இறைவா! ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே!
சங்க காலத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலும்
இயற்கையின் எழிலை விவரிப்பனவாக இருந்தன. இடையிடையே
கடவுளைப் பற்றிய செய்திகளும். கூறப்பட்டிருந்தன. பக்திக்காலம்
எனக் கருதப்படும் ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர்,
திருநாவுக்கரசர் ஆகிய சிவஞானச்செல்வர்கள் ஆயிரக்கணக்கான
பாடல்களை இயற்றி அவற்றை எந்தப்பண்களில் பாடி இறை
வனைத் தொழுதல் வேண்டும் என்ற விதிகளையும் வகுத்துக்
கொடுத்தனர்.
சங்க காலத்துப் பாடல்கள் இயற்கையோடு இயைந்த அன்றைய
வாழ்க்கைமுறையை விவரித்தன. குறைந்த சொற்களைக்
கையாண்டு அன்றைய வாழ்வியலை எடுத்துக் காட்டின.கலித்
தொகை, பரிபாடல் போன்றவை இசைக் கூறுகளோடு மிளிர்ந்
தாலும் பிற்காலத்தில் பின்பற்றப்பட்ட மொழியை அழகுபடுத்தும்
மடக்கு, திரிபு முதலிய புலமைக்கு அறைகூவல் விடுக்கும் கூறுகள்
அன்றைய நாளில் பின்பற்றப்படவில்லை. திருஞானசம்பந்தர்
பக்திப் பாடல்களை இயற்றியதோடு மொழியை அழகுபடுத்தும்
விடயங்களிலும் கவனம் செலுத்தினார். எழுகூற்றிருக்கை,
ஏகபாதம், மடக்கு(யமகம்), மாலை மாற்று, பல்வகைச் சந்தம்
போன்ற திறமைக்கு அறைகூவல் விடும் இலக்கியககூறுகளைக்
கையாண்டு தம் பாடல்களில் சுவையும், அழகும்ததும்பச் செய்தார்.
அவர் அடியொற்றியே பின்னாளில் திருத்தக்க தேவர், கம்பர்,
ஒட்டக் கூத்தர், அருணகிரிநாதர், வில்லிபுத்தூரார், காளமேகனார்
போன்ற புலவர்கள் சித்திரகவி எனப்படும் கவிதைகளையும்
சந்தக்கவிதைகளையும் படைத்தனர். எடுத்துக்காட்டாகச் சில
பாடல்களைப் பார்ப்போம்:
மடக்கு(யமகம்):
"ஆல நீழல் உகந்த(து) இருக்கையே;
யான பாடல் உகந்த(து) இருக்கையே;
பாலி னேர்மொழி யாளொரு பங்கனே;
பாத மோதலர் சேர்புர பங்கனே;
கோல நீறணி மேதகு பூதனே;
கோதி லார்மன மேவிய பூதனே;
ஆல நஞ்சமு துண்ட களத்தனே;
யால வாயுறை அண்டர் களத்தனே."
பொருள்:
கல்லாலின் நிழலில். விரும்பியது இருக்கையே(இருப்பிடம்);
யான் பாடலில் விரும்பியது இருக்கையே(ரிக்கு என்ற வேதப்
பாடலையே); பாலுக்கு நிகரான பேச்சுடைய உமையம்மையை
இடப்பங்கில் உடையவன்; தமது திருவடியைத் துதியாதவராகிய
அசுரர் இருந்த திரிபுரத்தை அழித்தவன். அழகிய திருநீற்றைப்
பூசிய சிறந்த சிவகணங்களையுடையவனே! குற்றமற்ற
அடியார்கள் மனங்களில் தங்கியிருப்பவனே! அவர்தம் உயிருக்கு
உயிராய் இருப்பவனே!. ஆலகால நஞ்சை அமுதம் போல் உண்ட
கழுத்தை உடையவனே! ஆலவாயில் (மதுரைக் கோவிலில்) உறை
கின்ற தேவர்கள் தலைவனே!
இருக்கையே=இருப்பிடமே; இருக்கையே= நால்வேதங்களில்
முதலாவதாகவுள்ள இருக்கையே(ரிக், யஜுர், சாம, அதர்வணம்);
பங்கன்=உமையை இடப் பங்கில் உடையவன்; (திரிபுர) பங்கன்=
(திரிபுரத்தை) அழித்தவன்; பூதன்= பூதகணங்களையுடையவன்;
பூதன்(பூதம்=உயிர்) உயிருக்கு உயிராய் இருப்பவன்; (நஞ்சுண்ட)
களத்தன்=கழுத்தையுமடையவன்; (அண்டர்)களத்தன்=
அண்டர்கள்(தேவர்கள்) +அத்தன்=தேவர்களுக்குத் தலைவன்.
மடக்கு(யமகம்) என்பது செய்யுளில் முதலடியில் பயின்று
வரும் ஒருசொல் ஒரு குறிப்பிட்ட. பொருளைக் குறிக்கும்; அதே
சொல் அடுத்த அடியில் மடங்கி வந்து(திரும்பவந்து) வேறொரு
பொருளைத் தரும்.
இது போலவே ஒரு குறிப்பிட்ட எழுத்து வருக்கத்தைப் பயன்
படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார். அந்தவகையில்
அமைந்த ஒரு பாடலைப் பார்ப்போம்:
"ஒழுகலரி(து) அழிகலியில் உழியுலகு
பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி
குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை
கழுவும் உரை கழுமலநகர்ப்
பழுதில்இறை எழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே".
பொருள்:
அறம் அழிகின்ற கலியுகத்தில், உலகத்தில் ,அறவழியில்,
ஒழுகுவது(நடப்பது) அரியது என்றும் பாவம் பெருகுகின்ற
வழிகள் பெருமளவில் நிலவுகின்றன என்றும் எண்ணிய
உடல் முழுவதும் மயிர்களைக்கொண்ட உரோமசமுனிவர்
தன் குழுவினொடு கழுமலத்தில் தங்கியிருந்து சிவனைத்
தொழுதுவந்தார். உலக இச்சையில் வழுக்கச்செய்யும் பந்த
பாசங்களை நீக்கும் அந்தத் தலத்தில் வணங்குவோரின்
குற்றம் குறைகளைப் போக்கும் தலைவரும், எழுதக்கூடிய
வேதமொழியாகிய தமிழில் விற்பன்னருமாகிய ஞான
சம்பந்தனின் வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப்
பயன்பெறும் தன்மையுடையவை. கழுமலம்=சீர்காழிப்பதி.
இது போன்ற சொல் விளையாட்டு மற்றும் எழுத்து விளையாட்டு
திருஞானசம்பந்தருக்கு மிகமிக உகந்தவை. இறைவனைப்
பாடிப் பரவிய பாடல்களில் இயற்கை வருணனை, பற்பல
சந்தங்கள், விதவிதமான யாப்பு வடிவங்கள், ஏகபாதம், எழுகூற்
றிருக்கை, மாலைமாற்று, திருவிருக்கக் குறள், திருவிராகம்
முதலான உத்திகளைக் கையாண்டு பக்தியையும் தமிழையும்
வளர்த்தார். அவர் அடியொற்றியே பிற்காலத்தில் கம்பர்,
அருணகிரிநாதர், காளமேகப் புலவர் போன்றவர்கள் விதவிதமான
சந்தங்கள் யாப்பு முறைகளையும் கையாண்டு தமிழிலக்கியத்தை
வளப்படுத்தினர்.