புலியினைக் கண்டும் அஞ்சேன்;
பூதத்தைக் கண்டும் அஞ்சேன்;
வலிமைகொள் கரடிக் கஞ்சேன்;
வாரணம் கண்டும் அஞ்சேன்;
நலிவுறும் வயலைக் காக்க
நம்பொன்னி யாற்றை வேண்டிச்
சிலபல முயற்சி செய்தால்
சிரிப்பவர்க் கஞ்சு வேனே.
சிங்கத்தைக் கண்டும் அஞ்சேன்;
சிறுத்தையைக் கண்டும் அஞ்சேன்;
பங்கத்தைச் செய்யும் நல்ல
பாம்பினைக் கண்டும் அஞ்சேன்;
தங்கத்தை நிகர்க்கும் பொன்னி
யாற்றினை வேண்டிச் செய்யும்
எங்கள்தம் போராட் டத்தை
இகழுவார்க் கஞ்சு வேனே.
கயவர்கள் தமக்கும் அஞ்சேன்;
கருணையில் லார்க்கும் அஞ்சேன்;
பயமிலாக் கொலைஞர்க் கஞ்சேன்;
பண்பிலா தவர்க்கும் அஞ்சேன்;
வயல்களை வளமை யாக்க
காவிரித் தண்ணீர் வேண்டி
முயற்சிகள் செய்தால் தூற்றும்
மூடர்கட் கஞ்சு வேனே.
எத்தனையோ நூற்றாண்டாய் எங்கள்தமிழ்நாட்டினுள்ளே
எழிலாய்ப் பாய்ந்து
நத்தைநண்டு மீனினங்கள் செழித்திடவும நெல்கரும்பு
நன்கு பல்கி
வித்தகமாய் விளைந்திடவும் பணிசெய்த காவிரியே !
மிக்க நன்றி;
நித்தமுனைத் தொழுதிடுவோம் தடைதகர்த்து மீட்டெடுப்போம்;
நிரம்பி வாராய்.
காவிரியை மீட்டெடுக்கத் தமிழரெல்லாம் பலமுயற்சி
களத்தில் செய்தார்;
பாவலன்நான் அன்னவர்கள் பணிதன்னைப் பாராட்டிப்
பகர்வேன் நன்றி;
ஆவலுடன் வேடிக்கை பார்த்தவரும் பலருள்ளார்
அவர்க்கும் நன்றி;
கேவலமாய்க் கேலிகிண்டல் செய்தோரை எச்சரிப்பேன்;
திருந்து வீரே.
பூதத்தைக் கண்டும் அஞ்சேன்;
வலிமைகொள் கரடிக் கஞ்சேன்;
வாரணம் கண்டும் அஞ்சேன்;
நலிவுறும் வயலைக் காக்க
நம்பொன்னி யாற்றை வேண்டிச்
சிலபல முயற்சி செய்தால்
சிரிப்பவர்க் கஞ்சு வேனே.
சிங்கத்தைக் கண்டும் அஞ்சேன்;
சிறுத்தையைக் கண்டும் அஞ்சேன்;
பங்கத்தைச் செய்யும் நல்ல
பாம்பினைக் கண்டும் அஞ்சேன்;
தங்கத்தை நிகர்க்கும் பொன்னி
யாற்றினை வேண்டிச் செய்யும்
எங்கள்தம் போராட் டத்தை
இகழுவார்க் கஞ்சு வேனே.
கயவர்கள் தமக்கும் அஞ்சேன்;
கருணையில் லார்க்கும் அஞ்சேன்;
பயமிலாக் கொலைஞர்க் கஞ்சேன்;
பண்பிலா தவர்க்கும் அஞ்சேன்;
வயல்களை வளமை யாக்க
காவிரித் தண்ணீர் வேண்டி
முயற்சிகள் செய்தால் தூற்றும்
மூடர்கட் கஞ்சு வேனே.
எத்தனையோ நூற்றாண்டாய் எங்கள்தமிழ்நாட்டினுள்ளே
எழிலாய்ப் பாய்ந்து
நத்தைநண்டு மீனினங்கள் செழித்திடவும நெல்கரும்பு
நன்கு பல்கி
வித்தகமாய் விளைந்திடவும் பணிசெய்த காவிரியே !
மிக்க நன்றி;
நித்தமுனைத் தொழுதிடுவோம் தடைதகர்த்து மீட்டெடுப்போம்;
நிரம்பி வாராய்.
காவிரியை மீட்டெடுக்கத் தமிழரெல்லாம் பலமுயற்சி
களத்தில் செய்தார்;
பாவலன்நான் அன்னவர்கள் பணிதன்னைப் பாராட்டிப்
பகர்வேன் நன்றி;
ஆவலுடன் வேடிக்கை பார்த்தவரும் பலருள்ளார்
அவர்க்கும் நன்றி;
கேவலமாய்க் கேலிகிண்டல் செய்தோரை எச்சரிப்பேன்;
திருந்து வீரே.
No comments:
Post a Comment