வலிப்பு நோய் நீக்கிய கலம் செய் கோ.
(கொங்கு மண்டல சதகம் குறிப்பிடும் கொங்கக் குயவர்).
கொங்கு மண்டல சதகம் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிடு
கின்றது. கரிகாலச் சோழர் மகளுக்கு ஏற்பட்ட பெரிய வலிப்பு
நோயைக் கொங்கு நாட்டைச் சேர்ந்த ஒரு குயவர் மண்ணால் ஒரு
பாவை செய்து குறிபார்த்துச் சுட(நோயாளியை அல்ல--அந்த
மண்பாவையை) அவ்வலிப்பு நோய் விலகியது என்று சதகப் பாடல்
(பாடல் எண்: 89) தெரிவிக்கிறது. தொடர்புடைய பாடல் பின்வருமாறு:
"கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பும்
எரியாம் உடலை மயக்கமண் கோவன் இறைமகளைப்
பரிபா லனஞ்செய மண்பானை யிற்குறி பார்த்துச்சுட
மரியாமல் அவ்வலி ஏகிய துங்கொங்கு மண்டலமே".
விளக்கம்:
கரிகாலர் என்னும் சோழர் மகளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது.
எத்தனையோ மருத்துவர்கள் தங்களால் இயன்ற மருத்துவம் செய்தும்
சிறிதேனும் நோய் குணமாகவில்லை. அப்பொழுது கொங்கு நாட்டுக்
குயவர் ஒருவர் இந்நோயை உறுதியாகவும் வெகு விரைவாகவும்
நீக்குவார் என்று பலபேர் சொல்லக் கேட்ட வேந்தர் கரிகாலர் அக் குயவரைத்
தம் நாட்டுக்கு அழைத்துவர ஆணையிட்டார். அரச கட்டளைப்படி குயவர்
சோழநாட்டுக்கு வந்து சேர்ந்து வேந்தர் முன் வணங்கி நின்றார்.
வேந்தர் குயவரைப் பார்த்துப் பேசத்தொடங்கினார். "ஐயா! நீர் வலிப்பு நோயைக்
குணப்படுத்துவதாகச் சொல்லுகின்றனர். நீர் என்ன மருத்துவம் செய்ய எண்ணியுள்ளீர்?"
குயவர்: "வேந்தே! வலிப்பு நோய் ஏற்படும் உடல் உறுப்புக்குச் சூடு போடுவது மூலம்
குணப்படுத்துவேன்."
கரிகாலர்: "குயவரே! என் மகள் இளங் குழந்தை; சூட்டைப் பொறுக்க மாட்டாமல் துடிதுடித்து விடுவாள்".
குயவர்:"எம் அண்ணலே! அரசிளங் குமரியின் உடலிற் படாமல் சூடு போட்டு நோயை
விரட்டிடுவேன்".
கரிகாலர்:: ",அப்படியானால் உம் பணியைத் தொடங்குக".
உடனே குயவர் மண்ணால் அரசிளங்குமரி போல் ஒரு பாவையைச் செய்தார். அக் குழந்
கைக்கு வலிப்பு எந்த இடத்தில் ஏற்படும் என்று கேட்டறிந்து மண்பாவையில் அந்தப்
பாகத்தைக் குறிபார்த்து நெருப்பில் புரட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கோலால் சூடு போட்டார்.
அந்நோய் அடியோடு நீங்கியது.
இந்த மருத்துவ முறை நம்ப முடியாததாக இருப்பினும் ஒட்டியம்-சல்லியம் என்னும் மந்திர
சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாகக் கொங்கு மண்டல சதகம் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட
பொருளில்(மண்ணால்) பாவை செய்து அப்பாவையின் உறுப்பில் ஊசி முதலியவற்றைக்
குத்துதல், சூடு போடுதல் போன்ற செய்கைகளால், இருக்கின்ற நோயை நீக்குதல், இல்லாத
நோயைப் புதிதாக உருவாக்கல் முதலான ஜால வித்தைகள் செய்வது ஒட்டியம்-சல்லியம்
என்னும் மந்திரவகையில் அடங்கும். நான் அறிந்தவரை குயவர் பெருமக்கள் 'அக்கி' என்
னும் நோய்க்குச் செம்மண்ணைக் கரைத்துக் குழம்பாக்கி"அக்கி எழுதுதல் " என்ற
மருத்துவம் இன்றைய நாள் வரையில் செய்துவருகின்றனர். வலிப்பு நோய்க்கான இந்தச்
சூடு போடும்(மனிதருக்கு அல்ல--மண்பாவைக்கு) மருத்துவம்/ஜால வைத்தியம் செய்கின்
றார்களா? என்பது ஐயமே.
கொங்கு மண்டல சதகத்தில் வேறொரு குறிப்பும் காணப்படுகிறது:
வலிப்பு நோய் ஏற்பட்டுப் பிற்பாடு நீங்கியது சங்ககாலக் கரிகாலர் மகளுக்கல்ல என்றும்,
அது இடைக்கால விக்கிரம சோழர் மகளுக்கு ஏற்பட்டு நீங்கியது என்றும், பொன்கலூர்
நாட்டு வானவன்சேரி என்னும் ஊரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதென்றும், குறும்பி நாட்டுக்
கற்றாங்காணி ஊரிலுள்ள ஒரு கொங்குக் குயவர் அங்கு வந்து குறிசுட்டார் என்றும்
குயவர் பெருமக்கள் பாதுகாத்து வைத்துள்ள பழைய ஓலைச் சுவடியொன்றில் குறிப்
பிடப்பட்டுளது.இவ்வாறான குறிப்பு சதக நூலில் காணப்படுகிறது.