கம்ப இராமாயணத்தில் இராமன்--சீதை
திருமணக் காட்சி
கம்ப இராமாயணத்தில் இராமனும் சீதை
யும் ஏற்கெனவே ஒருவரை மற்றவர் பார்த்து
ஒருவரை மற்றவர் ஓரளவு தெரிந்து வைத்துள்
ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் தொல்
காப்பிய மரபுப்படி தமக்குள் காதல்கொண்டவர்
களே திருமணம் செய்துகொள்வது வழக்கம்.
அதனால்தான் வில்லை முறிப்பதற்கு முன்னரே
இராமனும் சீதையும் பார்த்துக் கொண்டதாகவும்
ஒருவர்மீது மற்றவர் காதல் கொண்டதாகவும் கம்பர்
பாடியுள்ளார். இராமன்--சீதை திருமணக் காடசி
யில் பயின்று வரும் சில அருமையான பாடல்
களைப் பாரபபோம்.
தாடகை வதம், அகலிகை சாபவிமோசனம் முதலான
நிகழ்ச்சிகள் நிறைவேறியபிறகு கௌசிக முனிவரும்
இராமனும் இலக்குவனும் மிதிலை நகருக்கு வருகிறார்கள்.
"இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே
மழைபொரு கண்ணிணை மடந்தை மாரொடும்
பழகிய எனினுமிப் பாவை தோன்றலால்
அழகெனும் அவையுமோர் அழகு பெற்றதே".
மற்ற பிற பெண்களுக்கு அணிகலன்கள் அணிவதால்
அழகு வரும். ஆனால் சீதையைப் பொருத்தவரையில்
சீதை அணிவதாலேயே அணிகலன்களுக்கு அழகு
வரும். அதாவது சீதை அணிவதால் அந்த
அணிகலன்கள் புதியதோர் அழகினைப் பெறுகின்
றன. இப்படிப்பட்ட பேரழகியும் இராமனும் ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
"எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்(று)
உண்ணவும் நிலைபெறா(து) உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள்".
அழகுப் பதுமையாம் சீதை மேல்மாடத்தில் நின்ற
பொழுது இராமனும் சீதையும் ஒருவர் கண்களோடு
மற்றவர் கண்கள் கவர்ந்து பற்றிக் கொண்டு ஒன்றையொன்று
கவர்ந்து சுவைக்கவும் இருவரது அறிவும் ஒன்று படவும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
ஒருவரது அழகை மற்றவர் பார்த்து அந்தப் பார்வை
என்னும் கயிற்றால் கட்டுண்டு ஒருவரது மனம்
மற்றவர் மனத்தை இழுத்துநின்றதால்
இருவரும் ஒருவர் மனத்தில் மற்றவர்
புகுந்துகொண்டார்கள். ஆதிசேடனாகிய பாம்புப்
படுக்கையிலே துயில்கொண்ட திருமாலும் இலக்குமி
யும் பிரிந்து பூவுலகில் அவதரித்துத் தற்பொழுது
மீண்டும் சந்தித்துக் கொண்டால் பேசவும்
வேண்டுமோ?
"பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும்
எண்வழி உணர்வும்நான் எங்கும் காண்கிலேன்.
மண்வழி நடந்தடி வருந்தப் போனவன்
கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்".
இராமனைப் பார்த்ததில் இருந்தே சீதை
அவன் நினைவாகவே இருந்தாள். பெண்களுக்குரிய
நலன், நாணம் மற்றும் அறிவையும் எங்கும் காண்கி
லேன். தன் பாதங்கள் வருந்துமாறு தரையிலே
நடந்து சென்றவன் என் கண்களின் வழியே
மனத்திற்குள் செல்லவல்ல ஒரு கள்வனா
கத்தான் இருப்பான்.
"இந்திர நீலமொத்(து) இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணிவரைத் தோளு மேயல
முந்தியென் உயிரையம் முறுவல் உண்டதே!".
இராமனுடைய இந்திர நீலமணியைப் போன்று
கருத்த முடியழகும், நிலாப் போன்ற முக
அழகும், நீண்டு தாழ்ந்திருக்கும் கையழகும்
தோள்அழகும் என்உயிரைக் கவர்ந்தாலும்
இந்த அழகுகளுக்கெல்லாம் முற்பட்டு
என் உயிரைக் கவர்ந்தது அவன் முகத்தில்
தவழும் புன்முறுவலேயாகும்.
"நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக்கதிர்
தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள்;
சேக்கை ஆகி மலர்ந்தசெந் தாமரைப்
பூக்கள் படட(து)அப் பூவையும் பட்டனள்".
முன்பு சீதைக்குத் தங்கும் இடமாகி மலர்ந்த
செந்தாமரை இப்பொழுது பள்ளியணையாய்க்
காம வேதனையால் புரண்ட போது துன்பம்
நல்கியது.
சீதை இராமனை எண்ணித் துயர்க் கடலில்
ஆழ்ந்திருக்கும் வேளையில் , இராமனும்
சீதையை எண்ணித் தூக்கமின்றித் தவித்தான்.
"விண்ணின் நீங்கிய மின்னுரு இம்முறை
பெண்ணின் நன்னலம் பெற்றதுண் டேகொலோ?
எண்ணின் ஈதல(து) என்றறி யேனிரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்".
விண்ணில் தோன்றி மறைந்த மின்னல் போலச்
சீதையின் உருவம் அடுத்தடுத்துத் தோன்றியும்
மறைந்தும் நிகழ்வதற்கு யாது காரணம் என்றறியேன்.
அவள் உருவத்தைப் புறக்கண்ணாலும் அகக் கண்
ணாலும் காண்கின்றேன்.
"அருளிலாள் எனினும் மனத்தாசையால்
வெருளும் நோய்விடக் கண்ணின் விழுங்கலால்
தெருளிலா உலகில் சென்று நின்றுவாழ்
பொருளெலாம் அவள் பொன்னுரு ஆயவே".
இராமன் உற்ற காதல் நோயைத் தணித்து
அருளாதவள் என்ற போதிலும் என்மனத்து
ஆசையால் நான் பார்க்கின்ற எல்லாப் பொரு
ளும் அவள் பொன்போன்ற உருவமாகவே
தென்படுகின்றது." இவ்வாறு இராமன் புலம்பித்
தவித்தான்.
சிவதனுசை வளைத்து நாண் ஏற்றுவார்க்கே
சீதை உரியவள் என்று சனகர் அறிவித்ததால்
கௌசிக முனிவர் இராமனைச்சிவன் வில்
வைக்கப்பட்டுள்ள மண்டபத்துக்கு அழைத்து
வருகின்றார். பல மன்னர்கள் முயன்று
தோல்வி அடைகின்றனர். பிறகு வில்லை
வளைக்க இராமன் எழுந்து வருகின்றான்.
"கரங்கள் குவித்திரு கண்கள் பனிப்ப
இருங்களி(று) இச்சிலை ஏற்றிலன் ஆயின்
நரந்த நறைக்குழல் நங்கையும் நாமும்
முருங்(கு) எரி யிற்புக மூழ்குதும் என்பார்".
இக்குமரன் வில்லை வளைத்து நாண்
ஏற்றாவிட்டால் சீதை கன்னியாகவே
இறக்க வேண்டிவரும். அதைவிட நெருப்பில்
பாய்ந்து உயிர் துறத்தலே மேலானது. நம்
அன்பான தோழிக்கு அத்துன்பம் நேர்ந்தால்
நாமும் எரியும் நெருப்பில் மூழ்குவோம் என்று
சொல்வார்கள்.
இராமன் சிவன் வில் இருக்கும் இடத்துக்கு
வந்து நின்று அதனை நோக்கினான்.
"ஆடக மால்வரை அன்னது தன்னை
தேடரு மாமணிச் சீதையெனும் பொற்
சூடக வால்வளை சூட்டிட நீட்டும்
ஏடவிழ் மாலையி தென்னவெ டுத்தான்."
பெரிய பொன்மலைபோன்ற சிவவில்லை
சீதைக்குச் சூட்டுதற்குரிய மாலைபோலக்
கையில் எடுத்தான்.
"தடுத்திமை யாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண்நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்".
கண் இமை கொட்டினால் இராமன் வில்லை
எடுத்து நாண் ஏற்றுவதைக் காணாமற்
போய்விடும் என்று கண்கொட்டாது உற்றுப்
பார்த்தவர்களும் அவ்விராமன் வில்லை
எடுத்ததைக் கண்டனர். வில்லைவளைத்து
நாண் ஏற்றியதைக் கண்டிலர்; ஆனால் வில்
இற்று முறிந்த ஓசையைத்தான் கேட்டனர்.
உடனடியாகச் சீதையின் உற்ற தோழி அவளிடம்
சென்று நடந்தது அனைத்தையும் கூறினாள்.
"மராமரம் இவையென வளர்ந்த தோளினான்;
அராவணை அமலனென்(று) அயிர்க்கும் ஆற்றலான்;
இராமனென்பது பெயர்; இளைய கோவொடும்
பராவரும் முனியொடும் பதிவந்(து) எய்தினான்".
உடனே சீதை மறுமொழி கூறலானாள்.
"இல்லையே நுசுப்பென்பார் உண்டுஉண்(டு) என்னவும்
மெல்லியல் முலைகளும் விம்ம விம்முவாள்;
சொல்லிய குறியினத் தோன்ற லேயவன்;
அல்லனேல் இறப்பென் என்(று)அகத்துள் உன்னினாள்".
இராமன் சிவன்வில்லை வளைத்த செய்தி
தயரதனுக்குத் தெரிவிக்கப் பட்டது. உடனே
தயரதன் தன் பட்டத்தரசிகளொடும் குலகுரு
வசிட்டமுனியொடும் ஏனைய உற்றார், உறவினர்
பரிவாரங்களொடும் மிதிலைக்குப் புறப்பட்டான்.
எல்லோரும் மிதிலை வந்தடைந்தனர். இராமன்
மிதிலை வீதியில் உலாவருகின்றான்.
"தோள்கண்டார் தோளே கண்டார்;
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்;
தடக்கைகண் டாரும் அஃதே;
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்?
ஊழ்கொண்ட சமயத் தன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்".
இராமன் திருமண மண்டபத்துக்கு வந்து
சேர்ந்துவிட்டான். சீதை வருகின்றாள்.
"பொன்னினொளி பூவின்வெறி சாந்துபொதி
சீதம்
மின்னினெழில் அன்னவள்தன் மேனியொளி
மான
அன்னமும்அ ரம்பையரும் ஆரமிழ்தும் நாண
மன்னன்அவன் இ ருந்தமணி மண்டபம டைந்தாள்".
பாடலில் வரும் சந்தம்(ஓசைநயம்)அழகோ அழகு!
இராமன் சீதையின் கரம் பற்றினான்.
"வெய்ய கனல்தலை வீரனும் அந்நாள்
மையறு மந்திரம் மும்மை வழங்கா
நெய்யமை ஆவுதி யாவையும் நேர்ந்தே
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்".
பின்னர் இருவரும் தீயை வலம்வந்து வணங்கி
னர். அம்மி மிதித்து அருந்ததி பார்த்தனர்.
பின்னர் மனைக்குச் சென்றனர். திருமணம்
இனிதே முடிந்தது.
No comments:
Post a Comment