் மீனெறி தூண்டிலார் என்றும், இந்தப் பாடலில்
செம்புலப் பெயல் நீர் என்னும் தொடரால் இப்புலவர் செம்புலப்
பெயல் நீரார் என்றும் குறிப்பிடப் படுகின்றனர்.)
"யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி யறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே."
தலைவன் தலைவியிடம் கூறியது:
என்தாயும் உன்தாயும் ஒருவருக்கொருவர் எவ்வகையில் உறவினர்?
என் தந்தையும் நின்தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது இணைந்திருக்கும் யானும் நீயும் ஒருவரையொருவர்
எவ்வாறு முன்பு அறிந்துகொண்டோம்? நமக்குள் முன்பு எந்த
உறவு முறையும் இல்லை; பழக்கமும் இல்லை. செம்மண் நிலத்தில்
பெய்த மழைநீர் அம்மண்ணோடு இரண்டறக் கலந்து அதன் நிறத்
தை அடைதல்போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே கலந்து
ஒன்றுபட்டன.
பாடல் எண:196; புலவர்:மிளைக் கந்தன்; திணை: மருதம்
"வேம்பின் பைங்காயென் தோழி தரினே;
தேம்பூங் கட்டி யென்றனிர் இனியே;
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்;
ஐய வற்றால் அன்பின் பாலே."
தலைவனிடம் தோழி கூறியது:
முன்பு என் தோழி(நும் தலைவி) வேப்பங் காயைத் தந்தாலும்
இனிய பொலிவுடைய வெல்லக் கட்டி என்று பாராட்டினீர்.
இப்போழுது, பாரியின் பறம்பு மலையிலுள்ள, தை மாதத்தில்
குளிர்ச்சியுடன் நிலவும் தெளிந்த நீரைக் கொடுத்தாலும்
வெப்பமாக உள்ளதென்றும், உவர்ப்பாக இருக்கிறது என்றும்
கூறுகிறீர். என் தோழியிடத்து நீர் கொண்டிருந்த அன்பு முன்பை
விடவும் குறைந்து விட்டதே இதற்குக் காரணமாகும். அன்றும்
இவள்தான் கொடுத்தாள்; இன்றும் இவள்தான் கொடுத்தாள்.
அன்று அவளிடம் அன்பாய் இருந்ததால் இனித்தது. இன்று
அவ்வன்பு குறைந்துவிட்டதால் வெப்பமாகவும், உவர்ப்பாகவும்
உணர்கிறீர். அனைத்துக்கும் உம் அன்பின் ஏற்றத்தாழ்வே
காரணம்.
பாடல் எண்:269; புலவர்:கல்லாடனார்; திணை:நெய்தல்
"சேயாறு சென்று தனைபரி யசாவா(து)
உசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுறா வெறிந்த புண்தணிந்(து) எந்தையும்
நீல்நிறப் பெருங்கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவிளை கழனிச் சென்றனள் அதனால்
பனியிரும் பரப்பின் சேர்ப்பற்(கு)
இனிவரின் எளியள் என்னும் தூதே".
தலைவன் வேலிக்கு அப்பாலிருக்கத் தலைவி தோழிக்குச்
சொல்லியது:
தோழி, என் தந்தையும் வலிமையுடைய சுறாமீன் வீசியதனால்
உண்டான புண் ஆறி நீலநிறப் பெருங்கடலில் மீண்டும் வேட்டை
யாடச் சென்றுவிட்டனன். என் தாயும் உப்பை விற்று வெண்ணெல்
லை வாங்கிவரும் பொருட்டு உப்பளத்துக்குச் சென்றனள். எனவே,
தலைவன் என்னோடு அளவளாவுதற்கேற்ற தருணம் இதுவே.
இப்போது இங்கே வந்தால் என்னைக் கண்டு பேச வாய்ப்புள்ளது.
இத்தகவலை வெகு தூரம் நடந்து சென்று இக்கடற்கரையின்
தலைவனிடம் சேதி சொல்லத் தூதுவனைப்பெற்றால் மிகவும்
நல்லது. இதுவே என் விருப்பம்.
பாடல் எண்:15; புலவர்: ஔவையார்; திணை: பாலை
"பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ(து) ஆலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே; தோழி ஆய்கழல்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே".
செவிலி நற்றாய்க்குக் கூறியது:
உடன்போக்குச் சென்ற தலைவனும் தலைவியும் திருமணம்
புரிந்து கொண்டனர். கொடுப்போர் இல்லாமலும் கரணம்
(திருமணம்) நிகழ்வது சமூகத்தால் அனுமதிக்கப்படடது என்ற
காரணத்தால் தோழி செவிலியிடம் தெரிவித்து அறத்தொடு
நின்றாள். செவிலி நற்றாயிடம் தெரிவித்து அறத்தொடு நின்றாள்.
அழகிய வீரக் கழலையும் வெள்ளிய வேலையும் கொண்ட தலைவ
னொடு பல வளைகளைப் பூண்ட முன்கைகளையுடைய நின்மகள்
செய்த நட்பு, ஆலமரத்தடியில் உள்ள பொதுவிடத்தில் தங்குதலை
வழக்கமாகக் கொண்ட நாலூர்க் கோசர்களின் மொழி உண்மை
யாவதைப் போல, முரசு முழங்கவும் சங்கு ஒலிக்கவும் நிகழ்ந்த
திருமணத்தில் முடிந்து உண்மையாயிற்று. ஆணுக்கும் பெண்ணுக்
கும் இடையில் நிலவிய களவு ஒழுக்கத்தை வெளிப்படுத்தினால்
அது அறத்தொடு நிற்றல் எனப்படும். .அதன்பிறகு வரைவு(திருமணம்)
நடந்தேறும். இனி, கற்பு ஒழுக்கம் தொடங்கிவிடும். சமூகத்தின் நன்
மைக்காக இத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் வகுக்கப்
பட்டு முறையாகப் பின்பற்றப்பட்டன.
குறுந்தொகையிலுள்ள நானூறு பாடல்களுமே இலக்கியச்சுவை
மிக்கவை. இங்கே சிலவற்றைப் பார்த்தோம். ஏனையவற்றையும்
படித்து இன்புறுதல் நன்று.
.
ReplyDelete