Monday, 20 September 2021

சங்க காலத்தில் நிகழ்ந்த போர்க் கொடுமைகள்.

 சங்க காலத்தில் போர்களினால் விளைந்த கொடுமைகள்.


ஆதிமனிதன் காடுகளிலும், மலைக் குகைகளிலும் வாழ்ந்த

பொழுது புலி, சிங்கம், கரடி, யானை முதலான கொடிய விலங்

குகளோடு சண்டை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.

ஏனென்றால் குகைகளில்தான் விலங்குகளும் வசித்தன. இருப்

பிடச் சிக்கலால் இரு இனங்களுக்கும் மோதல் உருவாயிற்று.

பின்னாட்களில், மனிதர்கள் ஆற்றுப் படுகைகளில் வசிக்க நேர்ந்த

பொழுது வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருந்து வேளாண்மை

செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இப்படியாகக் காடு, மலை

 போன்றவைகளிலோ அவைகளின் அருகிலேயோ குடியேற்றம்

நிகழ்ந்து பின்னர் ஆற்றுப் படுகைகளிலும் குடியேற்றம் நிகழ்ந்தது.

உணவு, உடை, உறையுள் முதலிய அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய

பிறகு நாகரிகம் உருவாகி வளர்ந்தது.


என்னதான் நாகரிகத்தில் வளர்ச்சியடைந்தாலும் மனிதனின் ஆதிக்

குணமான சண்டைக் குணம் மறையவேயில்லை. எனவே, புலவர் இடைக்

குன்றூர் கிழார் "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்

றிவ்வுலகத் தியற்கை" என்று பாடியுள்ளார்(புறம். பாடல் எண்: 76). நாகரிக

வளர்ச்சியை அடுத்து மனிதர்கள் தம்மை ஆள அரசுகளை அமைத்தனர்.

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையால் இவ்வரசுகள் தமக்குள்

சண்டையிட்டுக் கொண்டன.


தொடக்கத்தில் மன்னர்கள் அறவழியிலேயே போர்கள் நிகழ்த்தினர்.

பாண்டிய மன்னன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவர்

தாம் போர் தொடங்குவதற்கு முன்னர் தாம் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்

கெதிராகப் போர் புரியத் திட்டமிட்டுள்ளதாகவும்,  பசுக்கள், பெண்டிர்,

அந்தணர், புதல்வரைப் பெறாதோர் ஆகியோர் போர் நடக்கும் இடத்

தை விட்டு ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் புலவர்

நெட்டிமையார் பாடியுள்ளார்(புறம். பா.எ.9). ஆனால், நாட்கள் செல்லச்

செல்லப் போர் முறைகளில் வன்முறை, பழிவாங்கும் எண்ணம், மிகக்

கொடூர சிந்தனைகள் தலைகாட்டத் தொடங்கின. 


தாம் தோற்கடித்த நாடுகளில் முதன்மைத் தெருக்களில் கழுதைகளைப்

பூட்டி உழச்செய்ததாக ஒரு மன்னனைப் பற்றிப் புலவர் நெட்டிமையார்

பாடியுள்ளார்(புறம். பா.எ.15). புலவர் பாண்டரங் கண்ணனார் ஒரு மன்னர்

தாம் வென்ற நாட்டை எரியூட்டியதாகப் பாடியுள்ளார்.(புறம். பா.எ.16). புலவர்

மாங்குடி மருதனார் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

போரில் தோற்ற பகையரசர் முடித் தலைகளை அடுப்பாக்கி இரத்தத்தை

நீராகப் பெய்து பகைவர் தசையையும் மூளையையும் அதனுள் இட்டு அவரது

தோள்களைத் துடுப்பாக்கித் துழாவிக்  களவேள்வி செய்ததாகக் பாடியுள்ளார்.

(புறம்.பா.எ. 26). அப்பாடல் வரிகள் பின்வருமாறு:

"அரைசுபட அமருழக்கி முடித்தலை அடுப்பாகப்

புனல் குருதி உலைக்கொளீஇக் கொடித்தோள் துடுப்பின்

துழந்த வல்சியின் அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!"


அக்காலத்தில் மன்னர் ஒருவர் பிற மன்னரிடம் பெண்கேட்டு அவர் பெண்கொடுக்க

மறுப்புத் தெரிவித்தால் அவர்களுக்குள் போர் மூளும்(மகட்பாற் காஞ்சி). பேரரசர்

கேட்கும் திறையை(வரி)த் தர மறுக்கும் குறுநில மன்னர் மீது போர் தொடுப்பது

வழக்கம். இப்படியாகப் போர்நிகழப் பலப்பல காரணங்கள் இருந்தன.


விளைவு யாதெனில், அடிக்கடி நிகழ்ந்த போர்களினால் சமூகத்தில் ஆடவர்

எண்ணிக்கை குறைந்து மகளிர் எண்ணிக்கை கூடியது. இயற்கை உருவாக்

கிய ஆண் பெண் சம நிலை குலைந்தது. மகளிரில் பாதிப்பேர் கைம்பெண்டிர்.

ஆடவர்கள் அடிக்கடி நிகழ்ந்த போர்களில் மாண்டுபோனதால் அவர்தம் மனைவி

யர் கணவருடன் தீப்பாய்ந்து மாய்வர்; உயிரை மாய்க்கத் தயங்கியவர் கொடுமை

யான கைம்மை நோன்பு நோற்று வாழலாம். அதன்படி,  கைம்மை நோன்பு நோற்

பவர்கள் கூந்தலைக் களைதல் வேண்டும்;  அல்லியின் புல்லரிசிச் சோறு உண்ணல்

வேண்டும்; உணவில் நெய் தவிர்த்தல் வேண்டும்;  பரற் கல் பரப்பிய தரையில்

விரிப்பு, தலையணை யின்றித் துயிலுதல் வேண்டும். இவ்விதிமுறைகளுக்கு

அஞ்சியே பல பெண்டிர் கணவரோடு உடன்கட்டை ஏறி உயிரை விடுத்தனர்.

நல்லவேளை, உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.


இறந்த போர் வீரர்களின் மனைவியர் களைந்த தலைமுடிகளால் கயிறு திரிக்கப்

பட்டுத் தோற்ற அரசனின் வெட்டப்பட்ட காவல் மரத்தைத் தன் நாட்டுக்கு இழுத்துச்

செல்லப் பயன்படுத்துவர் வெற்றிபெற்ற அரசர். தலைமுடியால் உருவாக்கப்படும்

கயிறு 'கூந்தல் முரற்சி' எனப்படும். வெற்றிபெற்ற அரசன் தோற்ற அரசனின்

காவல் மரத்தை வெட்டிச் சாய்த்து அதனைத் துண்டுகளாக்கித் தன்னாட்டுக்கு

எடுத்துச் சென்று  அத்துண்டுகளால் தன்னாட்டுக்கு முரசம் செய்துகொள்வது

வீரமாகக் கருதப்பட்டது. சாதாரணமான கயிறுகள் ,பெரிய மரத்துண்டுகள் யானை

களால் இழுக்கப்படும் பொழுது தேய்ந்து இற்றுப் போகும். ஆனால் கயிறுகளின்மேல்

'கூந்தல் முரற்சி' யைச் சுற்றி மரத்துண்டுகளை  இழுத்துச் சென்றால் கயிறுகளுக்குச்

சேதம் ஏதும் ஏற்படாதென்பர். கூந்தல் முரற்சி  அவ்வளவு வலிமையுடையதென்பர்.

சேரன் செங்குட்டுவன் மோகூரை யாண்ட பழையன் என்னும் சிற்றரசனுடன் போர்

செய்து அவனை வென்று அவன் காவல் மரமான வேம்பை வெட்டி வீழ்த்தியதாகவும்

அம்மரத்துண்டுகளைப் பழையனின் படைவீரர்களின் மனைவியர் களைந்த கூந்தல்

முரற்சியால் தன் தலைநகர்க்கு எடுத்துச்சென்று முரசம் செய்து கொண்டதாகவும்

பதிற்றுப் பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வேறொரு கொடுமையும் நிகழ்ந்தது. ஒரு மன்னன் பகைநாட்டின் மீது படையெடுத்து

அதனை வெற்றிகொண்டால் தோற்றுப்போன நாட்டின் இளம்பெண்டிரை(அரசனின்

மனைவியர் உட்படச் சகல இளம் பெண்டிரையும்) சிறையெடுத்துத் தன் நாட்டுக்கு

அழைத்து வருவது வழக்கம். அழைத்துவரப்பட்ட மகளிரின் இளமை, அழகு முதலிய

வற்றைக் கருத்தில்கொண்டு அரசனின் காமக்கிழத்தியராக்கப் படுவர். மற்றவர்

சேடியராக்கப் படுவர். இப்பெண்டிரைக் 'கொண்டி மகளிர் 'அல்லது 'உரிமை மகளிர்'

என் அழைத்தனர். உரிமை மகளிருக்கு உரிமைகள் ஏதும் அளிக்கப்படவில்லை.

அரசனுக்கு உரிமைப் பட்டவர்கள். அவ்வளவே. தசரதச் சக்கரவரத்திக்கு அறுபதி

னாயிரம் மனைவியர் இருந்தனர் என்று இராமாயணத்தில் சொல்லப்பட்டது இவ்

வுரிமை மகளிரை உள்ளடக்கிய கணக்கே. இந்தக் கொடுமையை உலகம் முழுவதிலும்

உள்ள அரசர்கள் அந்நாட்களில் பின்பற்றினார்கள். அரசனைத் தவிர வேறு யாரும்

இம்மகளிரைத் நீண்ட இயலாது. அரசனைத் தவிர வேறு யாரோடும் தொடர்பு கொண்டதாகக்

கண்டுபிடிக்கப்பட்டால் ஈவிரக்கமின்றிச்  சுண்ணாம்புக் காளவாயில் நீற்றப் படுவர்.

அந்தோ பரிதாபம்! அவர்களின் நிலைமை மிக மிக மிகக் கொடுமையானது. மேலும்

வெற்றி பெற்ற அரசர் தோற்றுப்போன நாட்டின் செல்வங்களையெல்லாம் கொள்ளை

யடிக்க உத்திரவிடுவர்.


மேலும் ஆடவர் எண்ணிக்கை குறைந்ததால் பரத்தையர் என்ற பிரிவினர் உரு

வாகிச் சமூகத்தைச் சிதைத்தனர். ஆடவர்களுக்கும் கொடுமைகள் நடந்தன.

வீரம் என்னும் போதை யேற்றப்பட்டது. மார்பில் புண்பட்டுச் செத்தால் துறக்கம்(சொர்க்கம்)

புகலாம். முதுகில் புண்படக் கூடாது. சிலசமயம் எதிரி எறிந்த வேல் மார்பை

ஊடுருவி முதுகுக்கு வெளியே வரும். அதற்கு வெட்கப் பட்டு வடக்கிருந்து உயிர்

துறந்த மன்னர் பலராவர். மேலும் அரசனுக்காகவும் நாட்டு நன்மைக்காகவும்

தன்னைத் தானே நவகண்டம் (ஒன்பது இடங்களில் உடலைக் கிழித்து இறுதியில்

தன் தலையைத் தானே அரிந்து பலியிட்டுக் கொள்ளுதல்)நிகழ்த்திய வீரர்களும்

இருந்தனர். இப்படியாக, ஆடவர்க்கு வீரம் என்னும் போதையையும் பெண்டிருக்குக்

கற்பு என்னும் போதையையும் ஏற்றிவிட்டது  சமூகம். அதனால்தான் இத்தகைய

கொடிய சுயபலியிடும் நிகழ்வுகள் நடைபெற்றன. நல்லவேளை இக்கொடிய பழக்கங்கள்

ஒழிக்கப்பட்டு விட்டன.


வீரம், கற்பு அவசியமே;  தன்னைத் தானே பலியிடுதல், உடன்கட்டை ஏறுதல் தேவையில்லை.

தற்காப்புக்காக ஒவ்வொரு நாட்டு மக்களும் போர்ப் பயிற்சி மேற்கொண்டு ஆயத்தமாக

இருத்தல் வேண்டும். அதே நேரத்தில் சமாதானத்துக்கான  சகலவித முயற்சிகளையும்

மேற்கொள்ளுதல் வேண்டும். வீரத்திற் சிறந்த நாடு எதுவென்றால், போருக்கான சகல

ஆயத்தங்களும் செய்து அதே நேரம் போரைத் தவிர்த்து அமைதியை நிலைநிறுத்தப்

பாடுபடும் நாடே ஆகும். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று முதலியவை அவசியமே;

ஆனால் பற்று எல்லை தாண்டி வெறி ஆகிவிடக் கூடாது. மனித நேயம் தலையாய தாகும்.


,

No comments:

Post a Comment