சிறு கை யளாவிய கூழ்.
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்".
(திருக்குறள்:64;அதிகாரம்:7--மக்கட்பேறு)
தம் மக்களின் சிறு கைகளால் துழாவிக் குழைக்கப்
பட்ட உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க
இனிமை யுடையது. மக்கட்பேறு என்னும் அதிகாரத்
தில் திருவள்ளுவர் குழந்தைகளின் பெருமையைச்
சொல்லுமிடத்தில் இவ்வாறு கூறுகின்றார். ஏறத்தாழ,
இதுபோன்ற கருத்து புறநானூற்றிலும் தெரிவிக்கப்
பட்டுள்ளது. அதனைப் பார்ப்போம்.
"படைப்புப் பலபடைத்துப் பலரோ(டு) உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறும் மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே!".
(புறநானூறு:188; பாடியவர்:பாண்டியன் அறிவுடை நம்பி)
பொருள்:
உலகத்தில் வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதற்கு
வேண்டிய வீடு, காடு, நன்செய், புன்செய்,துணி, மணி,
ஆடு, மாடு, நகை, நட்டு, பாத்திரம், பண்டம் முதலிய
பலவகைப் பொருள்களையும் குறைவின்றிப் படைத்துப்
பலருக்கும் பகிர்ந்து கொடுத்துத் தாமும் உண்ணும்
நிலையில் மிகப்பெரிய செல்வத்தை யுடையவராக
இருந்தாலும், விரைந்து நடக்காமல் தவழ்ந்து தவழ்ந்து
நடந்தும், சிறிய கைகளை நீட்டியும், வட்டில் கிண்ணம்
போன்றவற்றில் இட்டுவைத்த உணவைத் தரையிலே
எடுத்தெறிந்தும், யாரேனும் உண்ணத் தொடங்கினால்
அவருடன் சேர்ந்து உணவைக் கையால் கூடத்தொட்டும்,
வாயாற் கவ்வியும், கையை விட்டுத் துழாவியும், நெய்
விட்டுப் பிசைந்து வைத்த சோற்றை உடம்பு முழுதும்
படும்படி சிதறியும், இவை போன்ற பிற செயல்களைச்
செய்தும், பெற்றோர்களின் அறிவை இன்பத்தால்
மயக்கிவிடுகின்ற குழந்தைகளைப் பெறாமல் இருந்
தால், அவர்களுடைய வாழ்க்கைப் பயன், பிறவகையால்
நிறைந்திருந்தாலும், குழந்தைப்பேறு இல்லாத காரணத்
தால், குறையுடையதாகவே இருக்கும்.
இந்தப் பாடலில் சிறு குழந்தைகளின் செய்கைகளையும்,
நடவடிக்கைகளையும் எவ்வளவு அழகாக எடுத்தியம்பி
யுள்ளார்! நடையை விவரிக்கும்போது குறுகுறு நடந்து
என்ற சொற்களைக் கூறியுள்ளார். சிறு குழந்தைகள்
பெரியவர்களைப் போல விறுவிறு என்று நடக்க இயலாது.
தவழ்ந்தும், தள்ளாடியும், தடுமாற்றத்தோடும் நடை பயில்
வர். சிறுகை நீட்டி நடப்பர். அதாவது, பிஞ்சுக் கைகளை நீட்
டிக் கொண்டு நடப்பர். இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் அறிந்தும் அறியாம
லும் குறும்பு செய்திடுவர். அதாவது, உண்ணும் கலத்திலே
பெய்யப்பட்ட நெய்பிசைந்த சோற்றிலே கையை வைத்தும்
அக்கையாலேயே பெற்றோரைக் கட்டிக் கொண்டும், வாயால்
சோற்றைக் கவ்வியும், கையால் துழாவியும், நெய்ச்சோற்றை
மேனியில் சிதறியும் இயல்பாகவும், வேண்டுமென்றேயும்
குறும்புகள் செய்வர். அக்குறும்புகளால் உணவு வீணாகப்
போகிறதே என்று எண்ணும் பெற்றோரைத் தம் குறும்புச்
செய்கைகளால் மயக்கி அவர்களை இன்பத்தில் ஆழ்த்துவர்.
இத்தகைய மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை
இல்லைத் தாம் வாழும் நாளே. இத்தகைய மக்களைப் பெறாத
வர்களுக்குத் தம் வாழ்நாளெல்லாம் பயனற்ற நாட்களேயாகும்.
இந்தக் கருத்தை அப்படியே பிரதிபலித்துள்ளார் புகழேந்திப்
புலவர். தமது நளவெண்பா என்னும் நூலில் இதுகுறித்து
ஒரு பாடல் பாடியுள்ளார்:(நளவெண்பா:246)
பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனும்மற்
றென்னுடைய ரேனும் உடையரோ?--இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கை பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லாத வர்.
பொருள்:
தங்கத்தை உடையவரானாலும், புகழை உடையவ
ரானாலும், வேறு எந்தச் சிறப்பான பொருளை
உடையவரானாலும் அவர்களெல்லாம் செல்வம்
உடையவராகி விடுவரோ? உடையவராகமாட்டார்.
சுவையான உணவைத் துழாவும் தாமரை போன்ற
கைகளையும், பூவாசம் கொண்ட சிவந்த வாயையும்
உடைய குழந்தைகளைப் பெற்றவரே செல்வம் உடை
யவராவார்; பெறாதவர் செல்வம் உடையவரல்லர்.
புகழேந்திப் புலவர் காலத்தால் பிந்தியவர். எனவே,
அவர் பாடல் புறநானூற்றின் அடியொற்றியே அமைந்
ததில் வியப்பேதும் இல்லை. ஆனால், திருக்குறளிலும்
புறநானூற்றிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி கருத்துக்கள்
உள்ளன. எது முந்தியது? எது பிந்தியது? என்று உறுதி
படக் கூற இயலவில்லை. திருக்குறள் இயற்றப்பட்டு
இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால்,
புறநானூற்றுப் பாடல் எப்பொழுது இயற்றப்பட்டது?
புறநானூறு தொகுக்கப்பட்டது கி.பி.இரண்டாம் நூற்
றாண்டாக இருக்கலாம். ஆனால் இயற்றப்பட்டது எப்
போது? ஆராய்ச்சிப் பேரறிஞர் ஔவை சு.துரைசாமிப்
பிள்ளையவர்கள், சில புறநானூற்றுப் பாடல்கள் தொல்
காப்பியர் காலத்துக்கும் முந்தியதாக இருக்கலாம் என்று
கருத்துக் கூறியுள்ளார். ஏனென்றால், புறநானூற்றுப்
பாடல்களை ஆராயும் பொழுது, அவற்றில் தமிழ்நாட்டின்
எல்லை வெவ்வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பாடல்களில் தமிழகத்தின் வடக்கு எல்லை இமயமலை
என்றும் , தெற்கு எல்லை குமரிக் கோடென்றும்(குமரி மலை;
குமரிக் கடல் அன்று) கூறப்பட்டுள்ளது. அநேகமாக, குமரிக்
கண்டத்தைக் கடல் விழுங்குவதற்கு முன்பிருந்த தமிழகமாக
இருந்திருக்கலாம். எடுத்துக் காட்டு: பாண்டியன் பல்யாக
சாலை முதுகுடுமிப் பெருவழுதி மீது காரிகிழார் பாடிய பாடல்
(புறம்:எண் 6):
"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்"
என்று வடக்கு மற்றும் தெற்கு எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிந்திய காலத்தில் எழுந்த பாடல்களில் வடக்கு எல்லையாக
வேங்கடமும், தெற்கு எல்லையாகக் குமரிக் கடலும் குறிப்
பிடப் பட்டுள்ளன. எனவே, திருக்குறளுக்கும் முந்திய காலத்
தைச் சேர்ந்த புறநானூற்றுப் பாடல்களும் உள்ளன. ஆனால்,
இது குறித்து நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகின்றது.வெகு
காலம் புறநானூறு போன்ற இலக்கியங்கள் எழுதப்படாமல்
வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வந்ததாகவும், பிற்பாடு
எழுத்தில் வடிக்கப்பட்டதாகவும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
மக்கட் செல்வத்தின் பெருமையை அறிந்த வள்ளுவப் பெருந்
தகை,
"அமிழ்தினும் ஆற்ற இனிதே,தம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்".
என்று பாடியுள்ளார். திருக்குறளும், புறநானூறும் ஒரே
கருத்தை வலியுறுத்துகின்றன. இரண்டையும் படித்து
இன்பம் எய்துவோமாகுக!
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்".
(திருக்குறள்:64;அதிகாரம்:7--மக்கட்பேறு)
தம் மக்களின் சிறு கைகளால் துழாவிக் குழைக்கப்
பட்ட உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க
இனிமை யுடையது. மக்கட்பேறு என்னும் அதிகாரத்
தில் திருவள்ளுவர் குழந்தைகளின் பெருமையைச்
சொல்லுமிடத்தில் இவ்வாறு கூறுகின்றார். ஏறத்தாழ,
இதுபோன்ற கருத்து புறநானூற்றிலும் தெரிவிக்கப்
பட்டுள்ளது. அதனைப் பார்ப்போம்.
"படைப்புப் பலபடைத்துப் பலரோ(டு) உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறும் மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே!".
(புறநானூறு:188; பாடியவர்:பாண்டியன் அறிவுடை நம்பி)
பொருள்:
உலகத்தில் வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதற்கு
வேண்டிய வீடு, காடு, நன்செய், புன்செய்,துணி, மணி,
ஆடு, மாடு, நகை, நட்டு, பாத்திரம், பண்டம் முதலிய
பலவகைப் பொருள்களையும் குறைவின்றிப் படைத்துப்
பலருக்கும் பகிர்ந்து கொடுத்துத் தாமும் உண்ணும்
நிலையில் மிகப்பெரிய செல்வத்தை யுடையவராக
இருந்தாலும், விரைந்து நடக்காமல் தவழ்ந்து தவழ்ந்து
நடந்தும், சிறிய கைகளை நீட்டியும், வட்டில் கிண்ணம்
போன்றவற்றில் இட்டுவைத்த உணவைத் தரையிலே
எடுத்தெறிந்தும், யாரேனும் உண்ணத் தொடங்கினால்
அவருடன் சேர்ந்து உணவைக் கையால் கூடத்தொட்டும்,
வாயாற் கவ்வியும், கையை விட்டுத் துழாவியும், நெய்
விட்டுப் பிசைந்து வைத்த சோற்றை உடம்பு முழுதும்
படும்படி சிதறியும், இவை போன்ற பிற செயல்களைச்
செய்தும், பெற்றோர்களின் அறிவை இன்பத்தால்
மயக்கிவிடுகின்ற குழந்தைகளைப் பெறாமல் இருந்
தால், அவர்களுடைய வாழ்க்கைப் பயன், பிறவகையால்
நிறைந்திருந்தாலும், குழந்தைப்பேறு இல்லாத காரணத்
தால், குறையுடையதாகவே இருக்கும்.
இந்தப் பாடலில் சிறு குழந்தைகளின் செய்கைகளையும்,
நடவடிக்கைகளையும் எவ்வளவு அழகாக எடுத்தியம்பி
யுள்ளார்! நடையை விவரிக்கும்போது குறுகுறு நடந்து
என்ற சொற்களைக் கூறியுள்ளார். சிறு குழந்தைகள்
பெரியவர்களைப் போல விறுவிறு என்று நடக்க இயலாது.
தவழ்ந்தும், தள்ளாடியும், தடுமாற்றத்தோடும் நடை பயில்
வர். சிறுகை நீட்டி நடப்பர். அதாவது, பிஞ்சுக் கைகளை நீட்
டிக் கொண்டு நடப்பர். இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் அறிந்தும் அறியாம
லும் குறும்பு செய்திடுவர். அதாவது, உண்ணும் கலத்திலே
பெய்யப்பட்ட நெய்பிசைந்த சோற்றிலே கையை வைத்தும்
அக்கையாலேயே பெற்றோரைக் கட்டிக் கொண்டும், வாயால்
சோற்றைக் கவ்வியும், கையால் துழாவியும், நெய்ச்சோற்றை
மேனியில் சிதறியும் இயல்பாகவும், வேண்டுமென்றேயும்
குறும்புகள் செய்வர். அக்குறும்புகளால் உணவு வீணாகப்
போகிறதே என்று எண்ணும் பெற்றோரைத் தம் குறும்புச்
செய்கைகளால் மயக்கி அவர்களை இன்பத்தில் ஆழ்த்துவர்.
இத்தகைய மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை
இல்லைத் தாம் வாழும் நாளே. இத்தகைய மக்களைப் பெறாத
வர்களுக்குத் தம் வாழ்நாளெல்லாம் பயனற்ற நாட்களேயாகும்.
இந்தக் கருத்தை அப்படியே பிரதிபலித்துள்ளார் புகழேந்திப்
புலவர். தமது நளவெண்பா என்னும் நூலில் இதுகுறித்து
ஒரு பாடல் பாடியுள்ளார்:(நளவெண்பா:246)
பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனும்மற்
றென்னுடைய ரேனும் உடையரோ?--இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கை பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லாத வர்.
பொருள்:
தங்கத்தை உடையவரானாலும், புகழை உடையவ
ரானாலும், வேறு எந்தச் சிறப்பான பொருளை
உடையவரானாலும் அவர்களெல்லாம் செல்வம்
உடையவராகி விடுவரோ? உடையவராகமாட்டார்.
சுவையான உணவைத் துழாவும் தாமரை போன்ற
கைகளையும், பூவாசம் கொண்ட சிவந்த வாயையும்
உடைய குழந்தைகளைப் பெற்றவரே செல்வம் உடை
யவராவார்; பெறாதவர் செல்வம் உடையவரல்லர்.
புகழேந்திப் புலவர் காலத்தால் பிந்தியவர். எனவே,
அவர் பாடல் புறநானூற்றின் அடியொற்றியே அமைந்
ததில் வியப்பேதும் இல்லை. ஆனால், திருக்குறளிலும்
புறநானூற்றிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி கருத்துக்கள்
உள்ளன. எது முந்தியது? எது பிந்தியது? என்று உறுதி
படக் கூற இயலவில்லை. திருக்குறள் இயற்றப்பட்டு
இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால்,
புறநானூற்றுப் பாடல் எப்பொழுது இயற்றப்பட்டது?
புறநானூறு தொகுக்கப்பட்டது கி.பி.இரண்டாம் நூற்
றாண்டாக இருக்கலாம். ஆனால் இயற்றப்பட்டது எப்
போது? ஆராய்ச்சிப் பேரறிஞர் ஔவை சு.துரைசாமிப்
பிள்ளையவர்கள், சில புறநானூற்றுப் பாடல்கள் தொல்
காப்பியர் காலத்துக்கும் முந்தியதாக இருக்கலாம் என்று
கருத்துக் கூறியுள்ளார். ஏனென்றால், புறநானூற்றுப்
பாடல்களை ஆராயும் பொழுது, அவற்றில் தமிழ்நாட்டின்
எல்லை வெவ்வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பாடல்களில் தமிழகத்தின் வடக்கு எல்லை இமயமலை
என்றும் , தெற்கு எல்லை குமரிக் கோடென்றும்(குமரி மலை;
குமரிக் கடல் அன்று) கூறப்பட்டுள்ளது. அநேகமாக, குமரிக்
கண்டத்தைக் கடல் விழுங்குவதற்கு முன்பிருந்த தமிழகமாக
இருந்திருக்கலாம். எடுத்துக் காட்டு: பாண்டியன் பல்யாக
சாலை முதுகுடுமிப் பெருவழுதி மீது காரிகிழார் பாடிய பாடல்
(புறம்:எண் 6):
"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்"
என்று வடக்கு மற்றும் தெற்கு எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிந்திய காலத்தில் எழுந்த பாடல்களில் வடக்கு எல்லையாக
வேங்கடமும், தெற்கு எல்லையாகக் குமரிக் கடலும் குறிப்
பிடப் பட்டுள்ளன. எனவே, திருக்குறளுக்கும் முந்திய காலத்
தைச் சேர்ந்த புறநானூற்றுப் பாடல்களும் உள்ளன. ஆனால்,
இது குறித்து நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகின்றது.வெகு
காலம் புறநானூறு போன்ற இலக்கியங்கள் எழுதப்படாமல்
வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வந்ததாகவும், பிற்பாடு
எழுத்தில் வடிக்கப்பட்டதாகவும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
மக்கட் செல்வத்தின் பெருமையை அறிந்த வள்ளுவப் பெருந்
தகை,
"அமிழ்தினும் ஆற்ற இனிதே,தம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்".
என்று பாடியுள்ளார். திருக்குறளும், புறநானூறும் ஒரே
கருத்தை வலியுறுத்துகின்றன. இரண்டையும் படித்து
இன்பம் எய்துவோமாகுக!