செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம்செயம் என்றாட......
தென்காசி மாவட்டம் வடகரைப் பகுதிச் சிற்றரசராக விளங்கிய
சின்னணஞ்சாத் தேவரது அவைப் புலவராகத் திகழ்ந்த திரிகூட
ராசப்பக் கவிராயர் என்பவர் அப்பகுதிச் சிற்றூரான மேலகரத்தில்
வாழ்ந்து வந்தவர். அவர் அருகிலுள்ள குற்றால நாதர்மீது பாடியது
திருக் குற்றாலக் குறவஞ்சி என்னும் இசை நாடகச் சிற்றிலக்கியம்.
கதைச் சுருக்கம்: திருக் குற்றால நாதர் வீதியுலா வருகின்றார். அப்
பொழுது பந்தடித்துக் கொண்டிருந்த பேரழகி வசந்த சுந்தரி வெளியே
வந்து அவரைத் தரிசித்துத் தொழுகின்ற பொழுது அவர் பேரழகால் ஈர்க்
கப்பட்டு அவர்மீது மையல் கொள்கின்றாள். அவர்பால் தன் தோழியைத்
தூதனுப்புகின்றாள். அப்பொழுது வீதியில் குறிசொல்லும் குறத்தி
ஒருத்தி வருகின்றாள்.அவளிடம் வசந்த சுந்தரி குறிகேட்க அவள்
"நீ குற்றால நாதர் மேல் மையல் கொண்டுள்ளாய்; உன் எண்ணம்
ஈடேறும்" என்று சொல்கின்றாள். அந்த நேரம் குறத்தி சிங்கியைத்
தேடிவந்த சிங்கன் சிங்கியுடன் அளவளாவுகின்றான். பின்னர் அனை
வரும் திருக்குற்றால நாதரைப் பாடிப் பரவுகின்றனர். இச் சிற்றிலக்
கியம் இசை--நாடகப் பாங்கு இழையோட இயற்றப்பட்டுள்ளது. பாடல்கள்
சொல்லின்பம், பொருளின்பம், இசையின்பம் மிடைந்து துள்ளவைக்கின்றன.
வசந்த சுந்தரியின் அழகை விவரிக்கும் பாடல்களில் இரண்டை நோக்குவோம்:
இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்
கொண்டையாள்; குழை
ஏறியாடி நெஞ்சைச் சூறையாடும் விழிக்
கெண்டையாள்;
திருத்து பூமுருக்கின் அரும்பு போலிருக்கும்
இதழினாள; வரிச்
சிலையைப் போல் வளைந்து பிறையைக் போலிலங்கு
நுதலினாள்.
"அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும்
புருவத்தாள்; பிறர்
அறிவை மயக்குமொரு கருவும் இருக்குமங்கைப்
பருவத்தாள்;
கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த
சொல்லினாள்; கடல்
கத்தும் திரைகொழித்த முத்து நிரைபதித்த
பல்லினாள்."
"வித்தகர் திரிகூ டத்தில் வெளிவந்த வசந்த வல்லி
தத்துறு விளையாட் டாலோ தடமுலைப் பிணைப்பி னாலோ
நத்தணி கரங்கள் சேப்ப, நாலடி முன்னே ஓங்கிப்
பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே!"
என்ற பாடலில் சொல்லப்பட்டவாறு வசந்த சுந்தரி பந்தாடு
கின்றாள்.
"செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம்செயம் என்றாட--இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட--இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட--மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சுந்தரி
பந்து பயின்றாளே!"
பொருள்:
செங்கையிலுள்ள கருவளையல்கள் கலின்கலின் என்று
ஒலியெழுப்புகின்றன. அது வெற்றி, வெற்றி என்று முழக்கம்
இடுவது போல் உள்ளது.. கைவளையல்களின் ஓசையோடு
காலில் அணிந்துள்ள சிலம்பு, தண்டை போன்ற அணிகலன்
களின் ஓசையும் கலந்து கொள்கிறது. குதித்துக் குதித்துப்பந்
தடிக்கும் போது நகில்கள் தாம் பந்தை வென்றதாக எண்ணிப்
பெருமையோடு குழைந்து குழைந்து குதித்ததைப் போலத் தோன்று
கிறது.இவ்வாறாக மங்கை வசந்த சுந்தரி பந்தாடினாள்.
இதுபோலவே இன்னும் மூன்று இசை நயம் மிளிரும் பாடல்கள்
பயின்று வருகின்றன. அவை பின்வருமாறு:
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக்--குழல்
மங்குலில் வண்டு கலைத்ததுகண்டு மதன் சிலை வண்டோட--இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை திண்டாட--மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே.
சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப்--
புணை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை கொண்டாட--நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலே--அணி
ஆடக வல்ல வசந்தவொய் யாரி அடர்ந்துபந் தாடினளே.
இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினி
யோ--மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய தோவெனவே--
உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே--மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற் பந்துகொண்
டாடினளே."
ஆட்டம் ஈடுபாட்டுடன் நடைபெற்றது. திடீரென்று வேகமெடுக்
கின்றது. பாடல்களிற் பயிலும் தாளக் கட்டு வேகமெடுக்கிறது.
"மந்தர முலைகள் ஏசலாட, மகரக் குழைகள் ஊசலாட,
சுந்தர விழிகள் பூசலாட, தொங்கத் தொங்கத்
தொங்கத் தொம்மெனப் பந்தடித்தனளே வசந்த சுந்தரி
விந்தையாகவே........".
குற்றால மலைவளத்தை விவரிக்கும் பாடல்களும் இந்த இலக்கியத்
தில் பயின்று வருகின்றன. அதில் ஒன்றைப் பார்ப்போம்:
" வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்;
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்;
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்;
கமனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்;
தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும்;
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்;
கூனலிளம் பிறையணிந்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே".
இவற்றைப் போன்றே நூல் முழுவதும் சொல்நயம்,
பொருள்நயம், தொடை நயம், நடைநயம், சந்த நயம்,
தாள நயம் விரவிய பாக்களையும், பாவினங்க
ளையும் காணலாம். படித்து இன்புறுவோம்.
.
தென்காசி மாவட்டம் வடகரைப் பகுதிச் சிற்றரசராக விளங்கிய
சின்னணஞ்சாத் தேவரது அவைப் புலவராகத் திகழ்ந்த திரிகூட
ராசப்பக் கவிராயர் என்பவர் அப்பகுதிச் சிற்றூரான மேலகரத்தில்
வாழ்ந்து வந்தவர். அவர் அருகிலுள்ள குற்றால நாதர்மீது பாடியது
திருக் குற்றாலக் குறவஞ்சி என்னும் இசை நாடகச் சிற்றிலக்கியம்.
கதைச் சுருக்கம்: திருக் குற்றால நாதர் வீதியுலா வருகின்றார். அப்
பொழுது பந்தடித்துக் கொண்டிருந்த பேரழகி வசந்த சுந்தரி வெளியே
வந்து அவரைத் தரிசித்துத் தொழுகின்ற பொழுது அவர் பேரழகால் ஈர்க்
கப்பட்டு அவர்மீது மையல் கொள்கின்றாள். அவர்பால் தன் தோழியைத்
தூதனுப்புகின்றாள். அப்பொழுது வீதியில் குறிசொல்லும் குறத்தி
ஒருத்தி வருகின்றாள்.அவளிடம் வசந்த சுந்தரி குறிகேட்க அவள்
"நீ குற்றால நாதர் மேல் மையல் கொண்டுள்ளாய்; உன் எண்ணம்
ஈடேறும்" என்று சொல்கின்றாள். அந்த நேரம் குறத்தி சிங்கியைத்
தேடிவந்த சிங்கன் சிங்கியுடன் அளவளாவுகின்றான். பின்னர் அனை
வரும் திருக்குற்றால நாதரைப் பாடிப் பரவுகின்றனர். இச் சிற்றிலக்
கியம் இசை--நாடகப் பாங்கு இழையோட இயற்றப்பட்டுள்ளது. பாடல்கள்
சொல்லின்பம், பொருளின்பம், இசையின்பம் மிடைந்து துள்ளவைக்கின்றன.
வசந்த சுந்தரியின் அழகை விவரிக்கும் பாடல்களில் இரண்டை நோக்குவோம்:
இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்
கொண்டையாள்; குழை
ஏறியாடி நெஞ்சைச் சூறையாடும் விழிக்
கெண்டையாள்;
திருத்து பூமுருக்கின் அரும்பு போலிருக்கும்
இதழினாள; வரிச்
சிலையைப் போல் வளைந்து பிறையைக் போலிலங்கு
நுதலினாள்.
"அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும்
புருவத்தாள்; பிறர்
அறிவை மயக்குமொரு கருவும் இருக்குமங்கைப்
பருவத்தாள்;
கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த
சொல்லினாள்; கடல்
கத்தும் திரைகொழித்த முத்து நிரைபதித்த
பல்லினாள்."
"வித்தகர் திரிகூ டத்தில் வெளிவந்த வசந்த வல்லி
தத்துறு விளையாட் டாலோ தடமுலைப் பிணைப்பி னாலோ
நத்தணி கரங்கள் சேப்ப, நாலடி முன்னே ஓங்கிப்
பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே!"
என்ற பாடலில் சொல்லப்பட்டவாறு வசந்த சுந்தரி பந்தாடு
கின்றாள்.
"செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம்செயம் என்றாட--இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட--இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட--மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சுந்தரி
பந்து பயின்றாளே!"
பொருள்:
செங்கையிலுள்ள கருவளையல்கள் கலின்கலின் என்று
ஒலியெழுப்புகின்றன. அது வெற்றி, வெற்றி என்று முழக்கம்
இடுவது போல் உள்ளது.. கைவளையல்களின் ஓசையோடு
காலில் அணிந்துள்ள சிலம்பு, தண்டை போன்ற அணிகலன்
களின் ஓசையும் கலந்து கொள்கிறது. குதித்துக் குதித்துப்பந்
தடிக்கும் போது நகில்கள் தாம் பந்தை வென்றதாக எண்ணிப்
பெருமையோடு குழைந்து குழைந்து குதித்ததைப் போலத் தோன்று
கிறது.இவ்வாறாக மங்கை வசந்த சுந்தரி பந்தாடினாள்.
இதுபோலவே இன்னும் மூன்று இசை நயம் மிளிரும் பாடல்கள்
பயின்று வருகின்றன. அவை பின்வருமாறு:
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக்--குழல்
மங்குலில் வண்டு கலைத்ததுகண்டு மதன் சிலை வண்டோட--இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை திண்டாட--மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே.
சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப்--
புணை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை கொண்டாட--நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலே--அணி
ஆடக வல்ல வசந்தவொய் யாரி அடர்ந்துபந் தாடினளே.
இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினி
யோ--மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய தோவெனவே--
உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே--மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற் பந்துகொண்
டாடினளே."
ஆட்டம் ஈடுபாட்டுடன் நடைபெற்றது. திடீரென்று வேகமெடுக்
கின்றது. பாடல்களிற் பயிலும் தாளக் கட்டு வேகமெடுக்கிறது.
"மந்தர முலைகள் ஏசலாட, மகரக் குழைகள் ஊசலாட,
சுந்தர விழிகள் பூசலாட, தொங்கத் தொங்கத்
தொங்கத் தொம்மெனப் பந்தடித்தனளே வசந்த சுந்தரி
விந்தையாகவே........".
குற்றால மலைவளத்தை விவரிக்கும் பாடல்களும் இந்த இலக்கியத்
தில் பயின்று வருகின்றன. அதில் ஒன்றைப் பார்ப்போம்:
" வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்;
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்;
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்;
கமனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்;
தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும்;
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்;
கூனலிளம் பிறையணிந்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே".
இவற்றைப் போன்றே நூல் முழுவதும் சொல்நயம்,
பொருள்நயம், தொடை நயம், நடைநயம், சந்த நயம்,
தாள நயம் விரவிய பாக்களையும், பாவினங்க
ளையும் காணலாம். படித்து இன்புறுவோம்.
.