அறுபடை வீடு
1. திருப்பரங்குன்றம் :-
ஒருபெரும் தமிழர் தெய்வம் உள்ளத்தை ஆளும் தெய்வம்
அருமைகொள் முருகன் தெய்வ யானையை மணந்த ஊராம்
திருப்பரங் குன்றம் சென்று சிந்தையுள் அவனை ஏத்தி
விருப்பொடு தொழுதால் சேர்ந்த வினையெலாம் நீங்கும் மாதோ!
2. திருச்செந்தூர் :-
அய்யனே முருகா கந்தனே குமரா
அறுமுகா தமிழர்கள் போற்றும்
தெய்வமே சூர பதுமனை வேலால்
செந்திலம் பதிதனில் வென்று
நையவே வதைத்தே இரண்டுகூ றாக்கி
நன்மயில் சேவலாய் மாற்றி
உய்யவே ஊர்தி கொடியெனக் கொண்ட
ஒண்தமிழ்க் கடவுளே அருளே!
3. பழனி :-
கொங்கு நாட்டில் பழனி யென்னும்
குன்றில் குடிகொள் குமரனே!
பொங்கு புகழும் திறனும் மிக்க
போகர் ஒன்பான் நஞ்சினால்
நன்கு வடித்த சிலையாய் வாழ்ந்து
நாட்டு மக்கள் குறைகளைத்
தங்கு தடைகள் இலாது நீக்கித்
தரணி தழைக்க அருள்கவே!
4. திருவேரகம் ( சுவாமிமலை ) :-
சிந்தைக்கும் செயலுக்கும் எட்டாத பரம்பொருளாம்
சிவனார் கேட்கத்
தந்தைக்கு மந்திரத்தின் உட்பொருளை ஓதுவித்த
தகப்பன் சாமி
எந்தைகுகன் குடிகொண்ட ஏரகத்தைச் சென்றடைந்தால்
இன்னல் நீங்கும்;
முந்தையதாம் வினைகளும்இப் பிறவியில்செய் வினைகளுமே
முடிந்து போமே!
5. பழமுதிர்சோலை ( சோலைமலை ) :-
கொம்பின் தேனும் முக்கனியும்
குரங்குக் கூட்டம் சுவைத்துண்டு
பம்பிப் பாய்ந்து குதித்தாடும்
பதியாம் சோலை மலைமீதில்
தும்பிக் கையான் திருத்தம்பி
சுடர்வேல் முருகன் ஆள்கின்றான்;
நம்பிச் சென்று தொழுவீரேல்
நலங்கள் எல்லாம் பெறுவீரே!
6. திருத்தணி :-
அணிமருவும் திருமுருகன் திருச்செந்தூர் தனிலே
அரக்கர்களின் ஆணவத்தை அடியோடு நீக்கித்
தணிகையெனும் திருத்தலத்தில் குடிகொண்டு சினத்தைத்
தவிர்த்துமுழுச் சாந்தமுடன் வள்ளியினை மணந்தார்;
மணிமருவு திருமார்பன் மாப்பிள்ளைக் கோலம்
வடிவுடனே காட்டியன்பர் மனம்மயக்கு கின்றார்;
பிணிநோய்கள் பிறவி, யின்னல் விலகிட, நேர் வந்து
பேரழகன் திருவடியைப் பணிந்திடுவீர் நலமே!
1. திருப்பரங்குன்றம் :-
ஒருபெரும் தமிழர் தெய்வம் உள்ளத்தை ஆளும் தெய்வம்
அருமைகொள் முருகன் தெய்வ யானையை மணந்த ஊராம்
திருப்பரங் குன்றம் சென்று சிந்தையுள் அவனை ஏத்தி
விருப்பொடு தொழுதால் சேர்ந்த வினையெலாம் நீங்கும் மாதோ!
2. திருச்செந்தூர் :-
அய்யனே முருகா கந்தனே குமரா
அறுமுகா தமிழர்கள் போற்றும்
தெய்வமே சூர பதுமனை வேலால்
செந்திலம் பதிதனில் வென்று
நையவே வதைத்தே இரண்டுகூ றாக்கி
நன்மயில் சேவலாய் மாற்றி
உய்யவே ஊர்தி கொடியெனக் கொண்ட
ஒண்தமிழ்க் கடவுளே அருளே!
3. பழனி :-
கொங்கு நாட்டில் பழனி யென்னும்
குன்றில் குடிகொள் குமரனே!
பொங்கு புகழும் திறனும் மிக்க
போகர் ஒன்பான் நஞ்சினால்
நன்கு வடித்த சிலையாய் வாழ்ந்து
நாட்டு மக்கள் குறைகளைத்
தங்கு தடைகள் இலாது நீக்கித்
தரணி தழைக்க அருள்கவே!
4. திருவேரகம் ( சுவாமிமலை ) :-
சிந்தைக்கும் செயலுக்கும் எட்டாத பரம்பொருளாம்
சிவனார் கேட்கத்
தந்தைக்கு மந்திரத்தின் உட்பொருளை ஓதுவித்த
தகப்பன் சாமி
எந்தைகுகன் குடிகொண்ட ஏரகத்தைச் சென்றடைந்தால்
இன்னல் நீங்கும்;
முந்தையதாம் வினைகளும்இப் பிறவியில்செய் வினைகளுமே
முடிந்து போமே!
5. பழமுதிர்சோலை ( சோலைமலை ) :-
கொம்பின் தேனும் முக்கனியும்
குரங்குக் கூட்டம் சுவைத்துண்டு
பம்பிப் பாய்ந்து குதித்தாடும்
பதியாம் சோலை மலைமீதில்
தும்பிக் கையான் திருத்தம்பி
சுடர்வேல் முருகன் ஆள்கின்றான்;
நம்பிச் சென்று தொழுவீரேல்
நலங்கள் எல்லாம் பெறுவீரே!
6. திருத்தணி :-
அணிமருவும் திருமுருகன் திருச்செந்தூர் தனிலே
அரக்கர்களின் ஆணவத்தை அடியோடு நீக்கித்
தணிகையெனும் திருத்தலத்தில் குடிகொண்டு சினத்தைத்
தவிர்த்துமுழுச் சாந்தமுடன் வள்ளியினை மணந்தார்;
மணிமருவு திருமார்பன் மாப்பிள்ளைக் கோலம்
வடிவுடனே காட்டியன்பர் மனம்மயக்கு கின்றார்;
பிணிநோய்கள் பிறவி, யின்னல் விலகிட, நேர் வந்து
பேரழகன் திருவடியைப் பணிந்திடுவீர் நலமே!
No comments:
Post a Comment