சங்க இலக்கியத்தில் பறவைகள்
சங்க இலக்கியத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வு
விவரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பூவுலகில் மனிதர்களாகிய
நாம் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பறவைகள்,
நாய், பசு, எருது, பூனை முதலான வீட்டு விலங்குகள், கோவில்
களில் வளர்க்கப்படும் யானை, இன்னும் சுவர்களில் ஊர்ந்து
செல்லும் பல்லி இவைபோன்ற எண்ணிலடங்காத உயிரினங்கள்
வாழ்ந்து வருகின்றன. இவைகளால் ஏற்படும்
சில நிகழ்வுகளை நாம் எதிர்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்
பாகக் கருதுகின்றோம். ஆதிகாலந் தொட்டே மனிதர்கள் இம்
மாதிரியான நம்பிக்கைகளைக் கைக்கொண்டு வாழ்ந்து வரு
வது கண்கூடு. நம் நாட்டில் மட்டுமன்று; உவகெங்கும் வெவ்வேறு
வகையான நம்பிக்கைகள் நிலவின; தற்பொழுதும் நிலவி வரு
கின்றன. அறிவியல் அறிஞர்கள் இவற்றை மூடநம்பிக்கைகள்
என்று இழிவாகப் பேசினாலும் இம்மாதிரியான நம்பிக்கைகளை
ஒழிக்க முடியவில்லை. சங்க காலத்தில் நிலவிய பறவைகள்
தொடர்பான சில செய்திகளைப் பார்ப்போம்.
காக்கை கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவர் என்னும்
நம்பிக்கை இன்றும் நிலவி வருகின்றது. சங்ககாலத்திலும்
இந்நம்பிக்கை நிலவியது. குறுந்தொகை 210ஆம் பாடலில்
காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்பாற்
புலவர் காக்கை கரைந்ததைப் பற்றியும் அதனால் விளைந்த
பயனைப்பற்றியும் வியந்து பாடியுள்ளார். அது பின்வருமாறு:
ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத் தலைவியைப் பிரிந்து
சென்ற தலைவன் திரும்பி வந்துவிட்டான். அவன் தோழியி
டம் உரையாடுகின்றான்: "நான் பிரிந்திருந்த காலத்தில்
தலைவி துன்பம் அடையாமல் அவளை நன்முறையில்
தேற்றியுள்ளாய்." என்று புகழ்ந்துரைக்க அவள் பதில் கூறு
கின்றாள்:"இதில் என்செயல் ஏதும் இல்லை. காக்கை செய்த
புண்ணியம்; அது கரைந்த(கத்திய) காரணத்தால் நீவிர்
இன்று திரும்பி விடுவீர் என்ற நல்ல நிமித்தம்(சகுனம்)
மனத்தில் தோன்றியது. இந்நம்பிக்கையைத் தலைவிக்குக்
கூறி அவளை ஆற்றுவித்தேன்(தேற்றினேன்)."என்றுரைத்
தாள். இது தொடர்பான பாடலைப் பார்ப்போம்:
"திண்தேர் நள்ளி கானத்(து) அண்டர்
பல்லா பயந்த நெய்யில் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ(று)
எழுகலத்(து) ஏந்தினும் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த; செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே!"
பொருள்:திண்ணிய தேரையுடைய நள்ளியென்
னும் ஊர்த்தலைவனுடைய காட்டில் வாழும்
இடையர்களுக்குரிய பலபசுக்கள் உண்டாக்கிய
நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள
வயல்களில் விளைந்த வெண்ணெல் அரிசியால்
சமைக்கப்பட்ட சுடுசோற்றை ஏழு பாத்திரங்
களில் ஏந்திக் கொடுத்தாலும் என் தோழியாகிய
தலைவியின் பெரிய தோளை நெகிழச் செய்த
துன்பத்தை நீக்கும் விதத்தில் கரைந்து நல்ல
நிமித்தத்தைத் தெரிவித்த காக்கையின்
செய்கையை ஒப்பிடும்போது அதற்குப்
படைக்கப்பட்ட நெய்ச்சோறு சிறிய அளவின
தேயாகும். ஏனெனில் தலைவி, துன்பத்தில்(பிரிவுத்
துன்பம்) ஆழ்ந்திருந்த பொழுது அவளைத் தேற்றும்
விதத்தில் காக்கை கரைந்து நல்ல நிமித்தத்தை
உணர்த்தி அவளை உய்வித்ததால் காக்கையின்
இயல்பான செய்கை வியந்து பாராட்டப்பட்டது.
அதற்குப் படைக்கப்பட்ட பலி(உணவு; காக்கைக்கு
இடும் உணவைப் பலி எனறு கூறுதல் அக்கால
மரபு) சிறிதளவேயாகும். இவ்வாறு காக்கையின்
இயல்பான, இயற்கையான செய்கையை மிகவும்
வியந்து பாராட்டியதால் நச்செள்ளையார் என்ற
இயற்பெயர் கொண்ட இப்பெண்பாற் புலவர்
காக்கைபாடினியார் என்னும் சிறப்புப் பெயர்
பெற்றார்.
ஆய் எயினன் என்பான் வேளிர்குடி வீரன். நன்னன்
என்பான் வேளிர்குடி அரசன்.யாது காரணத்தாலோ
மிஞிலி என்னும் கோசர்குடி வீரனை ஆய்எயினனுடன்
போர்தொடுக்கத் தூண்டிவிட்டான்., நன்னன். பாழிப்
பறந்தலை என்ற இடத்தில் கடும்போர் நிகழ்ந்தது.
பிழைக்க முடியாத அளவுக்கு ஆய்எயினனை வெட்டிப்
புண்ணாக்கினான், மிஞிலி. போர்க் களத்தில் ஆய்
எயினன் குற்றுயிரும் குலை உயிருமாகப் புண்
களால் இன்னல் பட்டுக் கொண்டிருந்த போது,
வானில் பறவைகள் சிறகுகளை விரித்துக் கூட்ட
மாகப் பறந்து கொண்டிருந்தன. அது நண்பகல்
வேளை. இடமோ வெட்டவெளிப் போர்க்களம்.
ஆய்எயினன் பறவைகளின் நண்பன். பாது
காவலனும் கூட. அதனால் சூரியனின் உச்சி
வேளைக் கதிர்கள் மிக்க வெம்மையோடு
தகித்துக் கொண்டிருந்தன. அந்த வெப்பக்
கதிர்கள் ஆய் எயினனைத் துன்புறுத்தாமல்
இருக்கவே பறவைகள் சிறகுகளை விரித்துக்
கூட்டமாகப் பறந்தன என்று பரணராகிய
புலவர் விவரிக்கின்றார். இது தற்செயல்
நிகழ்வா? புலவர் கூறியது போல, பறவைகள்
வேண்டுமென்றே உள்ளன்போடு பறந்தனவா?
ஆனால் ஆய் எயினன், மக்களுக்கு மட்டுமன்று,
பறவைகளுக்கும் நண்பனாகவும், பாதுகாவல
னாகவும் விளங்கியமை அக்காலத்தில் வாழ்ந்த
அனைவருக்குமே தெரியும். எனவேதான் பரணர்
இந்த நிகழ்ச்சியைத் தான் பாடிய மூன்று பாடல்
களிலும் குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருமாறு:
"கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலி யொடு பொருது களம்பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும்பகல் வழங்கா தாஅங்கு......."
புண்பட்ட ஆய்எயினனைப் பாராதிருந்தவர்கள்
நன்னன் என்ற வேளிர்குடி அரசனும் ஆந்தை
களும் தாம். நன்னன் ஏன் பார்க்கவில்லை
யென்றால் அவன்தான் இந்தப் போரைத்
தூண்டியவன். ஆந்தைகள் பகலில் பறப்ப
தில்லை. மேலும், காக்கை போன்ற பறவை
களுக்கு ஆந்தைகளைப் பிடிக்காது.(அகம்:
148). இனி, அடுத்த பாடல்:
"ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவேல்கடைஇ
முருகுறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம். புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடைத் தூர ஆடி......"
பொருள்: ஆய் எயினன் மிஞிலியொடு
நடத்திய போரில் கடுமையாகப் போரிட்டு
முடிவில் தானும் தோற்று மடிந்தான். சூரி
யனின் உச்சிவேளைக் கதிர்களின் வெம்மை
அவன் மேனிமேல் படாது மறையுமாறு புதிய
பறவைகளின் ஆரவாரம் பொருந்திய
பெருந்திரளானது வானத்திடையே வட்ட
மிட்டு உயரே நிழலிட்டுப் பறந்தன.(அகம்:
181). இனி அடுத்த பாடலைப் பார்ப்போம்:
"யாம இரவின் நெடுங்கடை நின்று
தேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின் வெண்கோட்
டண்ணல் யானை ஈயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி
நிழல்செய்து உழறல் காணேன் யானெனப்
படுகளம் காண்டல் செல்லான்,சினம்சிறந்து
உருவினை நன்னன் அருளான் கரப்ப".(அகம்:
208).
பொருள்: வெளியன் வேண்மான் ஆய்எயினன்
சிறந்த வள்ளல். அவனைப் புகழ்ந்து பாடும்
அகவுநர்கள் விரும்பினால் யானையைக்
கூடப் பரிசாகக் கொடுப்பான். அத்துடன் பறவை
போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு
பூண்டவன். அவன் மிஞிலியோடு நிகழ்த்திய
போரில் மரணக் காயமடைந்து போர்க்களத்தில்
வீழ்ந்து கிடக்கும் போது நண்பகல் சூரியக்
கதிர்கள் அவனை வருத்தாமல் இருக்கப்
பறவைகள் எல்லாம் ஒன்றாகக் கூடித்தம்
சிறகுகளால் பந்தலிட்டு நிழல்செய்து காத்தன.
இதனை என் கண்களால் காணமாட்டேன்
என்று கொடுங்கோலன் நன்னன் ஓடி ஒளிந்து
கொண்டான். இந்த நிகழ்ச்சியை மூன்று
பாடல்களில் புலவர் பரணர் விவரிப்பதில்
ஏதோ பொருளிருக்கும்.
சங்க காலத்தில் நிகழ்ந்த இந்த இரு நிகழ்வு
களும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன
என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சங்க இலக்கியத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வு
விவரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பூவுலகில் மனிதர்களாகிய
நாம் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பறவைகள்,
நாய், பசு, எருது, பூனை முதலான வீட்டு விலங்குகள், கோவில்
களில் வளர்க்கப்படும் யானை, இன்னும் சுவர்களில் ஊர்ந்து
செல்லும் பல்லி இவைபோன்ற எண்ணிலடங்காத உயிரினங்கள்
வாழ்ந்து வருகின்றன. இவைகளால் ஏற்படும்
சில நிகழ்வுகளை நாம் எதிர்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்
பாகக் கருதுகின்றோம். ஆதிகாலந் தொட்டே மனிதர்கள் இம்
மாதிரியான நம்பிக்கைகளைக் கைக்கொண்டு வாழ்ந்து வரு
வது கண்கூடு. நம் நாட்டில் மட்டுமன்று; உவகெங்கும் வெவ்வேறு
வகையான நம்பிக்கைகள் நிலவின; தற்பொழுதும் நிலவி வரு
கின்றன. அறிவியல் அறிஞர்கள் இவற்றை மூடநம்பிக்கைகள்
என்று இழிவாகப் பேசினாலும் இம்மாதிரியான நம்பிக்கைகளை
ஒழிக்க முடியவில்லை. சங்க காலத்தில் நிலவிய பறவைகள்
தொடர்பான சில செய்திகளைப் பார்ப்போம்.
காக்கை கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவர் என்னும்
நம்பிக்கை இன்றும் நிலவி வருகின்றது. சங்ககாலத்திலும்
இந்நம்பிக்கை நிலவியது. குறுந்தொகை 210ஆம் பாடலில்
காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்பாற்
புலவர் காக்கை கரைந்ததைப் பற்றியும் அதனால் விளைந்த
பயனைப்பற்றியும் வியந்து பாடியுள்ளார். அது பின்வருமாறு:
ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத் தலைவியைப் பிரிந்து
சென்ற தலைவன் திரும்பி வந்துவிட்டான். அவன் தோழியி
டம் உரையாடுகின்றான்: "நான் பிரிந்திருந்த காலத்தில்
தலைவி துன்பம் அடையாமல் அவளை நன்முறையில்
தேற்றியுள்ளாய்." என்று புகழ்ந்துரைக்க அவள் பதில் கூறு
கின்றாள்:"இதில் என்செயல் ஏதும் இல்லை. காக்கை செய்த
புண்ணியம்; அது கரைந்த(கத்திய) காரணத்தால் நீவிர்
இன்று திரும்பி விடுவீர் என்ற நல்ல நிமித்தம்(சகுனம்)
மனத்தில் தோன்றியது. இந்நம்பிக்கையைத் தலைவிக்குக்
கூறி அவளை ஆற்றுவித்தேன்(தேற்றினேன்)."என்றுரைத்
தாள். இது தொடர்பான பாடலைப் பார்ப்போம்:
"திண்தேர் நள்ளி கானத்(து) அண்டர்
பல்லா பயந்த நெய்யில் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ(று)
எழுகலத்(து) ஏந்தினும் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த; செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே!"
பொருள்:திண்ணிய தேரையுடைய நள்ளியென்
னும் ஊர்த்தலைவனுடைய காட்டில் வாழும்
இடையர்களுக்குரிய பலபசுக்கள் உண்டாக்கிய
நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள
வயல்களில் விளைந்த வெண்ணெல் அரிசியால்
சமைக்கப்பட்ட சுடுசோற்றை ஏழு பாத்திரங்
களில் ஏந்திக் கொடுத்தாலும் என் தோழியாகிய
தலைவியின் பெரிய தோளை நெகிழச் செய்த
துன்பத்தை நீக்கும் விதத்தில் கரைந்து நல்ல
நிமித்தத்தைத் தெரிவித்த காக்கையின்
செய்கையை ஒப்பிடும்போது அதற்குப்
படைக்கப்பட்ட நெய்ச்சோறு சிறிய அளவின
தேயாகும். ஏனெனில் தலைவி, துன்பத்தில்(பிரிவுத்
துன்பம்) ஆழ்ந்திருந்த பொழுது அவளைத் தேற்றும்
விதத்தில் காக்கை கரைந்து நல்ல நிமித்தத்தை
உணர்த்தி அவளை உய்வித்ததால் காக்கையின்
இயல்பான செய்கை வியந்து பாராட்டப்பட்டது.
அதற்குப் படைக்கப்பட்ட பலி(உணவு; காக்கைக்கு
இடும் உணவைப் பலி எனறு கூறுதல் அக்கால
மரபு) சிறிதளவேயாகும். இவ்வாறு காக்கையின்
இயல்பான, இயற்கையான செய்கையை மிகவும்
வியந்து பாராட்டியதால் நச்செள்ளையார் என்ற
இயற்பெயர் கொண்ட இப்பெண்பாற் புலவர்
காக்கைபாடினியார் என்னும் சிறப்புப் பெயர்
பெற்றார்.
ஆய் எயினன் என்பான் வேளிர்குடி வீரன். நன்னன்
என்பான் வேளிர்குடி அரசன்.யாது காரணத்தாலோ
மிஞிலி என்னும் கோசர்குடி வீரனை ஆய்எயினனுடன்
போர்தொடுக்கத் தூண்டிவிட்டான்., நன்னன். பாழிப்
பறந்தலை என்ற இடத்தில் கடும்போர் நிகழ்ந்தது.
பிழைக்க முடியாத அளவுக்கு ஆய்எயினனை வெட்டிப்
புண்ணாக்கினான், மிஞிலி. போர்க் களத்தில் ஆய்
எயினன் குற்றுயிரும் குலை உயிருமாகப் புண்
களால் இன்னல் பட்டுக் கொண்டிருந்த போது,
வானில் பறவைகள் சிறகுகளை விரித்துக் கூட்ட
மாகப் பறந்து கொண்டிருந்தன. அது நண்பகல்
வேளை. இடமோ வெட்டவெளிப் போர்க்களம்.
ஆய்எயினன் பறவைகளின் நண்பன். பாது
காவலனும் கூட. அதனால் சூரியனின் உச்சி
வேளைக் கதிர்கள் மிக்க வெம்மையோடு
தகித்துக் கொண்டிருந்தன. அந்த வெப்பக்
கதிர்கள் ஆய் எயினனைத் துன்புறுத்தாமல்
இருக்கவே பறவைகள் சிறகுகளை விரித்துக்
கூட்டமாகப் பறந்தன என்று பரணராகிய
புலவர் விவரிக்கின்றார். இது தற்செயல்
நிகழ்வா? புலவர் கூறியது போல, பறவைகள்
வேண்டுமென்றே உள்ளன்போடு பறந்தனவா?
ஆனால் ஆய் எயினன், மக்களுக்கு மட்டுமன்று,
பறவைகளுக்கும் நண்பனாகவும், பாதுகாவல
னாகவும் விளங்கியமை அக்காலத்தில் வாழ்ந்த
அனைவருக்குமே தெரியும். எனவேதான் பரணர்
இந்த நிகழ்ச்சியைத் தான் பாடிய மூன்று பாடல்
களிலும் குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருமாறு:
"கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலி யொடு பொருது களம்பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும்பகல் வழங்கா தாஅங்கு......."
புண்பட்ட ஆய்எயினனைப் பாராதிருந்தவர்கள்
நன்னன் என்ற வேளிர்குடி அரசனும் ஆந்தை
களும் தாம். நன்னன் ஏன் பார்க்கவில்லை
யென்றால் அவன்தான் இந்தப் போரைத்
தூண்டியவன். ஆந்தைகள் பகலில் பறப்ப
தில்லை. மேலும், காக்கை போன்ற பறவை
களுக்கு ஆந்தைகளைப் பிடிக்காது.(அகம்:
148). இனி, அடுத்த பாடல்:
"ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவேல்கடைஇ
முருகுறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம். புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடைத் தூர ஆடி......"
பொருள்: ஆய் எயினன் மிஞிலியொடு
நடத்திய போரில் கடுமையாகப் போரிட்டு
முடிவில் தானும் தோற்று மடிந்தான். சூரி
யனின் உச்சிவேளைக் கதிர்களின் வெம்மை
அவன் மேனிமேல் படாது மறையுமாறு புதிய
பறவைகளின் ஆரவாரம் பொருந்திய
பெருந்திரளானது வானத்திடையே வட்ட
மிட்டு உயரே நிழலிட்டுப் பறந்தன.(அகம்:
181). இனி அடுத்த பாடலைப் பார்ப்போம்:
"யாம இரவின் நெடுங்கடை நின்று
தேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின் வெண்கோட்
டண்ணல் யானை ஈயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி
நிழல்செய்து உழறல் காணேன் யானெனப்
படுகளம் காண்டல் செல்லான்,சினம்சிறந்து
உருவினை நன்னன் அருளான் கரப்ப".(அகம்:
208).
பொருள்: வெளியன் வேண்மான் ஆய்எயினன்
சிறந்த வள்ளல். அவனைப் புகழ்ந்து பாடும்
அகவுநர்கள் விரும்பினால் யானையைக்
கூடப் பரிசாகக் கொடுப்பான். அத்துடன் பறவை
போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு
பூண்டவன். அவன் மிஞிலியோடு நிகழ்த்திய
போரில் மரணக் காயமடைந்து போர்க்களத்தில்
வீழ்ந்து கிடக்கும் போது நண்பகல் சூரியக்
கதிர்கள் அவனை வருத்தாமல் இருக்கப்
பறவைகள் எல்லாம் ஒன்றாகக் கூடித்தம்
சிறகுகளால் பந்தலிட்டு நிழல்செய்து காத்தன.
இதனை என் கண்களால் காணமாட்டேன்
என்று கொடுங்கோலன் நன்னன் ஓடி ஒளிந்து
கொண்டான். இந்த நிகழ்ச்சியை மூன்று
பாடல்களில் புலவர் பரணர் விவரிப்பதில்
ஏதோ பொருளிருக்கும்.
சங்க காலத்தில் நிகழ்ந்த இந்த இரு நிகழ்வு
களும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன
என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.