தென்மேற்குப் பருவக் காற்றின்
கருணையினால்.......
காவிரியை மீட்டெடுக்கக் கணக்கற்றோர்
தமிழ்நாட்டில்
தீவிரமாய்ப் போராடித் திகைக்கவைத்துச்
சாதித்தார்;
வாரியத்தை வேண்டினோம், வாய்ப்பில்லை
எனமறுத்துச்
சீரியதாம் அதிகாரம் செறிந்ததாம் என்றுரைத்தே
ஆணையத்தை அமைத்திட்டார்; அக்குழுவின்
உறுப்பினர்கள்
நாணயமாய் நடந்துகரு நாட்டினர்க்கே
ஆணையிட்டார்;
உச்சநீதி மன்றத்தின் உத்திரவை மதியாதார்
நிச்சயமாய் ஆணையத்தை அவமதிப்பர்
எனநினைத்தோம்;
இயற்கையன்னை தலையிட்டே
இந்தமுறை காத்துவிட்டாள்;
புயல்மழையைப் பொழிவித்துப்
பொன்னியினைக் கொண்டுவந்தாள்;
கன்னடத்து மக்கள்தம்மின் கண்ணசைவு
தேவையின்றி
அன்னைநம் காவிரியை அமைதியாய்ப்
பெற்றிட்டோம்;
ஆடிப் பெருக்கில் அனைவருமே
உளமகிழ்வோ(டு)
ஓடிப் பிடித்து விளையாடி
ஆர்ப்பரித்தோம்;
இத்தனையும் இயற்கைத்தாய் இளகியநன்
மனத்தாலே
உத்தமமாய் நிறைவேறி ஒப்பில்லாக்
களிப்படைந்தோம;
மேட்டூரின் அணைநிரம்பி வேளாண்மை
செழித்திடவே
பாட்டுகளைப் பாடிடுவோம் பாங்காக
உழைத்திடுவோம்;
மிகைத்தண்ணீர் வீணாக விரிகடலில்
கலக்காமல்
வகையாகச் சேமிக்க வழிசெய்வோம்
பெருமக்காள்!
ஏரி,குளம் தூர்வாரி இயன்றளவு
சேமிப்போம;
மாரிபெய்யின் ஒருசொட்டும் மாக்கடலில்
கலக்காமல்
சேகரித்து வைத்திடுவோம்; சிற்றணைகள்
கட்டிடுவோம்;
போகம்மூன்(று) அடைந்திடவே பொறுப்பாய்ப்
பணிசெய்வோம்;
சிக்கனமாய் நீர்புழங்கிச் சேமித்தால்
என்றென்றும்
தக்கபடி வேளாண்மை தழைத்திடுமே
ஐயமிலை;
ஆண்டாண்டும் இதுபோல ஆதரவாய்
மழைபெய்யும்,
வேண்டியநீர் கிடைக்குமென
மெத்தனமாய் இருக்காதீர்;
வறட்சியினை எதிர்பார்த்து மழைநீரை
மிகைநீரைத்
திறமையுடன் சேமிக்கத் திட்டங்கள்
தீட்டிடுவோம்;
தென்னாட்டை வளஞ்செய்யும் தெய்வப்பொன்
னித்தாயால்
எந்நாளும் நீர்கிடைக்க எமதிறைவா!
வரம்தாராய்!
தென்மேற்குக் காற்றாலே செழிப்பான
மழைபொழியும்;
உன்மேலே நமபிக்கை யுண்டு.
கருணையினால்.......
காவிரியை மீட்டெடுக்கக் கணக்கற்றோர்
தமிழ்நாட்டில்
தீவிரமாய்ப் போராடித் திகைக்கவைத்துச்
சாதித்தார்;
வாரியத்தை வேண்டினோம், வாய்ப்பில்லை
எனமறுத்துச்
சீரியதாம் அதிகாரம் செறிந்ததாம் என்றுரைத்தே
ஆணையத்தை அமைத்திட்டார்; அக்குழுவின்
உறுப்பினர்கள்
நாணயமாய் நடந்துகரு நாட்டினர்க்கே
ஆணையிட்டார்;
உச்சநீதி மன்றத்தின் உத்திரவை மதியாதார்
நிச்சயமாய் ஆணையத்தை அவமதிப்பர்
எனநினைத்தோம்;
இயற்கையன்னை தலையிட்டே
இந்தமுறை காத்துவிட்டாள்;
புயல்மழையைப் பொழிவித்துப்
பொன்னியினைக் கொண்டுவந்தாள்;
கன்னடத்து மக்கள்தம்மின் கண்ணசைவு
தேவையின்றி
அன்னைநம் காவிரியை அமைதியாய்ப்
பெற்றிட்டோம்;
ஆடிப் பெருக்கில் அனைவருமே
உளமகிழ்வோ(டு)
ஓடிப் பிடித்து விளையாடி
ஆர்ப்பரித்தோம்;
இத்தனையும் இயற்கைத்தாய் இளகியநன்
மனத்தாலே
உத்தமமாய் நிறைவேறி ஒப்பில்லாக்
களிப்படைந்தோம;
மேட்டூரின் அணைநிரம்பி வேளாண்மை
செழித்திடவே
பாட்டுகளைப் பாடிடுவோம் பாங்காக
உழைத்திடுவோம்;
மிகைத்தண்ணீர் வீணாக விரிகடலில்
கலக்காமல்
வகையாகச் சேமிக்க வழிசெய்வோம்
பெருமக்காள்!
ஏரி,குளம் தூர்வாரி இயன்றளவு
சேமிப்போம;
மாரிபெய்யின் ஒருசொட்டும் மாக்கடலில்
கலக்காமல்
சேகரித்து வைத்திடுவோம்; சிற்றணைகள்
கட்டிடுவோம்;
போகம்மூன்(று) அடைந்திடவே பொறுப்பாய்ப்
பணிசெய்வோம்;
சிக்கனமாய் நீர்புழங்கிச் சேமித்தால்
என்றென்றும்
தக்கபடி வேளாண்மை தழைத்திடுமே
ஐயமிலை;
ஆண்டாண்டும் இதுபோல ஆதரவாய்
மழைபெய்யும்,
வேண்டியநீர் கிடைக்குமென
மெத்தனமாய் இருக்காதீர்;
வறட்சியினை எதிர்பார்த்து மழைநீரை
மிகைநீரைத்
திறமையுடன் சேமிக்கத் திட்டங்கள்
தீட்டிடுவோம்;
தென்னாட்டை வளஞ்செய்யும் தெய்வப்பொன்
னித்தாயால்
எந்நாளும் நீர்கிடைக்க எமதிறைவா!
வரம்தாராய்!
தென்மேற்குக் காற்றாலே செழிப்பான
மழைபொழியும்;
உன்மேலே நமபிக்கை யுண்டு.
நீர் மேலாண்ணமயின் அவசியத்தை உணர்த்தும் கவிதை மிக அருமை
ReplyDelete