குண்டு நெஞ்சைத் துளைத்திடினும்
குருதி ஆறாய்ப் பாய்ந்திடினும்
மண்டும் படைகள் எதிர்த்திடினும் மயங்கோம்; தயங்கோம்; ஈதுண்மை;
துண்டு துண்டாய்ப் பாரதத்தைச்
சூறை யாட நினைப்போரே!
உண்டு வீரம்; திருநாட்டை. உயிரும் கொடுத்துக் காப்போமே!
ஈவு கருணை எள்ளளவும். இல்லாப் பாக்கிஸ் தான்நாடே
ஏவு கணைகள் ஆயுதங்கள்
ஈந்தே எதிரிக் குதவிடினும்
சாவுக் கஞ்சா இந்தியர்கள்
சற்றும் நெஞ்சம் கலங்காமல்
சோர்வே யின்றிப் போரிட்டுத் தோள்கள் தட்டி வென்றிடுவர்
சீலம் மிக்க பாரதத்தைச்
சிதைக்க எண்ணிப் பாக்கிஸ்தான்
ஞாலம் இகழ எல்லையிலே நயவஞ் சகமாய் ஊடுருவிக்
காலம் எல்லாம் போரிடினும்
காஷ் மீரத்தைக் காத்திடுவோம்;
வாலை ஒட்ட நறுக்கிடுவோம்;
வாழ்க! வாழ்க! பாரதமே!
குருதி ஆறாய்ப் பாய்ந்திடினும்
மண்டும் படைகள் எதிர்த்திடினும் மயங்கோம்; தயங்கோம்; ஈதுண்மை;
துண்டு துண்டாய்ப் பாரதத்தைச்
சூறை யாட நினைப்போரே!
உண்டு வீரம்; திருநாட்டை. உயிரும் கொடுத்துக் காப்போமே!
ஈவு கருணை எள்ளளவும். இல்லாப் பாக்கிஸ் தான்நாடே
ஏவு கணைகள் ஆயுதங்கள்
ஈந்தே எதிரிக் குதவிடினும்
சாவுக் கஞ்சா இந்தியர்கள்
சற்றும் நெஞ்சம் கலங்காமல்
சோர்வே யின்றிப் போரிட்டுத் தோள்கள் தட்டி வென்றிடுவர்
சீலம் மிக்க பாரதத்தைச்
சிதைக்க எண்ணிப் பாக்கிஸ்தான்
ஞாலம் இகழ எல்லையிலே நயவஞ் சகமாய் ஊடுருவிக்
காலம் எல்லாம் போரிடினும்
காஷ் மீரத்தைக் காத்திடுவோம்;
வாலை ஒட்ட நறுக்கிடுவோம்;
வாழ்க! வாழ்க! பாரதமே!
No comments:
Post a Comment