இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
கலித்தொகையில் பயின்றுவரும் ஒரு அழகிய
பாட்டு. பாலைக் கலியில் உள்ள ஒன்பதாம் பாடல்.
கலித்தொகை அகப்பொருளைப் பாடுகின்ற
இலக்கியம். அகப்பொருளில் களவியல் மற்றும்
கற்பியல் என்னும் இரு துறைகள் உள்ளன. முன்
பின் அறிந்திராத ஆண்மகன்(தலைவன்)ஒருவனும்
பெண்மகள்(தலைவி) ஒருத்தியும் தற்செயலாகச்
சந்திக்கும் பொழுது இயற்கை நெறிப்படி ஒருவர்
பால் ஒருவர் ஈர்க்கப்பட்டுப் பிறர் அறியாமல் பழகி
வாழ்ந்து வருவது களவியல் ஒழுக்கம் எனப்படும்.
களவியல் வாழ்வு குறுகிய காலத்துக்கு மட்டுமே
அனுமதிக்கப்பட்டது. இவர்கள் சந்திப்பைப் பற்றியும்
பழக்கத்தைப் பற்றியும் அரசல்புரசலாக ஊருக்குள்
பேச்சுக் கிளம்பும். ஊரார் வாயிலாகத் தோழிக்குத்
தெரியவரும். அவள் வாயிலாகத் தாய்க்கும் தந்தைக்
கும் தெரியவரும். அவர்கள் திருமணப் பேச்சைத்
தொடங்கி நல்லபடியாக முடித்து வைப்பார்கள். திரு
மணத்தில் முடிந்தால் கற்பியல் ஒழுக்கம் தொடங்கி
விட்டது என்று பொருள். காதலர்களின் மறைவான
வாழ்க்கை ஊராருக்குத் தெரியத் தொடங்கினால்
அலர்(பழிச்சொல்) பேசத் தொடங்கிவிடுவார்கள்.
அதனால் களவியல் வாழ்க்கை குறுகிய காலம் மட்
டுமே நிகழும். அவ்வளவு நெறிமுறைகள் சமுதாயத்
தில் நிலவின. காதல் செய்வதற்கு எவ்வளவு சுதந்
திரம் இருந்ததோ அந்த அளவு ஒழுக்கநெறியும்
விதிமுறைகளும் இருந்தன.
களவியல் வாழ்க்கையில் உடன்போக்கு (ஓடிப்
போதல்) அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஓடிப்
போன பெண்ணைத் தேடித் தோழியோ, செவிலித்
தாயோ, தாயோ பின்னாலேயே வந்து காதலர்களைச்
சந்தித்துத் திருமணத்துக்கு உடன்பட வைத்துத் திரு
மணத்தை நிகழ்த்திடுவார்கள்.
நாம் பார்க்கவிருக்கும் பாடலில் இது போன்ற நிகழ்வு
தான் சொல்லப்பட்டுள்ளது. தலைவி ஒருத்தி தன் தாய்
தந்தையரைத் துறந்து தன் மனத்துக்கு உகந்த
தலைவனோடு சென்றுவிட்டாள். இச்செயலைப் பற்றிக்
கேள்விப்பட்ட செவிலித்தாயானவள் வளர்ப்பு
மகளைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் சென்றாள்.
அங்கும் இங்கும் தேடிக்கொண்டு வரும்போது இடை
வழியில் சில அந்தணர்களைச் சந்தித்தாள். அவர்கள்
சூரிய வெப்பத்தைத் தாங்கும் பொருட்டுக் கையில்
குடையையும் உறியிலே தங்கிய கமண்டலத்தையும்
புகழ் அமைந்த முக்கோலையும் தோளிலே சுமந்து
கொண்டு இறைவன் திருப்பெயரைத் தவிர வேறு
எதனையும் நினையாதவராக வந்துகொண்டிருந்தனர்.
அவர்களிடம் செவிலித்தாய் உரையாடினாள்."அந்தணர்
களே! நீங்கள் வந்த வழியில் என்மகள் ஒருத்தியையும்
வேறொருத்தியின் மகன் ஒருவனையும் பார்த்தீர்களா?"
என்று வினவினாள். அந்த அந்தணர்களின்
தலைவராகத் தோன்றியவரிடம் வினா
தொடுக்கப்பட்டது. அவர்"நாங்கள் பாராது
இருந்தோமில்லை; ஆண்மகனாகிய ஒரு
அண்ணலையும் மாட்சிமைப்பட்ட அணிகலன்
களையணிந்த இளமையான பெண் ஒருத்தி
யையும் கண்டோம். நீவிர் அப்பெண்ணுக்குத்
தாய் போலத் தோன்றுகின்றீர்; சந்தனமரம்
மலையிலே தோன்றினாலும் மலைக்குச்
சந்தனத்தால் ஏதும் பயன் உண்டா? (கிடை
யாது); சந்தனத்தை அரைத்துப் பூசிக்கொள்
பவருக்கே பயன் உண்டு; அதுபோலவே உங்கள்
மகளும் இனி உங்களுக்குப் பயன்படமாட்டாள்.
(அவளைக் காதலித்தவனுக்கே அவள் பயன்படு
வாள்).
வெண்மையான முத்து கடலில் உதித்தாலும்
அதனால் கடலுக்கு ஏதும் பயனில்லை; அதனை
அணிந்து கொள்பவருக்கே பயன்படும். உங்கள்
மகளும் அவ்வாறே உங்களுக்குப் பயன்படாள்.
(அவளைக் காதலித்தவனுக்கே பயன்படுவாள்).
இனிய ஏழிசை யாழிலே உருவானாலும் அதனால்
யாழுக்குப் பயன் ஏதுமில்லை. ஏழிசை இசைப்ப
வர்க்கே பயன்படும். அது போலவே உங்கள் மகளும்
உங்களுக்குப் பயன்படாள்.(அவளைக் காதலித்தவ
னுக்கே பயன்படுவாள்).
அதனால் மிகுந்த கற்புடைய அந்தப் பெண்ணுக்குத்
துன்பம் நினைக்க வேண்டா; சிறந்த காதலனைத்
தேர்ந்தெடுத்து அவனை வழிபட்டு அவன்பின்னே
போனாள். அவள் செய்த செயலே அறத்தின்பாற்
பட்டதாகும். (எனவே அவளுக்கு யாதொரு துன்பமும்
நினையாதீர்!).
இதனைக் கேட்ட செவிலித்தாய் மனந்தேறி நிம்மதி
யடைந்தாள். பாடலைப் பார்ப்போம்:
"எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவலசைஇ, வே(று) ஓரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்!
வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!
'காணேம் அல்லேம்; கண்டனம் கடத்திடை;
ஆணெழில் அண்ணலோ(டு) அருஞ்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர்நீர் போறிர்.
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்(கு) அல்லதை,
மலையுளே பிறப்பினும் மலைக்(கு)அவைதாம்
என்செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும்ஆங்(கு) அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்(கு) அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்(கு)அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்(கு) அனையளே!
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்(கு) அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்(கு)அவைதாம்
என்செய்யும்?
சூழுங்கால்,நும்மகள் நுமக்கும்ஆங்(கு) அனையளே!
எனவாங்கு,
இறந்த கற்பினாட்(கு) எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள;
அறந்தலை பிரியா ஆறும்மற்(று) அதுவே!
அரும் பொருள்:
உரைசான்ற முக்கோல்--திரிதண்டம்
சுவல் அசைஇ--தோளில் தொங்கவிட்டு
கடத்திடை--காட்டிடை
சுரம்--வறண்ட நிலம்(பாலை நிலம்)
மாணிழை--மதிப்புமிக்க அணிகலன்
மடவரல்--இளமை பொருந்திய
போறிர்--போன்று உள்ளீர்
சாந்தம்--சந்தனம்
தேருங்கால்--ஆராயுங்கால்
முரல்பவர்க்கு--மீட்டுபவர்க்கு
இறந்த கற்பினாள்--மிகச் சிறந்த கற்புடையவள்
எவ்வம்--துன்பம்
படரன்மின்--நினையாதீர்
வழிபடீஇ--வழிபட்டு
நம்முடைய மகளேயானாலும் உரிய பருவம் வந்த
வுடன் அவளுக்கேற்ற ஆணொடு சேர்ந்து இல்வாழ்வு
நடத்தினால்தான் அவள் பெண்மை மிளிரும். இது
தான் இப்பாடலின் உட்கருத்தாக உள்ளது.
கலித்தொகையில் பயின்றுவரும் ஒரு அழகிய
பாட்டு. பாலைக் கலியில் உள்ள ஒன்பதாம் பாடல்.
கலித்தொகை அகப்பொருளைப் பாடுகின்ற
இலக்கியம். அகப்பொருளில் களவியல் மற்றும்
கற்பியல் என்னும் இரு துறைகள் உள்ளன. முன்
பின் அறிந்திராத ஆண்மகன்(தலைவன்)ஒருவனும்
பெண்மகள்(தலைவி) ஒருத்தியும் தற்செயலாகச்
சந்திக்கும் பொழுது இயற்கை நெறிப்படி ஒருவர்
பால் ஒருவர் ஈர்க்கப்பட்டுப் பிறர் அறியாமல் பழகி
வாழ்ந்து வருவது களவியல் ஒழுக்கம் எனப்படும்.
களவியல் வாழ்வு குறுகிய காலத்துக்கு மட்டுமே
அனுமதிக்கப்பட்டது. இவர்கள் சந்திப்பைப் பற்றியும்
பழக்கத்தைப் பற்றியும் அரசல்புரசலாக ஊருக்குள்
பேச்சுக் கிளம்பும். ஊரார் வாயிலாகத் தோழிக்குத்
தெரியவரும். அவள் வாயிலாகத் தாய்க்கும் தந்தைக்
கும் தெரியவரும். அவர்கள் திருமணப் பேச்சைத்
தொடங்கி நல்லபடியாக முடித்து வைப்பார்கள். திரு
மணத்தில் முடிந்தால் கற்பியல் ஒழுக்கம் தொடங்கி
விட்டது என்று பொருள். காதலர்களின் மறைவான
வாழ்க்கை ஊராருக்குத் தெரியத் தொடங்கினால்
அலர்(பழிச்சொல்) பேசத் தொடங்கிவிடுவார்கள்.
அதனால் களவியல் வாழ்க்கை குறுகிய காலம் மட்
டுமே நிகழும். அவ்வளவு நெறிமுறைகள் சமுதாயத்
தில் நிலவின. காதல் செய்வதற்கு எவ்வளவு சுதந்
திரம் இருந்ததோ அந்த அளவு ஒழுக்கநெறியும்
விதிமுறைகளும் இருந்தன.
களவியல் வாழ்க்கையில் உடன்போக்கு (ஓடிப்
போதல்) அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஓடிப்
போன பெண்ணைத் தேடித் தோழியோ, செவிலித்
தாயோ, தாயோ பின்னாலேயே வந்து காதலர்களைச்
சந்தித்துத் திருமணத்துக்கு உடன்பட வைத்துத் திரு
மணத்தை நிகழ்த்திடுவார்கள்.
நாம் பார்க்கவிருக்கும் பாடலில் இது போன்ற நிகழ்வு
தான் சொல்லப்பட்டுள்ளது. தலைவி ஒருத்தி தன் தாய்
தந்தையரைத் துறந்து தன் மனத்துக்கு உகந்த
தலைவனோடு சென்றுவிட்டாள். இச்செயலைப் பற்றிக்
கேள்விப்பட்ட செவிலித்தாயானவள் வளர்ப்பு
மகளைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் சென்றாள்.
அங்கும் இங்கும் தேடிக்கொண்டு வரும்போது இடை
வழியில் சில அந்தணர்களைச் சந்தித்தாள். அவர்கள்
சூரிய வெப்பத்தைத் தாங்கும் பொருட்டுக் கையில்
குடையையும் உறியிலே தங்கிய கமண்டலத்தையும்
புகழ் அமைந்த முக்கோலையும் தோளிலே சுமந்து
கொண்டு இறைவன் திருப்பெயரைத் தவிர வேறு
எதனையும் நினையாதவராக வந்துகொண்டிருந்தனர்.
அவர்களிடம் செவிலித்தாய் உரையாடினாள்."அந்தணர்
களே! நீங்கள் வந்த வழியில் என்மகள் ஒருத்தியையும்
வேறொருத்தியின் மகன் ஒருவனையும் பார்த்தீர்களா?"
என்று வினவினாள். அந்த அந்தணர்களின்
தலைவராகத் தோன்றியவரிடம் வினா
தொடுக்கப்பட்டது. அவர்"நாங்கள் பாராது
இருந்தோமில்லை; ஆண்மகனாகிய ஒரு
அண்ணலையும் மாட்சிமைப்பட்ட அணிகலன்
களையணிந்த இளமையான பெண் ஒருத்தி
யையும் கண்டோம். நீவிர் அப்பெண்ணுக்குத்
தாய் போலத் தோன்றுகின்றீர்; சந்தனமரம்
மலையிலே தோன்றினாலும் மலைக்குச்
சந்தனத்தால் ஏதும் பயன் உண்டா? (கிடை
யாது); சந்தனத்தை அரைத்துப் பூசிக்கொள்
பவருக்கே பயன் உண்டு; அதுபோலவே உங்கள்
மகளும் இனி உங்களுக்குப் பயன்படமாட்டாள்.
(அவளைக் காதலித்தவனுக்கே அவள் பயன்படு
வாள்).
வெண்மையான முத்து கடலில் உதித்தாலும்
அதனால் கடலுக்கு ஏதும் பயனில்லை; அதனை
அணிந்து கொள்பவருக்கே பயன்படும். உங்கள்
மகளும் அவ்வாறே உங்களுக்குப் பயன்படாள்.
(அவளைக் காதலித்தவனுக்கே பயன்படுவாள்).
இனிய ஏழிசை யாழிலே உருவானாலும் அதனால்
யாழுக்குப் பயன் ஏதுமில்லை. ஏழிசை இசைப்ப
வர்க்கே பயன்படும். அது போலவே உங்கள் மகளும்
உங்களுக்குப் பயன்படாள்.(அவளைக் காதலித்தவ
னுக்கே பயன்படுவாள்).
அதனால் மிகுந்த கற்புடைய அந்தப் பெண்ணுக்குத்
துன்பம் நினைக்க வேண்டா; சிறந்த காதலனைத்
தேர்ந்தெடுத்து அவனை வழிபட்டு அவன்பின்னே
போனாள். அவள் செய்த செயலே அறத்தின்பாற்
பட்டதாகும். (எனவே அவளுக்கு யாதொரு துன்பமும்
நினையாதீர்!).
இதனைக் கேட்ட செவிலித்தாய் மனந்தேறி நிம்மதி
யடைந்தாள். பாடலைப் பார்ப்போம்:
"எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவலசைஇ, வே(று) ஓரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்!
வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!
'காணேம் அல்லேம்; கண்டனம் கடத்திடை;
ஆணெழில் அண்ணலோ(டு) அருஞ்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர்நீர் போறிர்.
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்(கு) அல்லதை,
மலையுளே பிறப்பினும் மலைக்(கு)அவைதாம்
என்செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும்ஆங்(கு) அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்(கு) அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்(கு)அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்(கு) அனையளே!
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்(கு) அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்(கு)அவைதாம்
என்செய்யும்?
சூழுங்கால்,நும்மகள் நுமக்கும்ஆங்(கு) அனையளே!
எனவாங்கு,
இறந்த கற்பினாட்(கு) எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள;
அறந்தலை பிரியா ஆறும்மற்(று) அதுவே!
அரும் பொருள்:
உரைசான்ற முக்கோல்--திரிதண்டம்
சுவல் அசைஇ--தோளில் தொங்கவிட்டு
கடத்திடை--காட்டிடை
சுரம்--வறண்ட நிலம்(பாலை நிலம்)
மாணிழை--மதிப்புமிக்க அணிகலன்
மடவரல்--இளமை பொருந்திய
போறிர்--போன்று உள்ளீர்
சாந்தம்--சந்தனம்
தேருங்கால்--ஆராயுங்கால்
முரல்பவர்க்கு--மீட்டுபவர்க்கு
இறந்த கற்பினாள்--மிகச் சிறந்த கற்புடையவள்
எவ்வம்--துன்பம்
படரன்மின்--நினையாதீர்
வழிபடீஇ--வழிபட்டு
நம்முடைய மகளேயானாலும் உரிய பருவம் வந்த
வுடன் அவளுக்கேற்ற ஆணொடு சேர்ந்து இல்வாழ்வு
நடத்தினால்தான் அவள் பெண்மை மிளிரும். இது
தான் இப்பாடலின் உட்கருத்தாக உள்ளது.
.
ReplyDelete