பொட்டல்வெளி யானாலும் பூம்பொழிலே யானாலும்
கட்டழகுக் கண்மணிநான் காணுமிடம் எல்லாம்நின்
மொட்டழகு வாய்திறந்து முத்துநகை சிந்துகின்ற
வட்டமுகம் தோன்றிமிக வாட்டுதடி காதலியே!
பேரழகுப் பெட்டகமே! பித்தனைப்போல் ஆகிவிட்டேன்;
காரணத்தை நீயறிந்தும் கண்டுகொள்ள வேயில்லை;
மாரனம்பு பாய்வதனால் வாட்டமுற்று நோகின்றேன்;
ஓரவிழிப் பார்வையினால் உற்சாகம் சேர்த்திடுவாய்
கீழ்க்காணும் கவிதைகளும் காதல் பாட்டுகளே. ஆனால்
நிரோட்டகம் என்று சொல்லப்படும் உதடு ஒட்டாமற்பாடப்படும்
ஒருவித வகையைச் சேர்ந்தவை. மெய்எழுத்துக்களில்
ப், ம், வ் என்ற மூன்றையும் உயிர் எழுத்துக்களில் உ, ஊ,
ஒ, ஓ, ஔ என்ற ஐந்தையும் இவற்றின் அடியாகப் பிறக்கும்
உயிர்மெய் எழுத்துக்களையும் விலக்கிப் பாடுதல் வேண்டும்.
கண்ணே! கனியே! தீங் கன்னலே! கற்கண்டே!
என்னே எழிலார்ந்தாய்; ஏந்திழையே! தண்டேனே!
கிட்டத்தில் நில்லென்றேன்; கேளாத காதினளாய்
எட்டிநீ செல்கின்றாய் ஏன்?
கண்ணாளா! சீராளா! காளையே! காதலரே!
எண்ணாத சிந்தனைகள் எண்ணாதீர் கண்ணாலஞ்
செய்யாத நேரத்தில் தீண்டற்க;தள்ளி
நிற்க;
நைகின்ற இன்னல் இலை..
கட்டழகுக் கண்மணிநான் காணுமிடம் எல்லாம்நின்
மொட்டழகு வாய்திறந்து முத்துநகை சிந்துகின்ற
வட்டமுகம் தோன்றிமிக வாட்டுதடி காதலியே!
பேரழகுப் பெட்டகமே! பித்தனைப்போல் ஆகிவிட்டேன்;
காரணத்தை நீயறிந்தும் கண்டுகொள்ள வேயில்லை;
மாரனம்பு பாய்வதனால் வாட்டமுற்று நோகின்றேன்;
ஓரவிழிப் பார்வையினால் உற்சாகம் சேர்த்திடுவாய்
கீழ்க்காணும் கவிதைகளும் காதல் பாட்டுகளே. ஆனால்
நிரோட்டகம் என்று சொல்லப்படும் உதடு ஒட்டாமற்பாடப்படும்
ஒருவித வகையைச் சேர்ந்தவை. மெய்எழுத்துக்களில்
ப், ம், வ் என்ற மூன்றையும் உயிர் எழுத்துக்களில் உ, ஊ,
ஒ, ஓ, ஔ என்ற ஐந்தையும் இவற்றின் அடியாகப் பிறக்கும்
உயிர்மெய் எழுத்துக்களையும் விலக்கிப் பாடுதல் வேண்டும்.
கண்ணே! கனியே! தீங் கன்னலே! கற்கண்டே!
என்னே எழிலார்ந்தாய்; ஏந்திழையே! தண்டேனே!
கிட்டத்தில் நில்லென்றேன்; கேளாத காதினளாய்
எட்டிநீ செல்கின்றாய் ஏன்?
கண்ணாளா! சீராளா! காளையே! காதலரே!
எண்ணாத சிந்தனைகள் எண்ணாதீர் கண்ணாலஞ்
செய்யாத நேரத்தில் தீண்டற்க;தள்ளி
நிற்க;
நைகின்ற இன்னல் இலை..
மிக அருமை
ReplyDelete