விலைவாசி ஏற்றத்தால் மக்கள் எல்லாம்
விழிபிதுங்கி நிற்கையிலே பண்டி கையைக்
குலையாத மகிழ்ச்சியுடன் குதுக லித்துக்
கொண்டாட வழியில்லை;இருந்த போதும்
சிலைபோல நில்லாமல் கட்டுச் செட்டாய்
தீபவொளி கொண்டாட முடிவு செய்து
மலைபோலத் துணைபுரியும் மனைவி
யோடு
வரவுசெல வுத்திட்டம் தீட்ட லானேன்.
புத்தாடை, பட்டாசு வாங்கல் வேண்டும்;
புசித்திடத்தின் பண்டங்கள் சமைத்தல்
வேண்டும்;
முத்தான பேரர்களும் பேத்தி மாரும்
முற்றாகக் குதுகலிக்கப் பரிசுப் பண்டம்,
வித்தார அணிகலன்கள் கடையில் வாங்கி
மேனியிலே சூட்டியெழில் பார்த்தல்
வேண்டும்;
எத்தாலும் இவைவாங்கச் செலவே யாகும்;
இதையெல்லாம் சிந்தித்துத் திட்டம்
போட்டோம்.
கேசரி,மை சூர்ப்பா(கு)இ லட்டு பூந்தி
கிறங்கச்செய் குளோப்ஜாமுன், பாது
ஷாவாம்
வாசமிகு அல்வா,சோன் பப்டி யின்னும்
வகைவகையாய் வடை,முறுக்கு, பஜ்ஜி,
சொஜ்ஜி
ஆசையுடன் உண்பதற்காம் பண்டம்
எல்லாம்
அருமையாய்ச் சமைத்திடுவோம்;அகத்தி
லேயே;
பூசனைகள் முடிந்தபின்பு வயிறு முட்டப்
புசித்திடுவோம்;களிகொள்வோம்; உண்மை தானே!
கேடறுதீப் பெட்டி,கம்பி மத்தாப்பு,சாட்டை
கிளர்ந்தெழுந்து பூப்பூவாய் உதிரும்பூ
வாணம்,
நாடுமெழில் சக்கரம்போல் சுழலும்மத்
தாப்பு,
நயமாகப் பிள்ளையெலாம் விரும்பும்துப்
பாக்கி,
நீடுபுகழ் ஆயிரமாம் எண்ணிக்கை
கொண்ட
நெடியசர வெடிவகைகள் ஏவுகணை
போன்ற
பீடுறவே பாய்கின்ற வேட்டுகளைப்
போட்டுப்
பெரிதாக மகிழ்ந்திடுவோம் துயரெதுவும்
உண்டோ?
பட்டாலே உருவான பாவாடை, பெண்டிர்
பாங்காக அணிகின்ற தாவணிகள்
வேண்டார்;
கட்டாயம் நாகரிகச் சுரிதார்,துப் பட்டா
கவுன்,சல்வார் போன்றவற்றை
விரும்பிடுவர்; வாங்கித்
தட்டாமல் உடுத்திடுவர்; குற்றமிலை;
நன்றே;
தையலர்க்கு ஜீன்(சு)அன்ன உடலிறுக்
கும் ஆடை
கட்டாயம் தேவையிலை;உடற்(கு)இன்
னல் நல்கும்;
கண்டிப்பாய்ப் பின்பற்றி நலம்பேணு
வீரே!
ஆடவர்கள் வேட்டி,துண்டு விரும்பிடுதல்
இல்லை;
அணிகின்ற பேண்ட்சட்டை குற்றமிலை;
நன்றே;
நாடதனில் புகழ்பெற்ற ஜீன்ஸ்முதலாம்
ஆடை
நன்றன்று; உடல்தன்னை இறுக்குவ
தால் கேடாம்;
தேடரிய பெருஞ்செல்வம் உடல்நலமே
யாகும்;
சிந்தித்துச் சிறப்பான ஆடையினை
வாங்கி
ஈடிணையே இல்லாத தீபவொளி நாளில்
எல்லையிலா மகிழ்வோடு கொண்டாடு
வீரே!
மாவுயர் நீதி மன்றம்
வகுத்திடும் வழிபின் பற்றித்
தீவிபத்(து) ஏற்ப டாமல்
செம்மையாய் வாணம் மத்தாப்(பு)
ஏவியே மகிழ்வீர்; எந்த
இன்னலும் மக்க ளுக்கு
நேர்வதைத் தடுத்தல் வேண்டும்;
நினைவினிற் கொள்வீர் மாதோ!
செவி,விழி பாதிக் காத
சிறந்தநற் பட்டா சைத்தான்
கவனமாய்த் தயார்செய் வீரே;
காற்றுமண் டலத்தில் மாசு
தவறியும் கூடி டாமல்
தயார்செயும் நிறுவ னங்கள்
அவசியம் நோக்கல் வேண்டும்;
ஆயத்தம் செய்தல் வேண்டும்.
சுற்றுச் சூழல் தூய்மைமிக்குத்
துலங்கல் வேண்டும்; உயிர்க்காற்று
சற்றும் நஞ்சே யில்லாது
தவழ்தல் வேண்டும்; புத்துணர்ச்சி
பெற்றுப் பொலிந்து சுறுசுறுப்பாய்ப்
பிறங்கல் வேண்டும்; ஞாலத்தில்
வெற்று முழக்கம் தேவையிலை;
மேன்மைச் செய்கை வேண்டுவமே!
நெருப்புப் பட்டு விபத்தெதுவும்
நேர்ந்தி டாமல் கவனமொடு
கருத்தாய் வெடியைக் கையாள்வீர்;
கண்ணைக் காதைக் காத்திடுவீர்;
விருப்பத் தோடு வெடிவகையை
விரலில் பிடித்துக் கொளுத்தாதீர்;
அருமை உயிரை, உடல்தன்னை
அக்க றையாய்ப் பேணுகவே!
இந்திய நாட்டிலுள்ள எல்லாப் பகுதியிலும்
சிந்தைகளி கூரவைக்கும் தீபவொளிப்
பண்டிகையைத்
தந்தம் நிலைக்கேற்பச் சால்புடன்கொண்
டாடுகின்றார்;
விந்தையிந்த ஒற்றுமையை விள்ளத்தான் கூடுமோ?
ஏழை, பணக்காரன் என்றவொரு பேதமிலை;
மாழை யுடையோரும் வறியோரும்
ஒன்றாவர்;
வாழையடி வாழையென மக்கள்நன்கு
போற்றுகின்ற
பீழையிலாத் தீபவொளி பெட்புடன்கொண் டாடுகவே!
அருஞ்சொற் பொருள்:
பீடு--பெருமை; தையல்--பெண்;
மாவுயர் நீதி மன்றம்---உச்சநீதிமன்றம்
துலங்கல்--விளங்கிடுதல்
பிறங்கு--விளங்கு; ஞாலம்---பூமி
தந்தம்--தம்தம்;சால்பு---பெருமை
விள்ளுதல்---சொல்லுதல்
மாழை---பொன்;பீழை---துன்பம்
பெட்பு---சிறப்பு
விழிபிதுங்கி நிற்கையிலே பண்டி கையைக்
குலையாத மகிழ்ச்சியுடன் குதுக லித்துக்
கொண்டாட வழியில்லை;இருந்த போதும்
சிலைபோல நில்லாமல் கட்டுச் செட்டாய்
தீபவொளி கொண்டாட முடிவு செய்து
மலைபோலத் துணைபுரியும் மனைவி
யோடு
வரவுசெல வுத்திட்டம் தீட்ட லானேன்.
புத்தாடை, பட்டாசு வாங்கல் வேண்டும்;
புசித்திடத்தின் பண்டங்கள் சமைத்தல்
வேண்டும்;
முத்தான பேரர்களும் பேத்தி மாரும்
முற்றாகக் குதுகலிக்கப் பரிசுப் பண்டம்,
வித்தார அணிகலன்கள் கடையில் வாங்கி
மேனியிலே சூட்டியெழில் பார்த்தல்
வேண்டும்;
எத்தாலும் இவைவாங்கச் செலவே யாகும்;
இதையெல்லாம் சிந்தித்துத் திட்டம்
போட்டோம்.
கேசரி,மை சூர்ப்பா(கு)இ லட்டு பூந்தி
கிறங்கச்செய் குளோப்ஜாமுன், பாது
ஷாவாம்
வாசமிகு அல்வா,சோன் பப்டி யின்னும்
வகைவகையாய் வடை,முறுக்கு, பஜ்ஜி,
சொஜ்ஜி
ஆசையுடன் உண்பதற்காம் பண்டம்
எல்லாம்
அருமையாய்ச் சமைத்திடுவோம்;அகத்தி
லேயே;
பூசனைகள் முடிந்தபின்பு வயிறு முட்டப்
புசித்திடுவோம்;களிகொள்வோம்; உண்மை தானே!
கேடறுதீப் பெட்டி,கம்பி மத்தாப்பு,சாட்டை
கிளர்ந்தெழுந்து பூப்பூவாய் உதிரும்பூ
வாணம்,
நாடுமெழில் சக்கரம்போல் சுழலும்மத்
தாப்பு,
நயமாகப் பிள்ளையெலாம் விரும்பும்துப்
பாக்கி,
நீடுபுகழ் ஆயிரமாம் எண்ணிக்கை
கொண்ட
நெடியசர வெடிவகைகள் ஏவுகணை
போன்ற
பீடுறவே பாய்கின்ற வேட்டுகளைப்
போட்டுப்
பெரிதாக மகிழ்ந்திடுவோம் துயரெதுவும்
உண்டோ?
பட்டாலே உருவான பாவாடை, பெண்டிர்
பாங்காக அணிகின்ற தாவணிகள்
வேண்டார்;
கட்டாயம் நாகரிகச் சுரிதார்,துப் பட்டா
கவுன்,சல்வார் போன்றவற்றை
விரும்பிடுவர்; வாங்கித்
தட்டாமல் உடுத்திடுவர்; குற்றமிலை;
நன்றே;
தையலர்க்கு ஜீன்(சு)அன்ன உடலிறுக்
கும் ஆடை
கட்டாயம் தேவையிலை;உடற்(கு)இன்
னல் நல்கும்;
கண்டிப்பாய்ப் பின்பற்றி நலம்பேணு
வீரே!
ஆடவர்கள் வேட்டி,துண்டு விரும்பிடுதல்
இல்லை;
அணிகின்ற பேண்ட்சட்டை குற்றமிலை;
நன்றே;
நாடதனில் புகழ்பெற்ற ஜீன்ஸ்முதலாம்
ஆடை
நன்றன்று; உடல்தன்னை இறுக்குவ
தால் கேடாம்;
தேடரிய பெருஞ்செல்வம் உடல்நலமே
யாகும்;
சிந்தித்துச் சிறப்பான ஆடையினை
வாங்கி
ஈடிணையே இல்லாத தீபவொளி நாளில்
எல்லையிலா மகிழ்வோடு கொண்டாடு
வீரே!
மாவுயர் நீதி மன்றம்
வகுத்திடும் வழிபின் பற்றித்
தீவிபத்(து) ஏற்ப டாமல்
செம்மையாய் வாணம் மத்தாப்(பு)
ஏவியே மகிழ்வீர்; எந்த
இன்னலும் மக்க ளுக்கு
நேர்வதைத் தடுத்தல் வேண்டும்;
நினைவினிற் கொள்வீர் மாதோ!
செவி,விழி பாதிக் காத
சிறந்தநற் பட்டா சைத்தான்
கவனமாய்த் தயார்செய் வீரே;
காற்றுமண் டலத்தில் மாசு
தவறியும் கூடி டாமல்
தயார்செயும் நிறுவ னங்கள்
அவசியம் நோக்கல் வேண்டும்;
ஆயத்தம் செய்தல் வேண்டும்.
சுற்றுச் சூழல் தூய்மைமிக்குத்
துலங்கல் வேண்டும்; உயிர்க்காற்று
சற்றும் நஞ்சே யில்லாது
தவழ்தல் வேண்டும்; புத்துணர்ச்சி
பெற்றுப் பொலிந்து சுறுசுறுப்பாய்ப்
பிறங்கல் வேண்டும்; ஞாலத்தில்
வெற்று முழக்கம் தேவையிலை;
மேன்மைச் செய்கை வேண்டுவமே!
நெருப்புப் பட்டு விபத்தெதுவும்
நேர்ந்தி டாமல் கவனமொடு
கருத்தாய் வெடியைக் கையாள்வீர்;
கண்ணைக் காதைக் காத்திடுவீர்;
விருப்பத் தோடு வெடிவகையை
விரலில் பிடித்துக் கொளுத்தாதீர்;
அருமை உயிரை, உடல்தன்னை
அக்க றையாய்ப் பேணுகவே!
இந்திய நாட்டிலுள்ள எல்லாப் பகுதியிலும்
சிந்தைகளி கூரவைக்கும் தீபவொளிப்
பண்டிகையைத்
தந்தம் நிலைக்கேற்பச் சால்புடன்கொண்
டாடுகின்றார்;
விந்தையிந்த ஒற்றுமையை விள்ளத்தான் கூடுமோ?
ஏழை, பணக்காரன் என்றவொரு பேதமிலை;
மாழை யுடையோரும் வறியோரும்
ஒன்றாவர்;
வாழையடி வாழையென மக்கள்நன்கு
போற்றுகின்ற
பீழையிலாத் தீபவொளி பெட்புடன்கொண் டாடுகவே!
அருஞ்சொற் பொருள்:
பீடு--பெருமை; தையல்--பெண்;
மாவுயர் நீதி மன்றம்---உச்சநீதிமன்றம்
துலங்கல்--விளங்கிடுதல்
பிறங்கு--விளங்கு; ஞாலம்---பூமி
தந்தம்--தம்தம்;சால்பு---பெருமை
விள்ளுதல்---சொல்லுதல்
மாழை---பொன்;பீழை---துன்பம்
பெட்பு---சிறப்பு