Thursday, 24 May 2018

சிலப்பதிகாரம் ஒரு முத்தமிழ்க்காவியம்

சிலப்பதிகாரம்  வெறும்  துன்பவியல்  காவியம்
மட்டும்  அன்று.  துன்பக்  காட்சிகளும்  அவைகட்
கிணையாக  இலக்கியச்  சுவையும்,  இசையின்
பமும்  நாடகக்  கூறுகளும்  கலந்து  உருவாக்கப்
பட்ட  முத்தமிழ்க்  காவியம்.

சிலப்பதிகாரம்  துன்பக்  காட்சிகள்  நிறைந்தது
என்பதில்  எள்ளளவும்  ஐயமில்லை.  ஏனெனில்
காவியத்தலைவன்  கோவலன்  கொலையுண்
டான்.  தலைவி கண்ணகி  சில  நாட்களுக்குப்
பிறகு  அவனைச்சேர்ந்து  அவனுடன்  வானுலகம்
புகுகின்றாள்.  ஏனைய  கதை மாந்தர்களான
பாண்டியன்  நெடுஞ்செழியன், அவன்மனைவி
கோப்பெருந்தேவி, கோவலனின்  தாய்,  கண்ணகியின்
தாய், அடைக்கலம்  கொடுத்த  இடைக்குலப்  பெண்
மாதரி  என  அனைவரும்  இறந்தனர்.  கோவலனின்
தந்தை  மாசாத்துவான்  புத்த  விகாரத்தில்  சேர்ந்து
விட்டார்.  அதற்குமுன்  தான  தருமங்கள்  செய்து
சொத்துக்கள்  அனைத்தையும்  கரைத்துவிட்டார்.
கண்ணகியின்  தந்தை  மாநாய்கன்  ஆசீவகத்தில்
இணைந்து துறவியானார்.  மாதவியும்துறவு
பூண்டாள்.  கோவலன் மாதவி  இவர்களின்  மகள்
மணிமேகலையும்  புத்த சமயத்தில்  இணைந்து
துறவியானாள்.  கண்ணகி மதுரையை விட்டு
நீங்குமுன்  அதனை எரியூட்டினாள்.  பாண்டியன்
நெடுஞ்செழியனுக்குப்பின்  அரியணை  ஏறிய
கொற்கை  இளவரசன்  வெற்றிவேற்செழியன்
கண்ணகி  தேவியின்  சினத்தைத்தணிக்கும்
பொருட்டுப்  பொற்கொல்லர்  ஆயிரவரை  உயிர்ப்
பலி கொடுத்ததாக ச்  சிலப்பதிகாரம்  பேசுகிறது.
கவுந்தியடிகள்  உண்ணாநோன்பு  மேற்கொண்டு
உயிர்  துறந்தார். எத்தனையோ  சோக  காட்சிகள்.
ஆனால்  இத்தகைய  துன்பவியல்  காவியத்தை
இளங்கோவடிகள்  துணிவுடன்  கையிலெடுத்து
வரிப்பாட்டுகள்,  குரவை  முதலான  கூத்துகள்,
நாட்டியம்  முதலானவற்றை  இடையிடையே
மிளிரும்  வண்ணம்  இணைத்துப்  பாட்டுடைச்
செய்யுளாக  இயற்றினார்.  அதனால்  சுவை  குன்றாத
முத்தமிழ்க்  காவியமாக த்  திகழ்கின்றது.

இனி  சிலப்பதிகாரத்தில்  உள்ள  பாடல்கள்,  வரிப்
பாடல்கள்,  கூத்துப்  பாடல்கள்  முதலானவற்றில்
சிலவற்றைப்  பார்ப்போம்.:
"மாசறு  பொன்னே!  வலம்புரி  முத்தே!
காசறு  விரையே!  கரும்பே!  தேனே!
அரும்பெறல்  பாவாய்! ஆருயிர்  மருந்தே!
பெருங்குடி  வணிகன்  பெருமட  மகளே!
மலையிடைப்  பிறவா  மணியே  என்கோ?
அலையிடைப்  பிறவா  அமிழ்தே என்கோ?
யாழிடைப்  பிறவா  இசையே  என்கோ?
தாழிருங்  கூந்தல்  தையால்!  நின்னை."
இந்த  இயற்றமிழ்ப்  பாட்டை  அறியாதார்உளரோ?
மாதவி நடனம்  ஆடியதை  விவரிக்கும்  அடிகள்
"எண்ணும்  எழுத்தும்  இயலைந்தும்  பண்நான்கும்
பண்ணின்ற  கூத்துப்  பதினொன்றும்--மண்ணின்மேல்
போக்கினாள்  பூம்புகார்ப்  பொற்றொடி மாதவிதன்
வாக்கினா ல்ஆடரங்கில்  வந்து".
என்று  நடனக்கலை  வல்லுநர்  போல  மிகத்  தெளி
வாகவும்  சிறு  பிழை கூட நேராமலும்  பாடியுள்ளார்.

அடிகள்  சேரநாட்டு  இளவரசர்.  நிமித்திகன்  ஒருவன்
தன்  அண்ணன்  செங்குட்டுவன்  பட்டத்துக்கு  வரமாட்
டார்  என்றும்  தனக்கே  அவ்வாய்ப்பு  கிட்டும்என்றும்
கூறியதால்  அண்ணனின்  அச்சத்தைப்போக்கும்
விதமாக  சகலத்தையும்  துறந்து  குணவாயிற்  கோட்
டத்தில்  வாழ்ந்துவந்தார்.  அவர்  சமணத்துறவியானா
லும்சிறிதும்நடுவுநிலை பிறழாமல்எல்லாத்தெய்வங்
களையும்  சரிசமமாகப்போற்றிப்பாடியுள்ளார்.  இவ்
வாறே  இக் காவிய நிகழ்வுகள்சேர,  சோழ. மற்றும்
பாண்டிய  நாடுகளில்நடைபெற்றபொழுதும்  மூன்று
நாடுகளையும்மூன்று  வேந்தர்களையும்சரிசமமாகப்
போற்றிப்  பாடியுள்ளார்.

இனி  கானல்வரிப்  பாடல்களைப்பார்ப்போம்:
ஒரு  நாள்  மாலை  நேரத்தில்புகார்நகரக்கடற்
கரையில்  கோவலனும்  மாதவியும்  ஏவலர்  புடை
சூழ  அமர்ந்துள்ளனர்.  மாதவி யாழைச்சிறப்பாக
மீட்டிப் பின்னர்கோவலனை  மீட்டுமாறு கோருகிறாள்.
"திங்கள்  மாலை  வெண்குடையான்
      சென்னி செங்கோல்  அதுவோச்சிக்
கங்கை தன்னைப்புணர்ந்தாலும்
புலவாய்வாழி காவேரி!
கங்கை  தன்னைப். புணர்ந்தாலும்
        புலவா  தொழிதல்கயற்கண்ணாய்!
மங்கை  மாதர்  பெருங்கற்பென்
        றறிந்தேன்   வாழி!  காவேரி!
சோழ  மன்னன்  படையெடுத்துக்   கங்கைக்  கரைவரை
சென்று  அப்பகுதியைத்  தன்  ஆட்சிக்கீழ்  கொண்டு
வந்தான்.  அப்படி. கங்கையைச்  சேர்ந்தாலும்  காவிரி
மீதுள்ள   உரிமை   நீங்காது.(  கங்கையும் காவிரியும்
பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டன.)  இதுவே   கற்
புடைப்  பெண்டிரின்  குணமாகும்.  இதைப்புரிய
வைத்த காவிரியே நீ வாழ்க.  மேலும்ஒரு பாடல்:
" எறிவளைகள்  ஆர்ப்ப இருமருங்கும்   ஓடும்
   கறைகெழுவேல்  கண்ணொடு  கடும்கூற்றம்  காணீர்
   கடும்கூற்றம்காணீர்  கடல்வாழ்நர் சீறூர்க்கே.
   மடங்கெழு மென்சாயல்  மகள்  ஆயதுவே!"
வளைகளின்ஒலிகேட்டுப்  பயந்து இரண்டு  பக்கமும்
அலைபாயும்  குருதிக்கறை படிந்த வேல்போலும்
இவள்இருகண்களும்  கொல்லும்எமனோ? பாரீர்.
கடல்வளம் நிறைந்த இந்தச் சிற்றூரிலே  வாழும்
அழகிய  இவள்  பெண்ணா?  இல்லை;  கொல்லும்
எமனென்று  அறிக.  மற்றும்ஒருஅழகிய பாடல்:
"திரைவிரி  தருதுறையே!  திருமணல்விரிஇடமே!
விரைவிரி  நறுமலரே  மிடைதரு  பொழிலிடமே
மருவிரி  புரிகுழலே  மதிபுரை திருமுகமே
இருகயல்  இணைவிழியே  எனையிடர்  செய்தவையே."
மணம்நிறைந்து  வீசும்சுருண்ட  கருங்கூந்தலும்
நிலாப்போன்ற அழகுமுகமும்,  இருமீன்போன்ற
கருவிழிகளுமே  எனக்குத்துயரம்தருகின்றன.

இவ்வாறுகோவலன்பாடக்கேட்ட மாதவி இவர்
வேறு ஒரு கருத்துடையர்என்றுஎண்ணித்தானும்
வேறு  ஒரு கருத்துடையவள்போலக்காட்டிக்கொள்ள
எண்ணிப்பின்வரும்  பாடல்களைப்பாடினாள்:
"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
    மணிப்பூ ஆடை  அதுபோர்த்துக்
கருங்க  யற்கண்  விழித்தொல்கி
    நடந்தாய் .வாழி காவேரி!
கருங்கயற்கண்விழித்தொல்கி
   நடந்தவெல்லாம்நின்கணவன்
திருந்து செங்கோல்  வளையாமை
   அறிந்தேன். வாழி காவேரி!'
காவிரியே!  நீ  இப்படி விழித்த விழி திறந்தபடி
அசைந்து  ஆடிப்  பாய்வதற்குச்  சோழமன்னனின்
செங்கோல்ஆட்சிதான்காரணம்.

மாதவி பாடிய  ஏட்டிக்குப்  போட்டி  பாட்டால்கோவலன்
மாதவி மேல்சந்தேகப்பட்டு அவளைப்பிரிந்து
கண்ணகியை  வந்தடைந்தான்.  இருவரும்  கலந்து
ஆலோசித்து   மதுரைக்குச்  செல்லலாம்என்றும்
அங்கே கண்ணகியின்காற்சிலம்பை விற்றுத்
தொழில்புரியலாம்  என்றும்  முடிவெடுத்தனர்.
மதுரைக்குச்  சென்ற அவர்கள்  மாதரி என்னும்
இடையர்  குலப்பெண் வீட்டில்தங்கினர்.  சிலம்பு
விற்கச்  சென்ற  கோவலன்  கொலையுண்டான்.
 ஆயர்பாடியில்சில தீநிமித்தங்கள் தோன்றின.
மாதரி உடனடியாக ஆய்ச்சியர்  குரவைக்கூத்தை
நடத்த  முடிவெடுத்தாள்.  பாடல்கள்  பின்வருமாறு:
" காரி  கதன்அஞ்சான்  பாய்ந்தானைக்காமுறுமிவ்
வேரி மலர்க்  கோதையாள்சுட்டு."
காளையை அடக்கியவனுக்கே  காரிகை.
நெற்றிச்  செகிலை  அடர்த்தாற்குரியவிப்
பொற்றொடி  மாதரால்  தோள்.
மல்லல்மழவிடை  ஊர்ந்தாற்குரியளிம்
முல்லையம்பூங்குழல்தான்.
நுண்பொறி  வெள்ளை  அடர்த்தாற்கே  ஆகுமிப்
பெண்கொடி மாதர்தன்தோள்.
பின்னர்  குரவை  ஆடத்தொடங்கினர்.  கூத்த
நூலில்  கூறியுள்ள  விதிமுறை  தவறாது
ஆடினர்.பாடவும் தொடங்கினர்:
"கன்று  குணிலாக்கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம்ஆனுள்வருமேல்  அவன்வாயில்
கொன்றையம்  தீங்குழல்  கேளாமோ தோழீ!

பாம்பு  கயிறாக்  கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம்  ஆனுள் வருமேல்அவன்வாயில்
ஆம்பலம்தீங்குழல்  கேளாமோ தோழீ!

"மடந்தாழும்  நெஞ்சத்துக்  கஞ்சனார்  வஞ்சம்
நடந்தானை  நூற்றுவர்பால்  நாற்றிசையும்  போற்றப்
படர்ந்தா  ரணம்முழங்கப்  பஞ்சவர்க்குத்  தூது
நடந்தானை  ஏத்தாத  நாவென்ன  நாவே
நாராய  ணாவென்னா  நாவென்ன நாவே."
மாமனாகிய  கம்சன்  செய்த  சூழ்ச்சிகளை
எல்லாம்வென்றவனை;  பாண்டவர்க்காக
கௌரவர்களிடம்தூது சென்றவனை
வாழ்த்தாத நாவும்  ஒரு  நாவா?  நாராயணா
என்று  போற்றிப்  பாடாத நாவும்ஒரு நாவா?

கண்ணகி  கணவன்  கொலைக்கு  நீதி  கேட்ப
தற்காகப்  பாண்டியன்  அரண்மனைக்கு  வந்து
வாதாடும்  காட்சியில்  நாடக நுட்பங்களை
அமைத்துக்  காவியத்தை  இயற்றியுள்ளார்.

"நீர்வார்  கண்ணை  எம்முன் வந்தோய்
யாரை  யோநீ  மடக்கொடி  யோய்என"
பாண்டியன்  கேட்டதும்
"தேரா  மன்னா  செப்புவ  துடையேன்;
................................................................
பெரும்பெயர்ப்   புகாரென்  பதியே; அவ்வூர்
ஏசாச்  சிறப்பின்  இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து  வாணிகன்  மகனை  ஆகி
வாழ்தல்  வேண்டி  ஊழ்வினை  துரப்பச்
சூழ்கழல்  மன்னா  நின்னகர்ப்  புகுந்தீங்
கென்காற்  சிலம்பு  பகர்தல் வேண்டி  நின்பால்
கொலைக்களப்  பட்ட  கோவலன்  மனைவி
கண்ணகி  என்பதென்  பெயரே"
என்று முழங்கினாள்.விவாதம்  முடிந்த  பிறகு
நெடுஞ்செழியன்  தன்  தவற்றை  உணர்ந்து
உயிரை  விடுத்தான்.  அவன்  மனைவி
கோப்பெருந்தேவியும்  உடனே  உயிர்நீத்தாள்.
"காவி  உகுநீரும் கையில்  தனிச்சிலம்பும்
ஆவி  குடிபோன  அவ்வடிவும் -பாவியேன்
காடெல்லாம்  சூழ்ந்த  கருங்குழலும்  கண்டஞ்சிக்
கூடலான்கூடாயி  னான்."
"சிவந்த  விழிகளிலிருந்து  வழியும்  கண்ணீரும்
கையிலே  ஒற்றைச்சிலம்பும்  நடைப்பிணம்
போன்ற  தோற்றமும்  விரிந்த  கருங்குழலும்
கண்ணில்  பட்ட. உடனேயே  ஏதோ  தவறு
நடந்துள்ளது  என்று  அஞ்சிப்  பாண்டியன்  பிணமானான்
என்று  அடிகள்  நவின்றார்.

சிலப்பதிகாரத்தில்  எந்தப்  பாட்டைச்  சொல்வது?
எந்தப்  பாட்டை  விடுவது?  கானல்வரி,  வேட்டுவ
வரி,  ஆய்ச்சியர்  குரவை  போன்ற  இசைப்
பாடலாகட்டும்,  இயற்றமிழ்ப்  பாடலாகட்டும்,
நாடக  அமைப்பாகட்டும்  எல்லாமே  மிக்க
எழில்நயத்தோடு  இயற்றப்பட்டவை.  நெஞ்சை
அள்ளும்  சிலப்பதிகாரம்  என்னும்  கூற்று
உண்மை;  வெறும்  புகழ்ச்சி  அன்று.








.




2 comments:

  1. நெஞ்சை அள்ளும் காவியம் சிலப்பதிகாரம்

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு

    ReplyDelete