Sunday 8 December 2019

கரும்புக்கு வேம்பிலே கண்.

கரும்புக்கு வேம்பிலே கண்.

ஏகம்பவாணன் என்பவன் இடைக்காலத்திலே தமிழ்நாட்டில்
விளங்கிய வாணர்குலத் தலைவர்களுள் ஒருவன். வாணர்கள்
அக்காலத்தில் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் இருந்திருக்
கின்றனர். தென்பெண்ணை யாற்றங் கரையில் திருக்கோவ
லூர் நாட்டிலுள்ள ஆற்றூரில் இந்த ஏகம்பவாணன் சிறப்புற்
றிருந்தான். இதே காலத்தில் பாண்டிய நாட்டில் சிறீவல்லப
மாறன் ஆட்சிபுரிந்து வந்தான். இவர்கள் காலம் 15ஆம் நூற்றாண்
டின் பிற்பகுதிக் காலமாகும். ஆற்றூர் ஆறையெனவும் அழைக்கப
படும்.

முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்கள் செல்வாக்கு
இழந்து குறுநில மன்னர்களாக வாழ்ந்த காலக்கட்டம். இவர்களைக்
காட்டிலும் ஏகம்பவாணன்  செல்வாக்கோடு திகழ்ந்தான். ஓருமுறை
ஏகம்பவாணன் கழனிகளைப் பார்க்கச் சென்றிருந்த பொழுது சேர,
சோழ, பாண்டிய அரசர்களும் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது
பேச்சுவாக்கில் ஏகம்பவாணனை இழிவாகப் பேசிவிட்டனர். இதனால்
சினமடைந்த ஏகம்பவாணன் தன்னிடமிருக்கும் பூதத்தை ஏவி மூவரை
யும் சிறைப்பிடிக்க ஆணையிட்டான்.(தமிழ் நாவலர் சரிதையில் பூதம்
என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. நம்பத் தயங்குபவர்கள் முரட்டு
அடியாள் என்று பொருள்கொள்க.) பூதம் சேரனையும், சோழனையும்
சிறைப்பிடித்தது. பாண்டியன் வேப்பம்பூ மாலை அணிந்திருந்த கார
ணத்தால் அவனை நெருங்க அஞ்சிப் பின்வாங்கிவிட்டது.

இதனையறிந்த ஏகம்பவாணன் பாண்டியனின் வேப்பம்பூ மாலை
யைப் பறித்துவிட்டால் அவனையும் சிறைப்படுத்தி விடலாம் என்று
நினைத்து நான்கு தாதியரை(அழகான பணிப் பெண்டிர்) பாண்டிய
னிடம் அனுப்பிவைத்து வேப்பம்பூ மாலையை எப்பாடுபட்டாவது
பறித்துவரக் கட்டளையிட்டான். அவர்கள் பாண்டியனைச் சந்தித்து
வேப்பம்பூ மாலையைப் பரிசாகத் தருமாறு கோரிப் பாடல்களைப்
பாட ஆரம்பித்தார்கள். முதலாவது தாதி கீழ்க்கண்ட பாடலைப்
பாடினாள்:
"தென்னவா! மீனவா! சீவலமா றா!மதுரை
மன்னவா!  பாண்டி வரராமா!--முன்னம்
சுரும்புக்குத் தாரளித்த துய்யதமிழ் நாடா!
கரும்புக்கு வேம்பிலே கண்."
சுரும்பு= வண்டு; வண்டு உண்பதற்கு மாலையளித்த (மாலையி
லுள்ள பூக்களில் நிறைந்திருக்கும் தேனையுண்ண) மன்னவா!
கரும்பு போன்ற இனிமையான இப்பெண்ணுக்கு(எனக்கு=தாதிக்கு)
உன் வேப்பம்பூ மாலை மீது கண்ணாக வுள்ளது. ஆகவே, அதனைப்
பரிசாகத்தா என்று பாடினாள். தன் இனத்துக்குரிய அடையாள மாலை
யைக் கொடுக்க மனமில்லாத பாண்டியன் வேறு சில பரிசுகளை ஈந்தான்.

தாங்கள் வந்த நோக்கம் நிறைவேறாததால் இரண்டாவது தாதி பாடத்
தொடங்கினாள்:
"மாப்பைந்தார்க் கல்ல, முத்து  வண்ணத்தார்க்  கல்ல, வஞ்சி
வேப்பந்தார்க்  காசைகொண்டு  விட்டாளே---பூப்பைந்தார்
சேர்ந்திருக்கும் நெல்வேலிச் சீவலமா  றா!தமிழை
ஆய்ந்திருக்கும் வீரமா றா!"
இந்த வஞ்சிக் கொடிபோன்றபெண்(நான்) முத்துமாலை மீதோ வேறு
மரகத மாலை மீதோ ஆசை கொள்ளவில்லை. திருநேல்வேலிப் பதியை
ஆளும் சிறீவல்லப மாறா! சங்கம் வைத்துத் தமிழை ஆய்ந்து வளர்த்த,
வீரத்திலும் குறைவில்லாத மாறனே! நீயணிந்திருக்கும் வேப்பமாலைக்கு
ஆசைகொண்டுளேன் என்று பாட இதற்கும் பாண்டியன் மசியவில்லை.

உடனே மூன்றாமவள் பாட ஆரம்பித்தாள்:
"வேம்பா கிலுமினிய சொல்லிக்கு நீமிலைந்த
வேம்பா கிலுமுதவ வேண்டாவோ?--தேம்பாயும்
வேலையிலே  வேலைவைத்த  மீனவா! நின்புயத்து
மாலையிலே மாலைவைத்தாள் மான்."
கரும்பைச் சாறு பிழிந்து அடுப்பில் பாகாகக் காய்ச்சும் பொழுது இனிய
நறுமணம் கமழும். அத்தகைய சூடான பாகைவிட இனிமையான சொற்களைப்
பேசுபவளுக்கு நீயணிந்த வேம்பாகிலும் பரிசாகத் தர வேண்டாவா? கடலில்
வேலைவைத்த மீனக் கொடியுடைய அரசனே!(சிவபெருமான் கடலிலே நிகழ்த்
திய திருவிளையாடலை மதுரைப் பாண்டியனுக்கு ஏற்றிச் சொல்லிப் புகழ்தல்)
தேன்சொரியும் உன் வேப்பம்பூ மாலையிலே இந்த மான்போன்ற பெண் மயக்
கம் வைத்துவிட்டாள். அதனால் அதைப் பரிசாகத் தந்து இவள் மயக்கத்தைத்
தெளிவிப்பாய் என்று பாடினாள். இதற்கும் பாண்டியன் மனமிளகவில்லை.

உடனே நாலாமவள் பாண்டியனின் தன்மானத்தைச் சீண்டுவதுபோல் பாடல்
பாடி மாலையைப் பறிக்கத் திட்டமிட்டுப் பாடத் தொடங்கினாள்:
"இலகு   புகழாறை. ஏகம்ப  வாணன்
அலகை  வரும்வரும்என்  றஞ்சி--உலகறிய
வானவர்கோன்  சென்னியின்மேல் வண்ண  வளையெறிந்த
மீனவர்கோன்  கைவிடான்  வேம்பு".
அய்யகோ, பரிதாபம்;  ஆற்றூர்(ஆறை) எனும் ஊர்க்குரியவனான ஏகம்ப
வாணனின் பூதத்துக்கு(அலகை) அஞ்சி இந்திரன் முடிமேல் வளையெறிந்த
வீரம்செறிந்த பாண்டிய வழியில் வந்த இவன் வேப்பம்பூ மாலையைக் கை
விடத் தயங்குகிறான். பூதத்துக்கு அஞ்சாவிட்டால் இவன் வேப்பம்பூ
மாலையை இந்நேரம் பரிசாகத் தந்திருப்பானே எனப் பாடிச் சீண்டினாள்.
இவ்வாறு பாண்டியனின் வீரத்தைப் பழித்துப் பாடியவுடன் பாண்டியன்
வெகுசினத்துடன் வேப்பம்பூ மாலையைக் கழற்றித் தாதியிடம்
பரிசளித்தான். வேப்பமாலை நீங்கியதை யறிந்த பூதம் பாண்டியனைச்
சிறைசெய்தது. ஏகம்பவாணன் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டான்.

இந்தக் கதையை நம்புகிறோமோ இல்லையோ இந்தப் பாடல்களில் மிளி
ரும் இலக்கியச் சுவையைப் புறந்தள்ள இயலாது.



சோற்றுக்கு அரிசிதரச் சொன்னால் களிக்கு மாவைத் தந்தான்.

ஏகம்பவாணன் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில
மன்னன். அவன் காலக்கட்டத்தில் முடியுடை மூவேந்தர்களும்
குறுநில மன்னர்களாகவே வாழும்படி நேர்ந்துவிட்டது. அடுத்
தடுத்து நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகளால் தமிழகத்தைக்
காலம் காலமாக ஆண்டவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.
ஏகம்பவாணன் சிறந்த ஆட்சியாளன் மட்டுமன்று; உயர்ந்த வள்ள
லும் கூட. அவனை நாடிப் புலவர்கள், பாணர்கள் முதலிய கலை
ஞர்கள் அடிக்கடி வருவதும், தத்தம் திறமைக்கு ஏற்பப் பரிசில்
பெற்றுச் செல்வதும் வழக்கம்.

ஒருமுறை வறுமையில் வாடிய புலவர் ஒருவர் அவனைச் சந்தித்
துப் பாடல்களைப் பாடி அவனை மகிழ்வித்தார். புலவரின் திறமை
யைக் கண்டு கழிபேருவகையடைந்த ஏகம்பவாணன் புலவருக்குத்
தக்க பரிசளித்து மரியாதை செய்தான். என்ன பரிசளித்தான் என்று
அவரது பாடல் வாயிலாகக் காண்போம்:
சேற்றுக் கமலவயல் தென்னாறை  வாணனையான்
சோற்றுக்(கு) அரிசிதரச் சொன்னக்கால்----வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான்; கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமா(று) எவ்வா(று) அவன்?.
பொருள்:
வறுமையில் வாடும் யான் சோறுபொங்க அரிசி தருமாறு கேட்டேன்;
ஆனால் வாணனோ களிக்கிண்ட மாவைத் தந்தான். அரிசிக்குப்
பதிலாகக் களிமாவைத் தருபவன் கற்றவர்க்குப் பரிசாகச் செம்பொன்
அள்ளித் தருதல் எவ்வாறு இயலும?  இவ்வாறு வாணனைப் பழிப்பது
 போலப் புகழ்ந்து பாடியுள்ளமை புலவரின் கவித்திறனை
வெளிப்படுத்துகின்றது. களி என்னும் சொல் களி என்ற உணவை
யும், செருக்கு, மதம் போன்ற உணர்ச்சிகளையும் குறிக்கும். அது
போலவே, மா என்ற சொல்லும் உணவைச் சமைக்கப் பயன்படும்
மாவையும்  யானையையும் குறிக்கும். இவ்வாறாகப் புலவர் பாடலில்
பயின்றுவந்த "களிக்கு மா" என்ற சொல் செருக்கு மிகுந்த யானை
என்ற பொருளைத் தரும். ஏற்கெனவே வறுமையில் உழல்பவருக்கு
யானையைப் பரிசாகத் தருவது நியாயமா? என்று கேட்கத் தோன்றும்
யானையை மட்டுமன்றி அதனைக் கட்டித் தீனிபோடுவதற்குத்  தேவை
யான பொருளையும் சேர்த்துக் கொடுப்பது வழக்கம். சங்க காலத்தில்
இருந்தே புலவர்களும் பாணர்களும் யானைப்  பரிசில் பெற்றுச் செல்
வது வழக்கமான நடைமுறைதான்.

இதே ஏகம்பவாணன் தொடர்பூடைய மற்றொரு பாடலைப் பார்ப்போம்.
அரண்மனையில் பணிபுரிந்துவந்த தாதி ஒருத்தி பிழை செய்தனள்.
ஏகம்பவாணன். அவள்மீது கடுங்கோபங் கொண்டு ஏனைய  பிற தாதி
யரிடம் ' கைவிலங்கு கொண்டு வருக' என்று கட்டளையிட்டான். தவறு
செய்த தாதி என்னாகுமோ, ஏதாகுமோ என்று அஞ்சி நடுங்கினாள்.
அவள் மேனி நடுங்கியது; அச்சத்தில் வியர்த்துக் கொட்டியது. தன் நடுக்
கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாணனை நோக்கிப் பேசலானாள்.
"ஐயா, விலங்கைக் கொண்டு வருமாறு பணித்துள்ளீர்;  சேர, சோழ, பாண்
டிய மன்னர்களில் யாருக்காக விலங்கைக் கொண்டுவரச் சொன்னீர்?
யாருக்கு விலங்கை மாட்ட எண்ணியுள்ளீர்? இவாவாறு பேசியதன் மூலம்
தான் செய்த பிழையை மன்னித்துவிடுமாறும், தனக்கு விலங்கு மாட்டத்
தேவையில்லையென்றும் மறைமுகமாகக் கோரிக்கை வைத்தனள். அவளின்
திறமையான பேச்சை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவளுக்கிருக்கும்
தமிழ்ப் புலமையைக் கொண்டு அவள்  சொல்லிய  நயமிக்க பாடலைக்
கீழே பார்ப்போம்:
அலங்கல் மணிமார்பன், ஆறையர்கோன்  வாணன்
விலங்கு கொடுவருக வென்றான்---இலங்கிழையீர்!
சேரற்கோ, சோழற்கோ  தென்பாண்டி நாடாளும்
வீரற்கோ  யார்க்கோ விலங்கு.
ஆறை=ஆற்றூர்; சேரற்கோ, சோழற்கோ, வீரற்கோ--சேரனுக்கோ,
சோழனுக்கோ, வீரனுக்கோ.














1 comment: