நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.
கலித்தொகை--குறிஞ்சிக்கலி--பாடல் எண்:51--கபிலர்
"சுடர்த்தொடீஇ கேளாய், தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்(கு) அன்னை
'அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்றென்னை
வளைமுன்கை பற்றி நலிய, தெருமந்திட்(டு),
'அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்,
'உண்ணுநீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ,மற்(று) என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தானக் கள்வன் மகன்."
அருஞ்சொற் பொருள்:
சுடரத்தொடீஇ!--சுடரும் வளையல் அணிந்தவளே!; அடைச்
சுதல்--மலர் சூட்டுதல்; பட்டி--பசுக் கொட்டில்; தெருமந்திட்டு--
மனம் தடுமாறி; கோதை பரிந்து--மாலை அறுத்து
கருத்துரை:
மணலினால் சிற்றில் கட்டி மறுகினில் ஆடும் போதில்
இணக்கமில் குறும்பன் இந்த இல்லத்தைச் சிதைத்தான் முன்னாள்;
வணங்கிடா வம்புக் காரன் மாலையைப் பறித்தான்; நாங்கள்
சிணுங்கிடப் பந்தைக் கௌவித் தெருவினில் ஓடி னானே!
(மறுகு----தெரு).
பட்டியில் வாசம் செய்யும் பகடினை நிகர்த்த அன்னான்
வெட்டியாய்த் தெருவைச் சுற்றும் விடலைபோல் வளர்ந்து விட்டான்;
கட்டிய மனையில் யானும் கனிவுடைத் தாயும் ஓர்நாள்
மட்டிலா ஓய்வில் சற்றே மகிழ்ந்திடும் வேளை வந்தான்.
(பகடு---எருது)
'அளவிலாத் தாகம் 'என்றான்; அருந்திடத் தண்ணீர் கேட்டான்;
தளர்வினைக் கண்ட அன்னை தக்கபொற் பாத்தி ரத்தில்
இளகிய மனத்தால் நீரை எடுத்துவந் தனளே; அஃதைக்
"களங்கமில் விருந்தி னர்க்குக் கைகளில் தருவாய்" என்றாள்.
பாத்திரம் தனையான் நீட்டப், பாதகன் வளையல் பூண்ட
பூத்திறம் போலும் கையைப் பொசுக்கெனப் பற்றி னானே;
ஆத்திரம், மருட்சி பற்ற, அன்னையே இவனின் செய்கை
பார்த்திடாய் என்றேன்; தாயும் பதற்றமாய் அலறி வந்தாள்
விரைவினில் மருட்சி நீங்கி, "விக்கலால் துன்பம் உற்றான்;
அரைநொடி அச்சம் கொண்டேன்; ஆதலால் அழைத்தேன்" என்றேன்;
உரைத்திடேன் நிகழ்ந்த சேதி; உண்மையை அறியா அன்னை
துரையவன் பிடரி நீவித் "துன்பமே நீங்கிற்(று)" என்றாள்.
இத்தனை நிகழ்வும் நோக்கி எத்தன்தன் ஓரக் கண்ணால்
வித்தக மாகப் பார்த்து மெல்லிய முறுவல் பூத்தான்;
சித்தமே இழந்த நானும் சிறியதோர் நகையைக் காட்டிப்
பித்தனைக் கள்வன் தன்னைப் "பிரிந்துநீ செல்வாய்" என்றேன்.
விளக்கவுரை:
தலைவி தோழியிடம் கூறுகிறாள்:
சிறு வயதில் நாம் தெருவில் விளையாடும் பொழுது, மணலால்
சிற்றில் கட்டி மகிழ்வுடன் கொண்டாடுவது வழக்கம் . ஒருநாள்
இதுபோல விளையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த
ஒருவன் தன் கால்களால் சிற்றிலைச் சிதைத்தான். நாம் சூடி
யிருந்த மலர்களைப் பறித்துப் பிய்த்தெறிந்தான். நாம் விளை
யாடும் பந்துகளை எடுத்துக் கொண்டு தெருவழியே ஓடினான்.
இப்படியாக நம்மை நோகச் செய்தான் பட்டிக் காளை போன்றவன்.
ஒருநாள், அன்னையும் யானும் எங்கள் இல்லத்தில் இருந்த
பொழுது ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து "தாகமாக உள்ளது.
அருந்துவதற்குத் தண்ணீர் தருக!" என்றுரைத்தான். அவன்
வேறு யாரும் அல்லன்; நமக்கு ஏற்கெனவே துன்பம் தந்து
நம்மை நோகச் செய்தவன்தான். அன்னை உள்ளே சென்று
பொற்கலத்தில் தண்ணீர் கொண்டுவந்து "நீ இந்த நீரை
அவனுக்குப் பருகக் கொடு" என்று கூறினள். நானும் நீர்
நிரம்பிய பொற்கலத்தை அவனிடம் நீட்டினேன். அவன்
பழைய குறும்புக் காரன் என்று அப்பொழுது அறியேன்.
அவன் வளையல் அணிந்த என் கரங்களைப் பற்றிக்
கொண்டான். அவன் பிடி வலுவாக இருந்தமையாலும்,
மனம் தடுமாறியமையாலும் "அன்னையே! இவன் செய்த
செயலைப் பார்ப்பாய்" என்றேன். அன்னையவள் மனம்
பதறியபடி அலறிக் கொண்டு வந்தாள். எனக்கு என்ன
நேர்ந்ததோ? உடனேஅவளிடம் உண்மையைக் கூறா
மல், "இவன் நீர் அருந்தும் பொழுது விக்கினான். என்ன
வோ துயர் இவனை வாட்டுகிறது என்று எண்ணி உனை
அழைத்தேன்" என நவின்றேன்.அன்னை
இவன் பிடரியை நீவிவிட்டுச் சரியாகியது என்றாள். நான் உண்மையைச்
சொல்லாமல் பொய் பேசியதைக் கேட்ட அந்தக் குறும்பன்
என்னை ஓரக் கண்ணால் நோக்கி மெல்ல நகைத்தான்.
இவன் சிறந்த கள்வனின் மகன்; காதல் கள்வன். என்னை
என்னவென்று அழைப்பது? நானும் ஒருவகையில் கள்ளி
யே என நினைத்துப் புன்முறுவல் பூத்தேன்.
;
கலித்தொகை--குறிஞ்சிக்கலி--பாடல் எண்:51--கபிலர்
"சுடர்த்தொடீஇ கேளாய், தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்(கு) அன்னை
'அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்றென்னை
வளைமுன்கை பற்றி நலிய, தெருமந்திட்(டு),
'அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்,
'உண்ணுநீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ,மற்(று) என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தானக் கள்வன் மகன்."
அருஞ்சொற் பொருள்:
சுடரத்தொடீஇ!--சுடரும் வளையல் அணிந்தவளே!; அடைச்
சுதல்--மலர் சூட்டுதல்; பட்டி--பசுக் கொட்டில்; தெருமந்திட்டு--
மனம் தடுமாறி; கோதை பரிந்து--மாலை அறுத்து
கருத்துரை:
மணலினால் சிற்றில் கட்டி மறுகினில் ஆடும் போதில்
இணக்கமில் குறும்பன் இந்த இல்லத்தைச் சிதைத்தான் முன்னாள்;
வணங்கிடா வம்புக் காரன் மாலையைப் பறித்தான்; நாங்கள்
சிணுங்கிடப் பந்தைக் கௌவித் தெருவினில் ஓடி னானே!
(மறுகு----தெரு).
பட்டியில் வாசம் செய்யும் பகடினை நிகர்த்த அன்னான்
வெட்டியாய்த் தெருவைச் சுற்றும் விடலைபோல் வளர்ந்து விட்டான்;
கட்டிய மனையில் யானும் கனிவுடைத் தாயும் ஓர்நாள்
மட்டிலா ஓய்வில் சற்றே மகிழ்ந்திடும் வேளை வந்தான்.
(பகடு---எருது)
'அளவிலாத் தாகம் 'என்றான்; அருந்திடத் தண்ணீர் கேட்டான்;
தளர்வினைக் கண்ட அன்னை தக்கபொற் பாத்தி ரத்தில்
இளகிய மனத்தால் நீரை எடுத்துவந் தனளே; அஃதைக்
"களங்கமில் விருந்தி னர்க்குக் கைகளில் தருவாய்" என்றாள்.
பாத்திரம் தனையான் நீட்டப், பாதகன் வளையல் பூண்ட
பூத்திறம் போலும் கையைப் பொசுக்கெனப் பற்றி னானே;
ஆத்திரம், மருட்சி பற்ற, அன்னையே இவனின் செய்கை
பார்த்திடாய் என்றேன்; தாயும் பதற்றமாய் அலறி வந்தாள்
விரைவினில் மருட்சி நீங்கி, "விக்கலால் துன்பம் உற்றான்;
அரைநொடி அச்சம் கொண்டேன்; ஆதலால் அழைத்தேன்" என்றேன்;
உரைத்திடேன் நிகழ்ந்த சேதி; உண்மையை அறியா அன்னை
துரையவன் பிடரி நீவித் "துன்பமே நீங்கிற்(று)" என்றாள்.
இத்தனை நிகழ்வும் நோக்கி எத்தன்தன் ஓரக் கண்ணால்
வித்தக மாகப் பார்த்து மெல்லிய முறுவல் பூத்தான்;
சித்தமே இழந்த நானும் சிறியதோர் நகையைக் காட்டிப்
பித்தனைக் கள்வன் தன்னைப் "பிரிந்துநீ செல்வாய்" என்றேன்.
விளக்கவுரை:
தலைவி தோழியிடம் கூறுகிறாள்:
சிறு வயதில் நாம் தெருவில் விளையாடும் பொழுது, மணலால்
சிற்றில் கட்டி மகிழ்வுடன் கொண்டாடுவது வழக்கம் . ஒருநாள்
இதுபோல விளையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த
ஒருவன் தன் கால்களால் சிற்றிலைச் சிதைத்தான். நாம் சூடி
யிருந்த மலர்களைப் பறித்துப் பிய்த்தெறிந்தான். நாம் விளை
யாடும் பந்துகளை எடுத்துக் கொண்டு தெருவழியே ஓடினான்.
இப்படியாக நம்மை நோகச் செய்தான் பட்டிக் காளை போன்றவன்.
ஒருநாள், அன்னையும் யானும் எங்கள் இல்லத்தில் இருந்த
பொழுது ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து "தாகமாக உள்ளது.
அருந்துவதற்குத் தண்ணீர் தருக!" என்றுரைத்தான். அவன்
வேறு யாரும் அல்லன்; நமக்கு ஏற்கெனவே துன்பம் தந்து
நம்மை நோகச் செய்தவன்தான். அன்னை உள்ளே சென்று
பொற்கலத்தில் தண்ணீர் கொண்டுவந்து "நீ இந்த நீரை
அவனுக்குப் பருகக் கொடு" என்று கூறினள். நானும் நீர்
நிரம்பிய பொற்கலத்தை அவனிடம் நீட்டினேன். அவன்
பழைய குறும்புக் காரன் என்று அப்பொழுது அறியேன்.
அவன் வளையல் அணிந்த என் கரங்களைப் பற்றிக்
கொண்டான். அவன் பிடி வலுவாக இருந்தமையாலும்,
மனம் தடுமாறியமையாலும் "அன்னையே! இவன் செய்த
செயலைப் பார்ப்பாய்" என்றேன். அன்னையவள் மனம்
பதறியபடி அலறிக் கொண்டு வந்தாள். எனக்கு என்ன
நேர்ந்ததோ? உடனேஅவளிடம் உண்மையைக் கூறா
மல், "இவன் நீர் அருந்தும் பொழுது விக்கினான். என்ன
வோ துயர் இவனை வாட்டுகிறது என்று எண்ணி உனை
அழைத்தேன்" என நவின்றேன்.அன்னை
இவன் பிடரியை நீவிவிட்டுச் சரியாகியது என்றாள். நான் உண்மையைச்
சொல்லாமல் பொய் பேசியதைக் கேட்ட அந்தக் குறும்பன்
என்னை ஓரக் கண்ணால் நோக்கி மெல்ல நகைத்தான்.
இவன் சிறந்த கள்வனின் மகன்; காதல் கள்வன். என்னை
என்னவென்று அழைப்பது? நானும் ஒருவகையில் கள்ளி
யே என நினைத்துப் புன்முறுவல் பூத்தேன்.
;