மூவேந்தர் மீது பாடப்பட்ட முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் நூல் யாரால், எந்தக் காலத்தில் பாடப்
பட்டது என்பது தெரியவில்லை. மூவேந்தர்களையும் சம
மாகப் போற்றிய புலவரால் பாடப்பட்டது என்னும் செய்தி
நூலைப் படிக்கும் பொழுது தெரிகிறது. எந்தக் காலத்தில்
பாடப்பட்டது என்னும் செய்தியும் தெளிவாகத் தெரிய
வில்லை. சிலர் சங்க காலத்தில் பாடப்பட்டதாகவும், வேறு
சிலர் சங்கம் மருவிய காலத்தில் பாடப்பட்டதாகவும் கருது
கின்றனர். சங்க காலத்தில் பாடப்பட்டதாகக் கருதுவதில்
எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் சங்க காலத்தில்
வழக்கத்தில் நிலவிய வெண்பா யாப்பால் நூல் இயற்றப்
பட்டுள்ளது. சங்கம் மருவிய காலம் என்றால் விருத்தப்பா
என்னும் பாவினம் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். சங்கம்
மருவிய காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் கானல்
வரி முதலான பாடல்கள் விருத்தப்பா என்னும் பாவினத்
தைச் சேர்ந்தவை. அதனால் சங்க காலத்தைச் சேர்ந்த
நூல் என்று கொள்வதில் தவறில்லை. அகத்தைப் பற்றிய
நூலா, புறத்தைப் பற்றிய நூலா என்று வினவினால் அகம்,
புறம் இரண்டும் கலந்து பாடப்பட்ட நூல் எனக் கூறலாம்.
ஒவ்வொரு வேந்தர் மீதும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம்
மொத்தம் 2700(900 ×3) பாடல்கள் இயற்றப்பட்டதாக
அறிகிறோம். ஆனால் நம் கைக்குக் கிடைத்தவை 108
பாடல்கள் மட்டுமே. சேரவேந்தர் மீது 22 பாடல்களும், சோழ
வேந்தர் மீது 29 பாடல்களும் மற்றும் பாண்டிய வேந்தர் மீது
57 பாடல்களும் நம் கைக்குக் கிடைத்துள்ளன. இதுவும்,
நேரடியாக நமக்குக் கிடைக்கவில்லை. யாரோ ஒரு
புண்ணிய ஆத்மா புறப்பொருளைப் பற்றிய நல்ல
பாடல்களைத் தொகுக்கும் பொழுது இந்த நூலில் இருந்து
108 பாடல்களைப் "புறத் திரட்டு" என்னும் பெயரிலுள்ள
நூலில் இணைத்திருக்கிறார். இதனை நாம் ஆகூழ்
(அதிர்ஷ்டம்) என்பதா? போகூழ்(துரதிர்ஷ்டம்) என்பதா?
சேர்க்கப்பட்ட 108 பாடல்களையும் முத்துக்கள் என்றே
சொல்லலாம். இனி இந்த 108 பாடல்களில் சிலவற்றை
நோக்குவோம்.
அந்தக் காலத்தில் களவியல், கற்பியல் என்னும் இரண்டு
பிரிவுகள் அகவாழ்வில் பின்பற்றப்பட்டன. முன் பின்
பழகியிராத ஆண் ஒருவனும் பெண் ஒருத்தியும் தற்
செயலாகச் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து
அதனால் ஏற்படும் ஈர்ப்பால் காதல் அரும்பிப் பின்னர்
இருவரும் பிறர் அறியாமல் பழகி வாழ்தல் களவியல்
வாழ்வு எனப்படும். பின்னர் இச்செய்தி ஊரிலுள்ள
பிறருக்குத் தெரிந்து அவர்கள் மூலமாகத் தாய்மாருக்
கும் தெரியவர அவர்கள் திருமணம் செய்வித்துக்
கற்பியலில் ஈடுபடுத்துவார்கள். குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல் மற்றும் பாலை என்னும் ஐந்து நிலத்
திணைகளிலும் இந்த இயற்கைக் காமம்(களவியல் மற்றும்
கற்பியல்) நடைபெறும். சில நேரங்களில் ஆணோ,
பெண்ணோ ஒருவர் மட்டுமே விரும்புவார். இது ஒருதலைக்
காதல்(கைக்கிளை) என அழைக்கப்படும். பொருந்தாத
காதலும் சில நேரங்களில் நிகழ்வதுண்டு. இது பெருந்
திணை என அழைக்கப் படும். ஆனால் இந்த வாழ்வு
முறைகளால் எந்தக் கேடும்ஏற்பட்டதில்லை. ஏனென்றால்
சிறந்த ஒழுக்கமும், நெறிமுறைகளும் பின்பற்றப்
பட்டன. எந்த விதமான ஒழுக்கச் சீர்கேடும் நிகழ்ந்த
தில்லை. இனி, பாடல்களை நோக்குவோம்:
சேரனைப் பற்றிய பாடல்கள:
"கடல்தானைக் கோதையைக் காண்கொடாள்; வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை--அடைக்குமேல்
ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ? தான்".
சேரவேந்தன் வீதியில் உலாவரும் பொழுது பருவ
வயது மகள் பார்த்து ஒருதலைக் காதல் கொண்டால்
தொல்லை எனக் கருதி தாய் வாயிற் கதவை அடைத்து
விட்டு உள்ளே செல்ல, மகள் கதவைத் திறந்து எட்டிப்
பார்க்க, மீண்டும் தாய் வந்து கதவை அடைக்க, மகள்
மீண்டும் திறக்க, இப்படியாக அக்கதவின் அடிப்
பகுதி தேய்ந்து விட்டதாம். இதனால் தலைவி தன்
தோழியிடம்" கடல் போன்ற சேனையை உடைய
சேரவேந்தனைக் காணவொட்டாமல் அன்னை
கதவை அடைக்கின்றாளே! என்னையும் அவனை
யம் வைத்து அலர்(பழிச்சொல், வம்பு) பேசுபவர்
வாய்களை அடைக்க முடியுமா?" எனக் கேட்டாள்.
"ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன்--நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேருமென் நெஞ்சு."
"சேரவேந்தனைக் காண்பதற்காகக்கதவைத்
திறந்தேன். பிறகு அதை அடைத்துவிட்டேன்.
பெரும் செல்வந்தர் வீட்டுக்கு உதவிகேட்டுச்
செல்லும் வறியவர் பிறகு நாணமுற்று உதவி
கேளாது திரும்புவது போல என் நெஞ்சமும்
போவதும் வருவதும் ஆகப் போராடியது."
"அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த வெள்வேல்
பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச்--சுரும்பொடு
வண்டாடு பக்கமும் உண்டு; குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு."
சேரவேந்தன் எறிந்த வெள்வேல் தசையை அறுத்
துக் கொல்லும். அதனால் வேலின் கொழுவில்புலால்
நாற்றமும் வேலின்பிடியில் தடவப்பட்ட செஞ்சந்தனத்தின்
நறுமணமும் கலந்து நாறும். இது காரணமாக, ஒரு
புறம் வண்டினங்களும் மற்றொரு புறத்தில் நரி
களும் கொண்டாடும்.
"அயில்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயில்கதவம் கோத்தெடுத்த கோட்டால்--பனிக்கடலுள்
பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்
காய்சினவேல் கோதை களிறு".
கோட்டைச் சுவரின்வாயிலுக்குப் பெரிய மரக் கதவம்
பொருத்தியிருப்பார்கள். இதைத்தான் எயில்கதவம்
என்பார்கள். இந்தக் கதவுக்கு வெளிப்புறத்தில் ஈட்டி
கள் பொருத்தப்பட்ட இரும்புக் கதவம் அமைத்திருப்
பார்கள். இதை அயில்கதவம் என்பார்கள். சேரவேந்தனது
ஆண்யானை அயில்கதவாகிய இரும்புக் கதவை முட்டி
மோதித் தகர்த்த பின்னர் எயில்கதவாகிய மரக்கதவைத்
தன் தந்தங்களால் கோத்து எடுத்து வீசியெறிய முயற்சி
செய்தது. ஆனால் தந்தங்களில் மாட்டிக் கொண்டதால்
கடலில் பாய்விரித்துக் கடந்து செல்லும் கப்பல் போலத்
தோன்றியது.
இனி சோழவேந்தனைப் பற்றிய பாடல்களை நோக்குவோம:
"திறந்திடுமின் தீயவை பிற்காண்டும்; மாதர்
இறந்துபடின் பெரிதாம் ஏதம்--உறந்தையர்கோன்
தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு."
பெண்களிடம் தாய் எவ்வளவோ சொல்லியும்
அவர்கள் தாய்சொல்லைக் கேட்கவில்லை.
மனத்தையும் உடலையும் கெடுத்துக் கொண்டார்
கள்.உடல் மெலியும் அளவுக்கு உணவை வெறுத்து
ஒதுக்கினர். பார்த்த செவிலித்தாய்" கதவை
அடைக்கவேண்டா; உலாவரும் சோழவேந்தனைக்
கண்ணாரக் காணக் கதவைத் திறந்திடுக. ஏனென்
றால் உடல் மெலிந்து மாதர் இறந்து விட்டால் துயர்
உண்டாகும்." என்று நவின்றாள்.
"கண்டன உண்கண்; கலந்தன நன்னெஞ்சம்;
தண்டப் படுவ தடமென்தோள்--கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்(கு)
எலாஅம் முறைகிடந்த ஆறு."
தலைவி கூறுகிறாள்:" சோழவேந்தனைப்
பார்த்த குற்றம் கண்களைச் சேரும். அவன்
நெஞ்சோடு கலந்தது எனது நன்னெஞ்சம்.
இவ்வாறு கண்களும் நெஞ்சும் குற்றம் செய்
தன. ஆனால் தண்டனை தோள்களுக்குக்
கிடைத்துள்ளது. சோழவேந்தன் ஆட்சியில்
முறைமை இவ்வாறு உள்ளது." தோள்கள்
மெலிந்தன; ஆதலால் அதனைத் தண்டனை
என்று கூறினாள்.
"சுடரிலைவேற் சோழன்தன் பாடலம் ஏறிப்
படர்தந்தான்; பைந்தொடியார் காண--தொடர்புடைய
நீல அலையிற் கயல்போல் பிறழுமே
சாலேக வாயில்தொறும் கண்".
சோழவேந்தன் தன் குதிரை மீதேறி வருகின்றான்.
கடலில் நீல அலைகளின் ஊடே மீன்கள் பிறழுவ
தைப் போல அவ்வீதியிலுள்ள வீடுகளின் பலகணி
வழியாகப் பெண்களின் கண்கள் தோன்றின.
(பாடலம்--குதிரை; சாலேகம்--பலகணி, சன்னல்).
இனி பாண்டிய வேந்தனைப் பற்றிய பாடல்களைப்
பார்ப்போம்:
"பார்படுப செம்பொன்; பதிபடுப முத்தமிழ்நூல்;
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும்--சாரல்
மலைபடுப யானை; வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு."
பாண்டிய நாட்டில் எங்கும் செம்பொன் கிடைக்
கிறது. ஏனென்றால் வெளிநாட்டவர் தம்மிடம்
உள்ள பொன்னைக் கொடுத்து அதற்குப் பதி
லாகக் கொற்கை முத்துக்களை வாங்கிச் செல்
வதால் செம்பொன் எங்கும் கிடைக்கிறது. இந்த
நாடு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததால் ஊர்
களிலெல்லாம் தமிழ் நூலும் தமிழ் ஆட்சிமுறை
யும் தென்படுகின்றன. கடலில் வெண்சங்கும்
முத்தும், மலைச்சாரலில் யானைகளும் தென்
படுகின்றன. பகையரசர்கள் மார்பில் அவன் கூர்
வேல் தென்படும்.
"நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும்--சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு."
சங்குகள் இப்பொழுதுதான் ஈன்ற மிகச் சிறிய முட்டை
களும், புன்னை மரத்தின் குவிந்த மொட்டுக்களும்
பாக்கு மரத்தின் இளம் பாளையிலிருந்து உதிர்கின்ற
முத்துக்களும் எங்கெங்கும் சிந்திக் கடலில் விளைந்த
வெண்முத்துக்கள் போல்தோன்றும் சிறப்புடையது
நகைமுத்த வெண்கொற்றக் குடையை உடைய
பாண்டிய நாடாகும்.
"ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன்
தானையால் கண்புதைத்தான் தார்வழுதி--
யானையெலாம்
புல்லார் பிடிபுலம்பத் தாம்கண் புதைத்தவே
பல்வாயாற் பட்ட களத்து".
ஈற்றடி"பல்யானை அட்ட களத்து." எனவும்
சில சுவடிகளில் காணப்படுவதாகப் புலவர்
கள் கூறிடுவர்.
போரினால் ஏற்படும் கொடுமையான விளை
வுகளை விவரிக்கும் பாடல் இதுவாகும். போரில்
இரு பக்கத்திலும் கணக்கற்ற வீரர்கள் மாண்டு
விட்டனர். ஏனைய அஃறிணை உயிரினங்களாகிய
குதிரைகளும், யானைகளும் எத்தனை எத்தனை
யோ மாண்டு விட்டன. பகை வீரர்கள்தம் மனைவியர்
தீக்குளிக்கத் தொடங்கி விட்டனர். ஏனென்றால்
வென்றவர் சிறையெடுத்தால் என்னென்ன நிகழ்
வுகள் நடைபெறும் என்று கூற இயலாது. எனவே
வென்றவர் கையில் அகப்படுவதைக் காட்டிலும்
தீக்குளிப்பது எளிதென எண்ணுவது வழக்கம்.
இந்தக் கொடுமையான நிகழ்ச்சியைப் பார்க்கச்
சகியாமல் தன் ஆடையின் முன்தானையால்
கண்களை மூடிக் கொண்டான் பாண்டியன். அவனைப்
போலவே அவனது படையில் இருந்த பெண்யானைகள்
தமது ஆண்யானைகள் போரில் இறந்து பட்
டமைக்காகத் தம் கண்களை மூடிக்கொண்
டனவாம். என்னதான் நமது இலக்கியங்கள்,
நீதி நூல்கள் இரக்கத்தை வலியுறுத்தினாலும்
போர்க்களத்தில் அவை பேணப்படவில்லை.
இந்த விடயத்தை மேற்கொண்டு விவரித்தால்
முத்தொள்ளாயிரத்தின் பாடல்களை அனுப
விக்க இயலாமற் போய்விடும். போர் என்பதையே
மனித குலம் அறவே வெறுத்து ஒதுக்கிடல்
வேண்டும். நாடுகளுக் கிடையே மண்ணாசை,
பொருளாசை போன்றவை நீங்கட்டும்! எங்கும்
அமைதி நிலவட்டும்! வாய்ப்புக் கிட்டும் பொழுது
முத்தொள்ளாயிரம் நூல் முழுவதும் படித்து அதில்
பயின்று வரும் சொல் நயம், பொருள் நயம், கற்பனை
நயம் முதலானவற்றை அனுபவித்து இன்புறு
மாறு வேண்டுகிறேன்.
முத்தொள்ளாயிரம் நூல் யாரால், எந்தக் காலத்தில் பாடப்
பட்டது என்பது தெரியவில்லை. மூவேந்தர்களையும் சம
மாகப் போற்றிய புலவரால் பாடப்பட்டது என்னும் செய்தி
நூலைப் படிக்கும் பொழுது தெரிகிறது. எந்தக் காலத்தில்
பாடப்பட்டது என்னும் செய்தியும் தெளிவாகத் தெரிய
வில்லை. சிலர் சங்க காலத்தில் பாடப்பட்டதாகவும், வேறு
சிலர் சங்கம் மருவிய காலத்தில் பாடப்பட்டதாகவும் கருது
கின்றனர். சங்க காலத்தில் பாடப்பட்டதாகக் கருதுவதில்
எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் சங்க காலத்தில்
வழக்கத்தில் நிலவிய வெண்பா யாப்பால் நூல் இயற்றப்
பட்டுள்ளது. சங்கம் மருவிய காலம் என்றால் விருத்தப்பா
என்னும் பாவினம் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். சங்கம்
மருவிய காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் கானல்
வரி முதலான பாடல்கள் விருத்தப்பா என்னும் பாவினத்
தைச் சேர்ந்தவை. அதனால் சங்க காலத்தைச் சேர்ந்த
நூல் என்று கொள்வதில் தவறில்லை. அகத்தைப் பற்றிய
நூலா, புறத்தைப் பற்றிய நூலா என்று வினவினால் அகம்,
புறம் இரண்டும் கலந்து பாடப்பட்ட நூல் எனக் கூறலாம்.
ஒவ்வொரு வேந்தர் மீதும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம்
மொத்தம் 2700(900 ×3) பாடல்கள் இயற்றப்பட்டதாக
அறிகிறோம். ஆனால் நம் கைக்குக் கிடைத்தவை 108
பாடல்கள் மட்டுமே. சேரவேந்தர் மீது 22 பாடல்களும், சோழ
வேந்தர் மீது 29 பாடல்களும் மற்றும் பாண்டிய வேந்தர் மீது
57 பாடல்களும் நம் கைக்குக் கிடைத்துள்ளன. இதுவும்,
நேரடியாக நமக்குக் கிடைக்கவில்லை. யாரோ ஒரு
புண்ணிய ஆத்மா புறப்பொருளைப் பற்றிய நல்ல
பாடல்களைத் தொகுக்கும் பொழுது இந்த நூலில் இருந்து
108 பாடல்களைப் "புறத் திரட்டு" என்னும் பெயரிலுள்ள
நூலில் இணைத்திருக்கிறார். இதனை நாம் ஆகூழ்
(அதிர்ஷ்டம்) என்பதா? போகூழ்(துரதிர்ஷ்டம்) என்பதா?
சேர்க்கப்பட்ட 108 பாடல்களையும் முத்துக்கள் என்றே
சொல்லலாம். இனி இந்த 108 பாடல்களில் சிலவற்றை
நோக்குவோம்.
அந்தக் காலத்தில் களவியல், கற்பியல் என்னும் இரண்டு
பிரிவுகள் அகவாழ்வில் பின்பற்றப்பட்டன. முன் பின்
பழகியிராத ஆண் ஒருவனும் பெண் ஒருத்தியும் தற்
செயலாகச் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து
அதனால் ஏற்படும் ஈர்ப்பால் காதல் அரும்பிப் பின்னர்
இருவரும் பிறர் அறியாமல் பழகி வாழ்தல் களவியல்
வாழ்வு எனப்படும். பின்னர் இச்செய்தி ஊரிலுள்ள
பிறருக்குத் தெரிந்து அவர்கள் மூலமாகத் தாய்மாருக்
கும் தெரியவர அவர்கள் திருமணம் செய்வித்துக்
கற்பியலில் ஈடுபடுத்துவார்கள். குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல் மற்றும் பாலை என்னும் ஐந்து நிலத்
திணைகளிலும் இந்த இயற்கைக் காமம்(களவியல் மற்றும்
கற்பியல்) நடைபெறும். சில நேரங்களில் ஆணோ,
பெண்ணோ ஒருவர் மட்டுமே விரும்புவார். இது ஒருதலைக்
காதல்(கைக்கிளை) என அழைக்கப்படும். பொருந்தாத
காதலும் சில நேரங்களில் நிகழ்வதுண்டு. இது பெருந்
திணை என அழைக்கப் படும். ஆனால் இந்த வாழ்வு
முறைகளால் எந்தக் கேடும்ஏற்பட்டதில்லை. ஏனென்றால்
சிறந்த ஒழுக்கமும், நெறிமுறைகளும் பின்பற்றப்
பட்டன. எந்த விதமான ஒழுக்கச் சீர்கேடும் நிகழ்ந்த
தில்லை. இனி, பாடல்களை நோக்குவோம்:
சேரனைப் பற்றிய பாடல்கள:
"கடல்தானைக் கோதையைக் காண்கொடாள்; வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை--அடைக்குமேல்
ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ? தான்".
சேரவேந்தன் வீதியில் உலாவரும் பொழுது பருவ
வயது மகள் பார்த்து ஒருதலைக் காதல் கொண்டால்
தொல்லை எனக் கருதி தாய் வாயிற் கதவை அடைத்து
விட்டு உள்ளே செல்ல, மகள் கதவைத் திறந்து எட்டிப்
பார்க்க, மீண்டும் தாய் வந்து கதவை அடைக்க, மகள்
மீண்டும் திறக்க, இப்படியாக அக்கதவின் அடிப்
பகுதி தேய்ந்து விட்டதாம். இதனால் தலைவி தன்
தோழியிடம்" கடல் போன்ற சேனையை உடைய
சேரவேந்தனைக் காணவொட்டாமல் அன்னை
கதவை அடைக்கின்றாளே! என்னையும் அவனை
யம் வைத்து அலர்(பழிச்சொல், வம்பு) பேசுபவர்
வாய்களை அடைக்க முடியுமா?" எனக் கேட்டாள்.
"ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன்--நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேருமென் நெஞ்சு."
"சேரவேந்தனைக் காண்பதற்காகக்கதவைத்
திறந்தேன். பிறகு அதை அடைத்துவிட்டேன்.
பெரும் செல்வந்தர் வீட்டுக்கு உதவிகேட்டுச்
செல்லும் வறியவர் பிறகு நாணமுற்று உதவி
கேளாது திரும்புவது போல என் நெஞ்சமும்
போவதும் வருவதும் ஆகப் போராடியது."
"அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த வெள்வேல்
பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச்--சுரும்பொடு
வண்டாடு பக்கமும் உண்டு; குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு."
சேரவேந்தன் எறிந்த வெள்வேல் தசையை அறுத்
துக் கொல்லும். அதனால் வேலின் கொழுவில்புலால்
நாற்றமும் வேலின்பிடியில் தடவப்பட்ட செஞ்சந்தனத்தின்
நறுமணமும் கலந்து நாறும். இது காரணமாக, ஒரு
புறம் வண்டினங்களும் மற்றொரு புறத்தில் நரி
களும் கொண்டாடும்.
"அயில்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயில்கதவம் கோத்தெடுத்த கோட்டால்--பனிக்கடலுள்
பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்
காய்சினவேல் கோதை களிறு".
கோட்டைச் சுவரின்வாயிலுக்குப் பெரிய மரக் கதவம்
பொருத்தியிருப்பார்கள். இதைத்தான் எயில்கதவம்
என்பார்கள். இந்தக் கதவுக்கு வெளிப்புறத்தில் ஈட்டி
கள் பொருத்தப்பட்ட இரும்புக் கதவம் அமைத்திருப்
பார்கள். இதை அயில்கதவம் என்பார்கள். சேரவேந்தனது
ஆண்யானை அயில்கதவாகிய இரும்புக் கதவை முட்டி
மோதித் தகர்த்த பின்னர் எயில்கதவாகிய மரக்கதவைத்
தன் தந்தங்களால் கோத்து எடுத்து வீசியெறிய முயற்சி
செய்தது. ஆனால் தந்தங்களில் மாட்டிக் கொண்டதால்
கடலில் பாய்விரித்துக் கடந்து செல்லும் கப்பல் போலத்
தோன்றியது.
இனி சோழவேந்தனைப் பற்றிய பாடல்களை நோக்குவோம:
"திறந்திடுமின் தீயவை பிற்காண்டும்; மாதர்
இறந்துபடின் பெரிதாம் ஏதம்--உறந்தையர்கோன்
தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு."
பெண்களிடம் தாய் எவ்வளவோ சொல்லியும்
அவர்கள் தாய்சொல்லைக் கேட்கவில்லை.
மனத்தையும் உடலையும் கெடுத்துக் கொண்டார்
கள்.உடல் மெலியும் அளவுக்கு உணவை வெறுத்து
ஒதுக்கினர். பார்த்த செவிலித்தாய்" கதவை
அடைக்கவேண்டா; உலாவரும் சோழவேந்தனைக்
கண்ணாரக் காணக் கதவைத் திறந்திடுக. ஏனென்
றால் உடல் மெலிந்து மாதர் இறந்து விட்டால் துயர்
உண்டாகும்." என்று நவின்றாள்.
"கண்டன உண்கண்; கலந்தன நன்னெஞ்சம்;
தண்டப் படுவ தடமென்தோள்--கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்(கு)
எலாஅம் முறைகிடந்த ஆறு."
தலைவி கூறுகிறாள்:" சோழவேந்தனைப்
பார்த்த குற்றம் கண்களைச் சேரும். அவன்
நெஞ்சோடு கலந்தது எனது நன்னெஞ்சம்.
இவ்வாறு கண்களும் நெஞ்சும் குற்றம் செய்
தன. ஆனால் தண்டனை தோள்களுக்குக்
கிடைத்துள்ளது. சோழவேந்தன் ஆட்சியில்
முறைமை இவ்வாறு உள்ளது." தோள்கள்
மெலிந்தன; ஆதலால் அதனைத் தண்டனை
என்று கூறினாள்.
"சுடரிலைவேற் சோழன்தன் பாடலம் ஏறிப்
படர்தந்தான்; பைந்தொடியார் காண--தொடர்புடைய
நீல அலையிற் கயல்போல் பிறழுமே
சாலேக வாயில்தொறும் கண்".
சோழவேந்தன் தன் குதிரை மீதேறி வருகின்றான்.
கடலில் நீல அலைகளின் ஊடே மீன்கள் பிறழுவ
தைப் போல அவ்வீதியிலுள்ள வீடுகளின் பலகணி
வழியாகப் பெண்களின் கண்கள் தோன்றின.
(பாடலம்--குதிரை; சாலேகம்--பலகணி, சன்னல்).
இனி பாண்டிய வேந்தனைப் பற்றிய பாடல்களைப்
பார்ப்போம்:
"பார்படுப செம்பொன்; பதிபடுப முத்தமிழ்நூல்;
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும்--சாரல்
மலைபடுப யானை; வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு."
பாண்டிய நாட்டில் எங்கும் செம்பொன் கிடைக்
கிறது. ஏனென்றால் வெளிநாட்டவர் தம்மிடம்
உள்ள பொன்னைக் கொடுத்து அதற்குப் பதி
லாகக் கொற்கை முத்துக்களை வாங்கிச் செல்
வதால் செம்பொன் எங்கும் கிடைக்கிறது. இந்த
நாடு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததால் ஊர்
களிலெல்லாம் தமிழ் நூலும் தமிழ் ஆட்சிமுறை
யும் தென்படுகின்றன. கடலில் வெண்சங்கும்
முத்தும், மலைச்சாரலில் யானைகளும் தென்
படுகின்றன. பகையரசர்கள் மார்பில் அவன் கூர்
வேல் தென்படும்.
"நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும்--சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு."
சங்குகள் இப்பொழுதுதான் ஈன்ற மிகச் சிறிய முட்டை
களும், புன்னை மரத்தின் குவிந்த மொட்டுக்களும்
பாக்கு மரத்தின் இளம் பாளையிலிருந்து உதிர்கின்ற
முத்துக்களும் எங்கெங்கும் சிந்திக் கடலில் விளைந்த
வெண்முத்துக்கள் போல்தோன்றும் சிறப்புடையது
நகைமுத்த வெண்கொற்றக் குடையை உடைய
பாண்டிய நாடாகும்.
"ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன்
தானையால் கண்புதைத்தான் தார்வழுதி--
யானையெலாம்
புல்லார் பிடிபுலம்பத் தாம்கண் புதைத்தவே
பல்வாயாற் பட்ட களத்து".
ஈற்றடி"பல்யானை அட்ட களத்து." எனவும்
சில சுவடிகளில் காணப்படுவதாகப் புலவர்
கள் கூறிடுவர்.
போரினால் ஏற்படும் கொடுமையான விளை
வுகளை விவரிக்கும் பாடல் இதுவாகும். போரில்
இரு பக்கத்திலும் கணக்கற்ற வீரர்கள் மாண்டு
விட்டனர். ஏனைய அஃறிணை உயிரினங்களாகிய
குதிரைகளும், யானைகளும் எத்தனை எத்தனை
யோ மாண்டு விட்டன. பகை வீரர்கள்தம் மனைவியர்
தீக்குளிக்கத் தொடங்கி விட்டனர். ஏனென்றால்
வென்றவர் சிறையெடுத்தால் என்னென்ன நிகழ்
வுகள் நடைபெறும் என்று கூற இயலாது. எனவே
வென்றவர் கையில் அகப்படுவதைக் காட்டிலும்
தீக்குளிப்பது எளிதென எண்ணுவது வழக்கம்.
இந்தக் கொடுமையான நிகழ்ச்சியைப் பார்க்கச்
சகியாமல் தன் ஆடையின் முன்தானையால்
கண்களை மூடிக் கொண்டான் பாண்டியன். அவனைப்
போலவே அவனது படையில் இருந்த பெண்யானைகள்
தமது ஆண்யானைகள் போரில் இறந்து பட்
டமைக்காகத் தம் கண்களை மூடிக்கொண்
டனவாம். என்னதான் நமது இலக்கியங்கள்,
நீதி நூல்கள் இரக்கத்தை வலியுறுத்தினாலும்
போர்க்களத்தில் அவை பேணப்படவில்லை.
இந்த விடயத்தை மேற்கொண்டு விவரித்தால்
முத்தொள்ளாயிரத்தின் பாடல்களை அனுப
விக்க இயலாமற் போய்விடும். போர் என்பதையே
மனித குலம் அறவே வெறுத்து ஒதுக்கிடல்
வேண்டும். நாடுகளுக் கிடையே மண்ணாசை,
பொருளாசை போன்றவை நீங்கட்டும்! எங்கும்
அமைதி நிலவட்டும்! வாய்ப்புக் கிட்டும் பொழுது
முத்தொள்ளாயிரம் நூல் முழுவதும் படித்து அதில்
பயின்று வரும் சொல் நயம், பொருள் நயம், கற்பனை
நயம் முதலானவற்றை அனுபவித்து இன்புறு
மாறு வேண்டுகிறேன்.