குழந்தை புரியும் குறும்பு
கொட்டுகின்ற மழைநீரில் காகிதத்தால் செய்தபல
குட்டிக் கப்பல்
விட்டுமனம் மகிழ்ந்துநின்ற மைந்தனையான் இழுத்துவந்தேன்
வீட்டுக் குள்ளே;
பட்டுநிகர் மேனியனை அடித்திடவே கையோங்கப்
பாங்காய் அன்னான்
மொட்டுநிகர் வாய்திறந்து நகைபூத்தான்; நான்மயங்கி
முத்த மிட்டேன்.
சுட்டிமகன் மாம்பழந்தான் வேண்டுமெனக் கேட்டழுதான்;
தூய தங்கக்
கட்டியன்ன மைந்தனுக்கு மாம்பழத்தை யான்தந்தேன்;
கனியைத் துண்டாய்
வெட்டியளி என்றழுதான்; துண்டுதுண்டாய் அரிந்தளித்தேன்;
வேண்டா இஃதை
ஒட்டியளி முழுவடிவில் என்றழுதான்; எங்ஙனம்நான்
ஒட்டல் ஒண்ணும்?
மாலையிலே புழுதியில்நீ விளையாடேல் என்றுரைத்து
மனையில் என்றன்
வேலையிலே ஆழ்ந்திருந்தேன்; குறும்புமகன் தெரியாமல்
வெளியே சென்று
சாலையிலே விளையாடிப் புழுதியினைத் தான்தரித்துத்
தங்க மேனி
ஆலையிலே பிழிகரும்பாய் வாடி, முகம் வதங்கி, மெல்ல
அகத்துள் வந்தான்.
கொட்டுகின்ற மழைநீரில் காகிதத்தால் செய்தபல
குட்டிக் கப்பல்
விட்டுமனம் மகிழ்ந்துநின்ற மைந்தனையான் இழுத்துவந்தேன்
வீட்டுக் குள்ளே;
பட்டுநிகர் மேனியனை அடித்திடவே கையோங்கப்
பாங்காய் அன்னான்
மொட்டுநிகர் வாய்திறந்து நகைபூத்தான்; நான்மயங்கி
முத்த மிட்டேன்.
சுட்டிமகன் மாம்பழந்தான் வேண்டுமெனக் கேட்டழுதான்;
தூய தங்கக்
கட்டியன்ன மைந்தனுக்கு மாம்பழத்தை யான்தந்தேன்;
கனியைத் துண்டாய்
வெட்டியளி என்றழுதான்; துண்டுதுண்டாய் அரிந்தளித்தேன்;
வேண்டா இஃதை
ஒட்டியளி முழுவடிவில் என்றழுதான்; எங்ஙனம்நான்
ஒட்டல் ஒண்ணும்?
மாலையிலே புழுதியில்நீ விளையாடேல் என்றுரைத்து
மனையில் என்றன்
வேலையிலே ஆழ்ந்திருந்தேன்; குறும்புமகன் தெரியாமல்
வெளியே சென்று
சாலையிலே விளையாடிப் புழுதியினைத் தான்தரித்துத்
தங்க மேனி
ஆலையிலே பிழிகரும்பாய் வாடி, முகம் வதங்கி, மெல்ல
அகத்துள் வந்தான்.
No comments:
Post a Comment