குறிஞ்சிப் பாட்டு(சங்க நூல்; புலவர் கபிலர் இயற்றியது)
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி---மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
இச்செய்யுளில் குறிப்பிட்டபடி, திருமுருகாற்றுப் படை,
பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்
பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை,
மலைபடுகடாம் ஆகிய பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்று
குறிஞ்சிப் பாட்டாகும். இதனை இயற்றியவர் புலவர்
கபிலர் ஆவார். பிரகத்தன் என்ற ஆரிய மன்னனுக்குத்
தமிழர் பின்பற்றும் களவு ஒழுக்கத்தைப் பற்றிய தவறான
புரிதலை விலக்கிச் சரியான, செம்மையான விளக்கத்தைப்
புரியவைத்து, ஆரியர் திருமண நெறியை விடவும் தமிழர்
திருமண நெறி உயர்வானது என்பதை வலியுறுத்துவதற்
காகப் பாடியதாகச் சொல்வார்கள்.
நூற்பொருள்:அகப்பொருள்; திணை:குறிஞ்சித் திணை;
துறை:அறத்தொடு நிற்றல்; யாப்பு:ஆசிரியப்பா; அடிகள்:
261. அகத்திணையில் களவொழுக்கம், கற்பொழுக்கம்
எனப்படும் இருபெரும் பிரிவுகள் உள. இவ்விரண்டையும்
இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும். தலைவி-
தலைவனின் களவொழுக்கத்தை வெளிப்படுத்துதல் அறத்
தொடு நிற்றல் ஆகும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய்
ஆகியோர் அறத்தொடு நிற்பது வழக்கம். இதன் விளைவு
தலைவியைத் தலைவனுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்
பதாகும். அதாவது, தலைவியைத் தலைவனுக்குத் திருமணம்
செய்வித்தலாகும்.
இந்தப் பாடல் தோழி செவிலியிடம் கூறும் கூற்றாக அமைந்
துள்ளது."அன்னாய் வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக;
தாயே! என் தோழி(தலைவி) ஒளிரும் நெற்றியும் செழித்து
வளர்ந்த மென்மையான கூந்தலும் உடையவள். அவள் மேனி
யிலுள்ள அணிகலன்கள் கழன்று விழுமாறு பண்ணிய, குணப்
படுத்த முடியாத கொடிய நோய் பற்றி அகன்ற ஊரிலுள்ளோரிடம்
வினவினாய். கடவுளரை வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித
மலர்களைத் தூவியும், பல்வேறு தெய்வங்களை மனத்தில் எண்ணி,
நறுமணப் புகையும் சந்தனமும் படைத்தும் அவளின் நோய்பற்றி அறிய
முயன்றாய். அது முடியாமல் மனங்கலங்கிக் குறையாத மயக்கத்தால்
வருந்துகிறாய். அவளது நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள்
மெலியவும், வளையல்கள் கழலுதலைப் பிறர் அறியவும், தனிமைத்துயர்
தோன்றி வருத்தவும் அவள் படும் இன்னல்களைக் கண்டு எனது பேச்சு
சாமர்த்தியத்தால் அவளிடம் விசாரித்தேன். அவள் உடனே என்னிடம்
'"முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும் நேர்த்தியாகச் செய்த
அணிகலன்கள் சீர்குலைந்து போனால் மீண்டும் சேர்த்துக் கட்ட முடியும்.
ஆனால், நற்குணங்களின் தன்மையும், உயர்நிலையும்,ஒழுக்கமும் சீர்
குலைந்தால், அக் கறையைக் கழுவி யகற்றிப் பழைய நிலையைக் கொண்டு
வருதல் எளிதன்று
என அறிஞர் கூறுவர். என் பெற்றோரின் விருப்ப
மும் என் நாணமும் மடனும் ஒருசேர நீங்கிப் போக, என் தந்தையின் அரிய
காவலையும் மீறித் தலைவனும் நானும் புரிந்துகொண்ட களவுமணம்
(மன்றல்--இருவரும் கணவனும் மனைவியும் ஆக இணைந்தனர்)
பற்றிய தகவலைத் தெரிவித்தால் மனம் ஆறுதல் அடையும். பெற்றோர்
இசைவு தெரிவிக்காவிடில் இறக்கும் வரை காத்திருந்து அடுத்த பிறவி
யில் மணம் செய்விக்கட்டும் '" என்று சொல்லிக் கண்ணீர் உகுத்தாள்.
தலைவியும் தலைவனும் புரிந்துகொண்டது பெற்றோரும் பிறரும்
அறியாவகையில் நிகழ்த்தப் பட்ட களவுமணம். பெற்றோரும் பிறரும்
அறிய வெளிப்படையாக நிகழ்த்தப்பட்டால் முறையான மணமாகும்.
தலைவியின் இப் புலம்பலையும் அழுகையையும் கேட்ட நான் பகைமை
கொண்ட இரு பெரு வேந்தர்களுக்கிடையில் சமாதானம் செய்ய முயன்று
அறிவுரை கூறும் போது அறிஞர்கள் எத்தகைய அச்சத்துடன் இருப்பார்களோ
அத்தகைய அச்சத்தை உணர்ந்தேன். தலைவன் தனக்குச் சகல விதத்திலும்
(செல்வ நிலை, சுற்றத்தார், இனத்தார் போன்ற அனைத்து அம்சங்களும்)
இணையானவனா? என்று ஆராயாமல் களவுமணத்தை இருவரும் விரும்பிச்
செய்து கொண்டது எப்படி என்று உன்னிடம் சொல்வேன். அதைக் கேட்டு
நீ கொஞ்சமும் சினங்கொள்ள வேண்டா" என்றாள்.
"தினைப்புனம் காத்து மாலையில் இல்லம் திரும்புக" என்று கூறி எங்களை
அனுப்பி வைத்தாய். விளைந்திருக்கும் தினைக்கதிர் யானையின் துதிக்கை
போல வளைந்திருக்கும். விளைந்த கதிருக்குமேலாக இரண்டு தினையிலைத்
தோகைகள் நிமிர்ந்திருப்பது யானையின் தந்தங்கள் போல் இருக்கும். துதிக்
கைகளில் உள்ள மடிப்பு வளைவுகள் போலத் தினைக்கதிர் திட்டுத் திட்டாகக்
காணப்படும். நீ சொன்னபடி தழல், தட்டை, குளிர் எனப்படும் கருவிகளில் இசை
எழுப்பிக்கொண்டு தினைப்புனம் காத்துக் கொண்டிருக்கும் வேளையிலே
அள்ள அள்ளக் குறையாத கடலில் இருந்து மேகமானது நீரை முகர்ந்துகொண்டு
காற்றால் உந்தப்பட்டு வானில் மிதந்து அல்லாடிக் கொண்டிருந்தது. ஏராளமாகச்
சென்ற மேகங்கள் ஒன்றோடொன்று மோதும்போது முரசு முழக்கத்துடன் செல்லும்
முருகனின் வேல் மின்னுவது போல மின்னல்கள் தோன்றின. அவை மலைமேல்
மழையாகப் பொழிந்தன. மழைநீர் உச்சிமலையிலிருந்து இறங்கி அருவியாக
விழ அந்த அருவியில் நீங்காத ஆவலுடன் கட்டுப்பாடில்லாமல் நீராடிக் கொண்டிருந்
தோம். பளிங்கு போன்ற அச்சுனையில் மூழ்கு நீச்சல் போட்டுக்கொண்டிருந்தோம்.
கொட்டும் அருவியிலும், சுனையிலும் நீராடினோம். ஈரம் கோத்துக் கொண்டு பின்
னிக் கிடந்த எங்களது கூந்தலில் நீர்த்திவலைகள் சொட்டிப் பின் எங்களது கூந்த
லில் இருந்து தோள் பக்கமாக விழ, அவற்றைப் பிழிந்து உலர்த்தினோம். அருகில்
பூக்கள் பூத்துக் கிடந்தன. அவை பின்வருமாறு:
"ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடு வேரி, தேமா , மணிச்சிகை,
உரிது நாறவிழ் தொத்துந்தூழ், கூவிளம்,
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான்பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, ஆதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல்லிவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தளவம், முள்தாள் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங் குரலி,
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கிணர்க் கொன்றை,
அடும்பு, அமராத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும்புன் னாகம்,
பாரம், பீரம், பைங்குருக் கத்தி,
ஆரம், காழ்வை, கடியிரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,
அரக்கு விரித்தன்ன பருவேரம் புழகுடன்,"
(பூக்களைப் பறித்து வந்து குவித்து விளையாடுவது சங்ககால விளை
யாட்டுகளில் ஓன்று. குவித்த பூக்களைத் தலையில் சூடி ஒப்பனை
செய்து கொள்ளுதல், மாலையாகக் கட்டி அணிந்து கொள்ளுதல்,
தழையோடு கூடிய பூக்களைக் கொண்டு தழையாடை செய்து உடுத்திக்
கொள்ளுதல் முதலானவையும் பூவிளையாட்டில் அடங்கும்) .மழை
பெய்து கழுவிய பாறையின்மேல் நாங்கள் பூக்களைக் குவித்துப் பூ
விளையாட்டை விளையாடினோம். அங்கே அசோகமரம் எரியும் தீயைப்
போலப் பூத்திருந்தது. அப்பூக்கள் உதிர்ந்து சிவப்புக் கம்பளம் விரிந்தது
போல இருந்த அதன் மரத்தடியில் நிழலுக்காகத் தங்கியிருந்தோம்.
அப்பொழுது எண்ணெய் தடவிப் பளபளப்பாக இருந்த சுருள்முடி
கொண்ட ஒருவன் அங்கு வந்தான். மழையில் நனைந்திருந்த
தன் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான்.தகரக் கட்டை
யிலிருந்து வடித்த வாசனைத் திரவியத்தைப் பூசியவனாகத்,
தன் தலையில் பலவண்ணப் பூக்களைச் சூடியவனாக வந்தான்.
தன் மார்பில் வைரமாலையுடன் பூக்களால் ஆன மாலையையும்
அணிந்திருந்தான். காதோரம் அசோகப் பூவைச் செருகிக் கொண்
டிருந்தான். மார்பில் சந்தனத்தைப் பூசியிருந்தான்.இடுப்பில் கச்சை
யணிந்திருந்தான். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்தான்.தடக்
கைகளில் வில்லை ஏந்தியவாறு வேட்டை நாய்கள் புடைசூழ எம்மை
நோக்கி வந்தான். அவனையும் அவனுடன் வரும் நாய்களையும்
கண்டு அஞ்சி எம் கால்கள் தள்ளாட வேறொரு இடத்தை நோக்கி
நகர்ந்தோம். அவன் மேன்மேலும் எம்மைப் பின் தொடர்ந்துவந்து
"என் வேட்டை விலங்கு தப்பிவிட்டது. இந்தப்பக்கம் வந்ததா? " என
வினவ, நாங்கள் அச்சத்தால் விடை கூறாமல் இருக்க, அவன்" எம்
வேட்டை விலங்கைக் கண்டுபிடித்துத் தராவிட்டாலும், எம்முடன் ஒரு
வார்த்தையாவது உரையாடக் கூடாதா?" என்றான்.
அப்பொழுது அருகேயுள்ள குடிசையில் வாழும் ஒரு பெண் தன்
கணவனுக்குத் தேன்கலந்த கள்ளைப் பருகக் கொடுக்க, அவன்
அதனைக் குடித்தபின் தினைப்புனக் காவலைச் சிறிது நேரம்
நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க, அங்குவந்த யானையொன்று தினைக்
கதிரை உண்டு பெரும்பகுதியை அழித்துவிட்டது. அதனால் சின
மடைந்த அக் கணவன் வில்லை வளைத்து அம்பெய்தும் வேறு
வகைகளிலும் யானையை விரட்டினான். அதனால் சீற்றமடைந்த
யானை எமக்கெதிரே வந்ததனால், ஒன்றும் செய்ய அறியாதவராய்
நாங்கள் நடுக்கமுற்று நாணத்தையிழந்து தலைவனருகே சென்று
நடுங்கிக் கொண்டு நின்றோம். அவன் உடனே தன் வில்லை வளைத்து
அந்த யானையின் முகத்தில் அம்பெய்தான். அதனால் யானைக்கு
நெற்றியில் புண் உண்டாகிக் குருதி வடியலாயிற்று. புண்பட்ட
யானை பின்வாங்கி ஓடிவிட அந்த இடம் முருகக் கடவுள் தீண்டிய
மகளிர் சாமியாடிய இடம் போல இருந்தது. நாங்கள் கடம்ப மரத்தின்
அடிப் பகுதியைக் கைகளால் சுற்றிக்கொண்டு இன்னும் நடுக்கம்
தீராமல் நின்றிருந்தோம். அதனை நோக்கிய தலைவன் எங்களை
நெருங்கிவந்து தலைவியின் நெற்றியை நீவி அவள் மார்பு தன்
மார்புடன் பொருந்துமாறு தழுவிக்கொண்டான். தலைவியும் அவனை
விலக்கவில்லை. தலைவன் என்னை விலகிக் கொள்ளுமாறு பார்வை
யால் கூற நான் விலகிக்கொண்டேன். அவளிடம் "பலர் அறிய உன்னை
உறுதியாகச் சில நாட்களில் மணப்பேன்" என்று சூளுரைத்தான். மேலும்
"பெரிய கலத்தில் சமைத்து, நெய்யும் கொழுப்பும் கலந்த சோற்றைப்
பலருக்கும் கொடுத்தபிறகு எஞ்சியதை உன்னோடு சேர்ந்து உண்பேன்"
என்றும் கூறினான். அவன் வளமிக்க மலைக்குத் தலைவன். தலைவி
அவன் பேச்சை நம்பிப் பகற்பொழுதை அவனுடன் கழித்தாள். மாலை
கதிரவன் மறைந்தவுடன் அவன் தலைவியின் முன்கை பற்றி எமது
பழைய ஊரின் நீர்பருகும் துறையருகே எங்களைப் பாதுகாப்பாக விட்டுச்
சென்றான்.
அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவிலும் தலைவியைத் தேடி வருதலை
வழக்கமாக்கிக் கொண்டான். ஊர்க் காவல் கடுமையாக நடைபெற்
றாலும் சீற்றத்தோடு நாய்கள் குரைத்தாலும் நீ துயில் நீங்கி எழுந்
தாலும் நிலவொளி மிக்க வெளிச்சத்தையுண்டாக்கினாலும் தலைவி
யின் தீண்டல் கிடைக்காமற் போனாலும் மனந்தளராமல் ஒவ்வோர்
இரவிலும் வருகின்றான். எத்தகைய இடர்களை எதிர்நோக்க நேர்ந்
தாலும் (வழியிலே சந்திக்க நேரும் புலிகள், யாளிகள், கரடிகள், ஆமான்
ஏறுகள், யானைகள் முதலான விலங்குகள் மற்றும் நள்ளிரவில் சுற்றித்
திரியும் பாம்புகள், பேய்கள், நீர்நிலைகளில் வாழும் முதலைகள், இடங்கர்
கள், கராம் இன முதலைகள் போன்றவை) ஆறலை கள்வரால் இன்னல்
நிகழ்ந்தாலும் வழுக்குப் பாதை மற்றும் முட்டுப் பாதை போன்றவை
தடைசெய்தாலும் வராமல் இரான்" என்றாள் தோழி. தலைவன் இத்தனை இடர்களை எதிர்கொண்டு வருவது மிகவும் ஆபத்து என்று எண்ணியும் தலைவனின் பாதுகாப்பு குறித்து அஞ்சியும் தலைவி அழுகின்றாள். ஊரார் பேசும் அலருக்கும் அஞ்சுகின் றாள். திருமணம் செய்து கொண்டால்
இத்தகைய சிக்கல்கள் நீங்கும் என்று
நம்பினாள். களவு ஒழுக்கத்தைத்
தோழி வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து நல்லவை நிகழ்ந்திருக்கும்.
இவ்வாறான நெறியும் நியதியும் மிக்க தமிழர் அகவாழ்க்கையை ஆரிய
மன்னன் பிரகத்தனுக்குக் கபிலர் விளக்கியுள்ளார். தமிழரின் களவு மணம்
ஆரியரின் காந்தர்வ விவாகத்துக்குச் சமமானது என்று தமிழறிஞர் கருது
கின்றனர். ஆரியரின் எட்டு திருமணவகைகளில் ஒன்றான காந்தர்வ விவா
கத்தில் சிற்றின்பமே முக்கிய நோக்கமாக இருப்பதாகவும், தமிழர் திருமண
நிகழ்வு ஆண் பெண் ஒருவர்க்கொருவர் அன்பு செலுத்துதல், மக்களைப்
பெற்று நல்ல குடி மக்களாக வளர்த்தல் முதலான நோக்கங்களைக் கொண்டு
திகழ்வதாகவும் புலவர்கள் கருதுகின்றனர்.. இவ்விவரங்களை ஆரிய அரசன்
பிரகத்தனுக்குக் கபிலர் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறியதாக
அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர். எனவே, கபிலரின் குறிஞ்சிப்பாட்டை
இரசித்துப் படித்து இன்புறுவோமாக!
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி---மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
இச்செய்யுளில் குறிப்பிட்டபடி, திருமுருகாற்றுப் படை,
பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்
பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை,
மலைபடுகடாம் ஆகிய பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்று
குறிஞ்சிப் பாட்டாகும். இதனை இயற்றியவர் புலவர்
கபிலர் ஆவார். பிரகத்தன் என்ற ஆரிய மன்னனுக்குத்
தமிழர் பின்பற்றும் களவு ஒழுக்கத்தைப் பற்றிய தவறான
புரிதலை விலக்கிச் சரியான, செம்மையான விளக்கத்தைப்
புரியவைத்து, ஆரியர் திருமண நெறியை விடவும் தமிழர்
திருமண நெறி உயர்வானது என்பதை வலியுறுத்துவதற்
காகப் பாடியதாகச் சொல்வார்கள்.
நூற்பொருள்:அகப்பொருள்; திணை:குறிஞ்சித் திணை;
துறை:அறத்தொடு நிற்றல்; யாப்பு:ஆசிரியப்பா; அடிகள்:
261. அகத்திணையில் களவொழுக்கம், கற்பொழுக்கம்
எனப்படும் இருபெரும் பிரிவுகள் உள. இவ்விரண்டையும்
இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும். தலைவி-
தலைவனின் களவொழுக்கத்தை வெளிப்படுத்துதல் அறத்
தொடு நிற்றல் ஆகும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய்
ஆகியோர் அறத்தொடு நிற்பது வழக்கம். இதன் விளைவு
தலைவியைத் தலைவனுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்
பதாகும். அதாவது, தலைவியைத் தலைவனுக்குத் திருமணம்
செய்வித்தலாகும்.
இந்தப் பாடல் தோழி செவிலியிடம் கூறும் கூற்றாக அமைந்
துள்ளது."அன்னாய் வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக;
தாயே! என் தோழி(தலைவி) ஒளிரும் நெற்றியும் செழித்து
வளர்ந்த மென்மையான கூந்தலும் உடையவள். அவள் மேனி
யிலுள்ள அணிகலன்கள் கழன்று விழுமாறு பண்ணிய, குணப்
படுத்த முடியாத கொடிய நோய் பற்றி அகன்ற ஊரிலுள்ளோரிடம்
வினவினாய். கடவுளரை வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித
மலர்களைத் தூவியும், பல்வேறு தெய்வங்களை மனத்தில் எண்ணி,
நறுமணப் புகையும் சந்தனமும் படைத்தும் அவளின் நோய்பற்றி அறிய
முயன்றாய். அது முடியாமல் மனங்கலங்கிக் குறையாத மயக்கத்தால்
வருந்துகிறாய். அவளது நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள்
மெலியவும், வளையல்கள் கழலுதலைப் பிறர் அறியவும், தனிமைத்துயர்
தோன்றி வருத்தவும் அவள் படும் இன்னல்களைக் கண்டு எனது பேச்சு
சாமர்த்தியத்தால் அவளிடம் விசாரித்தேன். அவள் உடனே என்னிடம்
'"முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும் நேர்த்தியாகச் செய்த
அணிகலன்கள் சீர்குலைந்து போனால் மீண்டும் சேர்த்துக் கட்ட முடியும்.
ஆனால், நற்குணங்களின் தன்மையும், உயர்நிலையும்,ஒழுக்கமும் சீர்
குலைந்தால், அக் கறையைக் கழுவி யகற்றிப் பழைய நிலையைக் கொண்டு
வருதல் எளிதன்று
என அறிஞர் கூறுவர். என் பெற்றோரின் விருப்ப
மும் என் நாணமும் மடனும் ஒருசேர நீங்கிப் போக, என் தந்தையின் அரிய
காவலையும் மீறித் தலைவனும் நானும் புரிந்துகொண்ட களவுமணம்
(மன்றல்--இருவரும் கணவனும் மனைவியும் ஆக இணைந்தனர்)
பற்றிய தகவலைத் தெரிவித்தால் மனம் ஆறுதல் அடையும். பெற்றோர்
இசைவு தெரிவிக்காவிடில் இறக்கும் வரை காத்திருந்து அடுத்த பிறவி
யில் மணம் செய்விக்கட்டும் '" என்று சொல்லிக் கண்ணீர் உகுத்தாள்.
தலைவியும் தலைவனும் புரிந்துகொண்டது பெற்றோரும் பிறரும்
அறியாவகையில் நிகழ்த்தப் பட்ட களவுமணம். பெற்றோரும் பிறரும்
அறிய வெளிப்படையாக நிகழ்த்தப்பட்டால் முறையான மணமாகும்.
தலைவியின் இப் புலம்பலையும் அழுகையையும் கேட்ட நான் பகைமை
கொண்ட இரு பெரு வேந்தர்களுக்கிடையில் சமாதானம் செய்ய முயன்று
அறிவுரை கூறும் போது அறிஞர்கள் எத்தகைய அச்சத்துடன் இருப்பார்களோ
அத்தகைய அச்சத்தை உணர்ந்தேன். தலைவன் தனக்குச் சகல விதத்திலும்
(செல்வ நிலை, சுற்றத்தார், இனத்தார் போன்ற அனைத்து அம்சங்களும்)
இணையானவனா? என்று ஆராயாமல் களவுமணத்தை இருவரும் விரும்பிச்
செய்து கொண்டது எப்படி என்று உன்னிடம் சொல்வேன். அதைக் கேட்டு
நீ கொஞ்சமும் சினங்கொள்ள வேண்டா" என்றாள்.
"தினைப்புனம் காத்து மாலையில் இல்லம் திரும்புக" என்று கூறி எங்களை
அனுப்பி வைத்தாய். விளைந்திருக்கும் தினைக்கதிர் யானையின் துதிக்கை
போல வளைந்திருக்கும். விளைந்த கதிருக்குமேலாக இரண்டு தினையிலைத்
தோகைகள் நிமிர்ந்திருப்பது யானையின் தந்தங்கள் போல் இருக்கும். துதிக்
கைகளில் உள்ள மடிப்பு வளைவுகள் போலத் தினைக்கதிர் திட்டுத் திட்டாகக்
காணப்படும். நீ சொன்னபடி தழல், தட்டை, குளிர் எனப்படும் கருவிகளில் இசை
எழுப்பிக்கொண்டு தினைப்புனம் காத்துக் கொண்டிருக்கும் வேளையிலே
அள்ள அள்ளக் குறையாத கடலில் இருந்து மேகமானது நீரை முகர்ந்துகொண்டு
காற்றால் உந்தப்பட்டு வானில் மிதந்து அல்லாடிக் கொண்டிருந்தது. ஏராளமாகச்
சென்ற மேகங்கள் ஒன்றோடொன்று மோதும்போது முரசு முழக்கத்துடன் செல்லும்
முருகனின் வேல் மின்னுவது போல மின்னல்கள் தோன்றின. அவை மலைமேல்
மழையாகப் பொழிந்தன. மழைநீர் உச்சிமலையிலிருந்து இறங்கி அருவியாக
விழ அந்த அருவியில் நீங்காத ஆவலுடன் கட்டுப்பாடில்லாமல் நீராடிக் கொண்டிருந்
தோம். பளிங்கு போன்ற அச்சுனையில் மூழ்கு நீச்சல் போட்டுக்கொண்டிருந்தோம்.
கொட்டும் அருவியிலும், சுனையிலும் நீராடினோம். ஈரம் கோத்துக் கொண்டு பின்
னிக் கிடந்த எங்களது கூந்தலில் நீர்த்திவலைகள் சொட்டிப் பின் எங்களது கூந்த
லில் இருந்து தோள் பக்கமாக விழ, அவற்றைப் பிழிந்து உலர்த்தினோம். அருகில்
பூக்கள் பூத்துக் கிடந்தன. அவை பின்வருமாறு:
"ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடு வேரி, தேமா , மணிச்சிகை,
உரிது நாறவிழ் தொத்துந்தூழ், கூவிளம்,
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான்பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, ஆதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல்லிவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தளவம், முள்தாள் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங் குரலி,
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கிணர்க் கொன்றை,
அடும்பு, அமராத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும்புன் னாகம்,
பாரம், பீரம், பைங்குருக் கத்தி,
ஆரம், காழ்வை, கடியிரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,
அரக்கு விரித்தன்ன பருவேரம் புழகுடன்,"
(பூக்களைப் பறித்து வந்து குவித்து விளையாடுவது சங்ககால விளை
யாட்டுகளில் ஓன்று. குவித்த பூக்களைத் தலையில் சூடி ஒப்பனை
செய்து கொள்ளுதல், மாலையாகக் கட்டி அணிந்து கொள்ளுதல்,
தழையோடு கூடிய பூக்களைக் கொண்டு தழையாடை செய்து உடுத்திக்
கொள்ளுதல் முதலானவையும் பூவிளையாட்டில் அடங்கும்) .மழை
பெய்து கழுவிய பாறையின்மேல் நாங்கள் பூக்களைக் குவித்துப் பூ
விளையாட்டை விளையாடினோம். அங்கே அசோகமரம் எரியும் தீயைப்
போலப் பூத்திருந்தது. அப்பூக்கள் உதிர்ந்து சிவப்புக் கம்பளம் விரிந்தது
போல இருந்த அதன் மரத்தடியில் நிழலுக்காகத் தங்கியிருந்தோம்.
அப்பொழுது எண்ணெய் தடவிப் பளபளப்பாக இருந்த சுருள்முடி
கொண்ட ஒருவன் அங்கு வந்தான். மழையில் நனைந்திருந்த
தன் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான்.தகரக் கட்டை
யிலிருந்து வடித்த வாசனைத் திரவியத்தைப் பூசியவனாகத்,
தன் தலையில் பலவண்ணப் பூக்களைச் சூடியவனாக வந்தான்.
தன் மார்பில் வைரமாலையுடன் பூக்களால் ஆன மாலையையும்
அணிந்திருந்தான். காதோரம் அசோகப் பூவைச் செருகிக் கொண்
டிருந்தான். மார்பில் சந்தனத்தைப் பூசியிருந்தான்.இடுப்பில் கச்சை
யணிந்திருந்தான். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்தான்.தடக்
கைகளில் வில்லை ஏந்தியவாறு வேட்டை நாய்கள் புடைசூழ எம்மை
நோக்கி வந்தான். அவனையும் அவனுடன் வரும் நாய்களையும்
கண்டு அஞ்சி எம் கால்கள் தள்ளாட வேறொரு இடத்தை நோக்கி
நகர்ந்தோம். அவன் மேன்மேலும் எம்மைப் பின் தொடர்ந்துவந்து
"என் வேட்டை விலங்கு தப்பிவிட்டது. இந்தப்பக்கம் வந்ததா? " என
வினவ, நாங்கள் அச்சத்தால் விடை கூறாமல் இருக்க, அவன்" எம்
வேட்டை விலங்கைக் கண்டுபிடித்துத் தராவிட்டாலும், எம்முடன் ஒரு
வார்த்தையாவது உரையாடக் கூடாதா?" என்றான்.
அப்பொழுது அருகேயுள்ள குடிசையில் வாழும் ஒரு பெண் தன்
கணவனுக்குத் தேன்கலந்த கள்ளைப் பருகக் கொடுக்க, அவன்
அதனைக் குடித்தபின் தினைப்புனக் காவலைச் சிறிது நேரம்
நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க, அங்குவந்த யானையொன்று தினைக்
கதிரை உண்டு பெரும்பகுதியை அழித்துவிட்டது. அதனால் சின
மடைந்த அக் கணவன் வில்லை வளைத்து அம்பெய்தும் வேறு
வகைகளிலும் யானையை விரட்டினான். அதனால் சீற்றமடைந்த
யானை எமக்கெதிரே வந்ததனால், ஒன்றும் செய்ய அறியாதவராய்
நாங்கள் நடுக்கமுற்று நாணத்தையிழந்து தலைவனருகே சென்று
நடுங்கிக் கொண்டு நின்றோம். அவன் உடனே தன் வில்லை வளைத்து
அந்த யானையின் முகத்தில் அம்பெய்தான். அதனால் யானைக்கு
நெற்றியில் புண் உண்டாகிக் குருதி வடியலாயிற்று. புண்பட்ட
யானை பின்வாங்கி ஓடிவிட அந்த இடம் முருகக் கடவுள் தீண்டிய
மகளிர் சாமியாடிய இடம் போல இருந்தது. நாங்கள் கடம்ப மரத்தின்
அடிப் பகுதியைக் கைகளால் சுற்றிக்கொண்டு இன்னும் நடுக்கம்
தீராமல் நின்றிருந்தோம். அதனை நோக்கிய தலைவன் எங்களை
நெருங்கிவந்து தலைவியின் நெற்றியை நீவி அவள் மார்பு தன்
மார்புடன் பொருந்துமாறு தழுவிக்கொண்டான். தலைவியும் அவனை
விலக்கவில்லை. தலைவன் என்னை விலகிக் கொள்ளுமாறு பார்வை
யால் கூற நான் விலகிக்கொண்டேன். அவளிடம் "பலர் அறிய உன்னை
உறுதியாகச் சில நாட்களில் மணப்பேன்" என்று சூளுரைத்தான். மேலும்
"பெரிய கலத்தில் சமைத்து, நெய்யும் கொழுப்பும் கலந்த சோற்றைப்
பலருக்கும் கொடுத்தபிறகு எஞ்சியதை உன்னோடு சேர்ந்து உண்பேன்"
என்றும் கூறினான். அவன் வளமிக்க மலைக்குத் தலைவன். தலைவி
அவன் பேச்சை நம்பிப் பகற்பொழுதை அவனுடன் கழித்தாள். மாலை
கதிரவன் மறைந்தவுடன் அவன் தலைவியின் முன்கை பற்றி எமது
பழைய ஊரின் நீர்பருகும் துறையருகே எங்களைப் பாதுகாப்பாக விட்டுச்
சென்றான்.
அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவிலும் தலைவியைத் தேடி வருதலை
வழக்கமாக்கிக் கொண்டான். ஊர்க் காவல் கடுமையாக நடைபெற்
றாலும் சீற்றத்தோடு நாய்கள் குரைத்தாலும் நீ துயில் நீங்கி எழுந்
தாலும் நிலவொளி மிக்க வெளிச்சத்தையுண்டாக்கினாலும் தலைவி
யின் தீண்டல் கிடைக்காமற் போனாலும் மனந்தளராமல் ஒவ்வோர்
இரவிலும் வருகின்றான். எத்தகைய இடர்களை எதிர்நோக்க நேர்ந்
தாலும் (வழியிலே சந்திக்க நேரும் புலிகள், யாளிகள், கரடிகள், ஆமான்
ஏறுகள், யானைகள் முதலான விலங்குகள் மற்றும் நள்ளிரவில் சுற்றித்
திரியும் பாம்புகள், பேய்கள், நீர்நிலைகளில் வாழும் முதலைகள், இடங்கர்
கள், கராம் இன முதலைகள் போன்றவை) ஆறலை கள்வரால் இன்னல்
நிகழ்ந்தாலும் வழுக்குப் பாதை மற்றும் முட்டுப் பாதை போன்றவை
தடைசெய்தாலும் வராமல் இரான்" என்றாள் தோழி. தலைவன் இத்தனை இடர்களை எதிர்கொண்டு வருவது மிகவும் ஆபத்து என்று எண்ணியும் தலைவனின் பாதுகாப்பு குறித்து அஞ்சியும் தலைவி அழுகின்றாள். ஊரார் பேசும் அலருக்கும் அஞ்சுகின் றாள். திருமணம் செய்து கொண்டால்
இத்தகைய சிக்கல்கள் நீங்கும் என்று
நம்பினாள். களவு ஒழுக்கத்தைத்
தோழி வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து நல்லவை நிகழ்ந்திருக்கும்.
இவ்வாறான நெறியும் நியதியும் மிக்க தமிழர் அகவாழ்க்கையை ஆரிய
மன்னன் பிரகத்தனுக்குக் கபிலர் விளக்கியுள்ளார். தமிழரின் களவு மணம்
ஆரியரின் காந்தர்வ விவாகத்துக்குச் சமமானது என்று தமிழறிஞர் கருது
கின்றனர். ஆரியரின் எட்டு திருமணவகைகளில் ஒன்றான காந்தர்வ விவா
கத்தில் சிற்றின்பமே முக்கிய நோக்கமாக இருப்பதாகவும், தமிழர் திருமண
நிகழ்வு ஆண் பெண் ஒருவர்க்கொருவர் அன்பு செலுத்துதல், மக்களைப்
பெற்று நல்ல குடி மக்களாக வளர்த்தல் முதலான நோக்கங்களைக் கொண்டு
திகழ்வதாகவும் புலவர்கள் கருதுகின்றனர்.. இவ்விவரங்களை ஆரிய அரசன்
பிரகத்தனுக்குக் கபிலர் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறியதாக
அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர். எனவே, கபிலரின் குறிஞ்சிப்பாட்டை
இரசித்துப் படித்து இன்புறுவோமாக!