இயற்கைக் காட்சி
கொட்டுகின்ற மழையழகைக் கண்டேன்; இஃதைக்
கூறவகை தெரியாது திகைக்கின் றேனே!
வெட்டுகின்ற மின்னல்பல வானில் தோன்றும்;
வெருட்டுகின்ற இடிக்குரலும் அங்கே கேட்கும்;
சுட்டுகின்ற திசையெல்லாம் நீரின் தோற்றம்;
சுருதியுடன் இடையிடையே காற்று வீசும்;
எட்டுகின்ற காட்சியெல்லாம் இயற்கை யன்னை
இறுமாந்து புரிகின்ற ஆட்டம் தானோ?
பந்து போன்ற முழுநிலவே !
பால்போல் வெள்ளை முழுநிலவே !
நொந்து வாடும் மாந்தர்கள்தம்
நோவை நீக்கும் முழுநிலவே !
உந்து மதியே ! மேகத்தில்
ஒளிந்து தோன்றி மயக்குகிறாய் ;
சிந்து பாடி மகிழ்கி்ன்றேன்;
சிந்தை குளிர்ந்து நெகிழ்கின்றேன்
மாலையிற் பொழுதைப் போக்க
வளமிகு சோலை சென்றேன்;
நீலநல் மயில்கள் ஆடும்
நேர்த்திசேர் காட்சி கண்டேன்;
மூலையிற் குயில்கள் கூவும்
மோகன இசையும் கேட்டேன்;
கோலமார் கிளிகள் பேசும்
குதலையாம் மொழியும் கேட்டேன்;
தாமரை கூம்பக் கண்டேன்;
சந்திரன் உதிக்கக் கண்டேன்;
தேன்மலர் அல்லி பூக்கும்
சிறந்தநற் காட்சி கண்டேன்;
காமர்சேர் மல்லி முல்லை
கவினுற மலரக் கண்டேன்;
பூமகள் செழுமை தாங்கிப்
புரிந்திடும் ஏரார் காட்சி!
கொட்டுகின்ற மழையழகைக் கண்டேன்; இஃதைக்
கூறவகை தெரியாது திகைக்கின் றேனே!
வெட்டுகின்ற மின்னல்பல வானில் தோன்றும்;
வெருட்டுகின்ற இடிக்குரலும் அங்கே கேட்கும்;
சுட்டுகின்ற திசையெல்லாம் நீரின் தோற்றம்;
சுருதியுடன் இடையிடையே காற்று வீசும்;
எட்டுகின்ற காட்சியெல்லாம் இயற்கை யன்னை
இறுமாந்து புரிகின்ற ஆட்டம் தானோ?
பந்து போன்ற முழுநிலவே !
பால்போல் வெள்ளை முழுநிலவே !
நொந்து வாடும் மாந்தர்கள்தம்
நோவை நீக்கும் முழுநிலவே !
உந்து மதியே ! மேகத்தில்
ஒளிந்து தோன்றி மயக்குகிறாய் ;
சிந்து பாடி மகிழ்கி்ன்றேன்;
சிந்தை குளிர்ந்து நெகிழ்கின்றேன்
மாலையிற் பொழுதைப் போக்க
வளமிகு சோலை சென்றேன்;
நீலநல் மயில்கள் ஆடும்
நேர்த்திசேர் காட்சி கண்டேன்;
மூலையிற் குயில்கள் கூவும்
மோகன இசையும் கேட்டேன்;
கோலமார் கிளிகள் பேசும்
குதலையாம் மொழியும் கேட்டேன்;
தாமரை கூம்பக் கண்டேன்;
சந்திரன் உதிக்கக் கண்டேன்;
தேன்மலர் அல்லி பூக்கும்
சிறந்தநற் காட்சி கண்டேன்;
காமர்சேர் மல்லி முல்லை
கவினுற மலரக் கண்டேன்;
பூமகள் செழுமை தாங்கிப்
புரிந்திடும் ஏரார் காட்சி!
No comments:
Post a Comment