Monday, 22 October 2018

மடலூர்தல் அல்லது மடலேறுதல்

மடலேற்றம்  அல்லது மடலூர்தல் என்பது
பழந்தமிழகத்தில் நிலவிய ஒரு விந்தை
யான பழக்கம் ஆகும்.  பெண் ஒருத்தி
யை விரும்பிய தலைவன் அப்பெண் தனக்குக் கிடைக்காவிடில் பனைமடலாற்
குதிரை போன்ற உருவம் அமைத்துத் தன் படத்தையும் தன் தலைவியின் படத்
தையும் ஓவியமாக எழுதிக் கிழியினைக்
(ஓவியம் வரையப்பட்ட துணி) கையில்
வைத்துக் கொண்டு வீதியின் இடையே
ஊர்ந்து வருதலாகும்.

பனைமரத்தின் கிளை பனைமட்டை யெனப் படும். இது இரண்டு பக்கங்களி
லும் கூரிய முள் போன்ற பாகங்களைக்
கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின்
கிளையால் குதிரை போன்ற உருவத்தை
உருவாக்கி இதன்மேல் தலைவன் அமர்ந்
திருப்பான். இதன்கீழ் உருளை பொருத்
தப் பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி
ஊரார்,குறிப்பாகச், சிறுவர் இழுத்துச்
செல்வர். இதுவே மடல் என்பதாகும்.

காமம் முற்றிய தலைவன் மடலேறுங் கா
லத்தில் எருக்கங் கண்ணியைச் சூடிக்
கொள்வான். வெண்மையான எலும்பு
களை அணிந்து கொள்வான்.மடல் குதி
ரைக்கு மயில்தோகை, பூளைப்பூ, ஆவி
ரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் தொடுக்
கப் பட்ட  மாலையை அணிவிப்பான்.
உடல் முழுவதும் சாம்பலைப் பூசியிருப்
பான். தான் கையில் பிடித்திருக்கும்
கிழி(ஓவியம் வரையப்பட்ட துணி)யை
யே பார்த்துக் கொண்டிருப்பான். வேறு
எந்தவிதமான உணர்வையும் காட்ட
மாட்டான். மழை, காற்று, வெயில்,தீ
போன்ற எதைப் பற்றியும் பொருட்படுத்த
மாட்டான்.

நாணத்தை முற்றிலுமாகக் கைவிட்டு
"இன்னாள் செய்தது இது" என்று வெளி
ப் படையாகக் கூறுவான். சங்க இலக்கி
யங்களில் மடலேறுதலைப் பற்றிப் பல
பாடல்கள் உள்ளன. திருக்குறளில்
"காமம் உழந்து வருந்தினார்க்(கு) ஏமம்
மடலல்ல(து) இல்லை வலி".(தி.கு.1131)
குறுந்தொகையில்(பாடல் 14)
"அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொ
    ழி அரிவையைப்
பெருகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே, மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே".


மடலூர்ந்து வரும் தலைவன் நாணத்
தைத் துறந்து எவ்வித உணர்வையும்
காட்டாது வீதியில் சுற்றி வருவான்.
அப்பொழுது தலைவன்"இந்தப் பெண்
எனக்குக் கிடைத்து விட்டால் மகிழ்வேன்.
இந்த நல்ல பெண்ணுக்குக் கணவன்
இவன் என ஊரார் கூறும்போது நான்
சிறிது நாணமடைவேன்" எனக் கூறிக்
கொள்வான். குறுந்தொகை 17ஆம்
பாடலில்  மடலேறுவதைப் பற்றியும்
எருக்கங்கண்ணி சூடுவதைப் பற்றியும்
"மாவென மடலும் ஊர்ப; பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே"
என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தலைவியைச் சுட்டி இன்னாள்
தான் இதற்குக் காரணம் என்பதைக்
குறுந்தொகையில் 173 ஆம் பாடலில்
"பொன்னேர் ஆவிரைப் புதுமலர்
      மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி நாணட்(டு)
அழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
இன்னாள் செய்த(து) இதுவென
   முன்னின்(று)
அவன்பழி நுவலும் இவ்வூர்"
என்றவாறு கூறப்படடுள்ளது. மடலை
ஊரார், குறிப்பாகச், சிறுவர் இழுத்துச்
சென்ற செய்தி நற்றிணை 220 ஆம்
பாடலில் கூறப்பட்டுள்ளது.
"சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு
      நிறீஇக்
குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்".


வெள்ளென்பு அணிவதையும், நாணத்
தைத் துறந்து மடலூர்வதையும் குறுந்
தொகை 182ஆம் பாடலில் காணலாம்.
"விழுத்தலைப் பெண்ணை வினையன்
       மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென்(பு) அணிந்துபிறர் எள்ளத்
    தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநாண் நீக்கித்
தெருவில் நியலவுந் தருவது கொல்லோ
கவிழ்ந்தவிர் அசைநடைப் பேதை
மெலிந்தில னாம்விடற் கமைந்த தூதே".


இதையெல்லாம் கண்ட சான்றோர் பெரு
மக்கள் இத்தலைவனுக்குத் தலைவியை
மணம் முடித்துவைக்கும் முயற்சிகளை
மேற்கொள்வர். இந்த முயற்சி வெற்றி
பெற்றால் தலைவன்  மகிழ்ச்சியுறுவான்.
இம்முறையில் வெற்றி பெற்ற தலைவன்
ஒருவன் தான் மடலேறியதையும், அதன்
விளைவாகத் தலைவியை அடைந்ததை
யும் தன் பாங்கனிடம்(தோழனிடம்) கூறு
வதாகக் கலித் தொகை 138 ஆம் பாடல்
இயம்புகிறது.
"எழில்மருப்பு எழில்வேழம் இகுதரு
     கடாத்தால்
தொழில்மாறித் தலைவைத்த தோட்டிகை
     நிமிர்ந்தாங்கு
அறிவும், நம்அறி(வு) ஆய்ந்த அடக்கமும்,
     நாணொடு
வறிதாகப் பிறர்என்னை நகுபவும்
     நகுபுடன்
மின்அவிர் நுடக்கமும் கனவும்போல்,
     மெய்காட்டி
என்நெஞ்சம் என்னோடு நில்லாமை
      நனிவௌவி
தன்னலம் கரந்தாளைத் தலைப்படும்
      ஆ(று)எவன்கொலோ?
மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணிப்பூளை, ஆவிரை, எருக்கொடு
        பிணித்தியாத்து
மல்லல்ஊர் மறுகின்கண் இவட்பாடும்,
        இஃதொத்தன்
எல்லீரும் கேட்டீமின் என்று.............."
இவ்வாறாகப் பாடல் பகர்கிறது.


"மங்கையர்தம் கண்ணான் மயங்கினார்;
    வெள்ளெலும்பும்
துங்க எருக்கும்  தொடுத்தணிந்து--
     அங்கமெலாம்
வெந்தாறு சாம்பல் மிகவணிந்து
      வீதிதொறும்
வந்தேறி  யூர்வர்  மடல்."
மடலேறும் நிகழ்வை ஒருவெண்பாவில்
சுருக்கமாகவும் அழகாகவும்  குறுந்தொகை  மூலமும் உரையும் என்ற
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலித்தொகை, நற்றிணை,குறுந்தொகை
முதலான சங்க நூல்களில் ஆங்காங்கே
இதைப் பற்றிய பாடல்கள் பரவிக் கிடக்
கினாறன.


மடலேறுதல் வெற்றிபெறாவிட்டால் அடு
த்து என்ன நிகழும்? மடலேறிய பின்ன
ரும் தலைவியோ, அவளைப் பெற்றவர்
களோ திருமணத்துக்குச் சம்மதம் தெரி
விக்காவிட்டால் தலைவன் தன்வாழ்வை
முடித்துக் கொள்வான். மலையிலிருந்து
வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்வான்.
இந்நிகழ்வை 'வரைபாய்தல்'  என்று
இலக்கியங்கள் இயம்புகின்றன.
குறுந்தொகையில்(பாடல் 17)
"மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப  காமங்காழ்க் கொளினே"
மடலேறுதல் வெற்றி பெறாவிட்டால்,
தலைவனுக்குத் தலைவியின் பாலுள்ள
காமம் அதிகமானால் வரைபாய்தல் மூல
மாகத் தலைவன் உயிரைத் துறப்பான்
(பிறிதும் ஆகுப) என்று கூறப்பட்டுள்ளது.


மடலேறும் நிகழ்ச்சி , தன்னை விரும்பாத
பெண்பொருட்டு நிகழ்ந்தால் அது கைக்
கிளை ஒழுக்கம் எனப்படும்.(ஒரு தலைக்
காதல்). சிலசமயங்களில் தலைவனும்
தலைவியும் ஒருவரையொருவர் விரும்
பிய போதிலும் பெற்றோர் மறுப்புகாரண
மாகவும் நிகழக்கூடும். அப்பொழுது
இயற்கையான ஐந்திணை ஒழுக்கத்தில்
அடங்கும்.

மடல் கூறல், மடல்விலக்கு என்ற இரு
நிலைகளும் உள்ளன. தலைவன் தலை
வியை அடைய மடலேறுவேன் என்று
சொல்வது மடல்கூறல் ஆகும். மடலேற
வேண்டாவெனத் தடுப்பது மடல் விலக்கு
எனப்படும்.


பெண்கள் மடலேறுதல் தமிழர் மரபில்
இல்லை என்று தொல்காப்பியம் பேசு
கிறது. திருக்குறளும் இக்கருத்தை
வலியுறுத்துகின்றது. (தி.கு.1137)
"கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்."
ஆனால் வடநூலார் மரபைப் பின்பற்றித்
திருமங்கை ஆழ்வார், நாயகி பாவத்தில்
பெருமாளுக்காக மடலேறுதல் போன்று
சிறிய மடல், பெரியமடல் பாடியுள்ளார்.


மடலேறுதல் சங்க காலத்தில் நிலவிய
ஏனைய சில பழக்கங்களைப் போலவே,
(அதாவது உடன்கட்டை ஏறுதல், வடக்கி
ருத்தல் போன்றவற்றைப் போலவே)
காலப்போக்கில் மறைந்து போயிற்று.
இது குறித்து நாம் வருந்தத்தேவை
யில்லை.  ஏனென்றால் மடலேறுதல்
நிகழ்வு  தற்காலத்தில் நிலவுகின்ற
ஒருதலைக்காதலை ஒத்திருக்கிறது.
தற்காலத்தில் ஒருதலைக் காதலால்
மகளிர் கடும் அவதிப்படுவதைக்
காண்கின்றோம். அமில வீச்சு, கொலை
வெறி, கொடூரக்கொலை இவற்றைக்
கண்ணுறும்போது, மடலேறுதல் என்னும்
பழக்கம் மறைந்து போனது குறித்து
வருத்தப்படத் தேவையில்லை.தற்காலத்
துக்குச் சற்றும் பொருந்தாது; தேவையும்
இல்லை.

1 comment: