பாரதியார் கனவுகண்ட புதுமைப்பெண் தோன்றினளோ?
பாரோர் சொல்வீர்
பகட்டாக உடுத்திடவோ தமிழ்ப்பண்பை மறந்திடவோ
பகர்ந்தார் அல்லர்;
நேர்மையாய் நடந்திடவும் கற்புநெறி நல்லொழுக்கம்
நியாயம் தர்மம்
நிகழ்த்திடவும் எடுத்துரைத்தார்; ஆண்கள்பெண்கள் சமமென்றார்;
நிலைத்த உண்மை
தீரமிக்க பெண்கள்பலர் தொடர்வண்டி விமானங்கள்
செலுத்து கின்றார்;
திகைத்திடவே விண்வெளியில் சாகசமாய் வலம்வந்து
சிறக்கின் றாரே;
வீரமிக இராணுவத்தில் பணிபுரிந்து பகைவர்களை
வெல்கின் றாரே;
மீசையினைப் பாரதியார் முறுக்கிடுவார்; புகழ்ந்திடுவார்
மீண்டும் வந்தால்.
பாரோர் சொல்வீர்
பகட்டாக உடுத்திடவோ தமிழ்ப்பண்பை மறந்திடவோ
பகர்ந்தார் அல்லர்;
நேர்மையாய் நடந்திடவும் கற்புநெறி நல்லொழுக்கம்
நியாயம் தர்மம்
நிகழ்த்திடவும் எடுத்துரைத்தார்; ஆண்கள்பெண்கள் சமமென்றார்;
நிலைத்த உண்மை
தீரமிக்க பெண்கள்பலர் தொடர்வண்டி விமானங்கள்
செலுத்து கின்றார்;
திகைத்திடவே விண்வெளியில் சாகசமாய் வலம்வந்து
சிறக்கின் றாரே;
வீரமிக இராணுவத்தில் பணிபுரிந்து பகைவர்களை
வெல்கின் றாரே;
மீசையினைப் பாரதியார் முறுக்கிடுவார்; புகழ்ந்திடுவார்
மீண்டும் வந்தால்.
No comments:
Post a Comment