நந்திக் கலம்பகத்தின் நயம் பாராட்டல்
நந்திக் கலம்பகம் தமிழில் உருவான முதல் கலம்பக நூல் ஆகும்.
பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் மீது
பாடப்பட்டதாகும். அவரின் ஆட்சிக் காலம் கி.பி.825---850.
இந்நூலை இயற்றிய ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.
ஆனால், வழக்கம்போல அப்புலவரைப் பற்றிய கதைகள்
ஏராளமாக உலா வருகின்றன. திறமையான புலவர்கள் அனை
வர்க்கும் ஒருவிதமான சாபக் கேடு உண்டு. வள்ளுவப் பெருந்
தகை, ஔவைப் பிராட்டியார், நந்திக்கலம்பக ஆசிரியர்,
கவிச் சக்கரவர்த்தி கம்பர், கவிராட்சசன் ஒட்டக்கூத்தர், காள
மேகப்புலவர், அருணகிரிநாதர் இன்னும் இவர்போன்ற எண்
ணற்ற புலவர்களின் வரலாறு நம்பும் படியாக இல்லை. இல்லாத
தையும் பொல்லாததையும் சொல்லி அப்புலவர் பெருமக்களைச்
சிறுமைப் படுத்தி விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்
றால் சுமாராகக் கவிபாடும் புலவர்கள் தம் கற்பனைக் கதைக்கு
ஆதாரமாகச் சில பல தனிப்பாடல்கள் பாடி ஒப்பற்ற காவியங்
களின் ஊடே இடைச் செருகல் செய்து சேர்த்து விடுவார்கள்.
பெரும் புலவர்கள் இடைச்செருகலைக் கண்டுபிடித்து விடுவார்
கள். ஏனையோர் கண்டுபிடிக்க இயலாமல் திணறிடுவர்.
இம்மாதிரியே நந்திக்கலம்பகம் பாடிய புலவர் மங்கலமற்ற
சொற்களை இடையிடையே சேர்த்து நந்திவர்மன் மரணம்
அடையுமாறு செய்தார் என்ற நம்ப முடியாத கட்டுக் கதையைப்
பரப்பி விட்டுள்ளனர். எவ்வளவு பெரிய புலவரானாலும்
சொற்களால் மரணத்தை வரவழைக்க முடியும் என்பது இயற்
கையை மீறிய செயலாகும். இதனைத்தான் "அறம்பாடுதல்"
என்று இலக்கியத்தில் கூறுவர். அதிகபட்சம், மனிதர்கள்
தவறு செய்பவர்களச் சபிக்கலாம். அச்சாபம் காலப் போக்கில்
பலிக்கலாம். ஆனால் உடனடியாக யாரும் யார்க்கும் அறம்
பாடிக் கெடுதி விளைவித்து விட இயலாது.
எனவே, இந்நூலைப் பற்றியும் இதன் ஆசிரியரைப் பற்றியும்
உலாவரும் கதைகளைத் தூக்கி யெறிந்துவிட்டு இந்நூலின்
நயங்களை மட்டுமே நாம் பார்க்கவுள்ளோம். இந்நூல் தமிழில்
இயற்றப்பட்ட முதல் கலம்பக நூல். நூல் இயற்றப்பட்ட காலக் கட்டத்தில்
வருணாஸ்ரம தருமத்தின்படி கீழ்க்கண்ட பாக்களின் வரையறை
வகுக்கப் பட்டது.
கடவுளர்க்கு --100; முனிவர்க்கு-- 95; அரசர்க்கு--90;
அமைச்சர்க்கு-/70; வணிகர்க்கு--50;வேளாளர்க்கு--30
என்ற வரையறை சொல்லப்பட்டது. ஆனால் எந்தப் புலவரும்
இந்த வரையறைக்குள் இயற்றவில்லை. இந்த நியதியை
உருவாக்கியவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால்
இந்த நியதியை எந்தப் புலவரும் பின்பற்றியதாகத் தெரிய
வில்லை. நந்திக் கலம்பகத்தைப்பொருத்து, சில சுவடிகளில்
144 பாடல்களும், சிலவற்றில் 110 அல்லது 113பாடல்களும்
காணப்படுகின்றன.
கலம்பகம் என்னும் சொல்லைப் பிரித்தால் கலம்+பகம் என
வரும். கலம் என்றால் பன்னிரண்டு உறுப்புகளையும், பகம்
என்றால் அதிற் பாதி ஆறு உறுப்புகளையும் சுட்டும். ஆக,
கலம்பகம் நூல் பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதாக
விளங்கும். தோள், வகுப்பு, மதங்கு, அம்மானை, காலம்,
சம்பிரதம், கார், தூது, தவம், மடக்கு, மறம், பாண், களி,
சித்து, இரங்கல், கைக்கிளை, ஊர், வண்டு,தழை, ஊசல்
முதலிய உறுப்புகளோடு பிற்காலத்தில் பிச்சியார்,
கொற்றியார்,இடைச்சியார், வலைச்சியார் முதலிய. உறுப்
புகளும் விரவி வருமாறு நூல் பாடப்படும். ஆனால், முதல்
கலம்பக நூலாகிய நந்திக் கலம்பகத்தில் புயவகுப்பு, தூது,
இரங்கல்,மறம், பாண், மடல், ஊசல், காலம், மடக்கு, வெறி
விலக்கு, சம்பிரதம், கையுறை, மதங்கியார் முதலான 13
உறுப்புகள்தாம் உள்ளன. பிற்காலங்களில் மேலும் பல
விதமான உறுப்புகள் சேர்ந்திருக்கலாம்.
கலம்பகத்தைக் கலப்பு + அகம் எனப் பிரித்துப் பலவகைக்
கருத்துக்களும் (அகம், புறம் என்ற பிரிவுகள்) பலவகைப்
பாக்களும் பாவினங்களும் கலந்து அந்தாதித் தொடையால்
பாட வழிவகுத்தனர். பெரும்பாணாற்றுப் படைஎன்னும்
சங்க நூலில் "பல்பூ மிடைந்த படலைக் கண்ணி" என்னும்
சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல பூக்களினால்
தொடுக்கப் பட்ட கதம்ப மாலையையே குறிக்கும். கதம்பகம்
என்ற சொல்லே கலம்பகம் என மருவியிருக்க வாய்ப்புண்டு.
இந்நூல் மூன்றாம் நந்திவர்மனின் தெள்ளாறு, கொற்றவாயில்
முற்றம், வெறியலூர், வெள்ளாறு போன்ற போர்க்கள நிகழ்வு
களை ஆங்காங்கே சுட்டிச் செல்வதோடு அகப்பொருள் சிந்த
னைகளையும் இடையிடையே இயம்புகிறது. சொல் நயமும்,
பொருள் நயமும், கற்பனை நயமும் கொண்டு விளங்குவ
தோடு சிறந்த நம்பகமான வரலாற்றையும் எடுத்து இயம்
புகிறது. அக்காலக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும்
காணப்படும் செய்திகள் இந்நூலின் பாடல்கள் கூறும்
செய்திகளோடு ஒத்துள்ளன. நந்திக் கலம்பகம் வளமான
இலக்கியம் மட்டுமன்று; நம்பகமான வரலாற்று நூலும்
ஆகும். இனி, இந்நூலிற் பயின்றுவரும் சில நயமான பாடல்
களைப் பார்ப்போம்.
"வாடை நோக வீசு மால மாரன் வாளி தூவுமா
லாட லோத மார்க்கு மாலே னாவி காக்க வல்லனோ?
வேடு லாவு மாலை சேதி ராசன் மல்லை நந்திதோள்
கூடி னால லர்வ ராது கொங்கு விம்மு கோதையே."
பொருள்: நந்திவர்மன் மீது ஒருதலையாய்க் காதல்
கொண்ட பெண்" வாடைக்காற்று வீசும் மாலை நேரத்
தில் மன்மதன் அம்பு எய்து துன்புறுத்துகின்றான்.
நந்தியின் தோளைக் கூடினால் பழிச்சொல் வாராது
என்று கூறுகின்றாள்."!
"பதிதொரு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி
பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி
வளநாடா
நிதிதரு கவிகையு நிலமகள் உரிமையு மிவையிவை
யுடைநந்தி
மதியிலி யரசன்நின் மலரடி பணிகிலர்; வானகம்
ஆள்வாரே."
நிதிதரு விருப்பமும் நிலமகள் உரிமையும் உடைய
நந்திவர்மன் மலரடியைப் பணிந்து திறை
செலுத்தத் தவறிய அரசர்கள் போர்க்களத்
தில்கொல்லப்பட்டு வானகத்தை யாள்வர்.
"வீர தீரநல் விறலவிர் கஞ்சுகன் வெறியலூர்ச்
செருவென்றோன்
ஆர்வ மாவுள நின்றவர் அன்றிமற் றவன்பெருங்
கடைநின்ற
சேர சோழருந் தென்னரும் வடபுலத் தரசருந்
திறைதந்த
வீர மாமதக் கரியிவை பரியிவை இரவலர்
கவர்வாரே."
வெறியலூர்ப் போரில்வென்றவனாகிய
நந்திவர்மன், தன் குறுநில மன்னர்கள் மட்டும்
அன்றித் தன் பகைவராகிய சேரர், சோழர், பாண்டியர்
மற்றும் வடபுலத்தை யரசாள்பவர்கள் எல்லோரும்
தன் வாசற் கதவருகில் நின்று கப்பமாகச் செலுத்திய
யானை, குதிரை போன்றவற்றைத் தன்னிடம் யாசகம்
வாங்க வந்தவர்கள் எடுத்துக் கொள்ள அனுமதித்தான்.
"ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்;
உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்;
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்;
அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்;
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்
காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்."
"பகைவர்களுக்குத் தெள்ளாற்றுப் போரில்
மரணத்தைப் பரிசளித்த நந்திவர்மன், மார்த்
தாண்டன், காடவர்க்கு முன்தோன்றியவன்
கையில் தவழும் வேலைப்பாடிக் காஞ்சி
நகரின் பெருமையையும் பாடி ஊஞ்சல்
ஆடுவோம்" என்று மங்ககையர் மகிழ்ந்து
கூறினர்.
"இந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம்
அந்தக் குமுதமே யல்லவோ?---நந்தி
தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி
யடங்கப்பூ பாலரா னார்."
இந்த உலகில் இரவலர் என்று சொன்னால் அந்த
அல்லிதான் அல்லவா? ஏனென்றால் அது தான்
இரவில் அலருகின்றது.(இரவு +அலர்= இரவலர்)
மற்றைப் பகைவர்கள் நந்திவர்மன் மீது கோவை
(அகப் பொருளில் ஒரு பிரிவு--துறை) பாடிப் புவி
யரசராக விளங்குகின்றனர்.
ஈட்டு புகழ்நந்தி பாணநீ யெங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும்---காட்டிலழும்
பேயென்றாள் அன்னை; பிறர்நரியென்
றார்தோழி
நாயென்றாள்; நீயென்றேன் நான்.
நந்திவர்மன் நாட்டில் பரத்தையிடம் சென்று வந்த தலைவன் ஒருவன் தலைவியிடம் பாணன் ஒருவனைத்
தூதாக அனுப்பினான். ஆனால் தலைவி
அந்தப்பாணனை வெறுத்தாள்.அன்றி
ரவில் பெண்ணின் வீட்டில் பாணன் பாடிய பாட்டைக் கேட்டு அப்
பெண்ணின் தாய் பேயழுகின்றதென்றாள்; பிறர்
நரி ஊளையிடுகின்றதென்றனர்; தோழி நாய்
குரைக்கின்றதென்றாள். அப்பெண்ணோ
பாணன்தான் குரல் எழுப்புகின்றான் எனச்
சொன்னாள்.
"செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமென் றாரோ தடவினார்--பைந்தமிழை
ஆய்கின்ற கோன்நந்தி ஆகந் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மெய்."
பைந்தமிழை ஆராய்ச்சி செய்து போற்றும்
நந்திவர்மன் மார்பைத் தழுவாமல் என் மேனி
தீப்பிழம்பைச் சாறுபிழிந்து சந்தனம் என்று
சொல்லித் தடவியது போல் வெந்து
எரிகின்றது. ஒருதலைக் காதல்கொண்ட பெண்
இவ்வாறு கூறினாள்.
"ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில்வெறுங்
கூடு வருகுதென்று கூறுங்கள்--நாடியே
நந்திச்சீ ராமனுடை நன்னகரில் நன்னுதலைச்
சந்திச்சீ ராமாகில் தான்."
"ஓடும் மேகங்களே! ஓடாத (விரைவாகச் செல்லாத)தேரில் உயிரற்ற என்
உடல்(கூடு) வருகின்றதென்று நந்திவர்மனின்
நன்னகராகிய காஞ்சிபுரத்தில் எனைப்பற்றியே எண்ணி
உருகும் எனைப்பிரிந்திருக்கும் காதலியைச் சந்தித்தீர்
என்றால் சொல்லுங்கள்." காதலியைப்
பிரிந்து சென்ற காதலன் ஊருக்குத் திரும்பும் போது மேகங்களைத் தூது
அனுப்பிச் சொன்னதாகப் பாடியது.
"மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டிற்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே."
ஒருதலைக் காதல் கொண்ட பெண் புலம்புகின்
றாள்:
இந்தப் பூமி உய்திபெற மழை உதவுவது போல
மக்களுக்கு வழங்கும் கரத்தையுடைய தமிழ்
மீது தணியாத பற்றுக் கொண்ட நந்திவர்மனின்
நல்ல நாட்டில் பெண்ணே இல்லாத ஊரில்
தான் மட்டுமே பெண் என்பது போல இந்த
வெண்ணிலா வேக வேகமாக ஏன் வந்தது?
ஒருதலைக் காதலர்க்கு வெண்ணிலவைக்
கண்டால் துயரம் கூடுவது இயல்பு தானே!
நந்திக் கலம்பகத்திலுள்ள பாடல்கள் அத்தனை
யும் தேனில் ஊறவைத்த பலாச்சுளை போலத்
தித்திக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நந்திக் கலம்பகம் தமிழில் உருவான முதல் கலம்பக நூல் ஆகும்.
பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் மீது
பாடப்பட்டதாகும். அவரின் ஆட்சிக் காலம் கி.பி.825---850.
இந்நூலை இயற்றிய ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.
ஆனால், வழக்கம்போல அப்புலவரைப் பற்றிய கதைகள்
ஏராளமாக உலா வருகின்றன. திறமையான புலவர்கள் அனை
வர்க்கும் ஒருவிதமான சாபக் கேடு உண்டு. வள்ளுவப் பெருந்
தகை, ஔவைப் பிராட்டியார், நந்திக்கலம்பக ஆசிரியர்,
கவிச் சக்கரவர்த்தி கம்பர், கவிராட்சசன் ஒட்டக்கூத்தர், காள
மேகப்புலவர், அருணகிரிநாதர் இன்னும் இவர்போன்ற எண்
ணற்ற புலவர்களின் வரலாறு நம்பும் படியாக இல்லை. இல்லாத
தையும் பொல்லாததையும் சொல்லி அப்புலவர் பெருமக்களைச்
சிறுமைப் படுத்தி விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்
றால் சுமாராகக் கவிபாடும் புலவர்கள் தம் கற்பனைக் கதைக்கு
ஆதாரமாகச் சில பல தனிப்பாடல்கள் பாடி ஒப்பற்ற காவியங்
களின் ஊடே இடைச் செருகல் செய்து சேர்த்து விடுவார்கள்.
பெரும் புலவர்கள் இடைச்செருகலைக் கண்டுபிடித்து விடுவார்
கள். ஏனையோர் கண்டுபிடிக்க இயலாமல் திணறிடுவர்.
இம்மாதிரியே நந்திக்கலம்பகம் பாடிய புலவர் மங்கலமற்ற
சொற்களை இடையிடையே சேர்த்து நந்திவர்மன் மரணம்
அடையுமாறு செய்தார் என்ற நம்ப முடியாத கட்டுக் கதையைப்
பரப்பி விட்டுள்ளனர். எவ்வளவு பெரிய புலவரானாலும்
சொற்களால் மரணத்தை வரவழைக்க முடியும் என்பது இயற்
கையை மீறிய செயலாகும். இதனைத்தான் "அறம்பாடுதல்"
என்று இலக்கியத்தில் கூறுவர். அதிகபட்சம், மனிதர்கள்
தவறு செய்பவர்களச் சபிக்கலாம். அச்சாபம் காலப் போக்கில்
பலிக்கலாம். ஆனால் உடனடியாக யாரும் யார்க்கும் அறம்
பாடிக் கெடுதி விளைவித்து விட இயலாது.
எனவே, இந்நூலைப் பற்றியும் இதன் ஆசிரியரைப் பற்றியும்
உலாவரும் கதைகளைத் தூக்கி யெறிந்துவிட்டு இந்நூலின்
நயங்களை மட்டுமே நாம் பார்க்கவுள்ளோம். இந்நூல் தமிழில்
இயற்றப்பட்ட முதல் கலம்பக நூல். நூல் இயற்றப்பட்ட காலக் கட்டத்தில்
வருணாஸ்ரம தருமத்தின்படி கீழ்க்கண்ட பாக்களின் வரையறை
வகுக்கப் பட்டது.
கடவுளர்க்கு --100; முனிவர்க்கு-- 95; அரசர்க்கு--90;
அமைச்சர்க்கு-/70; வணிகர்க்கு--50;வேளாளர்க்கு--30
என்ற வரையறை சொல்லப்பட்டது. ஆனால் எந்தப் புலவரும்
இந்த வரையறைக்குள் இயற்றவில்லை. இந்த நியதியை
உருவாக்கியவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால்
இந்த நியதியை எந்தப் புலவரும் பின்பற்றியதாகத் தெரிய
வில்லை. நந்திக் கலம்பகத்தைப்பொருத்து, சில சுவடிகளில்
144 பாடல்களும், சிலவற்றில் 110 அல்லது 113பாடல்களும்
காணப்படுகின்றன.
கலம்பகம் என்னும் சொல்லைப் பிரித்தால் கலம்+பகம் என
வரும். கலம் என்றால் பன்னிரண்டு உறுப்புகளையும், பகம்
என்றால் அதிற் பாதி ஆறு உறுப்புகளையும் சுட்டும். ஆக,
கலம்பகம் நூல் பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதாக
விளங்கும். தோள், வகுப்பு, மதங்கு, அம்மானை, காலம்,
சம்பிரதம், கார், தூது, தவம், மடக்கு, மறம், பாண், களி,
சித்து, இரங்கல், கைக்கிளை, ஊர், வண்டு,தழை, ஊசல்
முதலிய உறுப்புகளோடு பிற்காலத்தில் பிச்சியார்,
கொற்றியார்,இடைச்சியார், வலைச்சியார் முதலிய. உறுப்
புகளும் விரவி வருமாறு நூல் பாடப்படும். ஆனால், முதல்
கலம்பக நூலாகிய நந்திக் கலம்பகத்தில் புயவகுப்பு, தூது,
இரங்கல்,மறம், பாண், மடல், ஊசல், காலம், மடக்கு, வெறி
விலக்கு, சம்பிரதம், கையுறை, மதங்கியார் முதலான 13
உறுப்புகள்தாம் உள்ளன. பிற்காலங்களில் மேலும் பல
விதமான உறுப்புகள் சேர்ந்திருக்கலாம்.
கலம்பகத்தைக் கலப்பு + அகம் எனப் பிரித்துப் பலவகைக்
கருத்துக்களும் (அகம், புறம் என்ற பிரிவுகள்) பலவகைப்
பாக்களும் பாவினங்களும் கலந்து அந்தாதித் தொடையால்
பாட வழிவகுத்தனர். பெரும்பாணாற்றுப் படைஎன்னும்
சங்க நூலில் "பல்பூ மிடைந்த படலைக் கண்ணி" என்னும்
சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல பூக்களினால்
தொடுக்கப் பட்ட கதம்ப மாலையையே குறிக்கும். கதம்பகம்
என்ற சொல்லே கலம்பகம் என மருவியிருக்க வாய்ப்புண்டு.
இந்நூல் மூன்றாம் நந்திவர்மனின் தெள்ளாறு, கொற்றவாயில்
முற்றம், வெறியலூர், வெள்ளாறு போன்ற போர்க்கள நிகழ்வு
களை ஆங்காங்கே சுட்டிச் செல்வதோடு அகப்பொருள் சிந்த
னைகளையும் இடையிடையே இயம்புகிறது. சொல் நயமும்,
பொருள் நயமும், கற்பனை நயமும் கொண்டு விளங்குவ
தோடு சிறந்த நம்பகமான வரலாற்றையும் எடுத்து இயம்
புகிறது. அக்காலக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும்
காணப்படும் செய்திகள் இந்நூலின் பாடல்கள் கூறும்
செய்திகளோடு ஒத்துள்ளன. நந்திக் கலம்பகம் வளமான
இலக்கியம் மட்டுமன்று; நம்பகமான வரலாற்று நூலும்
ஆகும். இனி, இந்நூலிற் பயின்றுவரும் சில நயமான பாடல்
களைப் பார்ப்போம்.
"வாடை நோக வீசு மால மாரன் வாளி தூவுமா
லாட லோத மார்க்கு மாலே னாவி காக்க வல்லனோ?
வேடு லாவு மாலை சேதி ராசன் மல்லை நந்திதோள்
கூடி னால லர்வ ராது கொங்கு விம்மு கோதையே."
பொருள்: நந்திவர்மன் மீது ஒருதலையாய்க் காதல்
கொண்ட பெண்" வாடைக்காற்று வீசும் மாலை நேரத்
தில் மன்மதன் அம்பு எய்து துன்புறுத்துகின்றான்.
நந்தியின் தோளைக் கூடினால் பழிச்சொல் வாராது
என்று கூறுகின்றாள்."!
"பதிதொரு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி
பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி
வளநாடா
நிதிதரு கவிகையு நிலமகள் உரிமையு மிவையிவை
யுடைநந்தி
மதியிலி யரசன்நின் மலரடி பணிகிலர்; வானகம்
ஆள்வாரே."
நிதிதரு விருப்பமும் நிலமகள் உரிமையும் உடைய
நந்திவர்மன் மலரடியைப் பணிந்து திறை
செலுத்தத் தவறிய அரசர்கள் போர்க்களத்
தில்கொல்லப்பட்டு வானகத்தை யாள்வர்.
"வீர தீரநல் விறலவிர் கஞ்சுகன் வெறியலூர்ச்
செருவென்றோன்
ஆர்வ மாவுள நின்றவர் அன்றிமற் றவன்பெருங்
கடைநின்ற
சேர சோழருந் தென்னரும் வடபுலத் தரசருந்
திறைதந்த
வீர மாமதக் கரியிவை பரியிவை இரவலர்
கவர்வாரே."
வெறியலூர்ப் போரில்வென்றவனாகிய
நந்திவர்மன், தன் குறுநில மன்னர்கள் மட்டும்
அன்றித் தன் பகைவராகிய சேரர், சோழர், பாண்டியர்
மற்றும் வடபுலத்தை யரசாள்பவர்கள் எல்லோரும்
தன் வாசற் கதவருகில் நின்று கப்பமாகச் செலுத்திய
யானை, குதிரை போன்றவற்றைத் தன்னிடம் யாசகம்
வாங்க வந்தவர்கள் எடுத்துக் கொள்ள அனுமதித்தான்.
"ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்;
உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்;
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்;
அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்;
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்
காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்."
"பகைவர்களுக்குத் தெள்ளாற்றுப் போரில்
மரணத்தைப் பரிசளித்த நந்திவர்மன், மார்த்
தாண்டன், காடவர்க்கு முன்தோன்றியவன்
கையில் தவழும் வேலைப்பாடிக் காஞ்சி
நகரின் பெருமையையும் பாடி ஊஞ்சல்
ஆடுவோம்" என்று மங்ககையர் மகிழ்ந்து
கூறினர்.
"இந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம்
அந்தக் குமுதமே யல்லவோ?---நந்தி
தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி
யடங்கப்பூ பாலரா னார்."
இந்த உலகில் இரவலர் என்று சொன்னால் அந்த
அல்லிதான் அல்லவா? ஏனென்றால் அது தான்
இரவில் அலருகின்றது.(இரவு +அலர்= இரவலர்)
மற்றைப் பகைவர்கள் நந்திவர்மன் மீது கோவை
(அகப் பொருளில் ஒரு பிரிவு--துறை) பாடிப் புவி
யரசராக விளங்குகின்றனர்.
ஈட்டு புகழ்நந்தி பாணநீ யெங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும்---காட்டிலழும்
பேயென்றாள் அன்னை; பிறர்நரியென்
றார்தோழி
நாயென்றாள்; நீயென்றேன் நான்.
நந்திவர்மன் நாட்டில் பரத்தையிடம் சென்று வந்த தலைவன் ஒருவன் தலைவியிடம் பாணன் ஒருவனைத்
தூதாக அனுப்பினான். ஆனால் தலைவி
அந்தப்பாணனை வெறுத்தாள்.அன்றி
ரவில் பெண்ணின் வீட்டில் பாணன் பாடிய பாட்டைக் கேட்டு அப்
பெண்ணின் தாய் பேயழுகின்றதென்றாள்; பிறர்
நரி ஊளையிடுகின்றதென்றனர்; தோழி நாய்
குரைக்கின்றதென்றாள். அப்பெண்ணோ
பாணன்தான் குரல் எழுப்புகின்றான் எனச்
சொன்னாள்.
"செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமென் றாரோ தடவினார்--பைந்தமிழை
ஆய்கின்ற கோன்நந்தி ஆகந் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மெய்."
பைந்தமிழை ஆராய்ச்சி செய்து போற்றும்
நந்திவர்மன் மார்பைத் தழுவாமல் என் மேனி
தீப்பிழம்பைச் சாறுபிழிந்து சந்தனம் என்று
சொல்லித் தடவியது போல் வெந்து
எரிகின்றது. ஒருதலைக் காதல்கொண்ட பெண்
இவ்வாறு கூறினாள்.
"ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில்வெறுங்
கூடு வருகுதென்று கூறுங்கள்--நாடியே
நந்திச்சீ ராமனுடை நன்னகரில் நன்னுதலைச்
சந்திச்சீ ராமாகில் தான்."
"ஓடும் மேகங்களே! ஓடாத (விரைவாகச் செல்லாத)தேரில் உயிரற்ற என்
உடல்(கூடு) வருகின்றதென்று நந்திவர்மனின்
நன்னகராகிய காஞ்சிபுரத்தில் எனைப்பற்றியே எண்ணி
உருகும் எனைப்பிரிந்திருக்கும் காதலியைச் சந்தித்தீர்
என்றால் சொல்லுங்கள்." காதலியைப்
பிரிந்து சென்ற காதலன் ஊருக்குத் திரும்பும் போது மேகங்களைத் தூது
அனுப்பிச் சொன்னதாகப் பாடியது.
"மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டிற்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே."
ஒருதலைக் காதல் கொண்ட பெண் புலம்புகின்
றாள்:
இந்தப் பூமி உய்திபெற மழை உதவுவது போல
மக்களுக்கு வழங்கும் கரத்தையுடைய தமிழ்
மீது தணியாத பற்றுக் கொண்ட நந்திவர்மனின்
நல்ல நாட்டில் பெண்ணே இல்லாத ஊரில்
தான் மட்டுமே பெண் என்பது போல இந்த
வெண்ணிலா வேக வேகமாக ஏன் வந்தது?
ஒருதலைக் காதலர்க்கு வெண்ணிலவைக்
கண்டால் துயரம் கூடுவது இயல்பு தானே!
நந்திக் கலம்பகத்திலுள்ள பாடல்கள் அத்தனை
யும் தேனில் ஊறவைத்த பலாச்சுளை போலத்
தித்திக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
.
ReplyDelete.
ReplyDelete