நீரின்றி அமையாது உலகு
கோடை வெப்பம் சுட்டெரிக்கக்
கொதிக்கும் சாலை தகித்திருக்க
ஆடை முழுதும் நனையும்வணம்
அருவி போல வியர்த்திருக்க
ஓடை ஏரி குளமெல்லாம்
ஒற்றைச் சொட்டு நீரின்றி
வாடி வறளும் நிலைகண்டு
வார்த்தை என்ன சொல்வேனே !
நாட்டு மக்கள் நாவறள
நலிந்து சோர்ந்து துவள்கின்றார் ;
வீட்டுக் குள்ளே இருந்தாலும்
வெந்து நொந்து தளர்கின்றார் ;
சூட்டைத் தணிக்கக் குடைபிடித்தும்
துணியால் மறைத்தும் நடக்கின்றார் ;
வாட்டம் போக்க மாமழையே
வளமாய்ப் பெய்து குளிரவைப்பாய்
மாதம் மூன்று மழைபெய்து
வாழ வைத்த இயற்கையன்னாய் !
யாது கார ணத்தாலே
எங்கள் நாட்டை வறளவைத்தாய் ?
போதும் அம்மா ! எமக்கிந்தப்
பொல்லா வறட்சி வேண்டாவே ;
தீது நீங்க உடனடியாய்ச்
செழித்த மழையைப் பெய வைப்பாய்
வறட்சி நிலவி வருத்திடினும்
மழையே பெய்து செழித்திடினும்
மறவீர் தண்ணீர் மேலாண்மை ;
மழைநீர் தன்னைச் சேகரிப்போம்
சிறந்த முறையிற் சிக்கனமாய்ச்
செலவு செய்து சேமிப்போம் ;
முறையாய்ப் பேணி நீர்வளத்தை
மூன்று மடங்காய்ப் பெருக்கிடுவோம்
போதும் அம்மா ! எமக்கிந்தப்
பொல்லா வறட்சி வேண்டாவே ;
தீது நீங்க உடனடியாய்ச்
செழித்த மழையைப் பெய வைப்பாய்
வறட்சி நிலவி வருத்திடினும்
மழையே பெய்து செழித்திடினும்
மறவீர் தண்ணீர் மேலாண்மை ;
மழைநீர் தன்னைச் சேகரிப்போம்
சிறந்த முறையிற் சிக்கனமாய்ச்
செலவு செய்து சேமிப்போம் ;
முறையாய்ப் பேணி நீர்வளத்தை
மூன்று மடங்காய்ப் பெருக்கிடுவோம்