நெகிழி (பிளாஸ்டிக்) என்னும் அரக்கன்
நெஞ்சுதனை நிமிர்த்திடலாம் நெகிழியினைப் படைத்ததற்கு;
விஞ்சுகின்ற சிறப்புண்டு; விலைமலிவு ; திடத்தன்மை;
பலவகையாம் வடிவத்தில் பாங்காக உருவாக்கல்;
உலகெங்கும் வாழ்வோர்கள் உபயோகிக் கும்பொருளாம்;
இன்னுமின்னும்சொல்லிடலாம் இருந்தாலும் தீமைமிகு
தன்மைகளும் உள்ளனவே; தயக்கமின்றி ஆராய்வோம்.
உற்பத்தி செயும்நேரம் உயிருக்கும். உடலுக்கும்
சுற்றியுள்ள சூழலுக்கும் தொல்லை நச்சுப் பொருள்பரவிக்
காற்றுவெளி நிலத்தடிநீர் கழனிவயல் பாழாகும்;
தேற்றுதற்கு வழியில்லை; தீமைபல இன்னுமுள;
பெயர்தெரியாப் புதுநோய்கள் பெரியோரைச் சிறியோரை
அயர்வுறவே செய்துவிடும்; ஆஸ்துமா தொல்லைவரும்;
மற்றும்பல் நோய்நொடிகள் வரிசைகட்டி. வந்துநிற்கும்;
புற்றுநோய்க் காரணிகள் புயலெனவே தோன்றிவிடும்;
விளைச்சல் நிலமெல்லாம் வீணாகி மனத்தளவில்
உளைச்சல் உருவாகும்; உய்திபெற வழியுண்டோ?
காகிதம், தாவரத்தின் கழிவுகள்போல் நெகிழியிங்கு
சீக்கிரத்தில் மட்காது; தேயாது; மறையாது;
வீதிகளில் குவிகின்ற வீணான குப்பைகளில்
தீதுமிகும் நெகிழிப்பை சிதைந்திருக்கும் துண்டு,துகள்
போல்வன சேர்ந்திங்கே புழங்குவதால் கால்நடைகள்
தீவனமாய்த் தின்று திணறிச் சா கின்றனவே;
நிலபுலங்கள் ஆறுகுளம் நெடுங்கடல் இங்கெல்லாம்
வலம்வரும்தீதான மட்காத நெகிழியினால்
கடல்வாழும் உயிரினங்கள் கயல்நண்டு கடலாமை
உடல்பருத்த திமிங்கிலங்கள் உணராமல் தின்றுவிட்டுச்
செரித்திடவே இயலாமல் செத்துமடி கின்றனவே;
வருத்தமிகும் செய்தியிஃது; வழியென்ன? சரிசெய்ய.
மட்கிவிடும் தன்மையே வாய்க்காத நெகிழியினைக்
கட்டுக்குள் வைத்திருக்கக் கச்சிதமாய்த் திட்டம்நல்கீர்;
நெகிழியினைப் பயன்படுத்தல் நிச்சயமாய்க் குறைந்துவிட்டால்
வெகுவிரைவில் உற்பத்தி மிகமிகவே அருகிவிடும்.
நெகிழியினால் உருவாகும் நீர்க்குவளை, பை,தட்டு
தகுதியினால் காகிதம்,நற் பாக்குமட்டை போன்றவற்றால்
உண்டாக்கல் சாத்தியமே; ஒருசிறிதும் ஐயமிலை;
கொண்டாடி மகிழ்வோமே; குறைத்திடுவீர் நெகிழியினை;
நெகிழிக் கழிவுகளை மறுபயன் பாட்டினுக்கே
உகந்தவை அல்லாத வையென்று பிரித்தெடுப்பீர்;
மறுபயன்பாட் டுக்குகந்த கழிவுகளால் நாற்காலி
சிறு,பெரிய பீடம்போல் செய்திடலாம் உலகத்தீர்!
எஞ்சியுள்ள கழிவுகளை எக்கார ணம்கொண்டும்
கொஞ்சமுமே தீவைத்துக் கொளுத்துதல் செய்யாதீர்;
ஏனென்றால் நச்சுவளி உருவாகிச் சுற்றியுள்ள
வானத்தைப் பூமிதனை மாசு படுத்திவிடும்;
நானிலத்தில் நெகிழிமட்க நானூறாண் டாகிடுமாம்;
மாநிலத்து மனிதர்களே! வகைவகையாய்ச் சிந்திப்பீர;
அரக்கர்களை வதம்செய்ய அவதரித்த ஆண்டவனே!
வரம்தந்(து)இந் நெகிழியினை வதம்செய்ய வழிசொல்க.
தக்க வழிகண்டு சாதிப்போம் பூவுலகில்
ஒக்க உழைத்தால் உயர்வு.
நெஞ்சுதனை நிமிர்த்திடலாம் நெகிழியினைப் படைத்ததற்கு;
விஞ்சுகின்ற சிறப்புண்டு; விலைமலிவு ; திடத்தன்மை;
பலவகையாம் வடிவத்தில் பாங்காக உருவாக்கல்;
உலகெங்கும் வாழ்வோர்கள் உபயோகிக் கும்பொருளாம்;
இன்னுமின்னும்சொல்லிடலாம் இருந்தாலும் தீமைமிகு
தன்மைகளும் உள்ளனவே; தயக்கமின்றி ஆராய்வோம்.
உற்பத்தி செயும்நேரம் உயிருக்கும். உடலுக்கும்
சுற்றியுள்ள சூழலுக்கும் தொல்லை நச்சுப் பொருள்பரவிக்
காற்றுவெளி நிலத்தடிநீர் கழனிவயல் பாழாகும்;
தேற்றுதற்கு வழியில்லை; தீமைபல இன்னுமுள;
பெயர்தெரியாப் புதுநோய்கள் பெரியோரைச் சிறியோரை
அயர்வுறவே செய்துவிடும்; ஆஸ்துமா தொல்லைவரும்;
மற்றும்பல் நோய்நொடிகள் வரிசைகட்டி. வந்துநிற்கும்;
புற்றுநோய்க் காரணிகள் புயலெனவே தோன்றிவிடும்;
விளைச்சல் நிலமெல்லாம் வீணாகி மனத்தளவில்
உளைச்சல் உருவாகும்; உய்திபெற வழியுண்டோ?
காகிதம், தாவரத்தின் கழிவுகள்போல் நெகிழியிங்கு
சீக்கிரத்தில் மட்காது; தேயாது; மறையாது;
வீதிகளில் குவிகின்ற வீணான குப்பைகளில்
தீதுமிகும் நெகிழிப்பை சிதைந்திருக்கும் துண்டு,துகள்
போல்வன சேர்ந்திங்கே புழங்குவதால் கால்நடைகள்
தீவனமாய்த் தின்று திணறிச் சா கின்றனவே;
நிலபுலங்கள் ஆறுகுளம் நெடுங்கடல் இங்கெல்லாம்
வலம்வரும்தீதான மட்காத நெகிழியினால்
கடல்வாழும் உயிரினங்கள் கயல்நண்டு கடலாமை
உடல்பருத்த திமிங்கிலங்கள் உணராமல் தின்றுவிட்டுச்
செரித்திடவே இயலாமல் செத்துமடி கின்றனவே;
வருத்தமிகும் செய்தியிஃது; வழியென்ன? சரிசெய்ய.
மட்கிவிடும் தன்மையே வாய்க்காத நெகிழியினைக்
கட்டுக்குள் வைத்திருக்கக் கச்சிதமாய்த் திட்டம்நல்கீர்;
நெகிழியினைப் பயன்படுத்தல் நிச்சயமாய்க் குறைந்துவிட்டால்
வெகுவிரைவில் உற்பத்தி மிகமிகவே அருகிவிடும்.
நெகிழியினால் உருவாகும் நீர்க்குவளை, பை,தட்டு
தகுதியினால் காகிதம்,நற் பாக்குமட்டை போன்றவற்றால்
உண்டாக்கல் சாத்தியமே; ஒருசிறிதும் ஐயமிலை;
கொண்டாடி மகிழ்வோமே; குறைத்திடுவீர் நெகிழியினை;
நெகிழிக் கழிவுகளை மறுபயன் பாட்டினுக்கே
உகந்தவை அல்லாத வையென்று பிரித்தெடுப்பீர்;
மறுபயன்பாட் டுக்குகந்த கழிவுகளால் நாற்காலி
சிறு,பெரிய பீடம்போல் செய்திடலாம் உலகத்தீர்!
எஞ்சியுள்ள கழிவுகளை எக்கார ணம்கொண்டும்
கொஞ்சமுமே தீவைத்துக் கொளுத்துதல் செய்யாதீர்;
ஏனென்றால் நச்சுவளி உருவாகிச் சுற்றியுள்ள
வானத்தைப் பூமிதனை மாசு படுத்திவிடும்;
நானிலத்தில் நெகிழிமட்க நானூறாண் டாகிடுமாம்;
மாநிலத்து மனிதர்களே! வகைவகையாய்ச் சிந்திப்பீர;
அரக்கர்களை வதம்செய்ய அவதரித்த ஆண்டவனே!
வரம்தந்(து)இந் நெகிழியினை வதம்செய்ய வழிசொல்க.
தக்க வழிகண்டு சாதிப்போம் பூவுலகில்
ஒக்க உழைத்தால் உயர்வு.
No comments:
Post a Comment