Monday, 9 April 2018

வட்டமுகம் தோன்றி மிக வாட்டுதடி

பொட்டல்வெளி  யானாலும்   பூம்பொழிலே   யானாலும்
கட்டழகுக்  கண்மணிநான்   காணுமிடம்   எல்லாம்நின்
மொட்டழகு   வாய்திறந்து   முத்துநகை   சிந்துகின்ற
வட்டமுகம்   தோன்றிமிக   வாட்டுதடி   காதலியே!

பேரழகுப்   பெட்டகமே!   பித்தனைப்போல்   ஆகிவிட்டேன்;
காரணத்தை   நீயறிந்தும்   கண்டுகொள்ள   வேயில்லை;
மாரனம்பு   பாய்வதனால்  வாட்டமுற்று   நோகின்றேன்;
ஓரவிழிப்   பார்வையினால்    உற்சாகம்   சேர்த்திடுவாய்

கீழ்க்காணும்   கவிதைகளும்   காதல்   பாட்டுகளே.   ஆனால்
நிரோட்டகம்  என்று சொல்லப்படும்   உதடு  ஒட்டாமற்பாடப்படும்
ஒருவித வகையைச் சேர்ந்தவை.   மெய்எழுத்துக்களில்
ப், ம், வ்   என்ற  மூன்றையும்   உயிர் எழுத்துக்களில் உ, ஊ,
ஒ, ஓ, ஔ  என்ற   ஐந்தையும்  இவற்றின் அடியாகப் பிறக்கும்
உயிர்மெய் எழுத்துக்களையும் விலக்கிப் பாடுதல் வேண்டும்.

கண்ணே!   கனியே! தீங்  கன்னலே!  கற்கண்டே!
என்னே  எழிலார்ந்தாய்;  ஏந்திழையே!   தண்டேனே!
கிட்டத்தில் நில்லென்றேன்; கேளாத காதினளாய்
எட்டிநீ செல்கின்றாய் ஏன்?

கண்ணாளா!   சீராளா! காளையே!  காதலரே!
எண்ணாத சிந்தனைகள் எண்ணாதீர் கண்ணாலஞ்
செய்யாத நேரத்தில் தீண்டற்க;தள்ளி
நிற்க;
நைகின்ற  இன்னல் இலை..

1 comment: