Saturday, 18 August 2018

நளவெண்பாவில் பயின்றுவரும் நயமிகு பாடல்கள்

வெண்பாவில் புகழேந்தி மிகத் தேர்ந்த
வர் என்று புலவர் பெருமக்களால் புகழ்ந்
துரைக்கப் பட்டவர்.    இவர் இயற்றிய காவியமே நளவெண்பாவாகும். இந்
நூல் சொற்சுவை, பொருட்சுவை, கற்ப
னைநயம் முதலிய அனைத்து அணிந
லங்களையும் தன்னகத்தே கொண்டது.
தமிழில் புதிதாகப் பாடல் இயற்ற எண்
ணுபவர் வெண்பா என்னும் பாவின்
இலக்கணம், செய்ம்முறைப் பயிற்சி
மேற்கொள்ள நளவெண்பாவைப் பல
முறை படித்துப் பழகுவர். அதேபோல
விருத்தம்  என்னும் பாவினத்தைப்
பாடுவதற்குக் கம்பராமாயணத்தைப்
பலமுறை படித்துப் பழகுவர்.


நளன்--தமையந்தி கதை அனைவரும்
அறிந்த ஒன்றே. இருப்பினும், மிகமிகச்
சுருக்கமாக இங்கே  விவரிக்கப்படுகி
றது.  மகாபாரதக் காப்பியத்தில் வரும்
கிளைக்கதை. சூதாட்டத்தால் நாட்டை
இழந்து  காட்டில் வாழ்ந்துவரும் தருமரு
க்குச் சொல்லப்பட்ட கதை. நளன் நிடத
நாட்டையாண்ட வேந்தன். விதர்ப்ப
நாட்டு வேந்தன் வீமன் தன் மகள் தமை
யந்தி  என்பாளுக்கு நடத்திய சுயம்வர
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நளன் அவ
ளை மனைவியாய் அடைந்தான். மிக
மிக மகிழ்ச்சியாய் இல்லறம் நடத்திய
அவர்களுக்குக் கலி(சனி) உருவில் இடர்
வந்தது. கலி நளனைச் சூதாடச் செய்து
நாட்டை இழக்கவைத்தான். நாட்டை இழ
ந்த நளன் மனைவியொடு காட்டுக்கு
வந்தான். கலி நளனது மனத்தைக் குழப்
பி மனைவியைப் பிரியச் செய்தான்.
தமையந்தி தந்தையின் நாட்டுக்கு வந்து
சேர்ந்தாள். நளன் அயோத்தி நகர்க்கு
வந்து இருதுபன்னன் என்னும் அரசனி
டம் பணியாற்றிவந்தான். நளன் இருப்
பிடம்  அறிந்த  தமையந்தி மற்றொரு
சுயம்வரம்  நிகழ்த்த இருப்பதாகச் செய்
தியைப் பரப்பினாள். நளன் தேரோட்ட
இருதுபன்னன் விதர்ப்ப நாட்டுக்கு
வந்தான். அங்கே நளன், தமையந்தி
மீண்டும் இணைகின்றனர். கலியும்
நீங்கினான். சூதாட்டத்தால் நேரும்
தீங்கைத் தெரிவிக்க இந்தக் கதை தரு
மருக்குச் சொல்லப் பட்டது.


நளவெண்பா நூலில் மொத்தம் 427
பாடல்கள் உள்ளன. அத்தனையும்  மிக
மிக அருமையானவை. சிலவற்றை
இங்கே பார்ப்போம்:

காமர்  கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப்–-
   பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே
   சாகரம்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டம் நாடு.

கடலால் சூழப்பட்ட பூவுலகில் முதன்மை
யாகக் குறிப்பிடப்படும் நிடத நாடானது
அழகிய சேல்மீன்கள் புரளுதலாலும்,
நீலோற்பலங்களின் பேரரும்புகள் மலர்
தலாலும் செந்தேன் சிந்தலாலும் தாம
ரை மலரில் எழுந்தருளியுள்ள திருமக
ளை ஒத்திருக்கும் பெருமையுடையது.
காமர்--அழகு; காவி--நீலோற்பல மலர்;
நாட்டம்--கண்.

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்
   கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்--
   மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்  பருந்
    தும்
ஒருகூட்டில் வாழ உலகு.
தாதுக்கள் சிந்துகின்ற மலர்மாலை
யணிந்த நளன் குளிர்ச்சியான சந்திரன்
போன்ற தனது குடைநிழலில் குற்றம்
அற்ற அறங்கள் தங்கவும் மங்கையர்
தமதருகில் வைத்து ஊட்டி வளர்க்கின்ற
பைங்கிளியும் எதிரியான பருந்தும் ஒரு
கூட்டில் வாழவும் உலகை ஆண்டான்.

திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்
     தே உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள்--
     வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள்
     மென்தோள்
அமையந்தி என்றோர் அணங்கு.
எட்டுத் திக்கில் உள்ளோரையும் தன்னுள்
அடக்கிய வெண்கொற்றக் குடையையும்
தேர்ச் சேனையையும் உடைய அரசனே!
புகழ் நிரம்பிய உன் தோளுக்கு தமை
யந்தி என்ற பெயருடைய பெண்ணின்
தோள் இசையும்.
அந்தி--பெண்பால் படர்க்கை விகுதி
அணங்கு--மாது.

நளன் சிறப்பு:
செம்மனத்தான் தண்ணளியான் செங்
   கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்--
    மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்
     தும் மிக்கான்
உளனென்பான் வேந்தன் உனக்கு.

தமையந்தி சிறப்பு:
அழகு சுமந்திளைத்த ஆகத்தாள்;வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை--மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம்
     மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு.

மாலைப்பொழுதின் வருகை:
மல்லிகையே வெண்சங்கா வண்டூத
   வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப--
   முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல
    நடந்ததே
பொன்மாலை அந்திப் பொழுது.

சுயம்வரத்தில் நளன் வெற்றிபெற,
மற்ற அரசர்களின் ஏமாற்ற நிலை:
திண்தோள் வயவேந்தர் செந்தா
    மரைமுகம்போய்
வெண்தா  மரையாய் வெளுத்தவே--
    ஒண்டாரைக்
கோமாலை வேலான் குலமாலை
     வேற்கண்ணாள்
பூமாலை பெற்றிருந்த போது.

நளனும் தமையந்தியும்  பூமாலை
சூடியிருந்ததைப் பார்த்து மற்ற அரசர்
களது செந்தாமரை போன்ற முகம்
 வெளுத்துப் போய் வெண்தாமரை
போலாயிற்று.

நளன் சூதாட்டத்தில் நாட்டைப் புட்கர
னிடம் இழந்து மாவிந்த நகரை நீங்கி
யது.:
மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த
   நன்மலரைப்
புன்னாகம்  கொள்ளத்தான் போனாற்போல்--தன்கால்
பொடியாடத்  தேவியொடும் போயினான்
    அன்றே
கொடியானுக் கப்பார் கொடுத்து.

மக்கட்பேறின் மகிமை:
பொன்னுடைய ரேனும் புகழுடைய
     ரேனும்மற்(று)
என்னுடைய ரேனும் உடையரோ--
      இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கை; பூநாறும்
        செய்யவாய்
மக்களையிங் கில்லாத வர்.

நளன் நண்டை நோக்கிப் புலம்பியது:
காதலியைக் காரிருளிற் கானகத்தே
   கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ--
   நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி
ஒளிக்கின்ற(து) என்னோ உரை.

மறுபடியும் நடக்கவிருப்பதாகச் சொல்லப் பட்ட சுயம்வர நிகழ்வுக்கு
வந்த நளனிடம்  வீமராசன் சொன்னது:
பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று--
மந்தி
தெளியா(து) இருக்கும்  திருநாடா!
உன்னை
ஒளியாது காட்(டு)உன் உரு.
பாக்கு மரத்தின் பாளைதனைப் பார்த்த
மந்தி நாகப் பாம்பின் படமென்று
ஐயுற்று அஞ்சுகின்ற வளமான திரு
நாட்டை உடையவனே! நிறம் கறுத்துப்
போய் உள்ள உன்னை இன்னாரெனக்
கண்டுபிடிக்க இயலவில்லை.ஆகவே
மறைக்காமல் உன் உண்மை உருவைக்
காட்டுவாயாக!

மீண்டும் இணைந்த நளன்--தமையந்தி
யைக் கண்டு மகிழ்ந்த மக்களின் நிலை:
கார்பெற்ற தோகையோ? கண்பெற்ற
  வாண்முகமோ?
நீர்பெற்(று) உயர்ந்த நிறைபுலமோ?--
  பார்பெற்று
மாதோடும் மன்னன் வரக்கண்ட
  மாநகருக்(கு)
ஏதோ உரைப்பன் எதிர்.
கருமேகத்தைக் கண்ட மயிலோ? கண்
இல்லாதிருந்து பிறகு பெற்ற ஒளி
பொருந்திய முகமோ? நீர் இல்லாதி
ருந்து பிறகு நீர்பெற்று அதனால் உயர்
வடைந்த நிறைவான வயலோ? இதில்
எதை இணையாகச் சொல்வேன்?
நளனையும் தமையந்தியையும் பார்த்து
அதனால் உண்டான மகிழ்ச்சிக்கு எதை
யும் இணையாகச் சொல்ல முடியாது.

நளவெண்பா நூலில் உள்ள அத்தனை
பாடல்களுமே மிக மிக இனிமையானவை.
 













1 comment:

  1. சீர்மிகு பாடல்கள்

    ReplyDelete