Sunday, 11 March 2018

தமிழர் வீரம் - அன்றும் , இன்றும்


புலியை முறத்தால் ஓட்டியதாய்ப்
      புலவர் போற்றிப் புகழ்ந்துரைத்த
வலிமை மிக்கு வாழ்ந்ததமிழ்
     மாதர் இற்றை நிலையென்ன?
மலிவாய் நடக்கும் காமுகர்க்கும்
    ஒருசார் காதல் பித்தர்கட்கும்
நலிந்து நோகும் பெண்ணினத்தை
    நாமெல் லோரும் காப்போமே!

ஓங்கிப் பிளிறி மதங்கொண்டே
    உலவும் பருத்த களிற்றினையே
வீங்கித் தோள்கள் புடைத்தெழவே
    வேலால் தடுத்தார் பழந்தமிழர்;
தீங்கு பரியும் கயவர்களைத்
    தெருவில் கண்டால் பெருமூச்சு
வாங்கச் சிதறி நிலைகுலைந்து
    மறைந்து கொள்வர் இன்றையவர்

No comments:

Post a Comment