இலங்கை நட்பு நாடா?
தமிழக மீனவர் துயரம்
அதிகாலை நேரத்தில் அலைகடலுள் படகோட்டி
விதிதன்னை நொந்துமனம் வெம்பிவெம்பி நடுக்கடலில்
வலைகளைத்தாம் விரித்துவைத்து மாட்டாதோ மீன்என்று
அலமந்து நாளுமிடர் அடைகின்றார் மீனவர்கள்;
சிலநேரம் மீன்கிட்டும்; சில நேரம் கிட்டாது;
நிலைமையினைப் பகிர்ந்திட்டால் நீர்வழியும் கண்களிலே;
நங்கச்சத் தீவுதனை நட்புநா டென்றுசொல்லிச்
சிங்களத் தீவோடு சேர்த்ததனால் வந்தவினை
"எல்லைதனைத் தாண்டிவிட்டார்" என்றுரைத்து நித்தநித்தம்
தொல்லைதனை அளித்திடுவர்; துப்பாக்கி யால்சுடுவர்;
வெஞ்சிறையில் அடைத்திடுவர்; மீன்வலைகள் அறுத்திடுவர்
வஞ்சமிகச் செய்திடுவர்; வாழ்க்கையைப் பறித்திடுவர்;
சுண்டைக்காய் நாடுசெய்யும் சொல்லொணாச் சீண்டல்களை
அண்டைநட்பு நாடெனவே ஆதரித்தல் முறையாமோ?
ஆரிடம்போய் நாம்சொல்லி அழுவதென நினைக்கையிலே
பேரிடராய்ப் புயல் ஒக்கி பிடர்பிடித்தே ஆட்டியது
கணக்கற்ற மீனவரைக் காணவில்லை; மீட்பதிலே
சுணக்கங்கள் தடங்கல்கள் சோர்வடையச் செய்தனவே;
வாழை,ரப்பர் மரங்களெலாம் மண்ணோடு சாய்ந்தனவே;
ஏழையரும் செல்வர்களும் ஏங்கியழுது அரற்றினரே;
இயற்கைத்தாய் விளைவித்த இன்னல்களால் சோர்ந்தமனம்
தயக்கமாய்த் தேறிவரும் தருணத்தில் தீச்செய்தி?
நட்புமிகும் நாடென்று நாம்சொல்லும் சிறீலங்கா
திட்பமுடன் இயற்றியது தீமைமிகு சட்டமொன்று;
"எல்லைதனைத் தாண்டிவந்தால் எழுகோடி அபராதம்"
இல்லையோ? ஈவிரக்கம் இந்தநட்பு நாட்டவர்க்கு;
யாதும் எம் ஊரென்றும் யாவரும் கேளிரென்றும்
ஓதும் எம் தமிழினத்தார் உறுவதுவோ பெருந்துன்பம்?
கச்சத்தீ வுப்பகுதியைக் கச்சிதமாய் மீட்டெடுத்தால்
நிச்சயமாய்த் துன்பமெலாம் நீங்கிவிடும்; ஐயமில்லை;
ஆகையினால் தமிழர்களே! அனைவருமே போராடி
வாகையினைச் சூடிடுவோம்; மண்ணினையே மீட்டெடுப்போம்
மையத்தின் பேரரசும் மாநிலத்தின் அரசும்நற்
செய்கையாற் சேர்க்க சிறப்பு.
தமிழக மீனவர் துயரம்
அதிகாலை நேரத்தில் அலைகடலுள் படகோட்டி
விதிதன்னை நொந்துமனம் வெம்பிவெம்பி நடுக்கடலில்
வலைகளைத்தாம் விரித்துவைத்து மாட்டாதோ மீன்என்று
அலமந்து நாளுமிடர் அடைகின்றார் மீனவர்கள்;
சிலநேரம் மீன்கிட்டும்; சில நேரம் கிட்டாது;
நிலைமையினைப் பகிர்ந்திட்டால் நீர்வழியும் கண்களிலே;
நங்கச்சத் தீவுதனை நட்புநா டென்றுசொல்லிச்
சிங்களத் தீவோடு சேர்த்ததனால் வந்தவினை
"எல்லைதனைத் தாண்டிவிட்டார்" என்றுரைத்து நித்தநித்தம்
தொல்லைதனை அளித்திடுவர்; துப்பாக்கி யால்சுடுவர்;
வெஞ்சிறையில் அடைத்திடுவர்; மீன்வலைகள் அறுத்திடுவர்
வஞ்சமிகச் செய்திடுவர்; வாழ்க்கையைப் பறித்திடுவர்;
சுண்டைக்காய் நாடுசெய்யும் சொல்லொணாச் சீண்டல்களை
அண்டைநட்பு நாடெனவே ஆதரித்தல் முறையாமோ?
ஆரிடம்போய் நாம்சொல்லி அழுவதென நினைக்கையிலே
பேரிடராய்ப் புயல் ஒக்கி பிடர்பிடித்தே ஆட்டியது
கணக்கற்ற மீனவரைக் காணவில்லை; மீட்பதிலே
சுணக்கங்கள் தடங்கல்கள் சோர்வடையச் செய்தனவே;
வாழை,ரப்பர் மரங்களெலாம் மண்ணோடு சாய்ந்தனவே;
ஏழையரும் செல்வர்களும் ஏங்கியழுது அரற்றினரே;
இயற்கைத்தாய் விளைவித்த இன்னல்களால் சோர்ந்தமனம்
தயக்கமாய்த் தேறிவரும் தருணத்தில் தீச்செய்தி?
நட்புமிகும் நாடென்று நாம்சொல்லும் சிறீலங்கா
திட்பமுடன் இயற்றியது தீமைமிகு சட்டமொன்று;
"எல்லைதனைத் தாண்டிவந்தால் எழுகோடி அபராதம்"
இல்லையோ? ஈவிரக்கம் இந்தநட்பு நாட்டவர்க்கு;
யாதும் எம் ஊரென்றும் யாவரும் கேளிரென்றும்
ஓதும் எம் தமிழினத்தார் உறுவதுவோ பெருந்துன்பம்?
கச்சத்தீ வுப்பகுதியைக் கச்சிதமாய் மீட்டெடுத்தால்
நிச்சயமாய்த் துன்பமெலாம் நீங்கிவிடும்; ஐயமில்லை;
ஆகையினால் தமிழர்களே! அனைவருமே போராடி
வாகையினைச் சூடிடுவோம்; மண்ணினையே மீட்டெடுப்போம்
மையத்தின் பேரரசும் மாநிலத்தின் அரசும்நற்
செய்கையாற் சேர்க்க சிறப்பு.
No comments:
Post a Comment