Wednesday, 19 September 2018

ஏறு தழுவுதல்(தமிழர் தம் வீர விளையாட்டு)

ஏறு தழுவுதல்(தமிழர்தம் வீர விளையாட்டு)

ஏறு தழுவுதல் சங்க காலத்தில் நிலவிய  வீர விளை
யாட்டு. யானையை ஒத்த வலிமையும் மறமும் கொண்ட
காளையை அடக்குவார்க்கே பெண்டிர் மாலை சூட்டும்
வீர வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. ஏறு தழுவதலைப்
பற்றிச் சங்க இலக்கியமான கலித்தொகையில் உள்ள
முல்லைக்கலியில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
கலித்தொகை முல்லைக்கலியில் 17 பாடல்கள் உள்ளன.
பாடல் 101 முதல் 107 முடியவுள்ள 7 பாடல்களும் ஏறு
தழுவும் நிகழ்ச்சிகளை விவரிக்கின்றன. மீதம் உள்ள
10 பாடல்களும் முல்லை நிலத்தார் பின்பற்றிய வாழ்க்கை
முறை, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை விவரிக்
கின்றன. கலித்தொகை அகப்பொருளைப் பாடும் நூல்
தானே. நல்லுருத்திரன் என்னும் புலவர் முல்லைக்கலி
யைப் பாடினார். சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தி
லும் ஏறு தழுவுதலைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்
ளது.

ஏறுதழுவக் காரணம் என்ன? முல்லைநிலத்து மக்கள்
கால்நடைகளை வளர்த்துப் பேணி அவைகளால் கிடைக்
கும் பால், மோர், தயிர், வெண்ணெய், நெய் முதலான
வற்றை விற்று வாழ்க்கை நடத்தியவர்கள். ஆடு, மாடு
முதலான வீட்டில் வளர்க்கப்படும் விலங்கினங்கள்
செல்வமாகக் கருதப்பட்டன. திருக்குறளில் வரும்
"கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை" என்ற குறளில் மாடு
என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும் சொல்
லாகவே கையாளப் பட்டுள்ளது. அந்தக் காலத்
தில் போர் தொடங்கும் பொழுது முதலில் பகை
வரது நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று
ஆநிரை(பசுக் கூட்டம்) யைக் கவர்ந்து வரு
வார்கள். ஆநிரையை இழந்தவர்கள் போராடி
மீட்க முயலுவர். இப்படியாகப் போர் தொடங்கி
நடைபெறும். எனவே, முல்லை நிலத்தார் வீரம்
மிக்கவராக இருத்தல் மிக மிக அவசியம். வீர
உணர்வை ஊட்டுவதற்காகவும், முல்லைநிலப்
பெண்கள் வீரமிக்க கணவரைத் தேர்வு செய்
வதற்காகவும் இந்த வீரவிளையாட்டு நிகழ்த்
தப் பட்டது. இனி ஏறுதழுவுதல் எங்ஙனம் நடை
பெற்றது எனக்கவனிப்போம்.

ஏறுதழுவுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முதல்
நாள் மாலையிலேயே ஆயர் குழல் ஊதித்
தெரிவித்து விடுவார்கள். மறுநாள் காலையில்
காளைகள் தொழுவத்தில் அணியாக நிறுத்தப்
படும். சிவபெருமானின் கணிச்சிப் படை(ஆயுதம்)
போலக் கூர்மையாகக் கொம்பு சீவப்பட்டு எதிர்
வரும் மாடுபிடி வீரர்கள் பிடிப்பதற்கு முயன்றால்
தாக்குவதற்கு வசதியாகக் காளைகள் பழக்கப்படுத்தப்
பட்டு நிறுத்தப்பட்டருக்கும். அவ்விடத்தில் இடி
யோசை போலப் பறைகள் முழக்கப்படும். ஏறத்
தாழப் போர்க்களம் போலத் தோற்றமளிக்கும்.
காளைகளை வளர்த்த மகளிர் மணக்கும்
வாசனைப் பொடிகளையும், நறுமணப் புகை
களையும் ஏந்தியவாறு அணிவகுத்து நிற்பர்.

முல்லைக்கலி முதற் பாடலில் தோழியானவள்
தலைவிக்கு ஏறுதழுவுதலைச் சுட்டிக் காட்டு
கின்றாள். அவள் வாயிலாக நிகழ்ச்சியைப்
புலவர் விவரிக்கின்றார். "மாடுபிடி வீர்கள் பிடவம்,
கோடல், காயா மற்றும் சில பூக்களைக் கண்ணி
யாகக் கட்டித் தலையில் அணிந்துகொண்டு
தொழுவத்துக்குள் நுழைந்தனர். நீர்த்துறையில்
வீற்றிருந்த தெய்வத்தையும் ஆலமரத்தையும்
மராமரத்தையும் போற்றி வணங்கிக் கொண்டு
களத்துள் புகுந்தனர்." மேலும் விவரிக்கிறாள்.
"ஒரு காளை தன்னை அடக்கப் பாய்ந்த பொது
வனை(ஆயனை/இடையனை)ச் சாகும் அளவுக்
குக் குத்தித் தன் கொம்பில் வைத்துக் கொண்டு
சுழற்றுவதைப் பாராய்! பாஞ்சாலியின் கூந்தலைப்
பிடித்திழுத்த துச்சாதனன் நெஞ்சைப் பிளப்பேன்
என்று வஞ்சினம்(சபதம்) கூறிய பீமனின் செயல்
போல இருந்தது.

மற்றொரு காரிக் காளை விடரிப்பூ அணிந்து வந்த
பொதுவனைச் சாய்த்து அவன் குடல் சரியும்படி
அவனைக் குலைப்பதைப் பாராய்! இக் காட்சி
சிவபெருமான் தன்னை இடரிய எருமைக்
கடாவின் நெஞ்சைப் பிளந்து தன் கூளிப்
பேய்களுக்கு உணவாகத் தந்ததை ஒத்துள்
ளது. வேறொரு வெள்ளைநிறக் காளை
தன் மீது தாவி ஏற முயன்ற பொதுவனைத்
தாக்கித் தன் கூர்மையா ன கொம்பால் அவ
னைச் சீரழிப்பதைப் பாராய்! இரவு வேளை
யில் வந்து தன் தந்தையைக் கொன்றவனின்
தோளைத் திருகி எறிந்தவன் செய்கையைப்
போன்றது இது."

இக் காட்சிகளைக் கண்ட தலைவி அச்சம் கொண்
டாள். அவள் அச்சத்தைப் போக்கத் தோழி நல்ல
நிமித்தம் பார்த்துக்  கூறுகின்றாள்." தன் கழுத்தில்
மாலை அணிவிக்கக் கூடிய கணவனைத் தேர்ந்
தெடுப்பதற்காக இந்த ஏறுதழுவும் நிகழ்ச்சி நடை
பெற்றது.  இதனை அறிவிக்க ஆயர் முதல்நாள்
மாலையிலேயே குழல் ஊதினர். கூட்டத்தில்
ஒரு பெண்'ஆண் யானையை விடவும் வீரமிகு
அஞ்சாத கண்கொண்ட இந்தக் காளையை நீ
விடாமல் தொடர்ந்து சென்றால் இந்த ஆயமகள்
உனக்குத் தன் தோளை உரிமையுடையதாக
ஆக்குவாள்.' என்று சொல்வதைக் கேள். மற்றொரு
பெண் 'பகல் போல ஒளிவீசும் கண்ணியைச்
சூடிக் கொண்டும் கையில் கோல் வைத்துக்
கொண்டும் கொல்லும் காளையைப் போராடி வென்ற
வனுக்கு என் கூந்தலை மெத்தையாக்கு
வேன்' என்று இயம்புவதைக் கேளாய். வேறொரு
பெண்'காளையைப் பிடிப்பதில் எனக்கு நிகரான
வர் யாருமிலர் எனச்சொல்லித் தன் வீரத்தை
வெளிப் படுத்துபவனுக்கு நான் உறவுக்காரி
ஆகாமல் விடமாட்டேன். அவனைக் காண்பதற்
காக என் காளையுடன் என் கண்பூக்கக் காத்துக்
கொண்டிருக்கிறேன்.' என்று சொல்லிப் புலம்பு
வதைக் கேட்டிடுக!

இவ்வண்ணம் நிகழ்ந்த ஏறுதழுவும் நிகழ்ச்சியில்
காளைகளும் மிகவும் வருந்தின. பொதுவர்களும்
புண்பட்டனர். நறுமணம் கமழும் கூந்தலுடன்
பொதுவர் மகளிர் முல்லை பூத்த காட்டுப் பூங்கா
வுக்கு வந்தனர். பொதுவர்குல ஆடவரோடு வாழ்க்
கை  நடத்தக் குறிகாட்டினர்." இவ்வாறு விவரித்த
தோழி தலைவியிடம்" உன் தலைவனும் ஒரு நாள்
காளையை அடக்கி உன் கைப்பற்றிடுவான்" என்று
ஆற்றுவித்தனள்.

இப்படியாக ஏறு தழுவும் நிகழ்ச்சி தொடர்ந்து சில
நாட்கள் நடைபெற்றது. சில பொதுவர் புண்பட்டனர்.
சில பொதுவர் காளைகளை அடக்கி ஆண்டு அவை
களின் மேல் ஏறிவந்தனர். தாம் வளர்த்த காளை
களை வென்ற பொதுவரை மணந்து கொள்ள அந்த
அந்த ஆயர்குலப் பெண் சம்மதித்தாள். நிகழ்ச்சி
முடிந்தவுடன் பொதுவர் குல ஆடவரும் மகளிரும்
காளைகளைத் தொழுவத்துக்குக் கொண்டு
சென்று நிறுத்தினர். பின்னர் அனைவரும் ஆநிரைச்
சாணம் மண்டிய ஊர்மன்றத்தில் ஒருவரை யொருவர்
தழுவிக் கொண்டு தழூஉ ஆட்டம் ஆடிக் களித்தனர்.

முல்லைக்கலி பாடல்:103
"கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்."
பொருள்: கொல்லும் காளையின் கொம்புக்கு
அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் இந்தப் பிறவி
யில் மட்டும் அன்று; அடுத்த பிறவியிலும்
அணைக்க மாட்டாள்.
"அஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்(கு) அரிய---உயிர்துறந்து
நைவாரா ஆயமகள் தோள்."
பொருள்: கொல்லும் காளையை அஞ்சாமல்
பிடித்தாள்பவர் அல்லாதவரை வலிய நெஞ்சுறுதி
கொண்ட ஆயர்குலப் பெண் தழுவ மாட்டாள்;
தழுவ நேர்ந்தால் மனம் நொந்து உயிர் துறப்பாள்.
"வளியா அறியா உயிர், காவல்கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
பொருள்: அறியாது காற்றில் பறக்கும் உயிரைக்
காப்பாற்றிக் கொண்டு காளையின் கூரான
கொம்புக்கு அஞ்சுபவர் ஆயர் குலமகளின்
தோளை அணைப்பது எளிதோ?
"விலைவேண்டார் எம்மினத்(து) ஆயர்மகளிர்
கொலேயேற்றுக் கோட்டிடை,தாம் வீழ்வார்
     மார்பின்
முலையிடைப் போல, புகின்."
பொருள்: தம்மை விரும்புபவர் கொல்லும்
காளையின் கொம்புகளுக் கிடையில் பாய்ந்து
அடக்குவாராயின் எம் ஆயர்குலப் பெண்கள்
தம்மை மணக்கத் தடை சொல்வதில்லை.
"குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்--
மாசில்வான் முந்நீர்ப் பரந்த தொல்நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம்கோ வாழியர், இம்மலர் தலைஉலகே!"
பொருள்: இந்த ஏறு தழுவல் நிகழ்ச்சியை மர
பாகக் கொண்ட ஆயர் குலத்தினர் நாம். பாடிக்
கொண்டே குரவை தழுவி ஆடுவோம். பாடும்
போது குறையாத பெரும்புகழுடைய தெய்வத்
தைப் போற்றுவோம். ஆழிசூழும் இந்த நிலப்
பரப்பை ஆளும் உரிமைபெற்ற மன்னரை
வாழ்த்துவோம். இந்த உலகையும் வாழ்த்து
வோம்.

இனி, ஏறு தழுவுதல் குறித்துச் சிலப்பதிகாரத்தில்
என்ன சொல்லப் பட்டுள்ளது என்று பார்ப்போம்.

கோவலன் சிலம்பு விற்க மதுரை நகருக்குள்
சென்றுள்ளான். மதுரைப் புறநகரில் கண்ணகி
ஆயர்குலப் பெண்ணான மாதரி வீட்டில்  தங்கி
யுள்ளாள். அப்போது சில தீநிமித்தங்கள் தோன்
றின. அதனால் மாதரி குரவைக் கூத்து நடத்திக்
கண்ணன், பலராமன் முதலான தெய்வங்களைப்
போற்றித் துதித்தால்  தீங்கு எதுவும் வாராது என
நம்பி ஆய்ச்சியர் குரவைக்கு ஆயத்தம் செய்தாள்.

"காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்
வேரிமலர்க் கோதையாள் சுட்டு."
பொருள்:கரிய எருதின் சீற்றப் பாய்ச்சலைக்
கண்டு அஞ்சாமல் அதன்மேல் பாய்ந்து அதனை
அடக்கியவனை, தேன்நிறைந்த மலர்மாலை
அணிந்த இப்பெண் விரும்பி ஏற்பாள்.
காளையை அடக்கியவனுக்கே காரிகை.
"நெற்றிச் செகிலை அடர்த்தாற்(கு) உரியவிப்
பொற்றொடி மாதரால் தோள்."
"மல்லல் மழவிடை ஊர்ந்தாற்(கு) உரியளிம்
முல்லையம் பூங்குழல் தான்."
"நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகுமிப்
பெண்கொடி மாதர்தன் தோள்."
"பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகுமிந்
நற்கொடி மென்முலை தான்."
"வென்றி மழவிடை ஊர்ந்தாற்(கு) உரியளிக்
கொன்றையம் பூங்குழ லாள்."
"தூநிற வெள்ளை அடர்த்தாற்(கு) உரியளிப்
பூவை புதுமல ராள்".
அரும் சொற் பொருள்:
செகில்--சிவப்பு;  அடர்த்தல்--அடக்குதல்
மல்லல்--வலிமை; மழவிடை--சிறந்த காளை
பொறி--புள்ளி
மற்ற நிகழ்ச்சிகள் கலித்தொகையில் குறிப்
பிடப் பட்டவாறே சிலப்பதிகாரத்திலும் கூறப்
பட்டுள்ளன. ஆய்ச்சியர் குரவை யாடித் தெய்
வத்தை(கண்ணன், பலராமன், நப்பின்னை
முதலானோரை)த் தொழுது, நாட்டையாளும்
மன்னவனை வாழ்த்தி இறுதியில் உலகத்தை
வாழ்த்தி முடித்தனர்.

இவ்வாறு ஏறு தழுவுதலைப் பற்றிக் கலித்
தொகையிலும், சிலப்பதிகாரத்திலும் விரி
வாக விவரிக்கப் பட்டுள்ளது.







No comments:

Post a Comment