Sunday, 8 April 2018

பாரதி கண்ட கனவு நனவாகியதா?

பாரதியார்  கனவுகண்ட  புதுமைப்பெண்   தோன்றினளோ?
         பாரோர்   சொல்வீர்
பகட்டாக   உடுத்திடவோ  தமிழ்ப்பண்பை    மறந்திடவோ
         பகர்ந்தார்   அல்லர்;
நேர்மையாய்  நடந்திடவும்    கற்புநெறி   நல்லொழுக்கம்
        நியாயம்    தர்மம்
 நிகழ்த்திடவும்  எடுத்துரைத்தார்; ஆண்கள்பெண்கள்   சமமென்றார்;
        நிலைத்த  உண்மை
தீரமிக்க  பெண்கள்பலர்  தொடர்வண்டி  விமானங்கள்
        செலுத்து   கின்றார்;
திகைத்திடவே   விண்வெளியில்   சாகசமாய்  வலம்வந்து
        சிறக்கின்   றாரே;
வீரமிக  இராணுவத்தில்  பணிபுரிந்து  பகைவர்களை
        வெல்கின்   றாரே;
 மீசையினைப்   பாரதியார்  முறுக்கிடுவார்;  புகழ்ந்திடுவார்
         மீண்டும்   வந்தால்.

No comments:

Post a Comment