Thursday 30 September 2021

தமிழறியும் பெருமாள்.

 தமிழறியும் பெருமாள்.


(பேயொன்று ஔவையாரை அச்சுறுத்த

முயன்று அவரால் நற்கதி அடைந்த கதை)


அளகாபுரி அரசை  அளகேசுவரன் என்ற மன்னன் திறம்பட

ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கொரு புதல்வி யிருந்தாள்.

அவள் பெயர் ஏலங்குழலி. பன்னிரண்டு அகவையுடைய

அப்பெண் பேரழகியாக மிளிர்ந்தாள்.அவள் பேரழகு அந்த

நாட்டிலுள்ள மக்கள் யாவரையும் தன்பால் ஈர்த்தது.

ஒருநாள் மாலை நேரத்தில் அரசகுமாரி  தன் உப்பரிகையில்

நின்று தேரோடும் வீதியில் நடமாடும் பொதுமக்களை வேடிக்கை

பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவ்வீதிவழியே

பாடலிபுரம் இளவரசன் ஒருவன் சரிவரக் கல்வி கற்காத காரணத்தால்

தன் தந்தையிடம் கருத்து வேறுபாடு கொண்டு தன் நாட்டைவிட்டு

நீங்கி அளகாபுரி நாட்டில்  சிறிது காலம் கழிக்க எண்ணி நிதானமாக

வலம்வந்து கொண்டிருந்தான். அவன் தோற்றப் பொலிவால் கவரப்பட்ட

ஏலங்குழலி அவன்பால் காதல் கொண்டாள். 


கண்டதும் காதல் என்பது  இதுதான் போலும். உடனே தன் விருப்

பத்தை அவனிடம் தெரிவிக்க எண்ணித் தன் காதோலையில் கைநகத்தால்

"அன்பரே! உம்மைக் கண்டவுடன் காதல் கொண்டுவிட்டேன். பக்கத்

திலுள்ள மண்டபத்தில்  இரவில் முதல் சாமத்தில் உம்மைச் சந்திக்க 

விழைகின்றேன்; தவறாது வருக" என்று எழுதித் தன் கையொப்பம்

இட்டுத் தன் தோழிமூலம் கொடுத்தனுப்பிவிட்டுத் தன் அரண்மனைக்

குள் சென்றுவிட்டாள். தோழியும் அரசகுமாரி கொடுத்தனுப்பிய ஓலை

யை உரிய நபரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்று விட்டாள்.


ஆனால் என்ன கொடுமை!  அந்தக் கட்டழகு இளைஞனுக்கு எழுதப் படிக்

கத் தெரியாது. அந்த இளைஞன் வீதியில் எவரேனும் உள்ளனரா?

என்று சுற்றுமுற்றும் நோக்கினான்.  வீதியோரத்தில் தொழுநோயாளி

ஒருவர் இருந்ததைக் கண்டு அவரிடம் சென்று "ஐயா! தங்களுக்குப்

படிக்கத் தெரியுமா? தெரிந்தால் இவ்வோலையைப் படித்து அதிலுள்ள

செய்தியைத் தெரிவிக்கவும்" என்றான். அந்த மனிதன்  ஒரு கபடக்காரன். 

பேரழகு மிளிரும் அரசகுமாரி பாடலிபுரத்து இளவரசன் மேல் காதல்கொண்டதை

அறிந்து கொண்டான்; தானே அவளை அடைய எண்ணிக் கட்டழகு இளை

ஞனிடம் உண்மையைக் கூறாமல் "உனக்கு ஒரு எச்சரிக்கை வந்துள்ளது.

'உடனே இந்த ஊரைவிட்டு ஓடிப் போய்விடல் வேண்டும். இல்லாவிட்டால்

நீ கொல்லப் படுவாய்' என்று மிரட்டி யாரோ இந்த ஓலையை அனுப்பியுள்

ளனர். நன்றாகச் சிந்தித்துச் செயல்படு" எனச் சொன்னான். அந்தக் கட்டழகு

இளைஞன் தொழுநோயாளி  சொன்னதை உண்மையென்று நம்பி ஊரை

விட்டே ஓடிப் போனான். தொழுநோயாளி குளித்துமுடித்து நன்கு அலங்கரித்துக்

கொண்டு அரசகுமாரி குறிப்பிட்ட மண்டபத்தை  அடைந்தான். அங்கே

அழகெலாம் ஒருங்கே கொண்ட தேவதை போல நின்று கொண்டிருந்த

அரசகுமாரியைக் கண்டதும் கண்களில் காமம் மிளிர அவளை நெருங்

கினான். தொழுநோயாளியைக்  கண்டதும் அரசகுமாரி துணுக்குற்றாள்.

தான் விரும்பிய கட்டழகு இளைஞன் என்னவானான் என விசாரித்தாள்.

அந்தப் படிப்பறிவற்ற இளவரசன் ஏதோ காரணத்தால் ஊரைவிட்டே

ஓடிப் போனதாகத் தெரிவித்துவிட்டுத் தகாத எண்ணத்துடன் அரசகுமாரி

யருகில் வந்தான். அந்தோ பரிதாபம்; அரசகுமாரி அவனைத் தடுக்கப்

பார்த்தாள். அவன் அவள் கைகளைத் தட்டிவிட்டு அவளைத் தன்னருகே

இழுத்தான். நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த அரசகுமாரி தன்

குறு வாளால் தன் வயிற்றில் குத்திக் கொண்டு மாண்டு போனாள்.

அன்றிலிருந்து அவள் ஆவியாய் அந்த மண்டபத்தில் அலைவதாகவும்

மண்டபத்துக்கு இரவில் வருபவர்களைத் துன்புறுத்துவதாகவும் பேச்சு

அடிபட்டது.


ஒருநாள் அந்தி வேளையில் அவ்வூருக்கு வந்த ஔவையார் அந்த மண்டபம்

இரவில் தங்க வசதியான மண்டபம் என்று எண்ணி அதனுள் நுழைந்தார்.

அவ்வழியே வந்த சில வழிப்போக்கர்கள்  "அம்மையே! இம்மண்டபத்தில்

பேய் நடமாட்டம் உண்டு. இரவில் யாரையும் இங்கே தங்கவிடாது" என்றனர்.

உடனே ஔவையார் "பேயைப் பேய் துன்புறுத்துமா?" என்று வினவித்

தம்மைப்போல் மனவுறுதி கொண்டவர்களைப் பேயால் துன்புறுத்தல் இயலாதென்றார்.

தாம் கொண்டுவந்திருந்த உணவை உண்டுவிட்டு உண்ட களைப்பால்

உடனே உறங்கத் தொடங்கினார். 


தமிழ்நாடு முழுக்கத் தனியாகவே சுற்றிவந்த அவருக்கு அச்சம் என்பதே

துளியும் கிடையாது. எனவே எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஆழ்ந்த

உறக்கத்தில் திளைத்திருந்தார். முதல் சாம நேரம் வந்தது.(ஒரு சாமம்

ஏழரை நாழிகை நேரத்தைக் குறிக்கும். இரவு முழுவதும் நான்கு சாம நேரம்

உண்டு.) ஆழ்துயிலில் இருந்த ஔவையார் தம்மை யாரோ எழுப்பியது

போல உணர்ந்தார். "சரிதான்; பேய் வந்துவிட்டது போலும்" என்று முணுமுணுத்தார்.

அவர் உடனே பாடத் தொடங்கினார்:

"வெண்பா  இருகாலிற்  கல்லானை, வெள்ளோலை

கண்பார்க்கக் கையால் எழுதானைப்---பெண்பாவி

பெற்றாளே  பெற்றாள்  பிறர்நகைக்கப் பெற்றாளென்(று)

எற்றோமற்(று) எற்றோமற்(று)  எற்று".

பொருள்:வெண்பாவை இரண்டு முறை படித்தவுடனேயே

கற்க முடியாதவனை, வெள்ளோலையில் எழுத முடியாதவனைப்

பெற்றவள், பிறர் நகைக்கும் வண்ணம் கேலிப் பொருளாகி

விட்டாள். அந்தப் பெண்பாவியைப் போய்த் தாக்கு, அடி, உதை;

என்னைத் தொல்லைசெய்யாதே என்பது பொருளாகும்.

அரசகுமாரியால் காதலிக்கப் பட்டவன் எழுதப் படிக்கத் தெரியா

தவன் என்று கேள்விப் பட்டதனால் அதனைப் பற்றியே எடுத்துச்

சொன்னார். உண்மையை உணர்ந்துகொண்ட பேய் அவ்விடத்தை

விட்டு நீங்கியது.


பேய்க்குணம் மாறுமா? பேய் இரண்டாம் சாம நேரத்திலும் வந்து

அம்மையைத் தொல்லைசெய்தது. அவர் மறுபடியும் பாடினார்.

"கருங்குளவி சூரைத்தூற் றீச்சங் கனிபோல்

வருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை--அரும்பகலே

இச்சித் திருந்தபொருள் தாயத்தார் கொள்வரே,

எற்றோமற் றெற்றோமற் றெற்று."

பொருள்:

கருங்குளவி சூழ்ந்திருக்கும் இடத்தில் கிடைக்கும் ஈச்சங்கனி

போலச் செல்வம் பயனற்றுப் போகாமல், துன்பப் படுபவர்க்குத்

தரப்படுதல் வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராமல் உயிருக்கு

இடையூறு நேர்ந்து அரும்பாடுபட்டுச் சேர்த்த பணம் பங்காளி

களால் கவரப்படும். அத்தகைய கஞ்சத்தனம் மிக்க மக்களைச்சென்று

தாக்குக.


மூன்றாம் சாமநேரம் வந்தது. பேயும் வந்தது. ஔவையாரைத்

தொல்லைசெய்ய அவர் மீண்டும் ஒரு பாடலைப் பாடினார்:

"வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில்

தானம் உளதால் தயையுளதால்---ஆனபொழு

தெய்த்தோம் இளைத்தோமென் றேமாந் திருப்போரை

எற்றோமற் றெற்றோமற் றெற்று."

பொருள்:

உலகத்தில் வானம் உள்ளது. வானத்தின் கருணையினால்

தேவையான மழையுள்ளது. மனிதர்களிடம் உழைப்பு(சிரம

தானம்) உள்ளது. பிறர் மேல் அன்பும் இரக்கமும் உள்ளன.

இவ்வளவும் இருக்கும் போது உழைக்காமல் "யாம் களைத்துப்

போய்விட்டோம்" என்றெண்ணிப் பிறரையும் ஏமாற்றித் தாமும்

ஏமாந்திருப்போரைத் தாக்குக, தாக்குக.


நான்காம் சாம நேரம் வந்தது. பேய் அம்மையைத் துன்புறுத்த

எண்ணி அவர் தூக்கத்தைக் கெடுத்தது. விழித்தெழுந்த அவர்

தம்மை எழுப்பியது பேய்தான் என்று உணர்ந்து பாடலானார்:

"எண்ணா  யிரத்தாண்டு  நீரிற்  கிடந்தாலும்

உண்ணீரம்  பற்றாக்  கிடையேபோல்--பெண்ணாவாய்

பொற்றொடி  மாதர்  புணர்முலைமேற்  சாராரை

எற்றோமற்(று) எற்றோமற்(று)  எற்று".

பொருள்: எண்ணாயிரம் ஆண்டுகள் நீருக்குள் கிடந்தா

லும் உள்ளே ஈரம் பற்றாத கிடைப்பூண்டு(தக்கை) போலப் பற்றில்

லாமல் வாழும் பெண்ணாக உருவாகுவாய்.(இதுவரை

பாடிய மூன்று பாடல்களிலும் ஔவையார் பேயைப்

பார்த்துப் பெண்ணே என அழைக்கவில்லை. ஏனென்றால்

உருவமற்ற ஆவிதான் தொல்லைதந்தது. நான்காம் பாட

லில் பேயைப் பெண்ணே என அழைத்துக் "கற்புடைய

மனைவியுடன் வாழாத அறம் பிறழ்ந்தோரையும் பரத்தை

யரிடம் செல்லும் தகாத ஒழுக்கம் பின்பற்றுவோரையும்

தாக்குக, தாக்குக, தாக்குகவே "என்றார்.  ஔவையார்  பெண்ணே

என்று அழைத்தவுடன் இதுவரை உருவமற்ற ஆவியாக வந்த

பேய் பெண்ணுருவில் அம்மைமுன் தோன்றியது. ஔவையார்

அந்தப் பேயிடம் "உன் கதை முழுதும் எனக்குத் தெரியும். நீ யாருக்கு

ஓலை கொடுத்தனுப்பினாயோ அந்த இளவரசன் படிப்பறிவற்ற

காரணத்தால் தொழுநோயாளியிடம் காட்டினான். அதனைப் படித்த

தொழுநோயாளி சதிவேலை புரிந்து இளவரசனை அச்சுறுத்தி ஊரை

விட்டு ஓடச் செய்தான். அண்மையில் அவன் இவ்வூருக்குத்  திரும்பிவந்து

நீ தற்கொலை செய்து கொண்டதை யறிந்து மனமுடைந்து தானும்

நஞ்சுண்டு மாண்டு போனான். அவனும் பேயாக இம் மண்டபத்தில்

அலைந்து வருகின்றான்." என்று ஔவையார் உரைத்ததும், ஆண்

பேயும் தன் இயல்பான உருவத்துடன் அம்மைமுன் தோன்றியது.

ஔவையார் அவர்களிடம் " ஏலங்குழலி நீ உறையூரில் மரகதவடிவு

என்ற பெண்ணின் மகளாகத் தோன்றி நல்ல தமிழ்ப்புலமையடைந்து

'தமிழறியும் பெருமாள்' என்ற பெயரில் சிறக்க வாழ்ந்துவருவாய்;

இளவரசனும் அதே ஊரில் ஒரு விறகுதலையன் மகனாகத் தோன்றி

வாழ்ந்து வருவான். உரிய பருவத்தில் நக்கீரர் உன் புலமைச் செருக்கை

அடக்கி இளவரசனுக்கு மணம் முடித்து வைப்பார். நீங்கள் இருவீரும்

எல்லையற்ற இன்பம் அனுபவித்து  மகிழ்ச்சியோடு வாழ்வீர்" என்று

வாழ்த்தினார். அவர் வாக்கு பலித்திருக்கும் என்றே தோன்றுகிறது..

ஏனென்றால் ஔவையார் அவ்வூரை விட்டு நீங்கிய பிறகு அந்த

மண்டபத்தில் தங்குபவர்களுக்குப் பேயினால் யாதொரு துன்பமும்

நேரவில்லை.


ஔவையாரின் இந்த நான்கு பாடல்களுக்கு ஆதாரமாக இந்தப்

பேய்க்கதைதான்எல்லாத் தனிப்பாடல் திரட்டு நூல்களிலும்

காணப்படுகிறது. பேய் உள்ளதா? இல்லையா? என்பது பெரிய

விவாதப் பொருள். ஆனால் நம் இலக்கியங்களில் பேய் உண்டு

என்னும் அடிப்படையிலான கவிதைகள் உள்ளன. நம்புவதும்

நம்பாததும் அவரவர் விருப்பம். புறநானூற்றில்  பேய்மகள்

இளவெயினியார் பாடியதாகப் பாடல் உள்ளது. பேயுருவத்

.தோடு நின்று  பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ

வைப் பாடியதாகப் பாடல் மூலம் அறிய முடிகிறது. ஒருவேளை

பேய் போல உருவத்தோடு  ஒப்பனை ஏதுமின்றி அலைந்தவரைப்

பேயாகத் திரிந்தவர் என்று சொன்னார்களோ, என்னவோ?

நாம் இந்த ஆராய்ச்சிக்குள் செல்ல வேண்டா. பேய் உண்டோ?

இல்லையோ? ஔவையார் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் உடையவர்

என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


பின்குறிப்பு:

இந்தக்கதை 'தமிழறியும் பெருமாள்' என்ற பெயரிலேயே

1942 ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளிவந்தது. ஒரு நாழிகை

காலக் கணக்கில் 24 நிமிட நேரத்தைக் குறிக்கும். ஒரு நாளுக்கு

60 நாழிகை என்பது கணக்கு. 8 சாம நேரம் என்றும் கூறலாம்.

Monday 20 September 2021

சங்க காலத்தில் நிகழ்ந்த போர்க் கொடுமைகள்.

 சங்க காலத்தில் போர்களினால் விளைந்த கொடுமைகள்.


ஆதிமனிதன் காடுகளிலும், மலைக் குகைகளிலும் வாழ்ந்த

பொழுது புலி, சிங்கம், கரடி, யானை முதலான கொடிய விலங்

குகளோடு சண்டை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.

ஏனென்றால் குகைகளில்தான் விலங்குகளும் வசித்தன. இருப்

பிடச் சிக்கலால் இரு இனங்களுக்கும் மோதல் உருவாயிற்று.

பின்னாட்களில், மனிதர்கள் ஆற்றுப் படுகைகளில் வசிக்க நேர்ந்த

பொழுது வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருந்து வேளாண்மை

செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இப்படியாகக் காடு, மலை

 போன்றவைகளிலோ அவைகளின் அருகிலேயோ குடியேற்றம்

நிகழ்ந்து பின்னர் ஆற்றுப் படுகைகளிலும் குடியேற்றம் நிகழ்ந்தது.

உணவு, உடை, உறையுள் முதலிய அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய

பிறகு நாகரிகம் உருவாகி வளர்ந்தது.


என்னதான் நாகரிகத்தில் வளர்ச்சியடைந்தாலும் மனிதனின் ஆதிக்

குணமான சண்டைக் குணம் மறையவேயில்லை. எனவே, புலவர் இடைக்

குன்றூர் கிழார் "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்

றிவ்வுலகத் தியற்கை" என்று பாடியுள்ளார்(புறம். பாடல் எண்: 76). நாகரிக

வளர்ச்சியை அடுத்து மனிதர்கள் தம்மை ஆள அரசுகளை அமைத்தனர்.

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையால் இவ்வரசுகள் தமக்குள்

சண்டையிட்டுக் கொண்டன.


தொடக்கத்தில் மன்னர்கள் அறவழியிலேயே போர்கள் நிகழ்த்தினர்.

பாண்டிய மன்னன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவர்

தாம் போர் தொடங்குவதற்கு முன்னர் தாம் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்

கெதிராகப் போர் புரியத் திட்டமிட்டுள்ளதாகவும்,  பசுக்கள், பெண்டிர்,

அந்தணர், புதல்வரைப் பெறாதோர் ஆகியோர் போர் நடக்கும் இடத்

தை விட்டு ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் புலவர்

நெட்டிமையார் பாடியுள்ளார்(புறம். பா.எ.9). ஆனால், நாட்கள் செல்லச்

செல்லப் போர் முறைகளில் வன்முறை, பழிவாங்கும் எண்ணம், மிகக்

கொடூர சிந்தனைகள் தலைகாட்டத் தொடங்கின. 


தாம் தோற்கடித்த நாடுகளில் முதன்மைத் தெருக்களில் கழுதைகளைப்

பூட்டி உழச்செய்ததாக ஒரு மன்னனைப் பற்றிப் புலவர் நெட்டிமையார்

பாடியுள்ளார்(புறம். பா.எ.15). புலவர் பாண்டரங் கண்ணனார் ஒரு மன்னர்

தாம் வென்ற நாட்டை எரியூட்டியதாகப் பாடியுள்ளார்.(புறம். பா.எ.16). புலவர்

மாங்குடி மருதனார் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

போரில் தோற்ற பகையரசர் முடித் தலைகளை அடுப்பாக்கி இரத்தத்தை

நீராகப் பெய்து பகைவர் தசையையும் மூளையையும் அதனுள் இட்டு அவரது

தோள்களைத் துடுப்பாக்கித் துழாவிக்  களவேள்வி செய்ததாகக் பாடியுள்ளார்.

(புறம்.பா.எ. 26). அப்பாடல் வரிகள் பின்வருமாறு:

"அரைசுபட அமருழக்கி முடித்தலை அடுப்பாகப்

புனல் குருதி உலைக்கொளீஇக் கொடித்தோள் துடுப்பின்

துழந்த வல்சியின் அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!"


அக்காலத்தில் மன்னர் ஒருவர் பிற மன்னரிடம் பெண்கேட்டு அவர் பெண்கொடுக்க

மறுப்புத் தெரிவித்தால் அவர்களுக்குள் போர் மூளும்(மகட்பாற் காஞ்சி). பேரரசர்

கேட்கும் திறையை(வரி)த் தர மறுக்கும் குறுநில மன்னர் மீது போர் தொடுப்பது

வழக்கம். இப்படியாகப் போர்நிகழப் பலப்பல காரணங்கள் இருந்தன.


விளைவு யாதெனில், அடிக்கடி நிகழ்ந்த போர்களினால் சமூகத்தில் ஆடவர்

எண்ணிக்கை குறைந்து மகளிர் எண்ணிக்கை கூடியது. இயற்கை உருவாக்

கிய ஆண் பெண் சம நிலை குலைந்தது. மகளிரில் பாதிப்பேர் கைம்பெண்டிர்.

ஆடவர்கள் அடிக்கடி நிகழ்ந்த போர்களில் மாண்டுபோனதால் அவர்தம் மனைவி

யர் கணவருடன் தீப்பாய்ந்து மாய்வர்; உயிரை மாய்க்கத் தயங்கியவர் கொடுமை

யான கைம்மை நோன்பு நோற்று வாழலாம். அதன்படி,  கைம்மை நோன்பு நோற்

பவர்கள் கூந்தலைக் களைதல் வேண்டும்;  அல்லியின் புல்லரிசிச் சோறு உண்ணல்

வேண்டும்; உணவில் நெய் தவிர்த்தல் வேண்டும்;  பரற் கல் பரப்பிய தரையில்

விரிப்பு, தலையணை யின்றித் துயிலுதல் வேண்டும். இவ்விதிமுறைகளுக்கு

அஞ்சியே பல பெண்டிர் கணவரோடு உடன்கட்டை ஏறி உயிரை விடுத்தனர்.

நல்லவேளை, உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.


இறந்த போர் வீரர்களின் மனைவியர் களைந்த தலைமுடிகளால் கயிறு திரிக்கப்

பட்டுத் தோற்ற அரசனின் வெட்டப்பட்ட காவல் மரத்தைத் தன் நாட்டுக்கு இழுத்துச்

செல்லப் பயன்படுத்துவர் வெற்றிபெற்ற அரசர். தலைமுடியால் உருவாக்கப்படும்

கயிறு 'கூந்தல் முரற்சி' எனப்படும். வெற்றிபெற்ற அரசன் தோற்ற அரசனின்

காவல் மரத்தை வெட்டிச் சாய்த்து அதனைத் துண்டுகளாக்கித் தன்னாட்டுக்கு

எடுத்துச் சென்று  அத்துண்டுகளால் தன்னாட்டுக்கு முரசம் செய்துகொள்வது

வீரமாகக் கருதப்பட்டது. சாதாரணமான கயிறுகள் ,பெரிய மரத்துண்டுகள் யானை

களால் இழுக்கப்படும் பொழுது தேய்ந்து இற்றுப் போகும். ஆனால் கயிறுகளின்மேல்

'கூந்தல் முரற்சி' யைச் சுற்றி மரத்துண்டுகளை  இழுத்துச் சென்றால் கயிறுகளுக்குச்

சேதம் ஏதும் ஏற்படாதென்பர். கூந்தல் முரற்சி  அவ்வளவு வலிமையுடையதென்பர்.

சேரன் செங்குட்டுவன் மோகூரை யாண்ட பழையன் என்னும் சிற்றரசனுடன் போர்

செய்து அவனை வென்று அவன் காவல் மரமான வேம்பை வெட்டி வீழ்த்தியதாகவும்

அம்மரத்துண்டுகளைப் பழையனின் படைவீரர்களின் மனைவியர் களைந்த கூந்தல்

முரற்சியால் தன் தலைநகர்க்கு எடுத்துச்சென்று முரசம் செய்து கொண்டதாகவும்

பதிற்றுப் பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வேறொரு கொடுமையும் நிகழ்ந்தது. ஒரு மன்னன் பகைநாட்டின் மீது படையெடுத்து

அதனை வெற்றிகொண்டால் தோற்றுப்போன நாட்டின் இளம்பெண்டிரை(அரசனின்

மனைவியர் உட்படச் சகல இளம் பெண்டிரையும்) சிறையெடுத்துத் தன் நாட்டுக்கு

அழைத்து வருவது வழக்கம். அழைத்துவரப்பட்ட மகளிரின் இளமை, அழகு முதலிய

வற்றைக் கருத்தில்கொண்டு அரசனின் காமக்கிழத்தியராக்கப் படுவர். மற்றவர்

சேடியராக்கப் படுவர். இப்பெண்டிரைக் 'கொண்டி மகளிர் 'அல்லது 'உரிமை மகளிர்'

என் அழைத்தனர். உரிமை மகளிருக்கு உரிமைகள் ஏதும் அளிக்கப்படவில்லை.

அரசனுக்கு உரிமைப் பட்டவர்கள். அவ்வளவே. தசரதச் சக்கரவரத்திக்கு அறுபதி

னாயிரம் மனைவியர் இருந்தனர் என்று இராமாயணத்தில் சொல்லப்பட்டது இவ்

வுரிமை மகளிரை உள்ளடக்கிய கணக்கே. இந்தக் கொடுமையை உலகம் முழுவதிலும்

உள்ள அரசர்கள் அந்நாட்களில் பின்பற்றினார்கள். அரசனைத் தவிர வேறு யாரும்

இம்மகளிரைத் நீண்ட இயலாது. அரசனைத் தவிர வேறு யாரோடும் தொடர்பு கொண்டதாகக்

கண்டுபிடிக்கப்பட்டால் ஈவிரக்கமின்றிச்  சுண்ணாம்புக் காளவாயில் நீற்றப் படுவர்.

அந்தோ பரிதாபம்! அவர்களின் நிலைமை மிக மிக மிகக் கொடுமையானது. மேலும்

வெற்றி பெற்ற அரசர் தோற்றுப்போன நாட்டின் செல்வங்களையெல்லாம் கொள்ளை

யடிக்க உத்திரவிடுவர்.


மேலும் ஆடவர் எண்ணிக்கை குறைந்ததால் பரத்தையர் என்ற பிரிவினர் உரு

வாகிச் சமூகத்தைச் சிதைத்தனர். ஆடவர்களுக்கும் கொடுமைகள் நடந்தன.

வீரம் என்னும் போதை யேற்றப்பட்டது. மார்பில் புண்பட்டுச் செத்தால் துறக்கம்(சொர்க்கம்)

புகலாம். முதுகில் புண்படக் கூடாது. சிலசமயம் எதிரி எறிந்த வேல் மார்பை

ஊடுருவி முதுகுக்கு வெளியே வரும். அதற்கு வெட்கப் பட்டு வடக்கிருந்து உயிர்

துறந்த மன்னர் பலராவர். மேலும் அரசனுக்காகவும் நாட்டு நன்மைக்காகவும்

தன்னைத் தானே நவகண்டம் (ஒன்பது இடங்களில் உடலைக் கிழித்து இறுதியில்

தன் தலையைத் தானே அரிந்து பலியிட்டுக் கொள்ளுதல்)நிகழ்த்திய வீரர்களும்

இருந்தனர். இப்படியாக, ஆடவர்க்கு வீரம் என்னும் போதையையும் பெண்டிருக்குக்

கற்பு என்னும் போதையையும் ஏற்றிவிட்டது  சமூகம். அதனால்தான் இத்தகைய

கொடிய சுயபலியிடும் நிகழ்வுகள் நடைபெற்றன. நல்லவேளை இக்கொடிய பழக்கங்கள்

ஒழிக்கப்பட்டு விட்டன.


வீரம், கற்பு அவசியமே;  தன்னைத் தானே பலியிடுதல், உடன்கட்டை ஏறுதல் தேவையில்லை.

தற்காப்புக்காக ஒவ்வொரு நாட்டு மக்களும் போர்ப் பயிற்சி மேற்கொண்டு ஆயத்தமாக

இருத்தல் வேண்டும். அதே நேரத்தில் சமாதானத்துக்கான  சகலவித முயற்சிகளையும்

மேற்கொள்ளுதல் வேண்டும். வீரத்திற் சிறந்த நாடு எதுவென்றால், போருக்கான சகல

ஆயத்தங்களும் செய்து அதே நேரம் போரைத் தவிர்த்து அமைதியை நிலைநிறுத்தப்

பாடுபடும் நாடே ஆகும். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று முதலியவை அவசியமே;

ஆனால் பற்று எல்லை தாண்டி வெறி ஆகிவிடக் கூடாது. மனித நேயம் தலையாய தாகும்.


,

Thursday 2 September 2021

கூடல் இழைத்தல்

 கூடல் இழைத்தல்.


கூடல் இழைத்தல் என்பது சங்ககாலத்தில் மகளிரிடையே

நிலவிய பழக்கம். திருமணமாகாத மகளிர் தாம் விரும்பிய

காதலர் தம்மை அடைவாரோ? மாட்டாரோ?(கூடுவாரோ?

மாட்டாரோ?) என்று அறிந்து கொள்ளச் செய்த ஒரு விநோதப்

பழக்கம். முற்றத்தில் மணலைக் குவித்து அதன்மேல் கண்களை

மூடிக்கொண்டு ஒரு விரலால் வட்டமாகக் கோடிட்டு அதற்குள்

வளையம் வளையமாக வரைவார்கள். அந்த வளையங்களின்

எண்ணிக்கை இரட்டைப்படையாக வந்தால் தம் காதலர் தம்மைக்

கூடுவர். ஒற்றைப் படையில் வந்தால் காதலர் தம்மைக் கூடார்.

மேலும்,  கண்ணை மூடிக்கொண்டு வட்டம் வரையும் போதில்

தொடங்கிய இடத்தில் சரியாக வட்டத்தை முடித்தல் வேண்டும்.

அதாவது, வட்டத்தின் தொடக்கமும் முடிவும் சரியாகப் பொருந்துதல்

வேண்டும். அவ்வாறானால் தம் காதலர் தம்மைக் கூடுவர். சரி

யாகப் பொருந்தாவிட்டால் காதலர் தம்மைக் கூடார் என்ற

அவநம்பிக்கை அடைவர். இதைத்தான் கூடல் இழைத்தல் என்று

அழைத்தனர். கூடல் இயைதல்,  கோடியைதல், சுழி இடுதல்,

சுழிக்  கணக்கு, மணற்சுழிச் சோதிடம் என்ற பெயர்களும் உள்ளன.

இன்றுவரை இந்தப் பழக்கம் நம்மிடையே  நிலவுதல் கண்கூடு.

ஒற்றையா, இரட்டையா பார்ப்பது கூடல் இழைத்தலின் ஒரு

வடிவம் தானே!


சங்க இலக்கியமான கலித்தொகை ஒரு நிகழ்வை விவரிக்கிறது.

ஒரு தலைவி தன் இல்லத்தில் கூடல் இழைக்கும் பொழுது ஒரு முனை

மற்ற முனையுடன் கூடவில்லை. அதாவது தலைவி வட்டம் வரையும்

பொழுது தொடக்கக் கோடு முடிவுக்கோடோடு பொருந்தவில்லை.

கண்ணை மூடிக்கொண்டு வட்டம் வரைந்ததால் வட்டம் இளம்பிறை

போல வந்து விட்டது. அது முழுநிலவை  நினைவுபடுத்தியதால் அதனைத்

தன் ஆடையினால் மூடுகிறாள். (காதலரைப் பிரிந்திருக்கும் பெண்களுக்கு

முழுநிலவைப் பிடிக்காது.) பின்னர், சிவபெருமான் பிறையைத் தேடு

வாரே என்றெண்ணி மூடுவதை விலக்குகிறாள். பாடல் வரிகள் பின்வருமாறு:

"கோடு வாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று

நாடுவேன் கண்டனென்; சிற்றிலுள் கண்டாங்கே

ஆடையான் மூஉய் அகப்படுப் பேன்;  சூடிய

காணான் திரிதரும் கொல்லோ மணிமிடற்று

மாண்மலர்க் கொன்றை யவன்."

(கலித்தொகைப் பாடல்:142 வரிகள்24--28)

புலவர்: நல்லந்துவனார்--நெய்தற்கலி.


சங்கம் மருவிய காலத்து நூலான முத்தொள்ளாயிரத்திலும், பக்தி

இலக்கியங்களிலும் கூடல் இழைத்தல்

குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது

இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டுள்ளது..

இப்பொழுதும் கூடக் கிராமப் புறங்களில் இதன் மருவிய வடிவங்கள்

(ஒற்றையா, இரட்டையா எனப் பார்த்தல்) பழக்கத்தில் உள்ளன.


முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் சுட்டப் படும் ஒரு காட்சியைக்

காண்போம். பருவப் பெண் ஒருத்தி பாண்டியமன்னன் உலா வரும்

பொழுது அவன் தோற்றப் பொலிவைக் கண்டு ஒருதலைக் காதல்

கொண்டனள். பாண்டிய மன்னன் தன்னைக் கூடுவானோ? மாட்டா

னோ? என்று தெரிந்து கொள்ளக் கூடல் இழைத்துப் பார்க்க விரும்பி

னாள். ஆனால், உள்ளூற அவளுக்கு ஏகப்பட்ட தயக்கம். கூடல் இழைக்

கும் பொழுது தொடங்கிய இடமும் முடிந்த இடமும் பொருந்திக் கூடி

விட்டால் மனத்துக்கு மகிழ்ச்சி; இல்லையென்றால் என்னாவது?

என்று சிந்தித்தாள். கூடல் இழைப்பவள்போல் ஒரு விரலால் காற்றில்

வளையம் வரைந்தாள்; பின்னர் அதனை அழிப்பது போல விரலை

அசைத்தாள். கூடல் இழைப்பதுபோல் விரலால் சைகை செய்து பின்னர்

இம் முயற்சியில் தவறு நேர்ந்திடுமோ? என்று அஞ்சிக் கூடல் இழைப்பதைக்

கைவிட்டாள். பாடல் இதோ:

"கூடல் பெருமாளைக் கூடலார் கோமானைக்

கூடப் பெறுவேனல் கூடென்று---கூடல்

இழைப்பாள்போல் காட்டி இழையா திருக்கும்

பிழைப்பில் பிழைபாக்(கு) அறிந்து."

பொருள்:

மதுரை நகருக்கு அதிபதியும் மதுரைவாழ் மக்கள் போற்றிப் பாராட்டும்

வேந்தனும் ஆன பாண்டியனைக் கூடுவேனோ? கூட மாட்டேனோ?

என்று அறியக் கூடல் இழைத்தல் என்னும்  வழக்கத்தைப் பின்பற்ற

நினைத்த ஒருதலைக் காதல்கொண்ட  ஒரு பருவப் பெண் கூடல்

இழைப்பவள்போல் முனைப்புக் காட்டிப் பின்னர் எதிர்மறையாக முடிவு

வரும் என்று அஞ்சிக் கூடல் இழைத்தலைக் கைவிட்டாள். ஒருதலைக்

காதல் என்றாலும் அவள் அளவில் நேர்மையான காதல் என்று கருதிய

பெண் மற்றப்  பெண்களைப் போலவே கூடல் இழைக்க விரும்பிப் பின்னர்

எதிர்மறை முடிவு வந்தால் மனம் வருந்துமே என்றஞ்சி அம்முயற்சியைத்

துறந்தனள்.

அருஞ்சொற் பொருள்:

கூடல் பெருமாள்--மதுரை நகருக்கு அதிபதி

கூடலார் கோமான்--மதுரை மக்களால் போற்றப்படும் பாண்டிய வேந்தன்

பிழைப்பில்--எதிர்மறை முடிவு வந்தால்

பிழைபாக்கு--தவறுதல்.


பிற்காலத்தில்(ஏழாம் நூற்றாண்டில்) திருநாவுக்கரசர்,  எட்டாம் நூற்றாண்டில்

ஆண்டாள் அம்மையார், ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் தமது

பக்திப் பாடல்களில்  கூடல் இழைத்தலைக் குறிப்பிட்டுள்ளனர். தம்மை

நாயகியாகக் கருதிக் கொண்டு தாம் நாயகனான இறைவனைக் கூட இயலு

மா? என்று ஏக்கத்துடன் பாடியுள்ளனர். ஆண்டாள் நாச்சியார் இதுகுறித்து

ஒரு பதிகமே (பத்துப் பாடல்கள்) பாடியுள்ளார். ஒரு பாடலைப் பார்ப்போம்:

"தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்

பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிடக்

கொள்ளு  மாகில்நீ  கூடிடு  கூடலே!" 

(நாச்சியார் திருமொழி)


மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களிலும் கூடல் இழைத்தல் குறிப்

பிடப்பட்டுள்ளது.