வம்பிழுக்கும் ஆற்றல்மிகு மூத்த பேரன்
வாஞ்சையுடன் என்னருகே வந்து நின்று
"தம்பியவன் செயும்குறும்பைச் செவிம டுப்பாய்;
தான்விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சி யெல்லாம்
வெம்பிமனம் வெறுப்படையப் பார்க்கின் றானே;
விரும்பிநான் தொலைஇயக்கி தன்னைக் கேட்டால்
தும்பியெனப் பறந்திடுவான்; கேலி செய்வான்;
தொல்லைதரும் அவனையடி தாத்தா" என்றான்.
(தொலைஇயக்கி= ரிமோட்கண்ட்ரோல் சுவிட்ச்)
சின்னவனை யானழைத்துன் "அண்ண னையேன்
சினமடையச் செய்கின்றாய்; கருவி தன்னை
அன்னவனின் மனம்குளிர உடனே தாராய்;
ஆசையுடன் நிகழ்ச்சியெலாம் பார்க்கச் செய்வாய்;
என்னவனே இளம்பேரா!" எனநான் சொன்னேன்.
"ஏன்தாத்தா! அண்ணனையே எந்தப் போதும்
மன்னவனைப் போல்நீயும் கொஞ்சு கின்றாய்;
மாறாத அன்பெனக்கும் நல்காய்" என்றான்.
மூத்தவனும் சின்னவனும் போட்டி போட்டு
மோதுவதைத் திகைப்போடு பார்த்து நின்றேன்;
பேத்தியவள் சிணுங்கியவா(று) அருகில் வந்தாள்;
"பெரியவனும் சின்னவனும் விரும்பும் வண்ணம்
பார்த்திடுவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி யெல்லாம்;
பாவைநான் யாதொன்றும் பார்க்க வில்லை;
தாத்தாநீ தக்கதொரு நீதி நல்கித்
தண்டித்துத் திருத்(து)அவரை " என்று சொன்னாள்.
இம்மட்டோ இவர்கள்சண்டை? இன்னும் போகும்.
இவர்களில்லா விடிலெவர்க்கும் பொழுதே போகா(து);
அம்மட்டும் ஆறுதலாய் ஒருநற் செய்தி;
அலைபேசி தனிலுள்ள நல்ல அம்சம்
எம்மட்டும் முயன்றாலும் மூத்தோர் கற்க
இயலாதிப் பிள்ளைகளால் இயலும் எல்லாம்;
அம்புட்டு வசதியையும் அலசி ஆய்ந்து
ஆசிரியர் போலெனக்குச் சொல்லித் தந்தார்.
ஆனாலும் நமக்கொருபேர் அச்சம் உண்டு;
அறிவியலின் கருவிகளால் தீங்கும் உண்டு;
வானாரப் புகழும்அலை பேசி தன்னால்
நீலத்தி மிங்கிலம்போல் நிகழ்ச்சி தோன்றும்;
தேனாகப் பிள்ளைகட்குத் தெரியும் காட்சி
தரமாக வளர்ந்திடுவர் பிள்ளை யெல்லாம்.
(நீலத் திமிங்கிலம்--புளூ வேல்)
ஆண்டவனே! உன்னிடத்தில் ஒருவிண் ணப்பம்;
அறிவியலின் துணையாலே தோற்று விக்கும்
வேண்டியநற் கருவிகளால் பிள்ளை கட்குத்
தீங்கொன்றும் நேராமற் காப்பாய்; மக்கள்
ஆண்டாண்டுக் கணக்காக விவேகம், வீரம்
அமைந்திங்கு வாழ்ந்திடவே அருள்செய் வாயே!
வேண்டாவே பிள்ளைகட்குத் தரம்இல் கல்வி;
மேதினியில் என்றென்றும் அறிவே வெல்க!
வாஞ்சையுடன் என்னருகே வந்து நின்று
"தம்பியவன் செயும்குறும்பைச் செவிம டுப்பாய்;
தான்விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சி யெல்லாம்
வெம்பிமனம் வெறுப்படையப் பார்க்கின் றானே;
விரும்பிநான் தொலைஇயக்கி தன்னைக் கேட்டால்
தும்பியெனப் பறந்திடுவான்; கேலி செய்வான்;
தொல்லைதரும் அவனையடி தாத்தா" என்றான்.
(தொலைஇயக்கி= ரிமோட்கண்ட்ரோல் சுவிட்ச்)
சின்னவனை யானழைத்துன் "அண்ண னையேன்
சினமடையச் செய்கின்றாய்; கருவி தன்னை
அன்னவனின் மனம்குளிர உடனே தாராய்;
ஆசையுடன் நிகழ்ச்சியெலாம் பார்க்கச் செய்வாய்;
என்னவனே இளம்பேரா!" எனநான் சொன்னேன்.
"ஏன்தாத்தா! அண்ணனையே எந்தப் போதும்
மன்னவனைப் போல்நீயும் கொஞ்சு கின்றாய்;
மாறாத அன்பெனக்கும் நல்காய்" என்றான்.
மூத்தவனும் சின்னவனும் போட்டி போட்டு
மோதுவதைத் திகைப்போடு பார்த்து நின்றேன்;
பேத்தியவள் சிணுங்கியவா(று) அருகில் வந்தாள்;
"பெரியவனும் சின்னவனும் விரும்பும் வண்ணம்
பார்த்திடுவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி யெல்லாம்;
பாவைநான் யாதொன்றும் பார்க்க வில்லை;
தாத்தாநீ தக்கதொரு நீதி நல்கித்
தண்டித்துத் திருத்(து)அவரை " என்று சொன்னாள்.
இம்மட்டோ இவர்கள்சண்டை? இன்னும் போகும்.
இவர்களில்லா விடிலெவர்க்கும் பொழுதே போகா(து);
அம்மட்டும் ஆறுதலாய் ஒருநற் செய்தி;
அலைபேசி தனிலுள்ள நல்ல அம்சம்
எம்மட்டும் முயன்றாலும் மூத்தோர் கற்க
இயலாதிப் பிள்ளைகளால் இயலும் எல்லாம்;
அம்புட்டு வசதியையும் அலசி ஆய்ந்து
ஆசிரியர் போலெனக்குச் சொல்லித் தந்தார்.
ஆனாலும் நமக்கொருபேர் அச்சம் உண்டு;
அறிவியலின் கருவிகளால் தீங்கும் உண்டு;
வானாரப் புகழும்அலை பேசி தன்னால்
நீலத்தி மிங்கிலம்போல் நிகழ்ச்சி தோன்றும்;
தேனாகப் பிள்ளைகட்குத் தெரியும் காட்சி
தீங்கான நிகழ்ச்சியென நமக்குத் தோன்றும்;
தானாகப் பகுத்தறியும் ஆற்றல் பெற்றால்தரமாக வளர்ந்திடுவர் பிள்ளை யெல்லாம்.
(நீலத் திமிங்கிலம்--புளூ வேல்)
ஆண்டவனே! உன்னிடத்தில் ஒருவிண் ணப்பம்;
அறிவியலின் துணையாலே தோற்று விக்கும்
வேண்டியநற் கருவிகளால் பிள்ளை கட்குத்
தீங்கொன்றும் நேராமற் காப்பாய்; மக்கள்
ஆண்டாண்டுக் கணக்காக விவேகம், வீரம்
அமைந்திங்கு வாழ்ந்திடவே அருள்செய் வாயே!
வேண்டாவே பிள்ளைகட்குத் தரம்இல் கல்வி;
மேதினியில் என்றென்றும் அறிவே வெல்க!
No comments:
Post a Comment