மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
என்னும் தமிழறிஞர் பத்தொன்ப
தாம் நூற்றாண்டில் வாழ்ந்து
வந்தார். இறைவன் அவர்க்கு
அநீதி இழைத்துவிட்டான்.
அவர்க்கு மூன்று வயதில் வைசூரி
நோய் ஏற்பட்டது. பிழைத்தாலும் பார்
வையை இழந்தார். ஆயினும் அவர்
பெற்றோர் தமிழ்க் கல்வி கற்க ஏற்பாடு
செய்தனர். அவர் கற்றத் தேர்ந்துவிட்டார்.
மேலும் ஏக சந்தக் கிராகியம் என்னும்
திறமை உடையவராய்விளங்கினார். நம் புலவர் ஒருமுறை கேட்டதை அப்படியே
பிழையில்லாமல் திரும்பச் சொல்
வதில் தேர்ந்தவர்.
ஒருமுறை இராமநாதபுரம்
சேதுபதி அவர்களைப் பார்த்து உரையாடிவிட்டு வர
லாம் என்ற எண்ணத்தில்
அங்குச் சென்றிருந்தார். அவையில் புலவர்கள் குழுமி
யிருந்தனர். புலவர் ஒருவர்
தன் நூலை அரங்கேற்றிப்
பரிசில் பெற வந்திருந்தார்.
அப்புலவர் நம் கவிச்சிங்கத்
தைப் பார்த்துவிட்டு "இது
என்ன அமங்கலமாகப் பார்
வையற்றவர் அவையில் உள்
ளாரே?" என்று எண்ணியவர்
சேதுபதியவர்களை நோக்கி
"அவை அமங்கலமாக உள்ளதே" என்று குறிப்பிட்டார்
அவர் மறைமுகமாகச் சொன்
னதைச் சேதுபதி புரிந்து
கொள்ளவில்லை. "அவை
மங்கலமாகத்தான் உள்ளது;
நூலைப்படியுங்கள்" என்றார்.
வேறுவழியின்றிப் புலவர்
நூலைப் படித்து முடித்தார்.
உடனே நம்கவிச்சிங்கம் எழுந்
து நின்று"இது எனது நூல்;
இந்தப் புலவர் எப்படியோ
நகல்எடுத்துத் தனது நூல்
என்கின்றார்" என்றுரைத்தார்
புதுப்புலவர்க்கு உடலெல்லாம்
நடுங்கியது."எனது நூலைத்
தனது நூல் என்கின்றாரே;
சேதுபதி நம்பிவிட்டால் தண்
டனை கிடைக்கும்" என்று
பயந்து நடுங்கினார். பிறகு
சமாளித்துக் கொண்டு" இது
என் நூல்தான். சத்தியம்" என்
று நாத்தழுதழுக்கச் சொன்
னார்.. சேதுபதி நம் கவிச்
சிங்கத்தைப் பார்த்து"இது என்ன குழப்பம்" என வினவ
நம் கவிச்சிங்கம் உடனே நூல் முழுவதையும் சொல்லி
அதற்குப் பொருளும் உரைத்
தார். தடாலடியாகப் புதுப்
புலவர் கவிச்சிங்கம் காலில்
விழுந்து"ஐயா! தாங்கள் இருப்பது அமங்கலம் என்று
கூறியதற்கு மன்னியுங்கள்;
என்னைச் சோதிக்க வேண்டா
என்று கெஞ்சினார். உடனே
நம் கவிச்சிங்கம் தனது நினைவாற்றல் திறமையைப்
பற்றி எடுத்துரைத்துப் புதுப்
புலவர் தாம் அவையில் இருப்
பதை அமங்கலமாக எண்ணி
யதற்குப் பாடம் புகட்ட விரும்பி
இந்த நாடகத்தை நடத்தியதா
கத் தெரிவித்தார். புதுப்புலவ
ர் நிம்மதிப் பெருமூச்சு விட்
டார். சேதுபதி அவர்க்குப் பரிசு
கொடுத்து அனுப்பினார். விழித்திறன் குறைந்தவர்கள்
அட்டாவதானி,தசாவதானி,
சதாவதானி ஆவதற்கு மிக
கடுமையான பயிற்சி மேற்
கொள்வார்கள். அதாவது, ஒரே நேரத்தில் எட்டு நபர்கள்,
பத்து நபர்கள், நூறு நபர்கள்
வினவும் வினாக்களைக் காதி
ல் வாங்கி முறையாகப் பதில்
அளிப்பார்கள். கவனக கலை
என்று அழைப்பார்கள்.
காகிதம், எழுதுகோல்இல்லாத
காலத்தில் நினைவாற்றல்
இன்றியமையாததாக கருதப்
பட்டது். பழங்காலத்தில் அக
ராதி இல்லை. நிகண்டு தான்
பழக்கத்தில் இருந்த்து. அதை
மனனம் செய்து நினைவில்
வைத்திருப்பார்கள். எதையும்
நினைவில் இருத்திக்கொள்ள
பாடலாகப் பாடி வைத்திருந்
தார்கள்.பாடல்கள் எதுகை,
மோனை,ஓசைநயம்பொருந்தி
யிருப்பதால் மனனம் செய்
வதும் நினைவில் இருத்துவ
தும் எளிதாகும். சிலவற்றை
இங்கே பார்ப்போம்.
பதினாறும் பெற்றுப் பெரு
வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவதை அறிவோம்.
அவை யாவை?
"துதிவாணி வீரம் விசயம்சந்
தானம் துணிவுதனம்
அதிதானி யம்சவு பாக்கியம்
போகம் அறிவழகு
புதிதாம் பெருமை யறம்குலம்
நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய்
மதுரைப் பராபரனே!.
பசிவந்திடப் பத்தும் பறந்து
போம் என்னும் முதுமொழி
கேட்டிருப்போம். பத்து யாவை?
மானம் குலம்கல்வி வண்மை
அறிவுடைமை
தானம் தவம்முயற்சி தாளாண்
மை__தேனின்
கசிவந்த சொல்லியர்மேற்
காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.
சங்க நூல்களான பத்துப்
பாட்டும்,எட்டுத் தொகையும்
எவை எவை?
பத்துப் பாட்டு:
முருகு பொருநாறு பாணிரண்
டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி
மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்
குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
1.திருமுருகாற்றுப்படை
2.பெரும்பாணாற்றுப்படை
3.சிறுபாணாற்றுப்படை
4.முல்லைப்பாட்டு
5.மதுரைக்காஞ்சி
6.நெடுநல்வாடை
7.குறிஞ்சிப்பாட்டு
8.பட.டினப்பாலை
9.மலைபடுகடாம்
10.பொருநர்ஆற்றுப்படை
எட்டுத்தொகை:
நற்றிணைநல்லகுறுந்தொகை
ஐங்குறுநூ(று)
ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு
பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ
டகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை.
1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.பதிற்றுப்பத்து
5.பரிபாடல்
6.கலித்தொகை
7.அகநானூறு
8.பறநானூறு
பத்துப்பாட்டும் எட்டுத்தொகை
யும் மேற்கணக்கு வகையைச்
சேர்ந்தவை. நாலடிக்கு மேல்
வரும் பாடல்கள் மேற்கணக்கு
என்னும் பிரிவில் சேர்க்கப்
பட்டன. இரண்டு அடி முதல்
நான்கு அடி வரை உள்ள பாடல்கள் கீழ்க்கணக்கு வகை
யில் சேர்க்கப்பட்டன. கீழ்க்
கணக்கு நூல்களும் பதினெட்
டாகும். அவை யாவை?
நாலடி நான்மணி நானாற்ப(து
ஐந்திணைமுப்
பால்கடுகம்கோவைபழமொழி
மாமூலம்
இன்னிலைகாஞ்சியுடன்ஏலா
தி என்பவை
கைந்நிலையுமாங்கீழ்க்கணக்கு.
1நாலடியார்2நான்மணிக்கடி
கை3இன்னாநாற்பது4இனிய
வை நாற்பது5கார்நாற்பது
6களவழி நாற்பது7ஐந்திணை
ஐம்பது8ஐந்திணை எழுபது
9திணைமாலை நூற்றைம்பது
10திருக்குறள்11திரிகடுகம்
12ஆசாரக்கோவை13பழமொழி நானூறு14சிறுபஞ்சமூலம்
15இன்னிலை16முதுமொழிக்
காஞ்சி17ஏலாதி18கைந்நிலை
சேர,சோழ,பாண்டிய மற்றும்
தொண்டை(பல்லவ)நாடுகளுக் குரிய சிறப்புக்கள் யாவை?
வேழ முடைத்து மலைநாடு
மேதக்க
சோழவள நாடு சோறுடைத்து
பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து
தெண்ணீர்வயல்தொண்டை
நன்னாடு சான்றோர்
உடைத்து.
சேரநாட்டில் யானைகளும்,
பாண்டிய நாட்டில் முத்துக்
களும்,சோழ நாட்டில் நெல்லும்
சிறந்து விளங்குபவை. பல்லவ
நாட்டில் (தொண்டை நாடு)
சான்றோர் சிறந்து விளங்கி
னர்.
இவற்றைப் போல எத்தனை
யோ பாடல்கள் உள்ளன. மனப்பாடம் செய்வதும் நினை
வில் இருத்திக்கொள்வதும்
இன்றியமையாதவை எனக்
கருதப்பட்டன. எனவேதான்
இச்செய்திகள் எல்லாம் பாடல்
களாக இயற்றப்பட்டன. மொழி
யியல் அறிஞர்கள் சொற்கள்
பிறந்து வெகுகாலம் கழிந்த
பின்னரே வரிவடிவம்(எழுத்து)
கண்டுபிடிக்கப்பட்டதாக தெரி
விக்கின்றனர். தொடக்க கால
த்தில் இலக்கியங்கள் மக்கள்
நினைவில் இருத்தப்பட்டுப்
பிற்பாடு வரிவடிவில் எழுதப்
பட்டன. ஆகவேநினைவுத்
திறன் வலியுறுத்தப்பட்டது.
.
என்னும் தமிழறிஞர் பத்தொன்ப
தாம் நூற்றாண்டில் வாழ்ந்து
வந்தார். இறைவன் அவர்க்கு
அநீதி இழைத்துவிட்டான்.
அவர்க்கு மூன்று வயதில் வைசூரி
நோய் ஏற்பட்டது. பிழைத்தாலும் பார்
வையை இழந்தார். ஆயினும் அவர்
பெற்றோர் தமிழ்க் கல்வி கற்க ஏற்பாடு
செய்தனர். அவர் கற்றத் தேர்ந்துவிட்டார்.
மேலும் ஏக சந்தக் கிராகியம் என்னும்
திறமை உடையவராய்விளங்கினார். நம் புலவர் ஒருமுறை கேட்டதை அப்படியே
பிழையில்லாமல் திரும்பச் சொல்
வதில் தேர்ந்தவர்.
ஒருமுறை இராமநாதபுரம்
சேதுபதி அவர்களைப் பார்த்து உரையாடிவிட்டு வர
லாம் என்ற எண்ணத்தில்
அங்குச் சென்றிருந்தார். அவையில் புலவர்கள் குழுமி
யிருந்தனர். புலவர் ஒருவர்
தன் நூலை அரங்கேற்றிப்
பரிசில் பெற வந்திருந்தார்.
அப்புலவர் நம் கவிச்சிங்கத்
தைப் பார்த்துவிட்டு "இது
என்ன அமங்கலமாகப் பார்
வையற்றவர் அவையில் உள்
ளாரே?" என்று எண்ணியவர்
சேதுபதியவர்களை நோக்கி
"அவை அமங்கலமாக உள்ளதே" என்று குறிப்பிட்டார்
அவர் மறைமுகமாகச் சொன்
னதைச் சேதுபதி புரிந்து
கொள்ளவில்லை. "அவை
மங்கலமாகத்தான் உள்ளது;
நூலைப்படியுங்கள்" என்றார்.
வேறுவழியின்றிப் புலவர்
நூலைப் படித்து முடித்தார்.
உடனே நம்கவிச்சிங்கம் எழுந்
து நின்று"இது எனது நூல்;
இந்தப் புலவர் எப்படியோ
நகல்எடுத்துத் தனது நூல்
என்கின்றார்" என்றுரைத்தார்
புதுப்புலவர்க்கு உடலெல்லாம்
நடுங்கியது."எனது நூலைத்
தனது நூல் என்கின்றாரே;
சேதுபதி நம்பிவிட்டால் தண்
டனை கிடைக்கும்" என்று
பயந்து நடுங்கினார். பிறகு
சமாளித்துக் கொண்டு" இது
என் நூல்தான். சத்தியம்" என்
று நாத்தழுதழுக்கச் சொன்
னார்.. சேதுபதி நம் கவிச்
சிங்கத்தைப் பார்த்து"இது என்ன குழப்பம்" என வினவ
நம் கவிச்சிங்கம் உடனே நூல் முழுவதையும் சொல்லி
அதற்குப் பொருளும் உரைத்
தார். தடாலடியாகப் புதுப்
புலவர் கவிச்சிங்கம் காலில்
விழுந்து"ஐயா! தாங்கள் இருப்பது அமங்கலம் என்று
கூறியதற்கு மன்னியுங்கள்;
என்னைச் சோதிக்க வேண்டா
என்று கெஞ்சினார். உடனே
நம் கவிச்சிங்கம் தனது நினைவாற்றல் திறமையைப்
பற்றி எடுத்துரைத்துப் புதுப்
புலவர் தாம் அவையில் இருப்
பதை அமங்கலமாக எண்ணி
யதற்குப் பாடம் புகட்ட விரும்பி
இந்த நாடகத்தை நடத்தியதா
கத் தெரிவித்தார். புதுப்புலவ
ர் நிம்மதிப் பெருமூச்சு விட்
டார். சேதுபதி அவர்க்குப் பரிசு
கொடுத்து அனுப்பினார். விழித்திறன் குறைந்தவர்கள்
அட்டாவதானி,தசாவதானி,
சதாவதானி ஆவதற்கு மிக
கடுமையான பயிற்சி மேற்
கொள்வார்கள். அதாவது, ஒரே நேரத்தில் எட்டு நபர்கள்,
பத்து நபர்கள், நூறு நபர்கள்
வினவும் வினாக்களைக் காதி
ல் வாங்கி முறையாகப் பதில்
அளிப்பார்கள். கவனக கலை
என்று அழைப்பார்கள்.
காகிதம், எழுதுகோல்இல்லாத
காலத்தில் நினைவாற்றல்
இன்றியமையாததாக கருதப்
பட்டது். பழங்காலத்தில் அக
ராதி இல்லை. நிகண்டு தான்
பழக்கத்தில் இருந்த்து. அதை
மனனம் செய்து நினைவில்
வைத்திருப்பார்கள். எதையும்
நினைவில் இருத்திக்கொள்ள
பாடலாகப் பாடி வைத்திருந்
தார்கள்.பாடல்கள் எதுகை,
மோனை,ஓசைநயம்பொருந்தி
யிருப்பதால் மனனம் செய்
வதும் நினைவில் இருத்துவ
தும் எளிதாகும். சிலவற்றை
இங்கே பார்ப்போம்.
பதினாறும் பெற்றுப் பெரு
வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவதை அறிவோம்.
அவை யாவை?
"துதிவாணி வீரம் விசயம்சந்
தானம் துணிவுதனம்
அதிதானி யம்சவு பாக்கியம்
போகம் அறிவழகு
புதிதாம் பெருமை யறம்குலம்
நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய்
மதுரைப் பராபரனே!.
பசிவந்திடப் பத்தும் பறந்து
போம் என்னும் முதுமொழி
கேட்டிருப்போம். பத்து யாவை?
மானம் குலம்கல்வி வண்மை
அறிவுடைமை
தானம் தவம்முயற்சி தாளாண்
மை__தேனின்
கசிவந்த சொல்லியர்மேற்
காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.
சங்க நூல்களான பத்துப்
பாட்டும்,எட்டுத் தொகையும்
எவை எவை?
பத்துப் பாட்டு:
முருகு பொருநாறு பாணிரண்
டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி
மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்
குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
1.திருமுருகாற்றுப்படை
2.பெரும்பாணாற்றுப்படை
3.சிறுபாணாற்றுப்படை
4.முல்லைப்பாட்டு
5.மதுரைக்காஞ்சி
6.நெடுநல்வாடை
7.குறிஞ்சிப்பாட்டு
8.பட.டினப்பாலை
9.மலைபடுகடாம்
10.பொருநர்ஆற்றுப்படை
எட்டுத்தொகை:
நற்றிணைநல்லகுறுந்தொகை
ஐங்குறுநூ(று)
ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு
பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ
டகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை.
1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.பதிற்றுப்பத்து
5.பரிபாடல்
6.கலித்தொகை
7.அகநானூறு
8.பறநானூறு
பத்துப்பாட்டும் எட்டுத்தொகை
யும் மேற்கணக்கு வகையைச்
சேர்ந்தவை. நாலடிக்கு மேல்
வரும் பாடல்கள் மேற்கணக்கு
என்னும் பிரிவில் சேர்க்கப்
பட்டன. இரண்டு அடி முதல்
நான்கு அடி வரை உள்ள பாடல்கள் கீழ்க்கணக்கு வகை
யில் சேர்க்கப்பட்டன. கீழ்க்
கணக்கு நூல்களும் பதினெட்
டாகும். அவை யாவை?
நாலடி நான்மணி நானாற்ப(து
ஐந்திணைமுப்
பால்கடுகம்கோவைபழமொழி
மாமூலம்
இன்னிலைகாஞ்சியுடன்ஏலா
தி என்பவை
கைந்நிலையுமாங்கீழ்க்கணக்கு.
1நாலடியார்2நான்மணிக்கடி
கை3இன்னாநாற்பது4இனிய
வை நாற்பது5கார்நாற்பது
6களவழி நாற்பது7ஐந்திணை
ஐம்பது8ஐந்திணை எழுபது
9திணைமாலை நூற்றைம்பது
10திருக்குறள்11திரிகடுகம்
12ஆசாரக்கோவை13பழமொழி நானூறு14சிறுபஞ்சமூலம்
15இன்னிலை16முதுமொழிக்
காஞ்சி17ஏலாதி18கைந்நிலை
சேர,சோழ,பாண்டிய மற்றும்
தொண்டை(பல்லவ)நாடுகளுக் குரிய சிறப்புக்கள் யாவை?
வேழ முடைத்து மலைநாடு
மேதக்க
சோழவள நாடு சோறுடைத்து
பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து
தெண்ணீர்வயல்தொண்டை
நன்னாடு சான்றோர்
உடைத்து.
சேரநாட்டில் யானைகளும்,
பாண்டிய நாட்டில் முத்துக்
களும்,சோழ நாட்டில் நெல்லும்
சிறந்து விளங்குபவை. பல்லவ
நாட்டில் (தொண்டை நாடு)
சான்றோர் சிறந்து விளங்கி
னர்.
இவற்றைப் போல எத்தனை
யோ பாடல்கள் உள்ளன. மனப்பாடம் செய்வதும் நினை
வில் இருத்திக்கொள்வதும்
இன்றியமையாதவை எனக்
கருதப்பட்டன. எனவேதான்
இச்செய்திகள் எல்லாம் பாடல்
களாக இயற்றப்பட்டன. மொழி
யியல் அறிஞர்கள் சொற்கள்
பிறந்து வெகுகாலம் கழிந்த
பின்னரே வரிவடிவம்(எழுத்து)
கண்டுபிடிக்கப்பட்டதாக தெரி
விக்கின்றனர். தொடக்க கால
த்தில் இலக்கியங்கள் மக்கள்
நினைவில் இருத்தப்பட்டுப்
பிற்பாடு வரிவடிவில் எழுதப்
பட்டன. ஆகவேநினைவுத்
திறன் வலியுறுத்தப்பட்டது.
.
மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் உண்மைப் பெயர் என்ன? சங்க இலக்கிய நூல்களின் பெயர்களை தெரிவித்தமைக்கு நன்றி அய்யா
ReplyDelete