சீனா நட்பு நாடா? பகை நாடா?
பாக்கிஸ்தான் செஞ்சீனா இவ்விரண்டு நாடுகளும்
பகைவர் நாடே;
நோக்கிடிலோ முதல்நாடு வெளிப்படையாம் பகைவரென
நொந்து கொள்வோம்;
ஏய்க்கின்ற நாடென்றே இரண்டாம்நாட் டைச்சொல்வோம்;
ஏனென் றாலே
தீக்குணத்தை மறைத்திடுமே; வெளியினிலே நடித்திடுமே:
தெரிந்து கொள்வோம்.
நன்னெறியைக் கடைப்பிடிக்கும் பாரத்த்தைப் பாக்கிஸ்தான்
வெற்றி கொள்ள
என்னவழி முயன்றாலும் இயலாது; பேருண்மை;
இரண்டாம் நாடு
தன்னலமும் சூழ்ச்சிகளும் தந்திரமும் கொண்டிலங்கும்
தாழ்ந்த நாடு;
என்னவிலை கொடுத்தேனும் எதிர்கொண்டு முறியடிப்போம;
எமக்கே வெற்றி!
சிவகாசி நகரினிலே உருவாகும் பட்டாசைத்
தேசம் எல்லாம்
நவமான பொருளென்றே வாங்கிமனம் மகிழ்ந்தனவே;
நயனில் சீனம்
தவறாது பட்டாசை அதிகளவில் தள்ளிவிட்டுச்
சந்தை தன்னில்
எவராலும் தரவியலா விலைக்குறைப்பால் நம்மவர்க்கே
இழப்பை நல்கும்.
மக்கள் தொகையில் வளங்களிலே
மன்னும் நமது பாரதமும்
சிக்கல் நல்கும் சீனாவும்
தேரின் இரண்டும் சம்ம்ஆகும;
அக்கம் பக்கம் நமைநாடி
ஆத ரிக்கும் நாடில்லை;
தக்க துணையாய்ச் சீனத்தைத்
தாங்கும் நாடு பலவுளவே.
ஆத லாலே நம்நாட்டில்
அனைத்துப் பாது காப்பினையும்
தோது படவே மேற்கொள்வோம்;
சுற்று முற்றும் கவனிப்போம;
யாது வழியில் படைவரினும்
ஏற்ற முறையில் எதிர்கொள்வோம்;
தீது சிறிதும் அண்டாமல்
தெய்வத் திருநாட் டைக்காப்போம்.
பார தத்தைச் சந்தையெனப்
பயன்ப டுத்த நினைக்கின்ற
கார ணத்தால் படையெடுப்பைக்
கபட மாகத் தவிர்த்திடுமே;
தீர மிக்க இந்தியரே!
சீனப் பொருளைப் புறக்கணிப்போம்;
போரை வெறுப்போம்; வந்துவிட்டால்
புயலைப் போலப் பாய்ந்திடுவோம்.
சீனத்தில் உருவாக்கும் பொருள்களைநாம் மலிவென்றே
ஈனத் தனமாய் இறக்குமதி செய்கின்றோம;
தேனொத்த பொருளெனினும் தீதெண்ணும் சீனத்தை
மானமிகு இந்தியர்கள் வாழ்வித்தல் முறையாமோ?
வல்லரசாய் மாறியிந்த மண்டலத்தில் பவனிவர
எல்லையிலா ஆசையுடன் இறுமாந்து நடக்கிறது;
தொல்லைதரும் சீனத்தைச் சூழ்ச்சிக்கோர் உறைவிடத்தைச்
சொல்லொணாத் தீமையினைத் தோற்கடிக்க முயல்வோமே!
வரவிருக்கும் விழாக்களிலே வழக்கம்போல் சிவகாசித்
தரமிகுந்த பட்டாசைத் தடையின்றி வாங்கிடுவோம;
அரசு,நம்மை அச்சுறுத்தும் அந்நாட்டுப் பொருள்களையே
இரக்கமின்றித் தடைசெய்க; எம்மக்கள் வாழ்கவே!
நன்னெறியிற் செல்பவரே நன்மை அடைந்திடுவர்;
புன்னெறியிற் செல்பவர் பொன்றிடுவர்; --உன்னதமாம்
பாரத்த்தைத் தாக்கவெண்ணும் பாக்கிஸ்தான் சீனமிவை
போரதனில் வீழும் புகல்.
வடகிழக்கு மாநிலத்தில் வாலாட்டும் சீனம்
தடதடவென் றுள்நுழைந்து தாக்கும்--இடரிதனை
எப்பொழுதும் சிந்தித் (து) எதிர்நோக்கி எச்சரிக்கை
தப்பாமல் மேற்கொள்வோம் சார்ந்து.
அறுபத் திரண்டில் அறமல்லாப் போரில்
சிறுமைத் தனம்செய்து சீனம்--பெருநிலத்தைக்
கைப்பற்றிக் கொண்டு களியாட்டம் போட்டதிதை
எப்பொழுது மீட்போம் இனி?
பாக்கிஸ்தான் செஞ்சீனா இவ்விரண்டு நாடுகளும்
பகைவர் நாடே;
நோக்கிடிலோ முதல்நாடு வெளிப்படையாம் பகைவரென
நொந்து கொள்வோம்;
ஏய்க்கின்ற நாடென்றே இரண்டாம்நாட் டைச்சொல்வோம்;
ஏனென் றாலே
தீக்குணத்தை மறைத்திடுமே; வெளியினிலே நடித்திடுமே:
தெரிந்து கொள்வோம்.
நன்னெறியைக் கடைப்பிடிக்கும் பாரத்த்தைப் பாக்கிஸ்தான்
வெற்றி கொள்ள
என்னவழி முயன்றாலும் இயலாது; பேருண்மை;
இரண்டாம் நாடு
தன்னலமும் சூழ்ச்சிகளும் தந்திரமும் கொண்டிலங்கும்
தாழ்ந்த நாடு;
என்னவிலை கொடுத்தேனும் எதிர்கொண்டு முறியடிப்போம;
எமக்கே வெற்றி!
சிவகாசி நகரினிலே உருவாகும் பட்டாசைத்
தேசம் எல்லாம்
நவமான பொருளென்றே வாங்கிமனம் மகிழ்ந்தனவே;
நயனில் சீனம்
தவறாது பட்டாசை அதிகளவில் தள்ளிவிட்டுச்
சந்தை தன்னில்
எவராலும் தரவியலா விலைக்குறைப்பால் நம்மவர்க்கே
இழப்பை நல்கும்.
மக்கள் தொகையில் வளங்களிலே
மன்னும் நமது பாரதமும்
சிக்கல் நல்கும் சீனாவும்
தேரின் இரண்டும் சம்ம்ஆகும;
அக்கம் பக்கம் நமைநாடி
ஆத ரிக்கும் நாடில்லை;
தக்க துணையாய்ச் சீனத்தைத்
தாங்கும் நாடு பலவுளவே.
ஆத லாலே நம்நாட்டில்
அனைத்துப் பாது காப்பினையும்
தோது படவே மேற்கொள்வோம்;
சுற்று முற்றும் கவனிப்போம;
யாது வழியில் படைவரினும்
ஏற்ற முறையில் எதிர்கொள்வோம்;
தீது சிறிதும் அண்டாமல்
தெய்வத் திருநாட் டைக்காப்போம்.
பார தத்தைச் சந்தையெனப்
பயன்ப டுத்த நினைக்கின்ற
கார ணத்தால் படையெடுப்பைக்
கபட மாகத் தவிர்த்திடுமே;
தீர மிக்க இந்தியரே!
சீனப் பொருளைப் புறக்கணிப்போம்;
போரை வெறுப்போம்; வந்துவிட்டால்
புயலைப் போலப் பாய்ந்திடுவோம்.
சீனத்தில் உருவாக்கும் பொருள்களைநாம் மலிவென்றே
ஈனத் தனமாய் இறக்குமதி செய்கின்றோம;
தேனொத்த பொருளெனினும் தீதெண்ணும் சீனத்தை
மானமிகு இந்தியர்கள் வாழ்வித்தல் முறையாமோ?
வல்லரசாய் மாறியிந்த மண்டலத்தில் பவனிவர
எல்லையிலா ஆசையுடன் இறுமாந்து நடக்கிறது;
தொல்லைதரும் சீனத்தைச் சூழ்ச்சிக்கோர் உறைவிடத்தைச்
சொல்லொணாத் தீமையினைத் தோற்கடிக்க முயல்வோமே!
வரவிருக்கும் விழாக்களிலே வழக்கம்போல் சிவகாசித்
தரமிகுந்த பட்டாசைத் தடையின்றி வாங்கிடுவோம;
அரசு,நம்மை அச்சுறுத்தும் அந்நாட்டுப் பொருள்களையே
இரக்கமின்றித் தடைசெய்க; எம்மக்கள் வாழ்கவே!
நன்னெறியிற் செல்பவரே நன்மை அடைந்திடுவர்;
புன்னெறியிற் செல்பவர் பொன்றிடுவர்; --உன்னதமாம்
பாரத்த்தைத் தாக்கவெண்ணும் பாக்கிஸ்தான் சீனமிவை
போரதனில் வீழும் புகல்.
வடகிழக்கு மாநிலத்தில் வாலாட்டும் சீனம்
தடதடவென் றுள்நுழைந்து தாக்கும்--இடரிதனை
எப்பொழுதும் சிந்தித் (து) எதிர்நோக்கி எச்சரிக்கை
தப்பாமல் மேற்கொள்வோம் சார்ந்து.
அறுபத் திரண்டில் அறமல்லாப் போரில்
சிறுமைத் தனம்செய்து சீனம்--பெருநிலத்தைக்
கைப்பற்றிக் கொண்டு களியாட்டம் போட்டதிதை
எப்பொழுது மீட்போம் இனி?