அன்றொரு நாளென் வீட்டில்
அயர்வுடன் உறங்கும் போது
கன்றிய முகமும் முற்றும்
கலங்கிய கண்ணும் கொண்ட
கன்னியென் கனவில் வந்து
கவலையாய்நின்றாள்;"அம்மா
என்றன்முன் தோன்றும் நீவிர்
யாரெனச் சொல்க"என்றேன்.
மூத்ததாம் மொழிகள் தம்முள்
முதன்மையாம் மொழியென்
றென்னை
ஆர்த்தநல் அறிஞர் சொல்வர்;
அருந்தமிழ் என்றன் பேராம்";
வார்த்தைகள் இவற்றைக்
கேட்டு்
வணங்கியே நின்று "தாயே!
சீர்த்திசேர் அன்னாய் போற்றி
செந்தமிழ்ச் செல்வி போற்றி!
வாடிய முகத்தி னோடு
வந்ததன் கார ணத்தை
மூடியே மறைத்தி டாமல்
முற்றுமே சொல்க" என்றேன்.
"பாடியே புலவர் ,வேந்தர்,
பலதரப் பட்ட மக்கள்
கூடியே வளர்த்தார்,என்னை:
குதுகலம் கொண்டேன்"
என்றாள்.
இன்னமும் சொல்ல லானாள்;
"என்மக்கள் உண்மைப் பற்று
மின்னிடப் போற்று கின்றார்;
வேறுபல் நாட்டில் வாழ்வோர்
அன்னையென் புகழைப் பாடி
அகிலத்தில் பரப்பு கின்றார்;
பன்னரும் அமெரிக் காவில்
பணிசெய்யும் தமிழர் சேவை
சொல்லவே இயலா தப்பா!
தொல்புகழ் ஹார்வர்(டு)
என்னும்
நல்லதாம் கழகம் தன்னில்
நாட்டினர் தமிழி ருக்கை;
பல்வித நாட்டில் வாழும்
பற்றுளார் புகழ்சேர்க் கின்றார்
எல்லையில் பெருமை
கொண்டேன்;
இதயத்தில் இன்பம் உற்றேன்.
இமிழ்திரைக் கடல்சூழ் பாரில்
எங்கெங்கும் தமிழர் உள்ளார்;
இமைகண்ணைக் காத்தல்
போல
என்றென்றும் காப்பார் அப்பா!
தமிழ்மண்ணில் வாழ்வோர்
தாமும்
தாய்த்தமிழ்ப் பற்றோ டுள்ளார்
அமிழ்தொக்கும் மொழியென்
றென்னை
அருமையாய்ப் புகழு கின்றார்.
ஆயினும் எனக்கோர் ஏக்கம்
அகத்தினில் உண்டு பிள்ளாய்!
சேய்கட்குத் தமிழ்ப்பேர் சூட்டல்
சிறிதள வேனும் இல்லை;
மாயையில் சிக்கி மக்கள்
வடமொழிப் பேர்வைக் கின்றார்;
தாய்மொழி தமிழில் வைத்தால்
தாழ்ச்சியென் றெண்ணு
கின்றார்.
இன்னுமோர் குறையைச்
சொல்வேன்;
இங்குள்ள கல்வித் திட்டம்
அன்னையாம் தமிழில் இல்லை;
ஆங்கில மோகம் மிக்குச்
சென்னியின் மீது வைத்துச்
சிறப்புறக் கற்கச் செய்வர்;
இந்நிலை தொடரின் தாயார்
என்னிலை என்ன வாகும்?
இருபெரும் குறையைப் போக்க
எவருமே முயன்றார் அல்லர்;
அருந்தமிழ் எழுத, பேச
அறிகிலேன் என்று சில்லோர்
பெருமையாய்ச் சொல்லல்
முற்றும்
பிழை;தமிழ் நாட்டில் அன்னார்
கருவத்தை அடக்கி இஃதைக்
கண்டித்தல் வேண்டும் அப்பா!
தாய்மொழி வழியிற் கற்போர்
தடைகளை அகற்றல் வேண்டும்;
ஓய்வின்றிப் படித்தல் வேண்டும்;
உறுபொருள் காணல் வேண்டும்;
ஆய்வினை விடாது செய்தே
அறிவினைப் பெருக்கல்
வேண்டும்;
வாய்ப்பினை அரசு நல்கிப்
பணிதரல் வேண்டும்"என்றாள்
செம்மொழித் தாயின் ஏக்கம்
சிந்தையில் உறுத்தல் வேண்டும்;
நம்அடை யாளம் இஃதே;
நாம்இதைத் தொலைத்து
விட்டால்
எம்முகம் காட்டி ஏனை
இனத்தினர் முன்னே நிற்போம?
இம்மொழி பேணிக் காத்தே
ஏறுபோல் நடப்போம் வாரீர்!
அமெரிக்க நாட்டில் வாழும்
அருந்தமிழ் அன்பர் கூடி
நமதரும் நூலை யெல்லாம்
இணையத்தில் ஏற்றி யுள்ளார்;
இமைப்பொழு தளவில் நூலை
எளிதிலே பார்க்க ஒண்ணும்;
சமைக்கின்ற நூலை எல்லாம்
அவர்தமைப் போலச் செய்வோம்.
அயர்வுடன் உறங்கும் போது
கன்றிய முகமும் முற்றும்
கலங்கிய கண்ணும் கொண்ட
கன்னியென் கனவில் வந்து
கவலையாய்நின்றாள்;"அம்மா
என்றன்முன் தோன்றும் நீவிர்
யாரெனச் சொல்க"என்றேன்.
மூத்ததாம் மொழிகள் தம்முள்
முதன்மையாம் மொழியென்
றென்னை
ஆர்த்தநல் அறிஞர் சொல்வர்;
அருந்தமிழ் என்றன் பேராம்";
வார்த்தைகள் இவற்றைக்
கேட்டு்
வணங்கியே நின்று "தாயே!
சீர்த்திசேர் அன்னாய் போற்றி
செந்தமிழ்ச் செல்வி போற்றி!
வாடிய முகத்தி னோடு
வந்ததன் கார ணத்தை
மூடியே மறைத்தி டாமல்
முற்றுமே சொல்க" என்றேன்.
"பாடியே புலவர் ,வேந்தர்,
பலதரப் பட்ட மக்கள்
கூடியே வளர்த்தார்,என்னை:
குதுகலம் கொண்டேன்"
என்றாள்.
இன்னமும் சொல்ல லானாள்;
"என்மக்கள் உண்மைப் பற்று
மின்னிடப் போற்று கின்றார்;
வேறுபல் நாட்டில் வாழ்வோர்
அன்னையென் புகழைப் பாடி
அகிலத்தில் பரப்பு கின்றார்;
பன்னரும் அமெரிக் காவில்
பணிசெய்யும் தமிழர் சேவை
சொல்லவே இயலா தப்பா!
தொல்புகழ் ஹார்வர்(டு)
என்னும்
நல்லதாம் கழகம் தன்னில்
நாட்டினர் தமிழி ருக்கை;
பல்வித நாட்டில் வாழும்
பற்றுளார் புகழ்சேர்க் கின்றார்
எல்லையில் பெருமை
கொண்டேன்;
இதயத்தில் இன்பம் உற்றேன்.
இமிழ்திரைக் கடல்சூழ் பாரில்
எங்கெங்கும் தமிழர் உள்ளார்;
இமைகண்ணைக் காத்தல்
போல
என்றென்றும் காப்பார் அப்பா!
தமிழ்மண்ணில் வாழ்வோர்
தாமும்
தாய்த்தமிழ்ப் பற்றோ டுள்ளார்
அமிழ்தொக்கும் மொழியென்
றென்னை
அருமையாய்ப் புகழு கின்றார்.
ஆயினும் எனக்கோர் ஏக்கம்
அகத்தினில் உண்டு பிள்ளாய்!
சேய்கட்குத் தமிழ்ப்பேர் சூட்டல்
சிறிதள வேனும் இல்லை;
மாயையில் சிக்கி மக்கள்
வடமொழிப் பேர்வைக் கின்றார்;
தாய்மொழி தமிழில் வைத்தால்
தாழ்ச்சியென் றெண்ணு
கின்றார்.
இன்னுமோர் குறையைச்
சொல்வேன்;
இங்குள்ள கல்வித் திட்டம்
அன்னையாம் தமிழில் இல்லை;
ஆங்கில மோகம் மிக்குச்
சென்னியின் மீது வைத்துச்
சிறப்புறக் கற்கச் செய்வர்;
இந்நிலை தொடரின் தாயார்
என்னிலை என்ன வாகும்?
இருபெரும் குறையைப் போக்க
எவருமே முயன்றார் அல்லர்;
அருந்தமிழ் எழுத, பேச
அறிகிலேன் என்று சில்லோர்
பெருமையாய்ச் சொல்லல்
முற்றும்
பிழை;தமிழ் நாட்டில் அன்னார்
கருவத்தை அடக்கி இஃதைக்
கண்டித்தல் வேண்டும் அப்பா!
தாய்மொழி வழியிற் கற்போர்
தடைகளை அகற்றல் வேண்டும்;
ஓய்வின்றிப் படித்தல் வேண்டும்;
உறுபொருள் காணல் வேண்டும்;
ஆய்வினை விடாது செய்தே
அறிவினைப் பெருக்கல்
வேண்டும்;
வாய்ப்பினை அரசு நல்கிப்
பணிதரல் வேண்டும்"என்றாள்
செம்மொழித் தாயின் ஏக்கம்
சிந்தையில் உறுத்தல் வேண்டும்;
நம்அடை யாளம் இஃதே;
நாம்இதைத் தொலைத்து
விட்டால்
எம்முகம் காட்டி ஏனை
இனத்தினர் முன்னே நிற்போம?
இம்மொழி பேணிக் காத்தே
ஏறுபோல் நடப்போம் வாரீர்!
அமெரிக்க நாட்டில் வாழும்
அருந்தமிழ் அன்பர் கூடி
நமதரும் நூலை யெல்லாம்
இணையத்தில் ஏற்றி யுள்ளார்;
இமைப்பொழு தளவில் நூலை
எளிதிலே பார்க்க ஒண்ணும்;
சமைக்கின்ற நூலை எல்லாம்
அவர்தமைப் போலச் செய்வோம்.
.
ReplyDelete