Thursday, 12 July 2018

சங்ககாலத்தில் கொடுங்கோல் ஆட்சிசெய்த நன்னன்

குடநாட்டின்  வடக்கில்  உள்ள
கொண்கான  நாட்டில்  வேளிர்
மரபில்  வந்த நன்னனென்னும்
மன்னன் சேர வேந்தன் ஆட்சி
யின் கீழ்ச்சிற்றரசனாக  ஆட்சி நடத்தி வந்தான்.  அவன் கல்வி
கேள்விகளில் வல்லவன்
அல்லன். அதனால்  புலவர்
முதலான கற்றவர்களை ஆதரித்தான் அல்லன். நெஞ்
சில் சிறிதும் இரக்கமற்றவன்.
கொண்கானநாட்டின்வடக்கில்துளு நாடும்  கிழக்கே புன்னா
டும் இருந்தன. புன்னாட்டைக்
கங்கர்  ஆண்டுவந்தனர். இப்
போதுள்ள  மைசூர்நாட்டைப்
பண்டைய நாளில்  கங்கநாடு
என அழைத்தனர்.

நன்னன்  தனது நாட்டின் கடி
மரமாக(காவல் மரமாக) மா
மரம்  ஒன்றை நட்டுப்  பாது
காத்து வந்தான். அரசு மரம்
என்பதால்  பொதுமக்கள் எவ
ரும் அதை நெருங்குவதே
யில்லை.  அந்த மாமரம் ஒரு
ஆற்றையொட்டி யமைந்திரு
ந்தது.

ஒருநாள் ஒரு பெண் ஆற்றில்
குளித்துக்  கொண்டிருந்த
பொழுது  அந்த மாமரத்தில்
இருந்து  ஒரு காய் ஆற்றில்
விழ, ஆற்றுநீர்  அதையடித்
துக்கொண்டு அப்பெண்ணரு
கில் வர, அவள் அதனைக்
கையில் எடுத்து உண்டுவிட்
டாள்.

இதனைக்  காவலர் மூலம்
கேள்விப்பட்ட  இரக்கமற்ற
மன்னன் பெண்ணுக்கு மரண
தண்டனை விதித்தான். அப்
பெண் கோசர்  குலத்தைச்
சேர்ந்தவள். கோசர் குலத்தைச்
சேர்ந்தவர்கள் மாவீரர்கள்.
நன்னன் படையிலும் நாட்டைப்
பாதுகாக்கும் பணியிலும்
பணிபுரிந்துவந்தனர். தண்ட
னை விதிக்கப்பட்ட பெண் ஒரு
நிலப்பகுதித் தலைவனுக்கு
மகள். இக்கொடிய செய்தியை
அறிந்த அத்தலைவன் நன்ன
னிடம்  வந்து குற்றத்தை மன்
னிக்குமாறு வேண்டினார்.
தண்டமாக அப்பெண்ணின்
எடைக்கு எடை பொன்னையும்
81 யானைகளையும் கொடுப்ப
தாக மன்றாடிக்கேட்டுக்கொண்
டார்.  ஈவிரக்கம் இல்லாத,பிடி
வாத குணமிக்க நன்னன்
என்ற கொடுங்கோலன் அதை
ஏற்றான்அல்லன்.  கொலைத்
தண்டனையை நிறைவேற்றி
னான். இந்தச் செய்தியைக்
கேட்டுப்  பொதுமக்கள் குமுறி
னர்.  புலவர்கள் கொதித்தனர்.
பெண்கொலை புரிந்த நன்னன் என்று தூற்றினர்.

பரணர் என்ற புலவர் தாம்
இயற்றிய ஒரு  பாடலில்(குறுந்
தொகை--292) கீழ்க்கண்டவாறு
தெரிவிக்கின்றார்:-
"மண்ணிய சென்ற ஒண்ணு
      தல் அரிவை
புனல்தரு பசுங்காய்  தின்ற
      தன் தப்பற்(கு)
ஒன்பதிற்(று) ஒன்பது களிற்
      றொ(டு)அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்
      பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த
      நன்னன்"
எனச் சாடுகின்றார்.

அப்பெண் தெரிந்து வேண்டு
மென்றே  அக்காயை உண்
டாள் அல்லள்.  ஆற்றில்அடித்து
வரப்பட்டது. அதை உண்டதற்கு
மிகமிக கொடிய தண்டனை
யான  மரணதண்டனை என்ப
து ஏற்றுக்கொள்ளவே முடியா
தது.  மனம் ஆறவே ஆறாது.
எனவே, புலவர்கள் எவருமே
பெண் கொலை புரிந்த நன்ன
னைப்  போற்றிப் பாடவில்லை


பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் இளங்கண்டீரக்
கோவும் இளவிச்சிக்கோவும்
ஒன்றாக உரையாடிக்கொண்
டிருந்த  பொழுது இளங்கண்டீ
ரக்கோவைத் தழுவி நலம் கேட்
டு மற்றவரை(இள விச்சிக்கோ
வை) எதுவும் நலம் கேட்காமல்
இருந்தார். இளவிச்சிக்கோ
அரச குடும்பத்தைச் சேர்ந்த
தன்னை நலம்கேட்காததற்கு
காரணம் என்ன? என்று வின
விய போது  நன்னனின் மரு
கன்  என்பது தான் காரணம்
என்று பதிலிறுத்தார். (புறநா
னூறு  பாடல் எண்:151)


தம்குலப்  பெண்ணைக் கொன்
ற காரணத்தால் கோசர்கள்
நன்னனைப்  பழிக்குப்பழி
வாங்க  எண்ணினர். சூழ்ச்சி
செய்து  நன்னனின் காவல்
மரமான  மாமரத்தை வெட்டி
அகற்றினர். இந்த தகவலை
புலவர் பரணர் தமது பாடலில்
தெரிவிக்கின்றார்(குறுந்தொ
கை :பாடல் எண்:73). பாடல்
பின்வருமாறு:
"மகிழ்நன் மார்பே வெய்யை
     யானீ
அழியல்  வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற்
     போக்கிய
ஒன்று  மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டு
     மாற் சிறிதே!".

கொடுங்கோல்  நன்னன் கொண்கான  நாட்டில் உள்ள
ஏழில் மலைப்  பகுதியை
ஆண்டுவந்தான்.  அதன் வட
பகுதியான துளு நாடும்  அவனுக்கு  உரியதே.  துளு
நாட்டில் கோசர் எனப்படும்
குடியினர் வாழ்ந்துவந்தனர்.
" மெய்ம்மலி பெரும்பூண்
        செம்மற் கோசர்
தோகைக்காவின் துளுநாடு"
என்று புலவர் பாடியுள்ளனர்.
துளு நாட்டிலும்  அரபிக்கடற்
கரையைச் சார்ந்த நெய்தற்
பகுதியில்  வாழ்ந்தனர்.
"பல்வேற்  கோசர் இளங்கள்
     கமழும்
நெய்தலஞ்  செறுவின் வளங்
     கெழு நன்னாடு"
என்று கல்லாடனார் பாடியுள்
ளார்."
இப்படியாக, கொடுங்கோல்
நன்னன் கோசர்களின் பகை
யைப்  பெற நேர்ந்ததனால்
சேரவேந்தனின் வலிமை
கூடிவிட்டது.  எந்த நேரமும்
நன்னன்  நாட்டைத்  தாக்கி
நிரந்தரமாக  அடிமைப் படுத்த
லாம்  என்ற  பேச்சைக் கேள்வி
யுற்ற நன்னன் புன்றுறை
நாட்டுக்கு  ஓடிவிட்டான். கடி
மரமாக  மாமரத்தை விலக்கி
வாகைமரத்தை அறிவித்தான்
.விசயமங்கலத்துக்கும் பெருந்
துறைக்கும் இடையே வாகைப்
புத்தூர் என்ற ஊர் இந்தக்
காரணத்தால்  உருவானதாக
இடைக்காலக்  கல்வெட்டொன்
று  தெரிவிக்கிறது. பெண்
கொலை  செய்யப்பட்ட  இடத்
தைப்  பெண்கொன்றான்
பாறை என அழைக்கின்றனர்.
மலையாளத்தார் பெங்கணாம்
பறா  என  அழைக்கின்றனர்.


வீரமிக்க  கோசர்கள் பகையை
அடைந்ததால்  நன்னனின்
படைபலம் குறைந்துபோயிற்று
பின்னாளில்  களங்காய்க்
கண்ணி நார்முடிச் சேரல் என்ற
சேரவேந்தர் நன்னன் நாட்டின்
மீது படையெடுத்து அவனைத் தோற்கடித்தார்.

தன்னுடைய  பிடிவாதத்தாலும்
கொடிய  எண்ணங்களாலும்
கொடுங்கோல்ஆட்சியினாலும்
பெண்கொலை புரிந்தநன்னன்
அழிவடைந்தான்.

இந்த இடத்தில்  இதேபோல
நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை
ஒப்பிட்டுப்  பார்த்தல்வேண்டும்
சேரன் தகடூர் எறிந்த பெருஞ்
சேரல் இரும்பொறையின் முரசு கட்டிலில்  அவரைப் பார்க்
க வந்த மோசிகீரனார் என்ற
புலவர் நடந்துவந்த களைப்பில்
அயர்ந்து உறங்கிவிட்டார்.
துயில் நீங்கி விழித்தெழுந்த
புலவர் சேரவேந்தர் தமக்கு
கவரி வீசிக்கொண்டிருப்பதை
அறிந்து பதறித்துடித்துவிட்டார்
அரசருடைய முரசுகட்டிலில்
தூங்கிய தமக்குத் தண்டனை
தராமல்  கவரி வீசியதுகுறித்து
வியந்து  பாடியுள்ளார். (புறநா
னூறு:எண்:50) அது பின்வரு
மாறு:
"குருதி வேட்கை உருகெழு
       முரசம்
மண்ணி வாரா அளவை
        எண்ணெய்
நுரைமுகத் தன்ன மென்பூஞ்
        சேக்கை
அறியா தேறிய என்னைத்
        தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம்  சாலும் நற்றமிழ்
         முழுதறிதல்;
அதனொடும் அமையா  தணுக
          வந்துநின்
மதனுடை முழவுத்நோள்
          ஓச்சித் தண்ணென
வீசியோயே!"
இதுபோலவே  பெருந்தன்மை
யுடன் நன்னன் நடந்திருந்தால்
அழிவு  நேர்ந்திருக்காது. தமிழ்
இலக்கியம் உள்ளவரை நன்ன
னின் பெண்கொலைக்குற்றம்
நீங்காது நினைவில் நிற்கும்.
ஆய்வுக்குரிய  நூல்கள:
சேர மன்னர்கள் வரலாறு--
  எழுதியவர்:திரு ஒளவை சு.துரைசாமி பிள்ளை
 அவர்கள்.
புறநானூறு
குறுந்தொகை


.





.


.



No comments:

Post a Comment