Thursday, 17 May 2018

தமிழ் இலக்கியத்தில் கையறுநிலைக் காட்சிகள்

கையறுநிலை  என்பது  செயலற்ற  நிலையைக்  குறிப்பதாகும்.  மிக  நெருங்கிய  உறவினர்க்கோ
அறிந்தவர்க்கோ  உயிரிழப்போ  வேறு ஏதேனும்
இழப்போ  ஏற்படும்  பொழுது
என்ன  செய்வது  ஏது  செய்வது  என்று  திகைத்துக்
கைகளைப்  பிசைந்துகொண்டு  நிற்றல்
கையறுநிலை  என்பதாகும்.
சோகக்  காட்சி எனக்  கூறலாம்.  இவ்வகைக்  காட்சி
கள்  இலக்கியத்தில்  எத்தனை
யோ  உள்ளன.  அவற்றில்  சில
வற்றைப்  பற்றிப்  பார்ப்போம்:

புறநானூற்றில்  குடவாயிற்
கீரத்தனார் என்னும்  புலவர்
ஒல்லையூர்  கிழான்மகன்
பெருஞ்சாத்தன்  இறந்தபோது
"இளையோர்  சூடார்  வளை
       யோர்  கொய்யார்;
நல்யாழ்  மருப்பின்  மெல்ல
        வாங்கிப்
பாணன்  சூடான்; பாடினி
        அணியாள்;
ஆண்மை  தோன்ற  ஆடவர்க்
         கடந்த
வல்வேற்  சாத்தன்  மாய்ந்த
        பின்றை
முல்லையும்  பூத்தியோ?  
        ஒல்லையூர்  நாட்டே!"
பெருஞ்சாத்தன்  இறந்த  கார
ணத்தால்  இளையோர்  வளை
யணிந்த  பெண்டிர்  பாணர்
பாடினியர்  என  எவரும்  பூவைச்  சூடப்போவதில்லை;
முல்லைப்  பூவே!  ஒல்லையூரில்  ஏன்  பூத்தாய்?
என்று  பாடினார்.  பிரிவாற்றா
மை  காரணமாக  முல்லை
பேசாது  எனத்  தெரிந்தும்  மன
நெகிழ்ச்சியுடன்  பாடினார்.

அதே புறநானூற்றில்  வேறு  சில  பாடல்களைப்  பார்ப்போம்
"அற்றைத்  திங்கள்  அவ்வெ
         ண்ணிலவில்
எந்தையும்  உடையேம்; எம்
          குன்றும்  பிறர்கொளார்;
இற்றைத்  திங்கள்  இவ்வெண்
           ணிலவில்
வென்றெறி  முரசின்
             வேந்தரெம்
குன்றும்  கொண்டார்;  யாம்
              எந்தையும்  இலமே"
பாரி  இறந்ததையடுத்து  அவர்
பெண்மக்கள்  இருவரும்  மிக்க
சோகத்துடன்  பாடியது.
கடந்த  மாதம்  நிலவொளியில்
எங்கள்  தந்தை  உடனிருந்தார்;
எங்கள்  மலையும்  எம்வசம்
இருந்தது.  இந்த  மாதம்  நில
வொளியில்  தந்தையும்  இலர்;
எங்கள்  மலையும்  இலை.

பாரியின்  மிக  நெருங்கிய
நண்பரான  புலவர்  கபிலர்"
"பாரி  மாய்ந்தெனக்  கலங்கிக்
        கையற்று
நீர்வார்  கண்ணேம்  தொழுது
         நிற்பழிச்சிச்
சேறும்  வாழியோ  பெரும்
          பெயர்ப்  பறம்பே!
கோல்திரள்  முன்கைக்  குறுந்
           தொடி  மகளிர்
நாறிருங்  கூந்தற்  கிழவரைப்
            படர்ந்தே"
பாரி  மறைவு  அவர்  மக்களை
மட்டுமல்லாது  கபிலரையும்
வெகுவாகப்  பாதித்தது.  கைய
று  நெஞ்சினராய்  விழிகளில்
கண்ணீர்  மல்க,  பாரிமகளிர்
உடன்வரப்  பறம்பு  மலையை
நீங்கினார்.  இம்மகளிர்க்
கேற்ற  துணைவரைத்  தேடு
வதற்குப்  பெருமுயற்சி  செய்
தார்.  அவர்  முயற்சி  தோல்வி
யுற்றதால்  வடக்கிருந்து
உயிர்துறந்தார்.  பின்னர்
ஔவையார்  அம்மகளிர்க்கு
மணம்  செய்வித்ததாகத்
தனிப்பாடல்கள்  தெரிவிக்
கின்றன.

இனி  கம்பராமாயணத்தில்  சில  காட்சிகளைப்  பார்ப்போம்
இராமன்  தந்தைசொற்படி
ஆட்சியைத்  துறந்து  காட்டுக்
குக்  கிளம்பும்  பொழுது  மக்கள்,  விலங்குகள், செடி
கொடிகள்  போன்ற  எல்லா
உயிரினங்களும்  பெருந்துயர்
எய்தினர்.  கம்பர்  பாடிய
பாடல்களைப்  பார்ப்போம்:
"கிள்ளையொடு  பூவை
      கிளர்ந்தழுத;கிளர்மாடத்
துள்ளுறையும்  பூசை  யழுத;
      உருவறியாப்
பிள்ளை  யழுத;  பெரியோரை
      என்சொல்ல?
வள்ளல்வனம்  புகுவானென்
      றுரைத்த  மாற்றத்தால்.

ஆவும்  அழுத;  அதன்கன்
      றழுத;  அன்றலர்ந்த
பூவும்  அழுத; புனற்புள்  ளழுத;
       கள்ளொழுகும்
காவும்  அழுத;  களிறழுத;
       கால்வயப்போர்
மாவும்  அழுத;  அழுதவம்
       மன்னனை  மானவே.

இராமன்  தன்  தாயாரான
கோசலையிடம்  விடைபெறச்
சென்ற. பொழுது  கம்பர்  கவிக்
கூற்றாகப்  பாடியது:
"குழைக்கின்ற  கவரி  யின்றிக்
கொற்றவெண் குடையுமின்றி
இழைக்கின்றவிதிமுன்செல்ல
தருமம்பின்  இரங்கி  யேக
மழைக்குன்றம்அனையான்மௌலி
கவித்தனன்வருமென்றென்று
தழைக்கின்றஉள்ளத்தன்னாள்
முன்னொருதமியன்சென்றார்.

இவை  ஆரண்யகாண்டத்தில்
நிகழ்ந்தவை.  ஏனைய  பிற
காண்டங்களிலும்  பலப்பல
பாடல்கள்  உள்ளன.  இருப்பி
னும்  யுத்த  காண்டத்தில்
 உள்ள  பாடல்களைப்  பற்றி
ஆராய்வோம்.

கும்பகர்ணன்  செருக்களத்தில்
இறந்தான்  என்ற செய்தி
யறிந்து  இராவணன்  புலம்பி
அழுதான்:
"தம்பியோ  வானவர்ஆம்
    தாமரையின்காடுழக்கும்
தும்பியோ  நான்முகத்தோன்
   சேய்மதலைதோன்றலோ
நம்பியோ  இந்திரனை
   நாமப்  பொறிதுடைத்த
எம்பியோ  யானுன்னை
   இவ்வுரையும்  கேட்டேனே!

என் தம்பியோ?  பிரம்மனின்
பேரனோ?  ஆடவரிற்  சிறந்த
வனோ?  இந்திரனை  அவன்
அஞ்சுமாறு  போரிட்டு  வென்
றவனோ?  என்பின்  பிறந்தும்
எனக்கு  முந்தி இறந்த இந்தச்
செய்தியைக்  கேட்டேனே!

இந்திரஜித்தன்  ஏவிய  பிரம்
மாஸ்திரத்தால்  இராமனைத்
தவிர  ஏனைய  இலக்குவன்,
சுக்ரீவன்,அங்கதன்  போன்ற
வீரர்கள்  மரணமடைந்தனர்.
இதனைக்  கண்டு  இராமன்
மயக்கமுற்றான்.  இந்த  நிகழ்
வைச்  சீதைக்குக்  காட்ட எண்ணி  இராவணன்  புஷ்பக
விமானத்தில்  சீதையை  அழைத்துவரச்  செய்தான்.
சீதை  இராமன்  இறந்ததாக
எண்ணி  அழுது  புலம்பினாள்.

"அடித்தாள்முலைமேல்வயிறு
  அலைத்தாள்;அழுதாள்;
  தொழுதாள்;அனல்வீழ்ந்த
கொடித்தான்  என்ன  மெய்
சுருண்டாள்;கொதித்தாள்;
பதைத்தாள்;குலைவுற்றாள்;
துடித்தாள்;மின்போல்  உயிர்
காப்பச்  சோர்ந்தாள்;
சுழன்றாள்;துள்ளினாள்;
குடித்தாள்;துயரை; உயிரோடும்  குழைந்தாள்;
உழைத்தாள்;குயிலன்னாள்.

இந்தக்  காட்சியைக்  கண்ட
வானவரும்  தெய்வங்களும்
மனம்  பதறித் துடித்தனர்.
பின்னர்  அனுமன்  சஞ்சீவி
மலையைக்  கொணர்ந்து
அனைவரையும்  காப்பாற்றி
னான்.

இராமர்,  இலக்குவர்  மற்றும்
அனுமன் ஆகியோரை எப்படி
வீரத்தின்  விளைநிலமாகக்
கருதுகின்றோமோ  அதைப்
போலவே  எதிர்அணியில்
இராவணன்,  கும்பகர்ணன்
மற்றும்  இந்திரஜித்தன் ஆகியோரைக் கருதலாம்.  ஒரே  ஒரு வேறுபாடு  என்னவென்றால்  இராவணன்
அணியில்  அறக்கூறுகள்  சரி
யாகப்  பின்பற்றப்பட்டில.

இந்திரஜித்தன்  வெற்றிபெறப்
பெரும்  முயற்சி  மேற்கொண்ட
போதிலும்  அவன்  தோல்வி
யடைந்தான்.  போரில்  கொல்லப்  பட்டான்.  இந்தச்
செய்தியைக்  கேள்வியுற்று
இராவணன்  எல்லையிலாத்
துன்பமடைந்தான்.  அவன்
மனைவி  மண்டோதரி  மகன்
மறைவுச்  செய்தி கேட்டு  வந்து
அவன்  உடல்மேல்  விழுந்து
அழுது  புலம்புகின்றாள்.
"அஞ்சினேன்  அஞ்சினேன்அச்
  சீதையென் றமிழ்தால்செய்த
நஞ்சினால்  இலங்கைவேந்தர்
நாளையித்  தகையர் அன்றோ

இன்றைக்கு  என்மகனுக்கு
நேர்ந்த  கதிதான்  நாளை என்
கணவனுக்கும்  நேரப்போகி
றது. அதற்குக்  காரணம்  சீதை
யென்ற  அமிர்தத்தால் செய்யப்பட்ட நஞ்சேயாகும்.
என்று  அழுது அரற்றினாள்.

இறுதியாக  இராவணன்
கொல்லப்பட்டான். மண்டோதரி கணவன் உடல்மேல்  விழுந்து  கதறிக்
கதறி அழுது புலம்பித் தவித்தாள். இராவணன் உடல்
முழுவதும்  இராமன் விடுத்த
அம்பு  துளைத்ததனால் உரு
வான  காயங்கள்.  கம்பர் பெரு
மான்  கவிக்கூற்றாகப் பல
பாடல்கள்  பாடினார். அவை
பின்வருமாறு:
"வெம்மடங்கல் வெகுண்ட
னைய சினமடங்கமனமடங்க
வினயம்  வீயத்
தெவ்வடங்கு பொருதடக்கைச்
செயலடங்க மயலடங்க
ஆற்றல் தேயத்
தம்மடங்கு முனிவரையும்
தலையடங்கநிலையடங்கச்
சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தனவம்
முறைதுறந்தான்உயிர்துறந்த
முகங்கள்  அம்மா!

வெள்ளெருக்கஞ்சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி
மேலும்  கீழும்
எள்ளிருக்கும்  இடமின்றி
உயிரிருக்கும் இடம்நாடி
இழைத்த வாறோ?
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்
சானகியை மனச்சிறையில்
கரந்த காதல்
உள்ளிருக்கும் எனநாடி  உடல்
புகுந்து தடவியதோ
ஒருவன் வாளி?

இராவணனின் உடல்மேல்
விழுந்து அழுது  புலம்பிய
மண்டோதரி உடனடியாக
உயிர்துறந்தாள்.

இராமபிரான்  விபீடணனோடு
செருக்களம் வந்து பார்வையிடும்  பொழுதில்
அண்ணனின்  உயிரற்ற  உட
லைப்  பார்த்து  விபீடணன்
அழுது  புலம்பினான்.
"உண்ணாதே உயிர் உண்ணா
தொருநஞ்சு  சனகியெனும்
பெருநஞ்  சுன்னைக்
கண்ணாலே நோக்கவே
போக்கியதே உயிர் நீயும்
களப்பட்  டாயே;
எண்ணாதேன்எண்ணியசொல் இன்றினித்தான் எண்ணு
தியோ  எண்ணில்ஆற்றல்
அண்ணாவோ!அண்ணாவோ!
அசுரர்கள்தம் பிரளயமே!
அமரர்  கூற்றே!
சானகி  என்னும்  பெருநஞ்சு
உன்னைக்  கண்ணாலே
நோக்கியே  உன்உயிர்  போக்
கியது.  நீ  செருக்களத்தில்
பலியானாய். அசுரர்க்குப்  பிர
ளயம் போன்று விளங்கினாய்.தேவர்கட்கு
யமனாகத் திகழ்ந்தாய். அண்
ணாவோ! அண்ணாவோ!
என்று அரற்றினான். மேலும்
"போர்மகளைக் கலைமகளைப்
புகழ்மகளைத் தழுவியகை
பொறாமை  கூர
சீர்மகளைத் திருமகளைத்
தேவர்க்கும் தெரிவரிய
தெய்வக்  கற்பின்
பேர்மகளைத் தழுவுவான்
உயிர்கொடுத்துப்பழிகொண்ட
பித்தா! உன்னைப்
பார்மகளைத் தழுவினையோ
திசையானை பணையிறுத்த
பணைத்த  மார்பால்.
என்று உள்ளம் நொந்து பாடி
அண்ணனை நினைத்து அழு
தான்.  பின்னர்  இராமன் கேட்
டுக்  கொண்டபடி  அண்ணனுக்
குரிய  ஈமச் சடங்குகளைச்
செய்தான். பின்னர்  இராமன்
உத்தரவுப்படி இலஙகைக்கு
அரசனாக முடிசூடிக் கொண்டான்.

பிறன்மனையை  நயந்த குற்
றத்திற்காக
"முக்கோடி  வாழ்நாளும்
முயன்றுடையபெருந்தவமும்
முதல்வன்  முன்னாள்
எக்கோடி எவராலும்  வெலப்
படாய்  எனக்கொடுத்த வரமும்"
பெற்ற இராவணன் அருமை
பெருமை இழந்து இறந்தது
மிகமிகக்  கொடுமையானது.

No comments:

Post a Comment