Tuesday, 1 December 2020

ஒட்டக்கூத்தர் திருவடியைச் சூடும்

 ஒட்டக்கூத்தர் பதாம்புயத்தைச் சூடும் குலோத்துங்கசோழர்,


புலவர் பாதங்களை முடியுடை வேந்தர் சூடிக்கொள்வது இய

லுமா? என்று குழம்பத்  தேவையில்லை. இந்தச் சொற்றொட

ரைச் சொன்னவரே குலோத்துங்க சோழர்தாம்,, என்ன விவ

ரம் என்று பார்ப்போம்


தமிழ்ப்புலவர்களிலேயே ஒட்டக்கூத்தர் மிகவும் பாக்கியம்

செய்தவர். அவர் காலம் வரலாற்றில் தெளிவாகச் சொல்லப்

பட்டுள்ளது, ஏறத்தாழ எண்பது. ஆண்டுகளுக்கு மேல்  உயிர்

வாழ்ந்த அன்னார் தமது ஆயுள் முழுவதும் செல்வாக்கோடும்

மதிப்போடும் ஓரளவு வசதியாகவும் வாழ்ந்தவர், இதற்குக்

காரணம் அவர் வரலாற்றில் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக

நிலைத்து நின்ற சோழ வேந்தர்களின் ஆதரவில் வாழ்ந்தது தான்.

விசயாலயச் சோழர் தொடங்கி வைத்த இடைக்காலச் சோழப்

பேரரசு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம் வரை வெற்றி

கரமாக நிலைத்து நின்றது. முதலாம் குலோத்துங்க சோழன் உயிர்

நீத்த பிறகு விக்கிரம சோழர் பட்டத்துக்கு வந்தார்.(1120--1136);

அவருக்குப் பின் அவர் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன்

அரியணை ஏறினார்(1136---1150);  அவர் மறைவுக்குப் பின்னர்

அன்னாரின் புதல்வர் இரண்டாம் ராசராச சோழர் ஆட்சிக்கு வந்

தார்(1150--1163); ஆக  மூவருக்கும் ஆசானாகவும் அவைக்களப்

புலவராகவும் ஒட்டக்கூத்தர்  பணியாற்றினார். மூன்று வேந்தர்களு

மே ஒட்டக்கூத்தரிடம்  பேரன் போடும் பெருமதிப் போடும் நடந்து

கொண்டனர். கூத்தர் பிரானும். மிகுந்த இராச விசுவாசத்தோடு பணி

செய்தார். தமிழ்மொழி மற்றும் வடமொழி ஆகிய இரு மொழிகளையும்

ஐயம் திரிபறக் கற்று மூன்று வேந்தர்கள் மீதும் பல இலக்கியங்களையும்

தனிப்பாடல்களையும்(மூவருலா முதலானவை) இயற்றியுள்ளார்.


ஒவ்வொரு நாளும் புதுப்பாடல் இயற்றியோ, சோழ வேந்தர்கள் மீது பாடப்பட்ட.

பழைய  பாடல்களைச் சொல்லியோ அவையைத்  தொடங்கி வைப்பது

கூத்தரின் வழக்கம்,  அன்று புதுப் பாடல் ஒன்றைச்் சொல்லத் தொடங்கினார்,

"ஆடும்  கடைமணி  நாவசை யாமல் அகிலமெங்கும்

நீடும் குடையைத் தரித்த பிரான்இந்த. நீணிலத்தில்"

என்று பாடிக் கொண்டிருந்த பொழுது  இரண்டாம் குலோத்துங்க சோழர் இடை

மறித்துப் பாடலைத் தொடர்ந்தார்:

"பாடும் புலவர் புகழ்ஒட்டக் கூத்தர் பதாம்புயத்தைச்

சூடும் குலோத்துங்க சோழனென் றேயென்னைச் சொல்லுவரே".

இவ்வாறாகப் பாடி முடித்தார்,  அவையில் வீற்றிருந்த அனைவரும் திகைத்துப்

போனார்கள்.ஒட்டக்கூத்தரைப்பொறாமைக் கண்களால் நோக்கினர். ஒட்டக்கூத்தர்

ஒருகணம் வாயடைத்துப் போயிருந்தவர் ‌ மெல்லப்பேசத் தொடங்கினார. "வேந்தே!

இந்த ஏழைப் புலவனை மிகவும் உயர்த்திவிட்டீர்கள். எனக்கு வாயடைத்து ப் போய்

விட்டது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீங்களோ முடியுடை வேந்தர்.

நான்தங்களை அண்டி  வாழும் ஏழைப் புலவர்"" என்று தழுதழுத்த குரலில் கூறி

னார்,  சோழர் கூத்தரின் இருகரங்களையும் பற்றிக் கொண்டு "ஐயா! தாங்கள் எங்

கள்  அவைக்களப்  புலவர் மட்டும் அல்லர்; என் தந்தைக்கும் எனக்கும்  ஆசிரியராக

வும் திகழ்ந்தவர். கவிச்சக்கரவர்த்தி யாக விளங்கும்  தங்களின் பாத கமலங்களைச்

சூடிக்கொள்ளுதல்  நான் பெற்ற பெரும் பேறாகும்; இப்படிப் பாடியமைக்காக அறத்

துன்பம் அடையற்க" என்றார்."

பாடலின் பொருள்:

கடைமணி--- மக்கள் தம் குறைகளைத் தெரிவிக்க அடிக்கும் மணி(ஆராய்ச்சி மணி);

."ஆராய்ச்சி மணியின் நாவசையாமல்(மக்கள் தம் குறைகளைத் தெரிவிப்பதற்காகக்

கடைமணியை அடிக்க வேண்டிய தேவையே எழாமல் நீதியோடும் நேர்மையோடும்

ஆட்சிபுரிந்த, நெடிய வெண்கொற்றக்குடையைத் தாங்கியுள்ளவர் யாரென்றால்"

இவ்வாறு கூத்தர் பாடிக் கொண்டிருந்த பொழுது  சோழ வேந்தர் இடைமறித்து

"பலப்பல பாடல்களை இயற்றியுள்ள புலவர் கவிச்சக்கரவர்த்தி  ஒட்டக் கூத்தர்

திருவடித் தாமரைகளைத் தலைமேல் சூடிக் கொள்ளும் அவரின் மாணாக்கனாகிய

குலோத்துங்க சோழன் என்று என்னைச் சொல்லுவார்கள்" என்று பாடி முடித்தார்.


இப்பாடல் வாயிலாக ஒட்டக் கூத்தரின் இராச விசுவாசமும் குலோத்துங்க சோழ

ரகு குருபக்தியும்  புலப்படுகின்றன.,

No comments:

Post a Comment