சங்க நூல்கள் முதல் இற்றை
நாள் நூல்கள் வரை படிக்கும்
பொழுது, இவற்றை இயற்றிய
புலவர்கள் பெரும்பாலும் வறு
மையில் உழன்றவர்கள் தாம்
என அறிகிறோம். அவர்களின்
ஏழ்மை நிலையைக் கருத்தில்
கொண்டு அவர்கள் பணத்துக்
காக அலைபவர்கள் என்றும்
உயர்ந்த குறிக்கோள் இல்லாத
வர் என்றும் சிலர் தவறாகக்
கருதிவிடுகின்றனர்.
சங்க காலப் புலவர்களைப்
பொருத்தவரை, இக்கருத்து
முற்றிலும் தவறானதாகும்.
பெருந்தலைச் சாத்தனார்
குமணனைப் பாடிய பாட்டில்
"ஆடுநனி மறந்த கோடுயர்
அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி
உழவாப்
பாஅல் இன்மையின் தோலொ
டு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா
வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்
தம்மகத்துவம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ்
மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி
நினைஇ
நிற்படிந் திசினே நற்போர்க்
குமண!(புறம்:164) என்றார்.
பொருள்:
சமையல் என்பதையே மறந்த
புடை ஓங்கிய அடுப்பில் காளா
ன் பூத்துவிட்டது. பால் இல்லா
மையால் தாயிடம் கிடைக்கும்
என்று எண்ணிச் சுவைக்கின்ற
பிள்ளை பால் கிட்டாததால்
அழும். இதனைப் பார்த்த என்
மனைவி கண்ணீர் வடிக்கின்
றாள். இத்துயரம் துடைத்திட
உன்னை நாடி வந்தேன்" என்று
குமணனிடம் கூறுகின்றார்.
இந்தச் சூழ்நிலைதான் எல்லாப் புலவர் குடும்பங்களி
லும் நிலவியது. இத்தகைய
வறுமையில் உழன்ற போதும்
எப்படி செம்மையாக வாழ்ந்த
னர்? என்பதைப் பார்ப்போம்.
மயிலுக்குப் போர்வை ஈந்தவ
ரும் கடையெழு வள்ளல்களில்
ஒருவரும் ஆகிய வையாவிக்
கோப்பெரும் பேகன் என்பார்
தம் மனைவியாகிய கண்ணகி
(சிலப்பதிகாரக் கண்ணகி
அல்லள்.)யை மறந்து வேறு
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து
வந்தார். இதையறிந்த அப்
பெண் பெருந்துயரத்தில்
மூழ்கினள். இதனைக் கேள்வி
யுற்ற கபிலர், பரணர் என்ற
புலவர்பெருமக்கள் பேகனிடம்
வேண்டுகோள் விடுத்தனர்.
உடனடியாக அவர்தம் மனை
வியின் பிரிவுத் துயரைப்
போக்குமாறு கோரினர்.(புறம்:
143 மற்றும் 144)
"எமக்குப் பரிசில் வேண்டா;
நின் மனைவியின் பிரிவுத்
துயரைத் தீர்ப்பாயாக; அதுவே
நாம் வேண்டும் ஒரே பரிசில்"
என்று மீண்டும் கபிலர் பாடி
னார்..(புறம்:145). அரிசில்கிழா
ர் என்னும் புலவர்"நின் தேவி
யின் துயர் தீர்ப்பாய்; அதுவே
யாம் வேண்டும் ஒரே பரிசில்"
எனச் செப்பினார்.(புறம்:146).
பெருங்குன்றூர்க்கிழார் என்
பவரும்"நின் மனைவியின்
துயர்துடைப்பாய்;அதுவே எம்
பரிசில்; பிற யாதும் யாம் வேண்டோம்" என்று கூறினார்
.(புறம்.147).
சங்க காலத்தில் கொண்கா
னம், துளு நாடு முதலிய பகுதி
களை ஆண்ட வேளிர்குலச்
சிற்றரசன் நன்னன் என்பவன்
தன் நாட்டுப் பெண்ஒருத்திக்கு
அவள் செய்யாத குற்றத்திற்கு
மரண தண்டனை அளித்தான்.
அதனால் அவனைப் புலவர்
யாருமே பாடினார் அல்லர்.
பெண் கொலை புரிந்த நன்ன
ன் என்று தூற்றினர்.
சோழர் குலத்திற் பிறந்த நலங்
கிள்ளி என்பவரும், நெடுங்
கிள்ளி என்பவரும் போர்புரிந்
திட முனைந்த போது புலவர்
கோவூர்கிழார் தலையிட்டுச்
சமாதானம் செய்து போரைத்
தடுத்துநிறுத்தினார்.(புறம்:45).
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்
ளிவளவன் என்னும் சோழ
வேந்தன் மலையமான் என்
னும் குறுநில மன்னனின்
புதல்வராகிய சிறுவர்களை
யானைக் காலால் இடறிக்
கொல்லுமாறு பணியாளர்
களை ஏவியபோது இதனைத்
தடுத்து நிறுத்தியவர் புலவர்
கோவூர்கிழார்(புறம்:46). இது
போலவே, சோழன் காரியாற்
றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி
புலவர் இளந்தத்தனை ஒற்றன்
எனக் கருதிக் கொல்ல முயன்
ற போது புலவர் கோவூர்கிழார்
தான் காப்பாற்றினார்.(புறம்:
47).
பெருந்தலைச்சாத்தனார்
என்னும் புலவர் குமணனிடம்
பரிசில் கேட்டுச் சென்றபோது
தன் உடைவாளைப் புலவரிடம்
தந்து தனது தலையை அரிந்து
நாட்டில் வாழும் தன் தம்பியி
டம் கொடுத்துப் பரிசில் பெற்று
க்கொள்ளுமாறு குமணன்
கூற அதிர்ந்துபோன புலவர்
சிறு நாடகம் நிகழ்த்தி அண்ண
ன் தம்பியை இணைந்து
வாழச்செயதார்.(புறம்:165).
பிசிராந்தையார் என்னும்
புலவர் நேரில் பார்த்திராத
கோப்பெருஞ் சோழன் என்னு
ம் மன்னனுடன் நட்பு பாராட்டி
அவர் வடக்கிருந்த பொழுது
தாமும் அவருடன் வடக்கிருந்து
உயிர்நீத்தார். பொத்தியார்
என்னும் புலவரும் பிற்பாடு
கோப்பெருஞ் சோழன் நினை
வாக வடக்கிருந்து உயிர்துறந்
தார்.(புறம்:215, 216 மற்றும்222).
புல்லாற்றூர் எயிற்றியனார்
என்னும் புலவர் கோப்பெருஞ்
சோழன் தம் புதல்வரொடு
போர்புரிய ஆயத்தம் செய்த
பொழுது நல்லுரை நவின்று
போரைத் தடுத்து நிறுத்தினார்.
(புறம்:213).
ஒளவைப் பிராட்டியார் மன்ன
ன் அதியமானொடு சிறந்த
நட்புப் பாராட்டியவர். ஒருசமய
ம் பரிசில் கொடுக்கத் தாமதம்
ஆனபோது" எத்திசைச் செலி
னும் அத்திசைச் சோறே" என்று வாயிற்காவலனிடம்
கூறி மன்னனிடம் தெரிவிக்
கச் சொன்னார். (புறம்:206).
வெளிமான் என்ற குறுநில
மன்னனைப் பாடிப் பரிசில்
பெற எண்ணிய பெருஞ்சித்
திரனார் என்ற புலவர், மன்னன் நாட்டுக்குச் சென்ற
போது அவர் இறக்கும் தறுவா
யில் இருந்ததால் தன் தம்பி
இளவெளிமானைக் கைகாட்டி அவனிடம் பரிசில்
பெற்றுக்கொள்ளுமாறு
தெரிவித்தார். இளவெளிமான்
மிகச் சொற்பமான பரிசில் நல்க, அதை வேண்டாவென
மறுத்துக் குமணனிடம் சென்று
பாடி யானையைப் பரிசிலாகப்
பெற்று அதனை இளவெளிமா
னது காவல் மரத்தில் கட்டினார்.(புறம்:162).
வள்ளல் பாரி மறைந்த பின்ன
ர் அவர்தம் பெண்மக்கள் இரு
வரையும் திருமணம் செய்து
கொடுக்கப் புலவர் கபிலர் மிக
வும் முயற்சி மேற்கொண்டார்.
அவர் முயற்சி தோற்றுவிட்ட
தால் மனம் வருந்தி அப்பெண்
களைப் பார்ப்பனரிடம் பாது
காப்பாக ஒப்படைத்துவிட்டு
வடக்கிருந்து உயிர்துறந்தார்.
பாரியிடம் பூண்ட நெருங்கிய
நட்பு காரணமாக அவர்பெண்க
ளைத் தம் பெண்களாகக் கருதி மனம் நொந்து உயிர்
நீத்தார்.
ஔவையார் பிற்பாடு அம்மக
ளிருக்கு மணம் செய்து வைத்ததாகத் தனிப்பாடல்கள்
இயம்புகின்றன. ஔவையார்
தமிழகம் முழுவதும் சுற்றிவந்
து ஆங்காங்கு ஏறபட்ட சிறுசிறு
பிணக்குகளைக் களைந்தார்.
அரசர்முதல் ஆண்டி வரை
அனைவரிடமும் அன்பு பாராட்
டிய அவர் சமூகத்தில் நல்ல
செல்வாக்கோடு திகழ்ந்தார்.
புலவர்கள் பெற்ற பரிசில்க
ளை என்ன செய்தனர்? புலவர் பெருஞ்சித்திரனார் புறம் 163
ஆம் பாடலில் தம் மனைவியி
டம் கூறியதைப் பார்ப்போம்:
"நின்நயந்து உறைநர்க்கும்,
நீநயந்து உறைநரக்கும்
பன்மாண் கற்பின்நின்
கிளைமுத லோர்க்கும்,
கடும்பின் கடும்பசி தீர
யாழநின்
நெடுங்குறி யெதிர்ப்பை
நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது
என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும்
என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி
மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக்
கிழவன்
திருந்துவேல் குமணன்
நல்கிய வளனே!
பொருள்:
" நின்னை விரும்புவோர்,
நின்னால் விரும்பப்படுவோர்,
நின் உறவினராகிய மூத்த
மகளிர், கடன் கொடுத்து
உதவியோர் என எல்லோர்க்
கும் கொடுப்பாயாக! இன்னின்
னார்க்கு என்றோ என்னைக்
கலந்து ஆலோசிக்கவேண்டும்
என்றோ நினையாது கொடுப்பாய். நாமே இதைக்
கொண்டு பயன்அடைவோம்
என்று எண்ணாமல் எல்லோருக்கும் கொடுப்பாய்.
முதிரைமலை நாட்டுத் தலை
வன் குமணன் கொடுத்த
செல்வம் இஃதாகும்".
இதுகாறும் பார்த்த வரையில்,
சங்க காலப் புலவர்கள் வறுமையிலும் செம்மை காத்
தனர் என்பது விளங்கும்.
.
நாள் நூல்கள் வரை படிக்கும்
பொழுது, இவற்றை இயற்றிய
புலவர்கள் பெரும்பாலும் வறு
மையில் உழன்றவர்கள் தாம்
என அறிகிறோம். அவர்களின்
ஏழ்மை நிலையைக் கருத்தில்
கொண்டு அவர்கள் பணத்துக்
காக அலைபவர்கள் என்றும்
உயர்ந்த குறிக்கோள் இல்லாத
வர் என்றும் சிலர் தவறாகக்
கருதிவிடுகின்றனர்.
சங்க காலப் புலவர்களைப்
பொருத்தவரை, இக்கருத்து
முற்றிலும் தவறானதாகும்.
பெருந்தலைச் சாத்தனார்
குமணனைப் பாடிய பாட்டில்
"ஆடுநனி மறந்த கோடுயர்
அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி
உழவாப்
பாஅல் இன்மையின் தோலொ
டு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா
வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்
தம்மகத்துவம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ்
மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி
நினைஇ
நிற்படிந் திசினே நற்போர்க்
குமண!(புறம்:164) என்றார்.
பொருள்:
சமையல் என்பதையே மறந்த
புடை ஓங்கிய அடுப்பில் காளா
ன் பூத்துவிட்டது. பால் இல்லா
மையால் தாயிடம் கிடைக்கும்
என்று எண்ணிச் சுவைக்கின்ற
பிள்ளை பால் கிட்டாததால்
அழும். இதனைப் பார்த்த என்
மனைவி கண்ணீர் வடிக்கின்
றாள். இத்துயரம் துடைத்திட
உன்னை நாடி வந்தேன்" என்று
குமணனிடம் கூறுகின்றார்.
இந்தச் சூழ்நிலைதான் எல்லாப் புலவர் குடும்பங்களி
லும் நிலவியது. இத்தகைய
வறுமையில் உழன்ற போதும்
எப்படி செம்மையாக வாழ்ந்த
னர்? என்பதைப் பார்ப்போம்.
மயிலுக்குப் போர்வை ஈந்தவ
ரும் கடையெழு வள்ளல்களில்
ஒருவரும் ஆகிய வையாவிக்
கோப்பெரும் பேகன் என்பார்
தம் மனைவியாகிய கண்ணகி
(சிலப்பதிகாரக் கண்ணகி
அல்லள்.)யை மறந்து வேறு
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து
வந்தார். இதையறிந்த அப்
பெண் பெருந்துயரத்தில்
மூழ்கினள். இதனைக் கேள்வி
யுற்ற கபிலர், பரணர் என்ற
புலவர்பெருமக்கள் பேகனிடம்
வேண்டுகோள் விடுத்தனர்.
உடனடியாக அவர்தம் மனை
வியின் பிரிவுத் துயரைப்
போக்குமாறு கோரினர்.(புறம்:
143 மற்றும் 144)
"எமக்குப் பரிசில் வேண்டா;
நின் மனைவியின் பிரிவுத்
துயரைத் தீர்ப்பாயாக; அதுவே
நாம் வேண்டும் ஒரே பரிசில்"
என்று மீண்டும் கபிலர் பாடி
னார்..(புறம்:145). அரிசில்கிழா
ர் என்னும் புலவர்"நின் தேவி
யின் துயர் தீர்ப்பாய்; அதுவே
யாம் வேண்டும் ஒரே பரிசில்"
எனச் செப்பினார்.(புறம்:146).
பெருங்குன்றூர்க்கிழார் என்
பவரும்"நின் மனைவியின்
துயர்துடைப்பாய்;அதுவே எம்
பரிசில்; பிற யாதும் யாம் வேண்டோம்" என்று கூறினார்
.(புறம்.147).
சங்க காலத்தில் கொண்கா
னம், துளு நாடு முதலிய பகுதி
களை ஆண்ட வேளிர்குலச்
சிற்றரசன் நன்னன் என்பவன்
தன் நாட்டுப் பெண்ஒருத்திக்கு
அவள் செய்யாத குற்றத்திற்கு
மரண தண்டனை அளித்தான்.
அதனால் அவனைப் புலவர்
யாருமே பாடினார் அல்லர்.
பெண் கொலை புரிந்த நன்ன
ன் என்று தூற்றினர்.
சோழர் குலத்திற் பிறந்த நலங்
கிள்ளி என்பவரும், நெடுங்
கிள்ளி என்பவரும் போர்புரிந்
திட முனைந்த போது புலவர்
கோவூர்கிழார் தலையிட்டுச்
சமாதானம் செய்து போரைத்
தடுத்துநிறுத்தினார்.(புறம்:45).
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்
ளிவளவன் என்னும் சோழ
வேந்தன் மலையமான் என்
னும் குறுநில மன்னனின்
புதல்வராகிய சிறுவர்களை
யானைக் காலால் இடறிக்
கொல்லுமாறு பணியாளர்
களை ஏவியபோது இதனைத்
தடுத்து நிறுத்தியவர் புலவர்
கோவூர்கிழார்(புறம்:46). இது
போலவே, சோழன் காரியாற்
றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி
புலவர் இளந்தத்தனை ஒற்றன்
எனக் கருதிக் கொல்ல முயன்
ற போது புலவர் கோவூர்கிழார்
தான் காப்பாற்றினார்.(புறம்:
47).
பெருந்தலைச்சாத்தனார்
என்னும் புலவர் குமணனிடம்
பரிசில் கேட்டுச் சென்றபோது
தன் உடைவாளைப் புலவரிடம்
தந்து தனது தலையை அரிந்து
நாட்டில் வாழும் தன் தம்பியி
டம் கொடுத்துப் பரிசில் பெற்று
க்கொள்ளுமாறு குமணன்
கூற அதிர்ந்துபோன புலவர்
சிறு நாடகம் நிகழ்த்தி அண்ண
ன் தம்பியை இணைந்து
வாழச்செயதார்.(புறம்:165).
பிசிராந்தையார் என்னும்
புலவர் நேரில் பார்த்திராத
கோப்பெருஞ் சோழன் என்னு
ம் மன்னனுடன் நட்பு பாராட்டி
அவர் வடக்கிருந்த பொழுது
தாமும் அவருடன் வடக்கிருந்து
உயிர்நீத்தார். பொத்தியார்
என்னும் புலவரும் பிற்பாடு
கோப்பெருஞ் சோழன் நினை
வாக வடக்கிருந்து உயிர்துறந்
தார்.(புறம்:215, 216 மற்றும்222).
புல்லாற்றூர் எயிற்றியனார்
என்னும் புலவர் கோப்பெருஞ்
சோழன் தம் புதல்வரொடு
போர்புரிய ஆயத்தம் செய்த
பொழுது நல்லுரை நவின்று
போரைத் தடுத்து நிறுத்தினார்.
(புறம்:213).
ஒளவைப் பிராட்டியார் மன்ன
ன் அதியமானொடு சிறந்த
நட்புப் பாராட்டியவர். ஒருசமய
ம் பரிசில் கொடுக்கத் தாமதம்
ஆனபோது" எத்திசைச் செலி
னும் அத்திசைச் சோறே" என்று வாயிற்காவலனிடம்
கூறி மன்னனிடம் தெரிவிக்
கச் சொன்னார். (புறம்:206).
வெளிமான் என்ற குறுநில
மன்னனைப் பாடிப் பரிசில்
பெற எண்ணிய பெருஞ்சித்
திரனார் என்ற புலவர், மன்னன் நாட்டுக்குச் சென்ற
போது அவர் இறக்கும் தறுவா
யில் இருந்ததால் தன் தம்பி
இளவெளிமானைக் கைகாட்டி அவனிடம் பரிசில்
பெற்றுக்கொள்ளுமாறு
தெரிவித்தார். இளவெளிமான்
மிகச் சொற்பமான பரிசில் நல்க, அதை வேண்டாவென
மறுத்துக் குமணனிடம் சென்று
பாடி யானையைப் பரிசிலாகப்
பெற்று அதனை இளவெளிமா
னது காவல் மரத்தில் கட்டினார்.(புறம்:162).
வள்ளல் பாரி மறைந்த பின்ன
ர் அவர்தம் பெண்மக்கள் இரு
வரையும் திருமணம் செய்து
கொடுக்கப் புலவர் கபிலர் மிக
வும் முயற்சி மேற்கொண்டார்.
அவர் முயற்சி தோற்றுவிட்ட
தால் மனம் வருந்தி அப்பெண்
களைப் பார்ப்பனரிடம் பாது
காப்பாக ஒப்படைத்துவிட்டு
வடக்கிருந்து உயிர்துறந்தார்.
பாரியிடம் பூண்ட நெருங்கிய
நட்பு காரணமாக அவர்பெண்க
ளைத் தம் பெண்களாகக் கருதி மனம் நொந்து உயிர்
நீத்தார்.
ஔவையார் பிற்பாடு அம்மக
ளிருக்கு மணம் செய்து வைத்ததாகத் தனிப்பாடல்கள்
இயம்புகின்றன. ஔவையார்
தமிழகம் முழுவதும் சுற்றிவந்
து ஆங்காங்கு ஏறபட்ட சிறுசிறு
பிணக்குகளைக் களைந்தார்.
அரசர்முதல் ஆண்டி வரை
அனைவரிடமும் அன்பு பாராட்
டிய அவர் சமூகத்தில் நல்ல
செல்வாக்கோடு திகழ்ந்தார்.
புலவர்கள் பெற்ற பரிசில்க
ளை என்ன செய்தனர்? புலவர் பெருஞ்சித்திரனார் புறம் 163
ஆம் பாடலில் தம் மனைவியி
டம் கூறியதைப் பார்ப்போம்:
"நின்நயந்து உறைநர்க்கும்,
நீநயந்து உறைநரக்கும்
பன்மாண் கற்பின்நின்
கிளைமுத லோர்க்கும்,
கடும்பின் கடும்பசி தீர
யாழநின்
நெடுங்குறி யெதிர்ப்பை
நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது
என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும்
என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி
மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக்
கிழவன்
திருந்துவேல் குமணன்
நல்கிய வளனே!
பொருள்:
" நின்னை விரும்புவோர்,
நின்னால் விரும்பப்படுவோர்,
நின் உறவினராகிய மூத்த
மகளிர், கடன் கொடுத்து
உதவியோர் என எல்லோர்க்
கும் கொடுப்பாயாக! இன்னின்
னார்க்கு என்றோ என்னைக்
கலந்து ஆலோசிக்கவேண்டும்
என்றோ நினையாது கொடுப்பாய். நாமே இதைக்
கொண்டு பயன்அடைவோம்
என்று எண்ணாமல் எல்லோருக்கும் கொடுப்பாய்.
முதிரைமலை நாட்டுத் தலை
வன் குமணன் கொடுத்த
செல்வம் இஃதாகும்".
இதுகாறும் பார்த்த வரையில்,
சங்க காலப் புலவர்கள் வறுமையிலும் செம்மை காத்
தனர் என்பது விளங்கும்.
.