வையத்தில் பெற்றெடுத்த மாதாவைக்
கண்கண்ட
தெய்வத்துக் கீடாகச் சிந்தித்தே---
உய்கின்றோம்;
பற்றற்ற ஞானியரும் பாங்காக
அன்னையரை
உற்ற முறையில் உயர்வுசெய்வர்---
சற்றேனும்
ஓய்வே இலாதுழைக்கும் உத்தமத்
தாய்மார்கள்
தூய்மைமனத் தோடு துலங்கிடுவர்---
வாய்மையே;
இத்தகைய சீர்த்தியனைக்(கு) எப்படி
வாய்த்ததெனச்
சித்தத்தில் ஓர்ந்தால் தெளிவுறுவோம்---
இத்தரையில்
உண்டான நாள்முதலாய் ஓம்பத்
தொடங்கிடுவர்;
கண்டதெலாம் உண்பதனைக் கண்டிப்பாய்த்---துண்டிப்பர்;
பக்குவமாய்த் தேர்ந்துண்டு பத்தியங்கள்
பேணிடுவர்;
தக்கபடி பிள்ளை தழைத்திடவும்---
சிக்கலின்றி
நன்கு வளர்ந்திடவும் நாளும்
பணிசெய்வர்;
அன்பு மிகுந்தே அடிவயிற்றை---
மென்மையாய்
நீவித் தடவிடுவர்; நிம்மதி யில்லாமல்
ஆவி தளர்ந்திடுவர்; அச்சத்தால்---
கூவிடுவர்;
மெய்யெலாம் வாடிட மேனி மெலிவுறத்
துய்க்கும் உணவு சுவையின்றிக்---
கைக்குமே;
வேண்டாத தெய்வமெலாம் வேண்டிப்பல்
நோன்பிருந்து
நீண்டபத்து மாதம் நிறைவயிற்றால்---
மூண்டதுயர்
கொஞ்சநஞசம் அன்று; குழந்தைக்காய்த்
தாங்கிடுவர்;
பிஞ்சு மகவினைப் பெற்றெடுத்துக்---
கொஞ்சும்
விழைவால் பொறுத்திடுவர்; வேளைவரும் போதில்
அழைப்பர் கடவுளை; ஆர்த்தே---உழல்வர்;
ஒருவாறு பெற்றபின்னர் ஒண்முகம்
நோக்கிப்
பெருமைமிகப் பல்விதமாய்ப் பேசிச்---
சிரித்திடுவர்;
பிள்ளைப்பே றென்பது பெண்டிர்தம்
இன்னுயிரைக்
கொள்ளை யடிக்கும் கொடியதாம்---
சள்ளைவிதி;
தப்பிப் பிழைத்தால் தனக்கு மறுபிறவிக்
கொப்பான வாழ்வென்பர்; உண்மையிது--- தப்பில்லை;
பெற்றெடுத்த பின்னரும் பெண்டிர்பா(டு)
ஓய்ந்திலது;
பற்றுடனே தம்குருதி பாலாக்கி---
உற்றவன்பால்
ஊட்டி மகிழ்ந்திடுவர்; ஊட்டம்
அளித்திடுவர்;
வீட்டு மருத்துவத்தால் வேதனை,நோய்---
ஓட்டிடுவர்;
நோவு பெரிதென்றால் நோய்நீக்கும்
வைத்தியர்பால்
ஆவலுடன் காட்டிடுவர்;ஆதரவாய்க்---
காவல்செய்வர்;
கண்ணயர்தல் இன்றிக் கவனமாய்ப்
பேணிடுவர்;
உண்ணவும் தூங்கவும் ஓர்ந்திடார்---
கண்ணனைய
பிள்ளைக்காய் வாழ்ந்திடுவர்; பேசப்
பழக்கிடுவர்;
'கள்ளம் கபடு களை'யென்பர்;---
விள்ளரிய
நீதிக் கதைசொல்லி நேர்மை
யுறவளர்ப்பர்;
சாதி,மதம் போன்றவற்றைத்
தக்கதல்ல---தீதென்பர்;
முன்னர்நமைப் பெற்றெடுக்க முந்நூறு
நாள்சுமந்த
அன்னையரின் தாள்பணிவோம் ஆர்த்து.
அரும்சொற் பொருள்:
உய்கின்றோம்--வாழ்கின்றோம்
துலங்கிடுவர்--விளங்கிடுவர்
சீர்த்தியனைக்கு--சிறப்பு அன்னைக்கு;
அன்னை, அனை யானது இடைக்குறை.
ஓர்ந்தால்--நினைத்தால்
உண்டான நாள்---கருத்தரித்த நாள்
கைக்கும்--கசக்கும்
மகவு--குழந்தை
விழைவு--ஆவல்
ஆர்த்து--ஒலி எழுப்பி
ஒண்முகம்--ஒளி பொருந்திய முகம்
சள்ளை விதி--தொந்தரவு தரும் விதி
கண்ணனைய--கண் போன்ற
விள்ளரிய--சொல்ல அரிதான
ஓம்புதல்--பேணுதல்
உற்றவன்பால்--உற்ற அன்பால்
கண்கண்ட
தெய்வத்துக் கீடாகச் சிந்தித்தே---
உய்கின்றோம்;
பற்றற்ற ஞானியரும் பாங்காக
அன்னையரை
உற்ற முறையில் உயர்வுசெய்வர்---
சற்றேனும்
ஓய்வே இலாதுழைக்கும் உத்தமத்
தாய்மார்கள்
தூய்மைமனத் தோடு துலங்கிடுவர்---
வாய்மையே;
இத்தகைய சீர்த்தியனைக்(கு) எப்படி
வாய்த்ததெனச்
சித்தத்தில் ஓர்ந்தால் தெளிவுறுவோம்---
இத்தரையில்
உண்டான நாள்முதலாய் ஓம்பத்
தொடங்கிடுவர்;
கண்டதெலாம் உண்பதனைக் கண்டிப்பாய்த்---துண்டிப்பர்;
பக்குவமாய்த் தேர்ந்துண்டு பத்தியங்கள்
பேணிடுவர்;
தக்கபடி பிள்ளை தழைத்திடவும்---
சிக்கலின்றி
நன்கு வளர்ந்திடவும் நாளும்
பணிசெய்வர்;
அன்பு மிகுந்தே அடிவயிற்றை---
மென்மையாய்
நீவித் தடவிடுவர்; நிம்மதி யில்லாமல்
ஆவி தளர்ந்திடுவர்; அச்சத்தால்---
கூவிடுவர்;
மெய்யெலாம் வாடிட மேனி மெலிவுறத்
துய்க்கும் உணவு சுவையின்றிக்---
கைக்குமே;
வேண்டாத தெய்வமெலாம் வேண்டிப்பல்
நோன்பிருந்து
நீண்டபத்து மாதம் நிறைவயிற்றால்---
மூண்டதுயர்
கொஞ்சநஞசம் அன்று; குழந்தைக்காய்த்
தாங்கிடுவர்;
பிஞ்சு மகவினைப் பெற்றெடுத்துக்---
கொஞ்சும்
விழைவால் பொறுத்திடுவர்; வேளைவரும் போதில்
அழைப்பர் கடவுளை; ஆர்த்தே---உழல்வர்;
ஒருவாறு பெற்றபின்னர் ஒண்முகம்
நோக்கிப்
பெருமைமிகப் பல்விதமாய்ப் பேசிச்---
சிரித்திடுவர்;
பிள்ளைப்பே றென்பது பெண்டிர்தம்
இன்னுயிரைக்
கொள்ளை யடிக்கும் கொடியதாம்---
சள்ளைவிதி;
தப்பிப் பிழைத்தால் தனக்கு மறுபிறவிக்
கொப்பான வாழ்வென்பர்; உண்மையிது--- தப்பில்லை;
பெற்றெடுத்த பின்னரும் பெண்டிர்பா(டு)
ஓய்ந்திலது;
பற்றுடனே தம்குருதி பாலாக்கி---
உற்றவன்பால்
ஊட்டி மகிழ்ந்திடுவர்; ஊட்டம்
அளித்திடுவர்;
வீட்டு மருத்துவத்தால் வேதனை,நோய்---
ஓட்டிடுவர்;
நோவு பெரிதென்றால் நோய்நீக்கும்
வைத்தியர்பால்
ஆவலுடன் காட்டிடுவர்;ஆதரவாய்க்---
காவல்செய்வர்;
கண்ணயர்தல் இன்றிக் கவனமாய்ப்
பேணிடுவர்;
உண்ணவும் தூங்கவும் ஓர்ந்திடார்---
கண்ணனைய
பிள்ளைக்காய் வாழ்ந்திடுவர்; பேசப்
பழக்கிடுவர்;
'கள்ளம் கபடு களை'யென்பர்;---
விள்ளரிய
நீதிக் கதைசொல்லி நேர்மை
யுறவளர்ப்பர்;
சாதி,மதம் போன்றவற்றைத்
தக்கதல்ல---தீதென்பர்;
முன்னர்நமைப் பெற்றெடுக்க முந்நூறு
நாள்சுமந்த
அன்னையரின் தாள்பணிவோம் ஆர்த்து.
அரும்சொற் பொருள்:
உய்கின்றோம்--வாழ்கின்றோம்
துலங்கிடுவர்--விளங்கிடுவர்
சீர்த்தியனைக்கு--சிறப்பு அன்னைக்கு;
அன்னை, அனை யானது இடைக்குறை.
ஓர்ந்தால்--நினைத்தால்
உண்டான நாள்---கருத்தரித்த நாள்
கைக்கும்--கசக்கும்
மகவு--குழந்தை
விழைவு--ஆவல்
ஆர்த்து--ஒலி எழுப்பி
ஒண்முகம்--ஒளி பொருந்திய முகம்
சள்ளை விதி--தொந்தரவு தரும் விதி
கண்ணனைய--கண் போன்ற
விள்ளரிய--சொல்ல அரிதான
ஓம்புதல்--பேணுதல்
உற்றவன்பால்--உற்ற அன்பால்
No comments:
Post a Comment