புலி புலி என்னும் பூசல் தோன்ற.....
அகநானூற்றில் வரும் அழகிய பாடல் ஒன்றைப்
பார்ப்போம். சங்க இலக்கியத்தில் அகப்பொருள்,
புறப்பொருள் என்னும் இரண்டு பெரும் பிரிவுகள்
பேசப்படும். அகப்பொருள் என்பது தனி மனிதன்
வாழ்க்கை மற்றும் அவன் குடும்ப வாழ்க்கையைப்
பற்றிப் பாடுவது. புறப்பொருள் என்பது அத் தனி
மனிதன் மற்றும் அவன்குடும்பத்தினர் சமுதாயத்
தில் மற்றவர்களோடு பழகிய பழக்கம், நிகழ்த்திய
போர், ஏற்படுத்திக் கொண்ட நட்பு மற்றும் பகை
போன்ற அனைத்து விடயங்களையும் பற்றிப்
பாடுவது.
அகப்பொருள் களவியல், கற்பியல் என்னும் இரு
பிரிவுகளை உள்ளடக்கியது. ஆண் ஒருவனும்
பெண் ஒருத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்
காதல் கொண்டு பிறர் அறியாமல் பழகி வாழ்ந்து
வருதல். இந்தச் செய்தி பிற்பாடு தோழி, செவிலித்
தாய், நற்றாய் முதலானவர்க்குத் தெரியவர, அவர்கள்
மணம் செய்வித்துக் கற்பியலில் ஈடுபடுத்துவார்கள்.
அகப்பொருளில் உள்ள இன்றியமையாத செய்தி
என்னவென்றால் ஆணோ, பெண்ணோ பெயர்
குறிப்பிடப் படாமல் தலைவன், தலைவி என்று சுட்டப்
படுவார்கள். யாருடைய தனிப்பட்ட பெயரும் அகப்பாடல்
களில் சொல்லப்படாது. களவியலில் உடன்போக்கு
(ஓடிப் போதல்) அனுமதிக்கப் பட்டாலும் சீரிய ஒழுக்
கமும், நெறிமுறையும் பின்பற்றப்பட்டன.
அகநானூற்றில் தங்கால் முடக் கொற்றனார் பாடிய
குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்றைப் பார்ப்போம்
(அகம்:48):
"அன்னாய் வாழி! வேண்டன்னை நின்மகள்
பாலும் உண்ணாள்; பழஙகண் கொண்டு
நனிபசந் தனள்என வினவுதி; அதன்திறம்
யானும் தெற்றென உணரேன்; மேல்நாள்
மலிபூஞ் சாரலென் தோழி மாரோ(டு)
ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
புலிபுலி என்னும் பூசல் தோன்ற
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்;
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்;
குயம்மண்(டு) ஆகம் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்லனொரு கணைதெரிந்து கொண்டு
யாதோ மற்றம் மாதிறம் படர்என
வினவி நிற்றந் தோனே! அவர்கண்டு
எம்முள் எம்முள் மெய்மறை(பு) ஒடுங்கி
நாணி நின்றெனம் ஆகப் பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்
மைஈர் ஓதி மடவீர் நும்வாய்ப்
பொய்யும் உளவோ ? என்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து
நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்றோன் மன்றக் குன்றுகிழ வோனே!
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்(து)
அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன்
மகனே! தோழி என்றனள்;
அதன்அள வுண்டுகோள் மதிவல் லோர்க்கே!"
பொருள்: தோழி செவிலித் தாயிடம் கூறியது:
அன்னையே! நீவிர் வாழி! உம்மை வேண்டுகிறேன்.
உம் மகள் பாலும் பருகிலள்; துயரத்தோடு முகம்
வெளுத்துப் போய்விட்டாள். அதன் காரணம் என்ன?
என யான் அறிந்திலேன். அன்றொருநாள் பூக்கள்
நிறைந்த மலைப்பகுதியில் யான் என் தோழியரோடு
வேங்கைப்பூக்கள் பறிக்கச் சென்ற பொழுது "புலி புலி"
என்ற பெரும் கூக்குரல் கேட்டது. பூக்கள் பறிக்க இயலா
த உயரத்தில் இருந்தால் "புலி புலி"என்று கூவி அச்
சுறுத்தினால் வேங்கைமரம் பூக்களைப் பறிப்பதற்கு
வசதியாய்த் தாழ்ந்து கொடுக்கும் என்ற மூட நம்பிக்
கை மலைவாழ் மக்களிடம் நிலவியது. அந்த மூட
நம்பிக்கையால் யாரோ புலி புலி எனக் கூக்குரலிட,
செங்கழுநீர்ப் பூக்களை மாலையாக அணிந்த, வெட்சி
மாலையைச் சூடிய, வில் ஒன்றைக் கையில் கொண்டு
ள்ள ஒரு மனிதன் வந்து "புலி எதுவும் இங்கு வந்ததா?
என வினவினான். அகன்ற, செஞ்சாந்து பூசிய, அழகிய
மார்புடைய அவனைக் கண்ட பெண்களெல்லாம் நாண
முற்று ஒருவர்க்குப் பின் ஒருவராக மறைந்து கொண்டனர்.
அவர்கள் ஒன்றும் பேசாமல் அமைதியாக மறைந்து
கொண்டிருந்ததால் அவன்" உங்கள் வாயிலிருந்து
பொய்யும் வருமோ? எனக் கூறினான். பிற்பாடு அவன்
அஙகிருந்து கிளம்பிவிட்டான். ஆனால் தேரில் வந்த
அவன் குதிரையை வேகமாக ஓட்டாமல் உம்மகளது
மைதடவிய கண்களைப் பலமுறை நோக்கிக் கொண்டே
அந்தக் குன்றுக்கு உரியோன் மெல்லவே சென்றான்.
இந்த இடத்தில் பயின்று வரும் "உண்கண்" என்னும்
சொல்லுக்கு மைதடவிய கண்கள் என்றும் அவன்
அழகைப் பருகுகின்ற கண்கள் என்றும் அறிஞர்
பொ.வே.சோமசுந்தரனார் பொருள் கூறினார். அவன்
சென்று மறைந்த பக்கத்தை நோக்கி உம்மகள்
"இவனே ஆண்மகன்" என்று கூறினாள். அதன் பொருள்
என்ன? என்பது அறிவில் தேர்ந்தவர்களுக்கே
விளங்கும்."
தேரில் வந்த அத்தலைவன் குதிரையை வேகமாக
ஓட்டாமல் தலைவியைத் திரும்பிப் பார்த்துச் சென்ற
தும் அவன் சென்ற பிற்பாடு தலைவி "இவனே ஆண்
மகன்" என்று உரைத்ததும் நோக்குமிடத்து இருவருக்
குள்ளும் காதல் அரும்பியிருக்க வாய்ப்பண்டு எனத்
தெரிகிறது. ஏனெனில் தலைவனின் தோற்றப் பொலி
வை விவரிக்கும் பொழுது புலவர் "குயம் மண்டு ஆகம்"
என்று குறிப்பிட்டார். இச் சொற்றொடருக்குப் பல அறி
ஞர்கள் பலவிதமாகப் பொருள் கூறுகின்றனர். Dr.V.S.
ராஜம் என்பவர் வளைந்து நிமிர்ந்த அகன்ற
மார்பு என்று பொருள் உரைக்கின்றார்.
தலைவனது குயம் மண்டு ஆகத்தையும்
கையில் வில்லையும் கணையையும் பற்றி
நின்ற தோற்றத்தையும் கண்டு கிறங்கிப்
போய் "இவனே ஆண்மகன்" எனக் கூறியது
அரும்பிய காதலின் வெளிப்பாடாகும். இது
காரணமாக, தலைவி பாலும் பருகாமல்
மேனி நிறம் வெளுத்துப்போய்த் தோன்றினள்.
ஒரு அருமையான நாடகக் காட்சி அரங்கே
றியது போல நாம் உணர்கிறோம். சங்க காலப்
பாடல்களில் இயல்பு நவிற்சி தான் பயின்று
வரும். உள்ளதை உள்ளவாறே விவரித்தனர்.
உயர்வு நவிற்சி எனப் படும் மிகைப் படுத்தி
விவரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்
கம். குறிஞ்சித் திணைக்குரிய இப்பாடலை
எத்தனைமுறை படித்தாலும் அலுப்புத்
தட்டாது.
அகநானூற்றில் வரும் அழகிய பாடல் ஒன்றைப்
பார்ப்போம். சங்க இலக்கியத்தில் அகப்பொருள்,
புறப்பொருள் என்னும் இரண்டு பெரும் பிரிவுகள்
பேசப்படும். அகப்பொருள் என்பது தனி மனிதன்
வாழ்க்கை மற்றும் அவன் குடும்ப வாழ்க்கையைப்
பற்றிப் பாடுவது. புறப்பொருள் என்பது அத் தனி
மனிதன் மற்றும் அவன்குடும்பத்தினர் சமுதாயத்
தில் மற்றவர்களோடு பழகிய பழக்கம், நிகழ்த்திய
போர், ஏற்படுத்திக் கொண்ட நட்பு மற்றும் பகை
போன்ற அனைத்து விடயங்களையும் பற்றிப்
பாடுவது.
அகப்பொருள் களவியல், கற்பியல் என்னும் இரு
பிரிவுகளை உள்ளடக்கியது. ஆண் ஒருவனும்
பெண் ஒருத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்
காதல் கொண்டு பிறர் அறியாமல் பழகி வாழ்ந்து
வருதல். இந்தச் செய்தி பிற்பாடு தோழி, செவிலித்
தாய், நற்றாய் முதலானவர்க்குத் தெரியவர, அவர்கள்
மணம் செய்வித்துக் கற்பியலில் ஈடுபடுத்துவார்கள்.
அகப்பொருளில் உள்ள இன்றியமையாத செய்தி
என்னவென்றால் ஆணோ, பெண்ணோ பெயர்
குறிப்பிடப் படாமல் தலைவன், தலைவி என்று சுட்டப்
படுவார்கள். யாருடைய தனிப்பட்ட பெயரும் அகப்பாடல்
களில் சொல்லப்படாது. களவியலில் உடன்போக்கு
(ஓடிப் போதல்) அனுமதிக்கப் பட்டாலும் சீரிய ஒழுக்
கமும், நெறிமுறையும் பின்பற்றப்பட்டன.
அகநானூற்றில் தங்கால் முடக் கொற்றனார் பாடிய
குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்றைப் பார்ப்போம்
(அகம்:48):
"அன்னாய் வாழி! வேண்டன்னை நின்மகள்
பாலும் உண்ணாள்; பழஙகண் கொண்டு
நனிபசந் தனள்என வினவுதி; அதன்திறம்
யானும் தெற்றென உணரேன்; மேல்நாள்
மலிபூஞ் சாரலென் தோழி மாரோ(டு)
ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
புலிபுலி என்னும் பூசல் தோன்ற
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்;
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்;
குயம்மண்(டு) ஆகம் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்லனொரு கணைதெரிந்து கொண்டு
யாதோ மற்றம் மாதிறம் படர்என
வினவி நிற்றந் தோனே! அவர்கண்டு
எம்முள் எம்முள் மெய்மறை(பு) ஒடுங்கி
நாணி நின்றெனம் ஆகப் பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்
மைஈர் ஓதி மடவீர் நும்வாய்ப்
பொய்யும் உளவோ ? என்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து
நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்றோன் மன்றக் குன்றுகிழ வோனே!
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்(து)
அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன்
மகனே! தோழி என்றனள்;
அதன்அள வுண்டுகோள் மதிவல் லோர்க்கே!"
பொருள்: தோழி செவிலித் தாயிடம் கூறியது:
அன்னையே! நீவிர் வாழி! உம்மை வேண்டுகிறேன்.
உம் மகள் பாலும் பருகிலள்; துயரத்தோடு முகம்
வெளுத்துப் போய்விட்டாள். அதன் காரணம் என்ன?
என யான் அறிந்திலேன். அன்றொருநாள் பூக்கள்
நிறைந்த மலைப்பகுதியில் யான் என் தோழியரோடு
வேங்கைப்பூக்கள் பறிக்கச் சென்ற பொழுது "புலி புலி"
என்ற பெரும் கூக்குரல் கேட்டது. பூக்கள் பறிக்க இயலா
த உயரத்தில் இருந்தால் "புலி புலி"என்று கூவி அச்
சுறுத்தினால் வேங்கைமரம் பூக்களைப் பறிப்பதற்கு
வசதியாய்த் தாழ்ந்து கொடுக்கும் என்ற மூட நம்பிக்
கை மலைவாழ் மக்களிடம் நிலவியது. அந்த மூட
நம்பிக்கையால் யாரோ புலி புலி எனக் கூக்குரலிட,
செங்கழுநீர்ப் பூக்களை மாலையாக அணிந்த, வெட்சி
மாலையைச் சூடிய, வில் ஒன்றைக் கையில் கொண்டு
ள்ள ஒரு மனிதன் வந்து "புலி எதுவும் இங்கு வந்ததா?
என வினவினான். அகன்ற, செஞ்சாந்து பூசிய, அழகிய
மார்புடைய அவனைக் கண்ட பெண்களெல்லாம் நாண
முற்று ஒருவர்க்குப் பின் ஒருவராக மறைந்து கொண்டனர்.
அவர்கள் ஒன்றும் பேசாமல் அமைதியாக மறைந்து
கொண்டிருந்ததால் அவன்" உங்கள் வாயிலிருந்து
பொய்யும் வருமோ? எனக் கூறினான். பிற்பாடு அவன்
அஙகிருந்து கிளம்பிவிட்டான். ஆனால் தேரில் வந்த
அவன் குதிரையை வேகமாக ஓட்டாமல் உம்மகளது
மைதடவிய கண்களைப் பலமுறை நோக்கிக் கொண்டே
அந்தக் குன்றுக்கு உரியோன் மெல்லவே சென்றான்.
இந்த இடத்தில் பயின்று வரும் "உண்கண்" என்னும்
சொல்லுக்கு மைதடவிய கண்கள் என்றும் அவன்
அழகைப் பருகுகின்ற கண்கள் என்றும் அறிஞர்
பொ.வே.சோமசுந்தரனார் பொருள் கூறினார். அவன்
சென்று மறைந்த பக்கத்தை நோக்கி உம்மகள்
"இவனே ஆண்மகன்" என்று கூறினாள். அதன் பொருள்
என்ன? என்பது அறிவில் தேர்ந்தவர்களுக்கே
விளங்கும்."
தேரில் வந்த அத்தலைவன் குதிரையை வேகமாக
ஓட்டாமல் தலைவியைத் திரும்பிப் பார்த்துச் சென்ற
தும் அவன் சென்ற பிற்பாடு தலைவி "இவனே ஆண்
மகன்" என்று உரைத்ததும் நோக்குமிடத்து இருவருக்
குள்ளும் காதல் அரும்பியிருக்க வாய்ப்பண்டு எனத்
தெரிகிறது. ஏனெனில் தலைவனின் தோற்றப் பொலி
வை விவரிக்கும் பொழுது புலவர் "குயம் மண்டு ஆகம்"
என்று குறிப்பிட்டார். இச் சொற்றொடருக்குப் பல அறி
ஞர்கள் பலவிதமாகப் பொருள் கூறுகின்றனர். Dr.V.S.
ராஜம் என்பவர் வளைந்து நிமிர்ந்த அகன்ற
மார்பு என்று பொருள் உரைக்கின்றார்.
தலைவனது குயம் மண்டு ஆகத்தையும்
கையில் வில்லையும் கணையையும் பற்றி
நின்ற தோற்றத்தையும் கண்டு கிறங்கிப்
போய் "இவனே ஆண்மகன்" எனக் கூறியது
அரும்பிய காதலின் வெளிப்பாடாகும். இது
காரணமாக, தலைவி பாலும் பருகாமல்
மேனி நிறம் வெளுத்துப்போய்த் தோன்றினள்.
ஒரு அருமையான நாடகக் காட்சி அரங்கே
றியது போல நாம் உணர்கிறோம். சங்க காலப்
பாடல்களில் இயல்பு நவிற்சி தான் பயின்று
வரும். உள்ளதை உள்ளவாறே விவரித்தனர்.
உயர்வு நவிற்சி எனப் படும் மிகைப் படுத்தி
விவரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்
கம். குறிஞ்சித் திணைக்குரிய இப்பாடலை
எத்தனைமுறை படித்தாலும் அலுப்புத்
தட்டாது.
No comments:
Post a Comment